வியாழன், ஏப்ரல் 30, 2020

நோய்களின் நுழைவாசல் .

நோய்களின் நுழைவாசல் ..

டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்

நமது உடலை பாதிக்கும் நோய்கள் அனைத்திற்கும் நமது வாய்க்கும் ஒரு பெரிய தொடர்புண்டு..

வாய் துர்நாற்றம் மலசிக்கலை, நாவின் வெள்ளை படிமம் செரிமான கோளாறை, பற்கள் சிதைவு கால்சியம் குறைபாட்டை, கடைவாய் புண் அல்சரை, ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு கிருமி தாக்கம், சத்துக்குறைபாடை குறிக்கிறது ... இவ்வாறு நாக்கின் நிறம், பற்கள், ஈறுகள், கடைவாய் முதலியவற்றை கொண்டு நமது உடலில் உள்ள நோய்களை அனுமானிக்கலாம்..

உடல் உபாதைகளை கண்டறிய துணைசெய்வதோடு மட்டுமல்லாமல் நோய் தாக்கத்தை தடுப்பதற்கும் பேருதவி புரிகிறது...வாய், பற்கள், உமிழ்நீர் கொண்டு சரியாக உணவை மென்று விழுகுவதால் பெரும்பாலான நோய்கள் (சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரோல் உட்பட) தடுக்கப்படுவதோடு நோய் கிருமிகளிமிருந்தும் பாதுகாக்கிறது...

பல்துலக்குவதுடன் வாய் சுத்தம் அடைந்துவிடுவதில்லை... சரியாக பராமரிப்பு  பற்றியும், நோய்க்கான சிகிச்சைகளுள் ஒன்றாகவும் ஆயுர்வேதம் மிக தெளிவாக தினச்சரியை என்னும் அத்யாயத்தில் விளக்குகிறது...

*கண்டூசம் (oil pulling)/ கவளம் (gargling )...*

*பலன்கள்...*
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மாறுகிறது,
குரல் வளம், முகத்தில் உள்ள தசைகள், வாய் புத்துணர்ச்சி மேம்படுகிறது.. சுவையின்மை, வாய்ப்புண்,  வாய்க்கசப்பு, தொண்டை வறட்சி நீங்குகிறது....கண், மூக்கு, காது சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது.. உதட்டில் உள்ள வெடிப்பு, பற்சிதைவு, பற்கூச்சம்,  நெஞ்செரிச்சல், குமட்டல், ஈறுகளில் வீக்கம், இரத்த கசிவு, தொண்டை வலி, டான்சில்ஸ், மூக்கடைப்பு, கிருமி தாக்கம் சரிசெய்கிறது. .. ஒற்றை தலைவலி, மூக்கடைப்பு, முகவாதம் போன்ற நோய்களுக்கு தீர்வளிக்கிறது ...

*பரிந்துரைக்கப்படுபவைகள்...*
எள் எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
கடுகெண்ணை
பாதாம் எண்ணெய்
பால்
மோர்
உப்பு, மஞ்சள் கலந்த வெந்நீர்
ஆல மர பட்டை கஷாயம்
அத்தி மர பட்டை கஷாயம்
கருங்காலி மர பட்டை கஷாயம்...
ஆகியவைகளை கொண்டு 10 நிமிடங்கள் வரை பயிற்சி பெற்று கடைபிடிக்கலாம்...

கிருமிகளின் முக்கிய நுழைவாயில் நமது வாய்.. கிருமிகள் (கொரோனாவும் அடங்கும் ) அளிக்கப்பட்டால் மட்டுமே நோய்த்தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்..

சமூக ஆரோக்கியம் ஒன்றே எங்களின் குறிக்கோள்..

மருத்துவ ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்...

AL SHIFA AYUSH HOSPITAL
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

புதன், ஏப்ரல் 29, 2020

நிஜம்..நிழல்.

நிஜம்..நிழல்.

உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கு ஓர் இரகசியம் 


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்

பொதுவாகவே நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரையும்  ஒவ்வொரு விதமான ஆரோக்கியம் / ஆரோக்கிய குறைபாட்டுடன் சந்திக்கின்றோம்...


ஒருபுறம் நூறு வயதை கடந்தும் சிறந்த  ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்புடன் வாழும் மனிதர்களை இன்றளவும் நம்மால் காண முடிகிறது...

மறுபுறம் ஒரு வயது குழந்தை முதல் இளம்வயதினர் என  சிகிச்சைகாக பரபப்பாய் ஓடும் கூட்டத்தையும் காண்கிறோம்...

இந்த வேறுபாடு எதனால்...?

இறைவன் அனைவருக்கும் பொதுவாகவே உலகை படைத்தான்... உணவு சங்கிலியை உண்டாக்கினான்...
அழகிய, ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஜீவராசிகள் அனைத்திற்கும் அனைத்தையும் கொடுத்தான்..

ஆனால் சரியான விடையை தேர்வு செய்... என்ற வினாதாளோடு கொடுத்துவிட்டான்...

நிஜம் எது நிழல் எது என்று பொறுமையாக நிதானமாக சிந்தித்தால் மட்டுமே விடை சரியாக அமையும்..

முதல் கோணல் முற்றும் கோணல்...

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சென்றால் கட்டாயம் குழந்தைகளுக்கென்று ஒரு மருந்தகம் வைத்திருப்பார்கள்..

அதில் காய்ச்சலுக்கு, சளிக்கு, இருமலுக்கு, வயிறு வலிக்கு, தும்மலுக்கு என வகை வகையாக மாத்திரைகளும், சிரப்புகளும் வைக்கப்பட்டிருக்கும்... காலாவதி ஆனதும் அனைத்தும் குப்பையில்...

இதுபோன்ற ஆண்டிபயாடிக் பிற ஆங்கிலமருந்துகளால் குழந்தைகள் நோயெதிர்ப்பு சக்தியின்றியும், அரைகுறை ஆரோக்கியத்துடனும் வளர்கிறார்கள்..

நிஜத்தில் ஒரு மருந்து போதும்... காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல், தும்மல், இருமல், வயிற்று வலி, செரிமான கோளாறு, வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, வாய்ப்புண், சருமநோய், அம்மை, பேச்சு திறன் குறைபாடு ... இன்னும் பல... சர்வரோக நிவாரணியாக பயன்படும் மருந்து ஒன்று ஆயுர்வேதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது....

*அரவிந்தாசவம்...*

இம்மருந்தில் அடங்கியுள்ள மூலிகைகள்...

