வயிற்று புண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வயிற்று புண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

எச் .பைலோரை என்னும் வயிறு புண்ணை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க வல்ல - லீலாவிலாஸ ரஸ -LEELA VILASA RASA


எச் .பைலோரை என்னும் வயிறு புண்ணை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க வல்ல -
லீலாவிலாஸ ரஸ   -LEELA VILASA RASA                     
(Ref-பைஷஜ்யரத்னாவளி - அம்லபித்தாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக       10          
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்
3.            தாமிரபற்பம் தாம்ர பஸ்ம            10 கிராம்
4.            அப்பிரக பற்பம் அப்ரக பஸ்ம         10          
5.            அயபற்பம் லோஹ பஸ்ம            10          

இவைகளையும் சேர்த்தரைத்து,

6.            நெல்லிக்காய்ச்சாறு ஆமலகீ ஸ்வரஸ  போதுமான அளவு
7.            தான்றிக்காய் கஷாயம் பிபீதகீ கஷாய போதுமான அளவு கொண்டு மூன்று
                                                                               
நாட்கள் அரைத்துப் பின்னர்     
                                                                                         
8.            கரிசலாங்கண்ணி சாறு ப்ருங்கராஜஸ்வரஸ கொண்டு ஒரு முறை பாவனை செய்து உலர்த்திப் பதத்தில் ரவைகளாக்கி 100 மி.கி. மாத்திரைகள் ஆக்கவும்.

அளவு:           

1 முதல் 4 மாத்திரைகள்.

தீரும் நோய்கள்:
 
வயிற்றில் புளிப்பு நீர் (அமிலம் அதிகமாக சுரத்தல் (அம்ல பித்தம்), வாந்தி (சர்தி), மார்பு எரிச்சல் (ஹ்ருத்தாக).




தெரிந்து கொள்ள வேண்டியவை ..

1. அதிகமான வாய் புளிப்பு -புளிப்பு சுவைக்கு இந்த மருந்தை -காமதுக  ரச மற்றும் பாஸ்கர லவன சூரணத்துடன் கலந்து தந்து நல்ல பலனை பெறலாம் ..

2.கரிசாலை சாறு உள்ளதால் நிச்சயமாக எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது ..

3.வயிற்று  புண்ணை  ஏற்படுத்துவதாக கருதப்படும் எச் .பைலோரை என்னும் பாக்டீரியாவை அழிக்க  இந்த மருந்துக்கு சக்தி உள்ளது என்பது நிச்சயம் ..

4.நெஞ்சு வலி போல் தோன்றும் வயிறு புண்ணுக்கு தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் தரும்

Post Comment

புதன், பிப்ரவரி 06, 2013

அல்சரை அடியோடு அழிக்கும் -காமதுகா ரஸ (Kamaduga Rasa)


அல்சரை அடியோடு அழிக்கும் -காமதுகா ரஸ     (Kamaduga Rasa)                                                                                        
(ref-ரஸயோகஸாகரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            முத்து பற்பம் மௌக்திக பஸ்ம                300 கிராம்
2.            பவள பற்பம் ப்ரவாள பஸ்ம                   300         “
3.            முத்துச்சிப்பி பற்பம் மௌக்திகசுக்தி பஸ்ம     300         “
4.            பலகரை பற்பம் வராடிக பஸ்ம                300         “
5.            சங்கு பற்பம் சங்க பஸ்ம                     300         “
6.            காவிக்கல் கைரிக                             300         “
7.            சீந்தில் சர்க்கரை குடூசீஸத்வ                   300         “

இவைகளை ஒன்று கலந்து முறைப்படி ரவைகளாக்கி 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் சீரகச் சூர்ணம், சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

வயிற்றில் புளிப்புநீர் (அமிலம்) அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்தம்), வெள்ளை படுதல் (ஸோமரோகம்), நாள்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர).

தெரிந்து கொள்ள வேண்டியவை 

எவ்வளவு மோசமான வயிறு புண் ,உணவு குழாய் புண் ,சிறுகுடல் புண் -சீரண  மண்டலத்தில் இருக்கும் புண்களை இது வியக்கத்தக்க வகையில் குணமாக்கும் 

வயிற்று வலி ,தாங்க முடியாத மேல் வயிற்று எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும் 

எந்த கம்பெனியும் முத்து பற்பத்தை  சேர்ப்பதில்லை ...சேர்த்தால் விலை அதிகமாகும் .,முத்து சேர்க்காத  காமதுகா ரச  பெரிய வேலையை செய்வதில்லை ..

