சனி, ஏப்ரல் 25, 2020

இந்திய மக்களை காக்க வந்த இந்துகாந்தம் கஷாயம் - உடல் எதிர்ப்பு சக்தி தரும் ஆயுர்வேத வரம்

இந்திய மக்களை காக்க வந்த இந்துகாந்தம் கஷாயம் - உடல் எதிர்ப்பு சக்தி தரும் ஆயுர்வேத வரம் 

டாக்டர். அ. முகமது சலீம்., BAMS.,M.Sc.,MBA
ஆயுர்வேத மருத்துவர் 

இந்துகாந்த கஷாயம் ...இந்திய மக்களை காக்க வந்த ஒரு ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டிய ஒரு அற்புத மருந்து .. 


கேரளா, கோவா, புது டெல்லி போன்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகமும் ஆரோக்கியம் என்கிற திட்டத்தை கையில் எடுத்துள்ளது .. 

பாரம்பரிய சிகிச்சை வாயிலாக நாம் இந்த கோவிட் 19 என்கிற கொரோனா கொள்ளை நோயை விரட்ட உடல் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் ஓர் அட்சய மருந்தை உண்டாக்கிடும் மருந்தை கண்டுபிடிப்பது அவசியம் .


அந்த அட்சய மருந்து ஆயுர்வேத புத்தகங்களில் ஆராய்ந்த போது  எல்லா ஆயுர்வேத மருத்துவர்களும் பரிந்துரைத்தது இந்த இந்துகாந்தம் கஷாயம். 



இந்து காந்த கஷாயம் செயல் திறன் எப்படி ?


முக்குற்ற உடலுக்கும் கொடுக்க முடியும் 

மூன்று தோஷங்களையும் சமப்படுத்த வேண்டும் 

உடல்  ஓஜஸை  அதிகரிக்க வேண்டும் 

காய்ச்சல் வராமல் தடுக்க உதவ வேண்டும் 

அடிக்கடி வருகிற காய்ச்சலை குணப்படுத்த வேண்டும் 

இளைத்த உடலை தேற்ற  வேண்டும் 

கண்களுக்கு தெரியாத கிரிமிகளை  கொல்ல  வேண்டும் 

காச நோய் போன்ற க்ஷய நோய்களில் பயன்படுத்தி இருக்க வேண்டும் 

கல்லீரலை சுத்த படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும்  

கல்லீரல் வீக்கதினால் உண்டாக்கிற பெரிய  வயிறை  சரி செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும் 


வயிறு உள்ள அக்னியை முறை படுத்த வேண்டும் 

வயிற்று புண்ணுக்கும்  தரும் அளவுக்கு இருக்க வேண்டும் 

எளிதாக கிடைத்திடல் வேண்டும் 

என்கிற பல வறிமுறைகளுக்கு பொருந்துகிற ஓர் அற்புத மருந்து தான் இந்த இந்துகாந்தம் கசாயம் 


எப்படி தயாரிப்பது ..
அதில் உள்ள மூலிகைகள் என்ன ? 

இதில் பதினெட்டு மூலிகைகள் உள்ளது . 


1. ஆவில் பட்டை என்கிற சிற வில்வம் 
2 . தேவதாரு பட்டை 
3. தஷ மூலங்கள் - அதாவது வில்வம் , குமிழ், முன்னை, பாதிரி, பெருவாகை, முள்ளுகத்தரி ,கண்டங்கத்தரி, ஓரிலை, மூவிலை 
4. ஷட் பலம் என்கிற ஆறு பொருட்கள். 
அதில் திப்பிலி, திப்பிலி மூலம், சவ்யம், கொடுவேலி சுத்தம் செய்தது, சுக்கு , யவ க்ஷாரம் .  இந்துப்பு பயன்படுத்தலாம். 









இந்துகாந்தம் என்றால் பொருள் என்ன ? .. 

காந்தம் இருக்கிறதா ?

காந்தம் என்றால் ஒளி என்றே பொருள் அதில் நாம் பார்க்கிற Magnet -காந்தம் இல்லவே இல்லை .. நம்மை சரி செய்யும் ஒளி என்கிற ஆற்றலே   உள்ளது .. 
எல்லாமே மூலிகை பொருட்கள் தான் ..

இந்து என்றால் நிலவு, காந்தம் என்றால் ஒளி -பிரகாசம் என்று பொருள். உடலை எல்லா வகையிலும் பிரகாசிக்க செய்கிற இந்த மருந்து வரம் தான். 

இந்துகாந்த கசாயதில் உள்ள மூலிகைகளை நெய்யில் காய்ச்சி  உடலில் எளிதாக சேரும் அளவுக்கு மிக சிறந்த பலனை தரவல்ல இந்துகாந்த கிருதம் என்கிற நெய் மருந்தை ஆயுர்வேதம் நமக்கு தந்துள்ளது .. 

யார் யார் பயன்படுத்தலாம் 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த பத்தியமும் இல்லாமல், எந்த பயமும் இல்லாமல் நாம் இந்த இந்து காந்தம் கசாயத்தை பருகி -கொரோனா போன்ற நோயுடன் போராடலாம் 

எந்த வித ஆங்கில மருந்துகளோடும் இதை பருகலாம் 

இந்து காந்தம் கசாய சூர்ணமாகவும் , தயாரித்தே கிடக்கிற பாட்டில் மருந்தாகவும், கசாய மாத்திரைகளாகவும் கிடைக்கிறது .. 

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களை அணுகுங்கள். சந்தேகம் தெளிய 


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000




Post Comment

0 comments:

கருத்துரையிடுக