தாமரை, வெட்டிவேர், குமுதை, நீலாம்பல், மஞ்சிட்டி, குறுந்தொட்டி, ஜடாமாஞ்சி, ஏலக்காய், கோரைக்கிழங்கு, நன்னாரி, கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், வசம்பு, பூலாங்கிழங்கு, சிவதைவேர், அவுரி, முசுமுசுக்கை, துசா, மருதம், இலுப்பை, அதிமதுரம், முரல், உலர்திராட்சை, மலையத்தி, தேன், சர்க்கரை...முதலானவை.

இம்மருந்தினால் குழந்தைகளுக்கு உண்டாகும் நோய் தீர்வதுடன் எதிர்காலத்தில் எந்த நோயும் வராமலும் (சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் உட்பட) பாதுகாக்கிறது..

இந்த இனிப்பான மருந்தில் சிறப்பான ஒன்று காலாவதி இம்மருந்திற்கு இல்லை...

ஜீவிக்கும் அனைத்திற்கும் மரணிப்பும் உண்டு மறுக்கவில்லை...

ஆனால் வாழ்நாட்கள் நகர்வது மருந்துகளை சார்ந்து இருந்துவிடக்கூடாது...

மருத்துவ ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்..


AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 28, 2020

தேவை வெள்ளையன்..

தேவை வெள்ளையன்.. 


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


உடலை தாக்க வரும் நோய்களிடமிருந்தும், கிருமிகளிடமிருந்தும் காத்துக்கொள்ள நமக்கு தேவை இரத்த வெள்ளை அணுக்களின் பலம்..

நோய்யெதிர்ப்பு சக்தி என்பது போர் படை வீரர்களை போல் செயல்படும் லியுகோசைட்ஸ் ( இரத்த வெள்ளை அணுக்கள்)...

இந்த வெள்ளை அணுக்களின் பிறப்பிடம் எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி ஆகும்.. இவற்றில் ஆயுட்காலம் சராசரியாக மூன்று வாரங்கள்...

வெள்ளை அணுக்களின் சராசரி அளவு 4000 - 11,000 ஆகும்... இந்த அளவிலிருந்து கூடினாலும் ( லுகீமியா ), குறைந்தாலும் (லியூகோபீனியா) நோயாகவே கருதப்படும்..

வெள்ளை அணுக்களை ஐந்து வகைகளாக பிரித்து விளக்கப்படுகிறது..
அவை
நியூட்ரோபில்
ஈசினோபில்
பேசோபில்
லிம்போஸைட்
மோனோஸைட்

இந்த ஐந்து வகை வெள்ளை இரத்த அணுக்களின் அளவுகளும்,  வேலைப்பாடுகளும் மாறுபடுகிறது..

பொதுவாக இவற்றை அடிப்படையாக கொண்டே நோய்களுக்கான மருத்துவம் கொடுக்கப்படுகிறது...

*நியூட்ரோபில்*
சராசரி அளவு எழுபது சதவீதம்... இந்த வகை இரத்தஅணுக்கள் அதிகரிப்பது புற்றுநோய், குடல்வால் நோய் போன்ற அலர்ஜி, மூட்டு சம்மந்தமான நோய்கள், மேலும் சில இரத்தக்கோளாறுகளை குறிக்கிறது...
மருந்துகளின் பக்கவிளைவு, வைட்டமின் பி12 குறைவு, ஒருவகை காசநோய், இரத்தசோகை போன்றவற்றால் இவ்வகை வெள்ளை இரத்த அணுக்கள் குறையும்..

*லிம்போஸைட்*
சராசரி அளவு இருபது சதவீதம்.. குழந்தைகளுக்கு பொதுவாக ஐம்பது சதவீதம் காணப்படும்..காசநோய் போன்ற நாள்பட்ட நோய்கள், அம்மை நோய், ஹோர்மோன் கோளாறுகள் காரணமாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கும்.. எய்ட்ஸ், புரதசத்து குறைவு போன்றவற்றால் இதன் அளவு குறையும்..
மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான அணுக்கள்..

*மோனோஸைட்*
சராசரி அளவு நான்கு சதவீதம்.. டைபாய்டு, மலேரியா, இதய உறை நோய், மூட்டு வாத நோய், காசநோய் போன்றவற்றால் இவற்றின் அளவு அதிகரிக்கிறது.. எலும்பு மஜ்ஜையில் பிரச்சனை என்றால் இதன் அளவு குறைகிறது.. மேலும் உடலில் நுழையும் நோய்க்கிருமிகளை போரிட்டு அழிக்கும் பெருமை இவ்வகை அணுக்களை சேரும்..

*ஈசினோபில்*
சராசரி அளவு நான்கு சதவீதம்.. ஆஸ்துமா, குடல்புழு, சிலவகை புற்றுநோய் இதன் அளவை அதிகரிக்கும்.. குறிப்பாக ஈசினோபிலியா நோய் பாதிப்புடையவர்களுக்கு இதன் மொத்த அளவை பரிசோதிப்பதுண்டு..

*பேசோபில்*
சராசரி அளவு ஒரு சதவீதம் மட்டுமே.. உணவு ஒவ்வாமை, நாள்பட்ட நோய்கள், புற்றுநோய், கதிரியக்க சிகிச்சை போன்றவற்றால் இதன் அளவு அதிகரிக்கிறது.. மன அழுத்தம், தைராய்டு கோளாறு காரணமாக இதன் அளவு குறைகிறது...

இந்த அடிப்படை இரத்த அணுக்களின் அளவை, காரணங்களை, விளைவுகளை அறிந்துவைத்திருப்பது இக்காலத்தில் அவசியமான ஒன்றாகும்...

மருத்துவ ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்....

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277 577
சென்னை 9043336000

Post Comment

திங்கள், ஏப்ரல் 27, 2020

ஆங்கில மருந்துக்கு தாயாகும் மூலிகை மருந்துகள்

ஆங்கில மருந்துக்கு தாயாகும் மூலிகை மருந்துகள் 

டாக்டர். அ. முகமது சலீம்., BAMS.,M.Sc.,MBA
ஆயுர்வேத மருத்துவர்.



பெரும்பான்மையான ஆங்கில மருந்துகளின் மூல பொருள் ஒரு இயற்கை பொருளாக, மூலிகையாக இருக்கிறது. பார்மகாக்னஸி ஒரு மருந்தியல் துறை -ஆங்கில மருந்துகளை மூலிகை, இயற்கை வளங்களில், விலங்கினங்களில் இருந்து மருந்துகளை கண்டு பிடித்து உலகுக்கு தனது கொண்டு இருக்கிறது ..