எங்களிடம் முத்து சேர்த்தும் ..முத்து சேர்க்காத காமதுகா  ரச என்ற பற்பம்  எங்களிடம் கிடைக்கும் ..நோயாளிக்கு தக்கவாறு ,நோய்க்கு தக்கவாறு இதை முத்து சேர்ந்ததா  அல்லது முத்து சேராததா  நோயாளிக்கு சொல்லி கொடுப்போம் 

எனது அனுபவத்தில் இந்துகாந்தம் கஷாயம் அல்லது இந்துகாந்தம் கிருதம்  போன்ற மருந்தோடு தர எவ்வளவு நாள்பட்ட அல்சர் ஆனாலும் கடவுள் நாடினால் குணமாகும் 

இந்த மருந்தை நான்கு அரிசி எடை அளவுக்கு தேன் அல்லது  தண்ணீர்  விட்டு பிழியாத  தேங்காய்பால் சாற்றுடனும் தர அல்சர் பற்றி கவலை வேண்டாம் 

மருந்து சாப்பிடும் பொது நிச்சயம் எண்ணெய் எண்ணையில் பொறித்த உணவுகளை நூற்றுக்கு நூறு மூன்று மாதமாவது நிறுத்துதல் அவசியம் 

அதிகமான அமில சுரப்பை சரி  செய்யும் 

கடையில் விற்கும் பால் மருந்துகள் எனப்படும் ஜெலுசில் இதனிடம் வெட்கி மோசமாக தோற்கும் 

மேலும் வெள்ளை படுதல் ,எரிச்சல் ,சர்க்கரை நோயில் வரும் எரிச்சல் ,நாக்கில் புண் ,காரணம் தெரியா அரிப்பு வியர்க்கும் நல்ல பலன் தரும் 




Post Comment

திங்கள், செப்டம்பர் 24, 2012

அல்சர் நோயாளிக்கு உதவும் இரும்பு சத்து மருந்து -தாத்ரீலோஹம் Dhathree loham


அல்சர் நோயாளிக்கு உதவும் இரும்பு சத்து மருந்து -தாத்ரீலோஹம் Dhathree loham
  (ref-பைஷஜ்யரத்னாவளி - சூலாதிகார)

தேவையான மருந்துகள்:

1.            நெல்லிக்காய்ச் சூரணம் ஆமலகீ (தாத்ரீ சூர்ண)    8 பங்கு
2.            அதிமதுரச் சூரணம் யஷ்டீ மதுரச் சூர்ண          2   
3.            அயபற்பம் லோஹபஸ்ம                         4   


செய்முறை:     

 இவைகளைப் போதுமான அளவு சீந்தில்கொடி கஷாயம் (குடூசிகஷாய) கொண்டு ஏழு நாட்கள் ஏழு முறை பாவனை செய்து ரவியில் (சூரிய ஒளியில்) வைத்து உலர்த்திப் பொடித்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது நெய்யுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  



சூலைநோய் (சூலரோக), பரிணாம சூலை எனப்படும் குடற்புண்கள், இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்த), பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), மார்பு எரிச்சல் (ஹ்ருத்தாஹ), மலச்சிக்கல் (மலபந்த).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. வயிறு புண் ,வயிற்று வலி  நோயாளிக்கு பொதுவாக எந்த இரும்பு சத்து  மாத்திரையும் கொடுக்க இயலாது ...அனால் இந்த மருந்தை வயிறு புண் ஆறவும் இரத்த சோகை தீரவும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ?
  2. பொதுவாக இரத்த சோகைக்கு பயன்படும் மருந்து இரத்த சோகை உண்டாக்கும் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று ...ஆனால் ஆயுர்வேத மருந்துகளில் அப்படி இல்லை என்பதற்கு இந்த மருந்தை உதாரணம் தரலாம் ..இரத்த சோகை நீக்கும் மருந்து மலமிளக்கியாகவும் பயன்படும் ..


Post Comment

சனி, ஜனவரி 07, 2012

அல்சர் -வயிறு வலிக்கு -எளிமையான சிறந்த மருந்து -நாரிகேள லவணம் -Narikela lavanam


அல்சர் -வயிறு வலிக்கு -எளிமையான சிறந்த மருந்து -நாரிகேள லவணம் -Narikela lavanam
 (ref-பைஷஜ்ய ரத்னாவளி - சூலரோகாதிகாரம்)


 தேவையான மருந்துகள்:

1.       முற்றிய தேங்காய் நாரிகேள பல (ஸதோய)      ஒரு எண்ணிக்கை
2.        இந்துப்பு ஸைந்தவலவண                  போதுமான அளவு











செய்முறை:      

இந்துப்பை பொடித்துத் தேங்காயின் துளையிட்ட கண்ணின் வழியே உள் நிரப்பி மூடிச் சீலை மண் பூசிப் போதுமான வரட்டிகள் கொண்டு புடமிடவும். ஆறிய பின்னர் ஓடு நீக்கிப் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.



அளவும் அனுபானமும்:      

ஒரு கிராம் வரை மோர், நீர் அல்லது திப்பிலி சூரணத்துடன்.


தீரும் நோய்கள்: 

 சூலை (சூல), வயிற்றுவலி (குக்ஷி சூல (அ) உதர சூல), வயிற்றுப்புண்கள் (அ) குடற் புண்கள் (பரிணாமசூல), வயிற்றில் புளிப்புநீர் (அமிலம்) அதிகரித்தல் (அம்லபித்த).