உதாரணத்தை  நாம் சொல்லி கொண்டே போகலாம் .,



சர்க்கரை நோய்க்கு பயன்படும் மெட்பார்மின் - ஒரு மூலிகை மருந்து

புற்று நோய்க்கு பயன்படும் வின்கரிஸ்டீன் - ஒரு மூலிகை மருந்து

மலேரியா மற்றும் கொரோனாவுக்கு பயன்படும் -க்ளோரோ குயின் -ஒரு மூலிகை மருந்து

உயிர் காக்கும் அட்ரோபின் - ஒரு மூலிகை மருந்து

உலகில் மிக சிறந்த வலி நிவாரணி - கொடைன் - ஒரு மூலிகை மருந்து
இதய நோய்க்கு பயன்படும் டிஜாக்சின் - ஒரு மூலிகை மருந்து

பன்றி காய்ச்சலின் வைரஸுக்கு பயன்படும் டேமிப்ளூ - ஒரு மூலிகை மருந்து ..

இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகலாம் ..

எதை எடுத்தாயோ அதை இங்கிருந்தே எடுத்து கொண்டாய் - எனும் அளவுக்கு ஆங்கில மருந்தின் தாயாக, மூலமாக,  உருவாக்கமாக ஆயுர்வேத, சித்த, நமது பாரம்பரிய மருத்துவம் உள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை ,,




இப்போது சொல்லுங்கள் ஆயுர்வேத மருந்து, சித்த மருந்துகள் சீக்கிரம் வேலை செய்யாதா ?

ஆங்கில மருந்தோடு ஆயுர்வேத மருந்தை, சித்த மருத்துவத்தை எடுத்து கொள்ள கூடாதா ?

அறிவியல்  பூர்வமான அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதே ஆயுர்வேத, சித்த மருந்து முறைகள் தான் ..

கையில் வெண்ணை இருக்க நெய்யுக்கு அலைகிற  கதை தான் நமது ..

வடிவேலு, மாதவன் ஒரு சிரிப்பு காட்சியில் சொல்வார் - வெள்ளையா இருக்கிறவன் போய் சொல்ல மாட்டான் - இது போல ஆங்கில மருத்துவம் எது சொன்னாலும் பொய்  சொல்லாது என்று நமது தாய் மருத்துவமான ஆயுர்வேத சித்த மருத்துவதை ஒதுக்கி -ஸ்பெஷலிஸ்ட்  என்ற மாயையில் வீழாதீர்கள் ..


ஆங்கில மருந்து -அவசரத்திற்கு மட்டும் தான்..
ஆயுள் முழுவதும் ஆரோக்கியதிற்கு ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் தான். போலி மருத்துவர்களிடம் ஏமாந்து நமது பாரம்பரிய மருத்துவதை  குறை சொல்லாதீர்கள் ..

இனி ஒரு விதி செய்வோம் ..
இனி ஆயுர்வேத, சித்த மருந்துகளையே முதலில் பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்வோம் ..















சிறந்த ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு 


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

சனி, ஏப்ரல் 25, 2020

இந்திய மக்களை காக்க வந்த இந்துகாந்தம் கஷாயம் - உடல் எதிர்ப்பு சக்தி தரும் ஆயுர்வேத வரம்

இந்திய மக்களை காக்க வந்த இந்துகாந்தம் கஷாயம் - உடல் எதிர்ப்பு சக்தி தரும் ஆயுர்வேத வரம் 

டாக்டர். அ. முகமது சலீம்., BAMS.,M.Sc.,MBA
ஆயுர்வேத மருத்துவர் 

இந்துகாந்த கஷாயம் ...இந்திய மக்களை காக்க வந்த ஒரு ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டிய ஒரு அற்புத மருந்து .. 


கேரளா, கோவா, புது டெல்லி போன்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகமும் ஆரோக்கியம் என்கிற திட்டத்தை கையில் எடுத்துள்ளது .. 

பாரம்பரிய சிகிச்சை வாயிலாக நாம் இந்த கோவிட் 19 என்கிற கொரோனா கொள்ளை நோயை விரட்ட உடல் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் ஓர் அட்சய மருந்தை உண்டாக்கிடும் மருந்தை கண்டுபிடிப்பது அவசியம் .


அந்த அட்சய மருந்து ஆயுர்வேத புத்தகங்களில் ஆராய்ந்த போது  எல்லா ஆயுர்வேத மருத்துவர்களும் பரிந்துரைத்தது இந்த இந்துகாந்தம் கஷாயம். 



இந்து காந்த கஷாயம் செயல் திறன் எப்படி ?


முக்குற்ற உடலுக்கும் கொடுக்க முடியும் 

மூன்று தோஷங்களையும் சமப்படுத்த வேண்டும் 

உடல்  ஓஜஸை  அதிகரிக்க வேண்டும் 

காய்ச்சல் வராமல் தடுக்க உதவ வேண்டும் 

அடிக்கடி வருகிற காய்ச்சலை குணப்படுத்த வேண்டும் 

இளைத்த உடலை தேற்ற  வேண்டும் 

கண்களுக்கு தெரியாத கிரிமிகளை  கொல்ல  வேண்டும் 

காச நோய் போன்ற க்ஷய நோய்களில் பயன்படுத்தி இருக்க வேண்டும் 

கல்லீரலை சுத்த படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும்  

கல்லீரல் வீக்கதினால் உண்டாக்கிற பெரிய  வயிறை  சரி செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும் 


வயிறு உள்ள அக்னியை முறை படுத்த வேண்டும் 

வயிற்று புண்ணுக்கும்  தரும் அளவுக்கு இருக்க வேண்டும் 

எளிதாக கிடைத்திடல் வேண்டும் 

என்கிற பல வறிமுறைகளுக்கு பொருந்துகிற ஓர் அற்புத மருந்து தான் இந்த இந்துகாந்தம் கசாயம் 


எப்படி தயாரிப்பது ..
அதில் உள்ள மூலிகைகள் என்ன ? 

இதில் பதினெட்டு மூலிகைகள் உள்ளது . 


1. ஆவில் பட்டை என்கிற சிற வில்வம் 
2 . தேவதாரு பட்டை 
3. தஷ மூலங்கள் - அதாவது வில்வம் , குமிழ், முன்னை, பாதிரி, பெருவாகை, முள்ளுகத்தரி ,கண்டங்கத்தரி, ஓரிலை, மூவிலை 
4. ஷட் பலம் என்கிற ஆறு பொருட்கள். 
அதில் திப்பிலி, திப்பிலி மூலம், சவ்யம், கொடுவேலி சுத்தம் செய்தது, சுக்கு , யவ க்ஷாரம் .  இந்துப்பு பயன்படுத்தலாம். 









இந்துகாந்தம் என்றால் பொருள் என்ன ? .. 

காந்தம் இருக்கிறதா ?

காந்தம் என்றால் ஒளி என்றே பொருள் அதில் நாம் பார்க்கிற Magnet -காந்தம் இல்லவே இல்லை .. நம்மை சரி செய்யும் ஒளி என்கிற ஆற்றலே   உள்ளது .. 
எல்லாமே மூலிகை பொருட்கள் தான் ..

இந்து என்றால் நிலவு, காந்தம் என்றால் ஒளி -பிரகாசம் என்று பொருள். உடலை எல்லா வகையிலும் பிரகாசிக்க செய்கிற இந்த மருந்து வரம் தான். 

இந்துகாந்த கசாயதில் உள்ள மூலிகைகளை நெய்யில் காய்ச்சி  உடலில் எளிதாக சேரும் அளவுக்கு மிக சிறந்த பலனை தரவல்ல இந்துகாந்த கிருதம் என்கிற நெய் மருந்தை ஆயுர்வேதம் நமக்கு தந்துள்ளது .. 

யார் யார் பயன்படுத்தலாம் 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த பத்தியமும் இல்லாமல், எந்த பயமும் இல்லாமல் நாம் இந்த இந்து காந்தம் கசாயத்தை பருகி -கொரோனா போன்ற நோயுடன் போராடலாம் 

எந்த வித ஆங்கில மருந்துகளோடும் இதை பருகலாம் 

இந்து காந்தம் கசாய சூர்ணமாகவும் , தயாரித்தே கிடக்கிற பாட்டில் மருந்தாகவும், கசாய மாத்திரைகளாகவும் கிடைக்கிறது .. 

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களை அணுகுங்கள். சந்தேகம் தெளிய 


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000




Post Comment

வெள்ளி, ஏப்ரல் 24, 2020

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை வழங்கிய -முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இலவசமாய் பருகிய கப சுர குடிநீர்.

 கப சுர குடிநீர் இலவசமாய் கடையநல்லூரில் ....தொடர்ந்து பல நாட்களாக ..



அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை வழங்கும் -முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இலவசமாய் பருகிய கப சுர குடிநீர்.

கொரோனா போன்ற நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள உடல் எதிர்ப்பு சக்தி அதிகமாக்குவது மட்டுமே ஒரே வழி என்று நாம் அனைவரும் அறிவோம்.

அதனை உணர்ந்த தமிழக அரசும் ஆரோக்கியம் எனப்படும் ஒரு ஷகீம் மூலமாக நேற்று 23/04/2020 கப சுர குடிநீர்   மக்களுக்கு பரிந்துரைத்துள்ளது ..


இதை உணர்ந்த நமது கடைநல்லூர் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை கடந்த சில நாட்களாக மக்களுக்கு இலவசமா வீதி தோறும் வழங்கி வருகிறது.

ஒரே ஒரு டீ கேனில் போட்டு எடுத்து கொண்டு, ஐம்பது மக்களுக்கு கொடுக்க போட்டோ எடுத்து சேவை செய்வதாய் பலரும் விளம்பர படுத்தி கொண்டு இருக்க நாங்கள் எங்களது மருத்துவ மனை குழு சத்தம் இல்லாமல் ஊர் முழுவதும் கொடுத்து விடுவோம் என்று உறுதி கொண்டோம் ..

எங்களது மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ஜாவாஹிரா பானு மற்றும் டாக்டர் பிரியங்கா தலைமையில், மருந்தாளுநர்கள் திரு. மணி , திரு அருண் ,திரு. முப்புடாதி, பஞ்ச கர்ம தெரபிஸ்ட்  ஜான் மற்றும் பின்னணியில் ஓட்டுநர்கள்  திரு யாசிர், ஏஜென்சி சேல்ஸ் தலைமை திரு சாகுல் , லேப் டெக்நீஷியன் திரு இப்ராஹீம் .. அகிலா, முப்படாதி ,ஷகீலா அவர்களின் உதவியோடு இந்த இலவச கப சுர குடிநீர் வழங்கி வருகிறோம்.
கப சுர குடிநீர் ஒரு நாளைக்கு 150 லிட்டர் காய்ச்சி கொடுக்க  பிரியாணி புகழ் ரஹ்மானியா புறம்  ஷரீப் ஹோட்டல் முதலாளி திரு முகமது அலி அவர்கள் தினமும் அவர்களது பிரியாணி தேகஷாவில் பதினைந்து குடம்  தண்ணீரில் கப சுர குடிநீர் காய்ச்சி எங்களுக்கு  கொடுத்து வருகிறார். நாங்கள் அவர்க்கு தேவையான அளவுக்கு கப சுர குடிநீர் சூரணத்தை கொடுத்து 150 லிட்டர் காய்ச்சி இலவசமாய் ஊர் முழுவதும் வழங்கி வருகிறோம்


இது வரை எங்களது மருத்துவமனை அமைந்துள்ள தலைமை இடமான கடைநல்லூரில் கடந்த சில நாட்களாக நாங்கள் ஒரு நாளைக்கு கிட்டதட்ட 150 லிட்டர் அளவுக்கு கப சூடிநீர் காய்ச்சி கிட்டதட்ட ஒரு நாளைக்கு நான்காயிரத்து ஐநூறு நபர்கள் குடிக்கும் அளவுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.

இது வரை சராசியாக பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் முப்பதாயிரத்திற்கு மேல் இருக்கலாம்.. இன்னும் சேவை தொடரும். இன்றும் சேவை செய்ய எங்களது குழு பணியாற்றி கொண்டு இருக்கிறது . நோன்பு ஆரம்பிப்பதால் மற்ற இடங்களில் கிருஷ்ணாபுறம், மேல கடையநல்லூர், மாவடிக்கள் பகுதிகளிலும் இன்னும் தேவை படுகிற இடங்களில் தொடர்ந்து இலவச கப சுர குடிநீரை வழங்க உள்ளோம்.

கடந்த பல மாதங்களாக எங்களது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் நாங்கள் தொடர்ந்து இலவசமாக நிலவேம்பு குடிநீரை வழங்கி வந்துள்ளோம். இதை போன்று வருகிற எல்லா நாட்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்ந்த பின் தினமும் இலவசமாக வழங்க உள்ளோம் .. அது வரை வீடு வீடாக தயார் செய்து தக்க பாதுகாப்புடன் கப சுர குடிநீரை வழங்க உள்ளோம் .