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. வயிறு வலி எந்த காரணத்தில் வந்தாலும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  2. மிக மிக எளிதாக செய்யக்கூடிய மருந்து
  3. வயிற்று புண்ணுக்கு -இந்து காந்த கிருதம் என்ற நெய் மருந்தோடு சாப்பிட நல்ல குணம் தெரியும்
  4. அல்களை என்ற காரப்பொருள்-நமது வயிற்றில் சுரக்க கூடிய  அதிகமான அமிலத்தை சமன் செய்யும் குணம் உள்ளது ..
  5. பரிணாம சூலை எனப்படும் சாப்பிட்ட பின் ஏற்படும் வயிறு வலிக்கு இந்த மருந்தை விட நல்ல மருந்து இல்லை எனலாம் ..
  6. ஜெளுசுளை சாப்பிட்டு -வயிறு பிரச்சனைக்கு தற்காலிக தீர்வை தேடும் அல்சர் நோயாளிகளுக்கு -காமதுக ரசம் என்ற அற்புத மருந்துடன் இந்த மருந்தை தக்க துணை மருந்தோடு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் 
  7. புளிச்ச ஏப்பம் விடும் நோயாளிக்கு இந்த மருந்து நல்ல மருந்து

Post Comment

வெள்ளி, ஜூலை 08, 2011

வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்


வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            ஆவில் பட்டை கரஞ்ஜத்வக்                100 கிராம்
2.            தேவதாரு தேவதாரு                 100        
3.            வில்வவேர் பில்வமூல               100        
4.            முன்னைவேர் அக்னிமாந்த           100        
5.            பெருவாகை வேர் ஸ்யோனாக        100        
6.            குமிழ் வேர் காஷ்மரீ                 100        
7.            பாதிரி வேர் பாட்டால               100        
8.            மூவிலை சாலிபர்ணீ                 100        
9.            ஓரிலை ப்ரிஸ்னிபர்ணீ               100        
10.          கண்டங்கத்திரி கண்டகாரீ             100        
11.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ            100        
12.          நெருஞ்சில் கோக்ஷூர                100        
13.          தண்ணீர் ஜல                   19.200 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 4.800 லிட்டராக்க் குறுக்கி வடிகட்டி நெய் 1.200 கிலோ கிராம், பசுவின் பால் 1.200 கிலோ கிராம் சேர்த்து


1.            திப்பிலி பிப்பலீ                 25 கிராம்
2.            மோடி பிப்பலீ மூல             25          
3.            செவ்வியம் சவ்ய               25          
4.            கொடிவேலி வேர் சித்ரக         25          
5.            சுக்கு சுந்தீ                     25          
6.            இந்துப்பு ஸைந்தவலவண       25          

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும்.

சிலர் இந்துப்புக்கு பதில் யவக்ஷாரம் சேர்ப்பதுண்டு.

               
அளவும் அனுபானமும்:     
 5 முதல் 10 கிராம் வரை வடித்த கஞ்சியுடன் இரு வேளைகள். வெந்நீர், சூடான பால், சீந்தில் சாற்றுடனும் கொடுப்பதுண்டு.

               
 தீரும் நோய்கள்: 

சூலை (சூல), குன்மம்  (குல்ம), பெருவயிறு (மஹோதரம்), நாட்பட்ட முறைக்காய்ச்சல் (விஷம ஜ்வர), இளைப்பு (க்ஷ்ய (அ) கார்ஸ்ய), பலவீனம் (பலக்ஷய (அ) அசக்த), நரம்பு சம்பந்தமான நோய்களும் வாத நோய்களும் மற்றும் இரைப்பைப் புண்கள் (அன்னதிராவ சூல).

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆயுர்வேத மருந்துகளில் -இந்துகாந்தம் கஷாயம் ,கிருதம் போன்றவை -மிக மிக அதிகமாக பயன்படக்கூடிய முக்கிய மருந்துகளில் ஒன்று
  2. ஸ்ரோதோ ரோத விஷோதனம் என்னும் -கண்ணுக்கு தெரியாத நாளங்களில் ,குழாய்களில் அடைப்பை நீக்க பயன்படுத்தபடும் முக்கிய மருந்து
  3. வயிறு எரிச்சல் ,காந்தல்,நெஞ்சு கரிப்பு ,அதிகமான வயிறு வலி ,அதிகமான அமிலத்தன்மை -இவை அனைத்திற்கும் தக்க துணை மருந்தோடு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்
  4. எப்படி  நெய் மருந்து வயிறு புண் ஆற்றும் -அதிகமாக்கவே செய்யும் என்பவர்கள் பயப்படாமல் -இந்த மருந்தை சாபிடலாம் -விதி விலக்கான வரமான மருந்து இது
  5. வாத நோய்களுக்கும் இந்த மருந்து நல்ல பலன் தரும்
  6. கை கால் வலி ,உளைச்சல் ,பலஹீனம் போக்கும்
  7. முக்கியமாக இந்த மருந்தை நான் அதிகம் நேசிக்கிறேன் ..(இந்த ஒரு மருந்தை வைத்து பல நோய்க்கும் -தக்க துணை மருந்தோடு தர -நோய் விலகி நோயாளி முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிவதால் )

Post Comment