இந்த சேவை பணியில் நாங்கள் யாரிடமும் எந்த உதவியும் இது வரை கேட்டதில்லை. எந்த இயக்கமும் அமைப்பும் பங்கு பெற வில்லை . இனி எந்த பொது நல அமைப்புகள் , இயக்கங்கள் , சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் யார் கேட்டாலும் பெரிய அளவில் வழங்க முற்பட்டால் நாங்கள் இணைந்து செயல்பட தாயாராக உள்ளோம். தக்க அனுமதி , அரசின்  உத்தரவுகளை மீறாமல் செயல் பட தயாராக இருந்தால் நீங்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.


மருத்துவ சேவையில் என்றென்றும்
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
பதினைந்து படுக்கை வசதி கொண்ட ஆயுர்வேத, ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர், தென்காசி மாவட்டம்
செல் 9042225333

Post Comment

புதன், ஏப்ரல் 22, 2020

கொரோனா குடிப்பவரை திருத்துமா..

 கொரோனா குடிப்பவரை திருத்துமா.?

குடிப்பவரை நீங்கள் திருத்த உதவ முடியுமா ?


டாக்டர் அ. முகமது சலீம் ., BAMS.,M.Sc.,MBA
ஆயுர்வேத மருத்துவர்


கொரோனாவால்  ஏற்பட்ட நன்மைகளில் மிக முக்கிய ஒன்று..

குடிப்பவர்கள் இனி குடிக்காமல் இருக்க ஓர் நல்ல வாழக்கை காத்து கொண்டிருக்கிறது... ..

நீங்கள் சமூக நலனில் அக்கறை உள்ளவரா ?

இந்த சமூகம் குடியை விட்டால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படும் நல்ல உள்ளமா நீங்கள் ?

உங்களது கணவரோ .. உங்களது சகோதரரோ .. உங்களது நண்பர்களோ .. . குடிப்பழக்கதிற்கு அடிமையாய் இருந்துள்ளார்களா ?


உங்களால் ஓர் குடும்பத்தை வாழவைக்க விருப்பமா ?

ஒரே ஒரு குடி காரரை நீங்கள் திருத்த  உதவிட ஆசைப்படுகிறீர்களா ?..


உங்களுக்காத்தான் இந்த பதிவு ..


குடிப்பழக்கம் உள்ளவர் குடியை விடாமல் இருந்ததற்க்கு காரணம் - ஆல்கஹால் டிப்பெண்டன்ஸி என்னும் ஓர் உடல் இயக்க நிலை. குடி உடம்பில் இருந்து குறையும் போது குடித்தால் தான் உடலின் எல்லா இயக்கமும் நன்றாக வேலை செய்யும்  என்கிற நிலை. இப்போது எல்லா குடி காரர்களும் இப்போது அந்த ஆல்கஹால் டிப்பெண்டன்ஸி தெரிந்தோ அல்லது தெரியாமலோ கடந்து விட்டார்கள். ..

இனி அவர்கள் முழு மனது வைத்தால் அல்லது உங்களை போன்றவர்கள் மனது வைத்தால் அவர்களை இனி அந்த பக்கம் போகாமலே நல்ல முறையில் வாழ வைக்க முடியும்.. அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எளிமையான சில விஷயங்கள் தான் ..


பிறர் பசி பொறுக்க முடியாத ..
மனிதாபிமானம் உள்ளவர்கள் நாம் ..



1. அவர்களுக்கு தேவையான சரியான அறிவுரை கூறி - கவுன்சிலிங் செய்து அவர்களை இனி குடிக்காமல் இருக்க சரியான வழி காட்டுங்கள்

2 . அருகில் உள்ள  குடி போதை மறுவாழ்வு மையங்கள், ஆல்க்ஹால் ஆனானிமஸ்  குரூப், அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மன நல மருத்துவர்கள் போன்ற மருத்துவ நிலையங்களுக்கு சென்று சரியான சிகிச்சை மட்டும் தொடர் பாலோ ஆப் செய்து வந்தால் நம்மால் எளிதாக அவர்களை காப்பாற்ற முடியம்

3. இந்த லாக் டவுன் பீரியட் முடிந்து மதுபான கதைகள், டாஸ்மாக் கதைகள் திறப்பதற்க்கு முன், மறுமுறை ஒரு தடவை கூட மதுவை சுவைப்பதற்க்கு முன் அவர்களை எளிதாய் வழி காட்டி திருத்த முடியும்

4 . நன்கு மருத்துவம் படித்த அனுபவம் உள்ள மருத்துவர்களை ஆலோசனை செய்ய சொல்லுங்கள்.. நல்ல தீர்வை நம்மால் கொடுக்க முடியும்.


5 . ஒரு வேலை இதெல்லாம் சரியாக வராது என்று நிணப்பவர்கள் எங்களது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை, மருத்துவமனை கிளைகளை  நாடலாம் .... நேரில் வர அவசியம் இல்லை .. எங்களது மருந்து நிறம் இல்லா மணம் இல்லா சுவை இல்லா ஆயுர்வேத மருந்து .. பக்க விளைவுகள் இல்லாதது .. எந்த உணவிலும் நம்மால் எளிதாக குடிப்பவர்களுக்கே தெரியாமல் கூட அவர்களின் முறையாக ஆலோசனை பெற்று உரியவர்கள் மருந்தை வாங்க முடியும்...


இந்த லாக்டவுன் பீரியட்  முடிந்த உடன் நம்மால் குடிகார்களை குடிக்காமல் திருத்த சிறந்த சிகிச்சை அளிக்க முடியும்.




குடிப்பவர்கள் ..

மதுப்பழக்கத்தினால் தன்னை அழித்துக்கொள்வதோடல்லாமல் தன் குடும்பத்தை, சமுதாயத்தை சேர்த்து நிலைகுலைய வைக்கின்றனர்..

குடி பழக்கத்தினால் உடல்நலம், மனநலம், புத்தி என அனைத்தையும் இழந்து நடமாடும் பிணமாகின்றனர்...

போதை பொருட்களில் இருக்கும் தீங்கை விளைவிக்கும் வேதிபொருட்கள் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் slow poison ஐ போல் கொன்று அவனை காய்ந்த மரத்தை போலாக்கிவிடுகிறது...


முதலில் உணவு குழாய், இரைப்பை போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தி செரிமானத்தையும், உணவு சத்துக்களை உரியும் சிறுகுடலையும், மலத்தை வெளியேத்தும் பெருங்குடலையும் செயலிழக்க செய்யும்..


அடுத்து கல்லீரல் உறுப்பை பாதிப்படைய செய்து மஞ்சள் காமாலை, கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய்  போன்ற நோயை உண்டாக்கி உயிர்க்கு உலைவைத்து விடுகிறது...

சிறுநீரகத்தில் உண்டாகும் நோய் தரும் வேதனை dialysis எடுத்துக்கொள்பவர்களை கேட்டால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.. சிறுநீரக செயலிழப்பை உண்டாக்கும் காரணங்களில் முதலில் இருப்பது மது பழக்கம்..


மூளை பாதிப்பு, மூளை இரத்த குழாய் அடைப்பு அல்லது இரத்த குழாய் வெடித்துவிட்டது...விளைவு பக்கவாதம்...



உடல் நரம்புகள் அனைத்தும் வலுவிழந்து உடல் நடுக்கம்,  நரம்பு தளர்ச்சியை உண்டாக்கி விடுவதன் விளைவு எந்த வேலையையும், செயலையும் செய்யமுடியாமல் போய்விடும்...


புத்தி செயலிழந்து, தொலைநோக்கு சிந்தனை இழந்து, நன்மை, தீமைகளை பகுத்தாயும் திறன் இழந்து எல்லா தகுதிகளையும் உடையவனை ஒன்றும் இல்லாதவனாய் பின்னுக்கு தள்ளிவிடும்...

நிம்மதியின்றி, மனக்குழப்பதோடு மனஅழுத்தத்துடன் வாழ்வையும் இழக்கின்றனர்...


குடும்பத்தினரிடம் நன்மதிப்பை இழந்து, பெற்றோர், சகோதரர், மனைவி, மக்கள் அனைவரின் அன்பை இழந்து, வெறுப்பை சம்பாதித்து, சமுதாயத்தில் அடுத்த தலைமுறையினரை பாதைமாற செய்து மடிவது மட்டுமே மிச்சம்...

மனமிருந்தால் மட்டுமே மார்க்கம்...

ஆல் - ஷிபா ஆயுஷ் மருத்துவமனை உதவிக்கரம் நீட்டுகிறது.. இணைத்துக்கொண்டு முன்னேறி வாருங்கள் சகோதரர்களே...


Deaddiction (போதை அடிமைதனத்திலிருந்து வெளியேற ) மருந்துகளை பயன்படுத்துவதால் போதை பழக்கத்திலிருந்து முற்றிலும் வெளிவர முடியும்..

மேலும் வேறு எந்த உடல் உபாதைகளும் விளைவிக்காத, பக்கவிளைவு அறவே இல்லாத அல் - ஷிபா ஆயுஷ் மருத்துவமனை அளிக்கும் சிறந்த ஆயுர்வேத மருந்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் குணமடைந்து, அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்கு காரணமாக திகழ்கிறது..

புகைப்பழக்கம், குடி, கஞ்சா, போன்ற எல்லா போதைப்பழக்கங்களுக்கும் deaddiction மருந்து தரப்படுகிறது.


இம்மருந்தை குடிப்பழக்கம் உடையவர்க்கு உறவினர்கள்  தெரியாமலும் கொடுக்கலாம்... (ஏனென்றால் குடி குடியையே கெடுக்கும்)..

சந்தேகங்களுக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 21, 2020

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..

டாக்டர்.அ.முகமது சலீம்,BAMS.,M.Sc.,MBA
ஆயுர்வேத மருத்துவர் 


ஆயுர்வேத மருந்து சாபிட்டால் கிட்னி பெயிலியர் ஆகி விடுமா சார்  என்று கேட்கும் பல நோயாளிகள் இங்கே உள்ளனர்.நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத ,சித்த மருந்துகளை நோயாளிக்கு பரிந்துரைத்தால் நோயாளிகள் நம்மிடம் கேட்கும் முதல் கேள்வி பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா சார் ? அவர்களுக்கு நாம் பொறுமையாக எப்போதும் சொல்வது –நிச்சயம் இல்லவே இல்லை .தகுதி வாய்ந்த மருத்துவர் ,தகுதி வாய்ந்த மருந்துகளை ,எப்படி சாப்பிட வேண்டும் ,எவ்வளவு அளவு எடுத்து கொள்ள வேண்டும் ,எந்த அனுபானத்துடன் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை பொருத்து மருந்துகளின் நல்ல விளைவுகளில் நோயின் நிவாரணம் இருக்கிறது .



கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ,மருத்தவரின் எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் மெடிகல் ஷாப்பில்,பல சமயங்களில் மளிகை கடைகளிலும் கிடைக்க கூடிய ஆங்கில மருந்தை எடுத்து கொள்ள கூடிய மக்களை நினைத்து ஒரு ஆச்சர்யம் ஏற்படத்தான் செய்கிறது..

இன்றைக்கு உள்ள கஷ்டம் நீங்கினால் போதும் –நாளை என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் தான் பல நோயாளிகள் –ஆங்கில மருந்தை எடுத்து கொண்டு உள்ளார்கள் ..உண்மையில் அவர்கள் மனதில் ஆங்கில மருந்து ஆபத்து இல்லை என்ற எண்ணம் உள்ளது என்றே தோன்றுகிறது.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து ,அந்த சோதனை ,இந்த சோதனை என்று பல அறிவியல் அணுகு முறைக்கு மேலே தான் ஒரு ஆங்கில மருந்து உருவாக்கபடுகிறது. பல ஆண்டுகள் மக்கள் பயன்படுத்திய பின்னரும் அவர்களது ஆராய்ச்சிகள் தொடர செய்கிறது.ஆனால் பக்க விளைவுகள் உள்ளது என்று பின்னர் அதே மருந்தை தடை செய்ய வேண்டும் என்றும் திடீர் என்று சொல்லி விடுகிறார்கள். தடை என்று சொன்ன அதே மருந்துகள் இந்தியாவில் மட்டுமே தாராளமாக கிடைக்கிறது. மருந்து கம்பெனிகளின் வணிக முறைகள் நினைத்தால் ஒரு போரை விட பயங்கரமாக உள்ளது ..என்ன செய்ய

கடந்த சில வருடங்களில் உலகம் எங்கும் தடை செய்யபட்ட ஆங்கில மருந்தின் எண்ணிக்கை முன்னூறுக்கும் மேலே ..அவை எல்லாம் சரியான பல வருட ஆராய்ச்சிக்கு பின் தான் வெளிவந்துள்ளது என்பது தான் ஆச்சர்யமான தகவல் .





மருந்துகளின் combination என்ற ஒரு நிலை இந்தியாவில் மட்டுமே தான் அதிகம் உள்ளது . ஒரு மருந்தோடு இன்னொரு மருந்தை இணைத்து ஒரு மருந்தாக்கும் இந்த combination நிலை எல்லாமே ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்த படவே இல்லை என்பது தான் உண்மை .இந்திய அரசாங்கமே முன்னூறுக்கும் மேற்பட்ட Combination அங்கில மருந்தை தடை செய்துள்ளது –அதை அரசு gezzetலும் வெளி விட்ட பின்னும் அவை மிக மிக தாராளமாக கிடைக்க செய்கிறது


இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகிறது. ஏனென்றால் மலேசியாசிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.

பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமாமுன்னூறுக்கும்  மேலே ..


சரிஇப்போது அதில் சில மருந்துகளை அவை என்ன என்ன மருந்துகள் என்று  பார்ப்போம்.

1 . அனால்ஜின் ( Analgin) பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு

2 . நிமிசுலைட் (Nimisulide) பயன்பாடு – வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு – கல்லீரல் செயல் இழப்பு

3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine பயன்பாடு – சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு – மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்

4 . சிசாபிரைடு ( cisapride ) பயன்பாடு – மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்துவது.
பக்க விளைவு – இதயத் துடிப்பு சீர்கேடு

5 . குயிநோடக்ளர் (quinodochlor ) பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – கண்பார்வை பாதிப்பு

6 . பியுரசொளிடன் (Furazolidone ) பயன்பாடு – வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – புற்றுநோய்

7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone ) பயன்பாடு – கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்

8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone ) பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு

9 . பைப்பரசின் ( Piperazine ) பயன்பாடு – வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு – நரம்புச் சிதைவு

10 . பினப்தலின் (Phenophthalein ) பயன்பாடு – மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்

சரிஇந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா

1 . அனால்ஜின் – Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் – D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் – Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் – Entero quinol

இதைத்தான் நம் சில ஆங்கில மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நோயாளிகளே  வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்து விடுகிறார்கள் . நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும்பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் , சில மருத்துவர்களுமேதான். 

ஒட்டு மொத்த ஆங்கில மருத்துவர்களை குறை சொல்லவே முடியாது. மிக சில நாட்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கும் பல ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பல ஆண்டுகள் ஒரு துளி பயமும் இன்றி மெடிகல் ஷாப்பில் எடுத்து கொள்ளும் நோயாளிகளே இந்தியாவில் மிக மிக அதிகம்

தேவை விழிப்புணர்வு –
மருந்தின் அட்டைபெட்டியில் ஆபத்து என்று போட தேவை இல்லை ...உள்ளே வைக்கும் மிக மிக மிக சிறிய பேப்பரில் மிக மிக மிக பொடி எழுத்தில் இந்த மருந்து ஆபத்து விளைவிக்கும் என்று சொன்னால் போதும் என்று இங்கே ஆட்சியாளர்களே  –மருந்து கம்பெனிகளின் வேலையாட்களாய் மாறிய இந்தியா தான் என்னை போன்ற சராசரி மக்களை பயமுறுத்துகிறது.

இந்தியா நமது தாய் நாடு என்றால் ..இந்திய மருத்துவமே நமது தாய் மருத்துவம் .தாய் மருத்துவம் முதலில் நாடுவோம் ..அதையும் தரமான படித்த அனுபவும் வாய்ந்த அல்லது உண்மையில் மருத்துவ பாரம்பரிய மிக்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதில் தவறு இல்லை என்பது எனது தனிபட்ட கருத்து..போலி மருத்துவரிடம் ,போலி மருந்துகளிடம் ,தடை செய்யப்பட அங்கில மருந்துகளிடம் நாம் எச்சரிக்கையாய் இருப்போம்

இது விழிப்புணர்வுக்கே  அன்றி வேறில்லை 

தரமான இந்திய மருத்துவ சிகிச்சைக்கு ,தரமான் தாய் மருத்துவ சிகிச்சைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை #அல்_ஷிபா_ஆயுஷ்_மருத்துவனை
#கடையநல்லூர் 90 4222 5333
#திருநெல்வேலி 90 4222 5999
#ராஜபாளையம் 90 4333 6888
#சென்னை 90 4333 6000


Post Comment

திங்கள், ஏப்ரல் 20, 2020

வியர்பிக்கும் சிகிச்சை - ஓர் இரகசியம்

வியர்வை உண்டாக்கும் சிகிச்சை -
காய்ச்சலை போக்கும் ஓர் ஆயுர்வேத இரகசியம் 



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள் 


ஆயுர்வேதம் கூறும் சிகிச்சைகள் அனைத்திற்கும் ஆரம்ப சிகிச்சைகளில் தலையாயது  இந்த வியர்வை உண்டாக்கும் ஸ்வேதான  சிகிச்சை தான்... அதாவது நீராவி சிகிச்சை preoperative procedure ( ஒரு நோய்க்கான சிகிச்சையை அளிப்பதற்கு முன்னதாக கட்டாயம் கொடுக்கவேண்டிய சிகிச்சை) ல் விவரிக்கப்பட்டுள்ளது...





ஆயுர்வேதம் ஸ்வேதன கர்மா (sudation therapy) என்ற பெயரில் நீராவி சிகிச்சையை மிக நுண்ணியமாக தெளிவுபடுத்தியுள்ளது...
வியர்வை உண்டாக்கும் சிகிட்சையான நீராவி பிடித்தல் பற்றி இதுவரை நாம் அறிந்திருப்பது வெறும் ஒரு சதவீதம் மட்டுமே.. 



மொத்தம் இருபத்துமூன்று வகையான ஸ்வேதன சிகிச்சைகளை முறையாக எடுத்துக்கொள்வது எப்படி, எந்தெந்த நோய்களுக்கு, யார் யார் எடுத்துக்கொள்ளலாம், எந்தெந்த மூலிகைகளை பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம் இன்னும் பல தகவல்களை கூறியிருப்பது அருமையிலும் அருமை..


தற்போதைய தலையாய பிரச்சனை கொரோனா தொற்று... அதற்கும் இந்த  சிறந்த, முக்கிய சிகிச்சை வியர்ப்பிக்க வைக்கும் சிகிச்சை ... இது கிருமிகளை கொல்லுமா .. அல்லது கொல்லாதா என்பதை விட .. இதே போல் உள்ள காய்ச்சலில் ஆயுர்வேதம் சொல்கிற அற்புத சிகிச்சை  பலருக்கும் தெரிந்த,  மறுக்கமுடியாத உண்மை....


பிறந்த குழந்தைக்கும் கொரோனா தாக்குதல் இருப்பதாய் வெளிவந்துள்ள தகவலை அனைவரும் அறிவீர்கள்...

மென்மையான பிறந்தகுழந்தைக்கு நீராவி பிடித்தல் சிகிச்சை சாத்தியமா...?
பிறந்த குழந்தைக்கு எவ்வாறு ஸ்வேதன சிகிட்சை கொடுக்கவேண்டும் என்பதை அறிவீர்களா?..


வியர்ப்பிக்கும் நீராவி போன்ற  சிகிச்சையில் மிக தெளிவான ஞானம் இருந்தால் மட்டுமே சிகிச்சையின் முழுமையான பலனை அடையமுடியும்.. இல்லாவிடில் விபரீதவிளைவுகளே கிட்டும்... 


அறுவைசிகிட்சையின் தந்தை சுஸ்ருதர் மற்றும் தலைசிறந்த ஆச்சாரியார் சரகர் மொத்தம் இருபத்துமூன்று வகையான வியர்வை உண்டாகும் சிகிச்சைகளை ஆயுர்வேதத்தில் குறிப்பிட்டுள்ளனர்... 


அதில் ஊஷ்ம ஸ்வேத (நீராவி - steam therapy ) என்னும் தலைப்பின் கீழ் ஏழு வகையான சிகிச்சை முறைகளை கூறியுள்ளனர்.. எளிய,  முக்கிய சிகிச்சையாக கருதப்படுவது நாடிஸ்வேதனம் எனப்படுவது.. 


இன்றைய நவீனமுறை நீராவி உள்ளிழுத்தல் சிகிச்சையும் இதுவே.. இது மிகவும் எளிமையானது ..

கவனத்தில் கொள்ள வேண்டியவை.. 
1. உணவருந்தாமல் / வெறும்வயிற்றுடன் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள கூடாது. 
2. சிகிச்சையின் போது கண்களை குளிர்ந்த நீரில் நனைத்த பருத்தி துணியினை கட்டிக்கொள்ளவேண்டும். 
3. எக்காரணத்தைக்கொண்டும் நீராவியின் உஷ்ணம் கண்களில் படக்கூடாது. 
4. சிகிச்சை பெறுபவருக்கு ஏற்ற மூலிகை தைலம் / எண்ணெய் பூசிக்கொண்டு தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
5.காற்றோட்டம் இல்லாத அறையில் சிகிச்சை எடுப்பது சிறந்தது, மின்விசிறி அணைத்துவிட்டு மேற்கொள்ளலாம். 


*வியர்ப்பிக்கும் நீராவி சிகிச்சை முறை...* 

வாயகன்ற பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி கனமான போர்வையை நீராவி வெளியே செல்லாத விதம் நன்றாக போர்த்தி நீராவியை (மூலிகையிட்டு / மூலிகையிடாமலும் ) நாசி, வாய் வழியாக உள்ளிழுக்கவேண்டும்.. அவ்வாறே 15முதல் 30நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளவேண்டும்.  பதிமூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு face steamer பயன்படுத்துதல் பாதுகாப்பு. பச்சிளம் குழந்தைகளுக்கு ஹஸ்தஸ்வேதம் எனப்படும் இருகைகளையும் நன்றாக உரசுவதால் உண்டாகும் உஷ்ணத்தோடு கைகளை குழந்தையின் மேல் ஒற்றி எடுப்பது உகந்த முறையாகும். 

*பரிந்துரைக்கப்படும் நோய்கள்..*
1. சுவாச பிரச்சனை 
2. இருமல் 
3. மூக்கில் நீர்வடிதல் 
4. விக்கல்
5. தலை, உடல் பாரம் 
6. வலி 
7. தொண்டை கரகரப்பு 
8. முகவாதம் 
9. பக்கவாதம் 
10. மலசிக்கல் 
11. நீர்க்கடுப்பு
12. பசி, சுவையின்மை 
13. அனைத்து வாத நோய்கள்... 


*பயன்படுத்தப்படும் மூலிகைகள்..* 
இந்துப்பு, முருங்கை, ஆமணக்கு, மாவிலங்கு, சீந்தில்,  எருக்கு, மூக்கிரட்டை, பார்லி எனப்படும் வாற்கோதுமை, கொள்ளு, உளுந்து, எலந்தை, கோமியம், எள்ளு...இந்த மூலிகைகளின் எந்த பகுதியையும் (வேர், தண்டு, பட்டை, சருகு, இலை, கொட்டை, பொடி, விதை   போன்றவை )  பயன்படுத்தலாம் 

*நீராவி சிகிச்சையால் கிடைக்கும் பலன்கள்..* 
1. கிருமி தொற்று, சளி அகலும் 
2. செரிமானம் அதிகரிக்கும் 
3. கடினமான உடல்பகுதிகள் ம்ருதுவாகும் 
4. மூட்டு பகுதிகளில் உள்ள நோய்கள் (வலி, இறுகம்)  மாறும் 
5. பசியின்மை நீங்கும் 
6. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்

*தவிர்க்கவேண்டியவர்கள்..* 
1. மது, புகை பழக்கமுடையவர்
2. கர்பிணி பெண்கள் 
3. மஞ்சள் காமாலை நோயாளிகள் 
4. வயிற்று போக்கு நோயாளிகள் 
5. சர்க்கரை நோயாளிகள் 
6. இரத்தப்போக்கு உடையவர்கள் 
7. விஷ கடி அல்லது விஷமருதியவர்கள் 
8. நாவறட்சி, தொண்டை வறட்சி உடையவர்கள் 
9. தொடர் உடல் மெலிவு உடையவர்கள்..கட்டாயம் நீராவி சிகிச்சையை  தவிர்ப்பது பாதுகாப்பு. 

*தவறான முறையை மேற்கொண்டால் உண்டாகும் விபரீத / எதிர்மறை விளைவுகள்..*
1. உடல் உஷ்ணம் அதிகம் ஆதல் 
2. உஷ்ணம் / பித்தம் சம்பந்தமான நோய்கள் 
3. தொண்டை, நாவறட்சி 
4. சரும எரிச்சல் 
5. மயக்கம் 
6. தலைசுற்றல்
7. சருமத்தில் கொப்புளங்கள்..போன்றவை உண்டாக்க கூடும்.. 

வியர்வை சிகிச்சை பற்றி சந்தேகங்களுக்கு அணுகவும்.. 

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333 
திருநெல்வேலி 9042225999 
ராஜபாளையம் 9043336888 
தேனி 904727577 
சென்னை 9043336000

பகிரலாமே ..

Post Comment