புதன், ஏப்ரல் 08, 2020

வயதான பெற்றோர்களுடன் கொடிய கொரனோவை எப்படி எதிர்கொள்வது ?

வயதான பெற்றோர்களுடன் கொடிய கொரனோவை  எப்படி எதிர்கொள்வது ?

Danger zone (COVID 19)



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


கொரோனா தொற்று என்ற பிரச்சனை ஆரம்பித்த சில காலத்திற்குள் அறிவியல் ஆராச்சியாளர்களும் மருத்துவர்களும் இறப்பு விகிதம் பற்றி  வெளியிட்ட கருத்து... வயதில் மூத்தோர்களும் அதாவது 60வயதை கடந்தவர்களும், பிற நோய்களால் பாதிக்கபட்டவர்களும் கொரோனா தாக்கத்தினால் இறக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்திருந்தனர்....



குழந்தைகளை மட்டும் தான் பெரிதும் பாதிக்கும் என்றிருந்தால் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை விட வயோதிகர்களை பாதிக்கும் என்ற அறிவிப்பு மிக நிதானமாகவே அவர்களின் பிள்ளைகள் மனதை பாதித்திருக்கிறது... வெகு சிலரே முதியோர்களை சிறந்த முறையில் பராமரிக்கின்றனர்..



காரணம் இனி அவர்களால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற மனத்தோன்றலே...



அப்படி இல்லை நண்பர்களே... இன்றைய அவர்களின் நிலை நாளை உங்களுக்கும் தானே... உங்களை பார்த்து கற்றதை தானே உங்கள் பிள்ளைகள் உங்களிடம் பிரதிபலிப்பார்கள்...



மரணம் அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றுதான்... ஆனால் மரணபயம் என்பது எதிரிக்கும் வந்துவிட கூடாது... ஏனென்றால் மரணத்தை காட்டிலும் மரணபயம் பெரும் துன்பத்தை தந்து மனதில்  ஆறாத வடுவாகி இறப்பு வரை உறவுகளிடத்தில் பற்றற்று போய்விடும் நிலையை கொடுத்துவிடும்.



ஆகையால் நாம் பெற்ற குழந்தைகளை எவ்வாறு பராமரிக்கின்றோமோ, நாம் குழந்தைகளாய் இருந்தபோது நம்மை எவ்வாறு நம் பெற்றோர் பாதுகாத்தார்களோ.. அதே போல் நம் பெற்றோர்களின் முதுமையில் அவர்களை பேணி காப்பது நமது பொறுப்பே...

இளைய தலை முறையை தான் இந்த கொரனோ இந்தியாவில் அதிகம் பாதிக்கிறது என்பது ஒரு கவனிக்க தக்க விஷயம் ..



வெகு சில விஷயங்களில் அதாவது உணவு, உடற்பயிற்சி, உறைவிடம்(தங்கும் இடம் ), உள்ளம் ஆகியவற்றில்  கவனம் செலுத்தினாலே கொரோனா பிடியிலிருந்து நம் அன்புக்குரியவர்களை நாம் காப்பாற்றி மீட்டுவிடலாம்...


அவற்றை கீழே காண்போம்...


தனிமை படுத்தல் , தள்ளி இருத்தல், விலகி இருத்தல் -இதை தவிர - நாம் செய்ய வேண்டியவைகள் - பல உள்ளது ..


*உணவு* 

ஆரோக்கியமான உணவை பட்டியலிட்டு அட்டவணை போட்டு கொள்ளுங்கள்.

அனைத்து பருப்பு வகைகள், தானியங்கள், காய்கறிகள், கீரைகள் இடம்பெறும் வகையில் அமையட்டும்.

இவற்றை எளிதாக ஜீரணிக்கும் விதத்தில் சுலபமாக சமைப்பதை இணையதளங்களில் பெற்றிடலாம்.

பால், டீ, காபி தவிர்த்து மூலிகை தேநீர், மூலிகை ரசம் (சூப் )அருந்த கொடுங்கள்.

எண்ணெய் பலகாரங்கள், கிழங்கு வகைகள், இனிப்பு பண்டங்கள் அறவே தவிர்த்திடுங்கள்.

முளைவிட்ட பயரோ, அவித்த பயறையோ எப்போதும் அவர்களின் அறையில் இருக்குமாறு வைத்திடுங்கள்.

அவர்களின் அறையில் அல்லது வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டியின் மின்சார இணைப்பை துண்டித்துவிடுங்கள்.

போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறார்களா என்பதை ஊர்ஜீத படுத்துங்கள்.

மேற்கத்திய உணவு / பாரம்பரியம் அல்லாத உணவுகளை தவிர்த்திடுங்கள்.

உணவில் நாள்தோறும் இஞ்சி, மிளகு, சுக்கு, கொத்துமல்லி, ஜீரகம், லவங்கம், மஞ்சள், துளசி, கற்பூரவள்ளி ஆகியவை சேர்வதை உறுதிப்படுத்துங்கள்.

*உடற்பயிற்சி* 

சர்க்கரை நோயாளிகளுக்கு உடற்பயிற்சிகளுள் நடைபயிற்சியையே பெரும்பான்மையானோர் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நோய் தாக்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அவர்களை வீட்டில் முடக்கிப்போட்டிருப்பது ஒரு புறம் நன்மைதான்.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இச்சமயத்தில் உதவுவது யோகா பயிற்சிகளே.

அன்றாடம் அவர்களுக்கு தகுந்த சில முக்கிய யோகா பயிற்சிகளை தேர்ந்தேடுத்து பயில்விக்க வேண்டும்.

பத்து ஆசனங்களிலிருந்து பதினைந்து ஆசனகள் வரை மிக நிதானமாக பொறுமையுடன் அவர்களுடன் நேரம் செலவழித்து பயிற்றுவித்தல் அவசியம்.

ஆசன்கள் முடியாவிடில் சூர்ய நமஸ்காரம் சுழற்சியை பயிற்றுவிப்பது மிக நன்று.

அதுவும் முடியாவிடில் loosening exercise எனப்படும் எளிய உடற்பயிற்சிகள் செய்விப்பது உத்தமம்.

பிராணாயாமம்  சுவாச பயிற்சி போன்றவற்றை அவர்களோடு சேர்த்து செய்வது அவர்களுக்கு சிறிது உற்சாகத்தை ஏற்படுத்தும்.

மலசிக்கல் பிரச்சனை உள்ளதா என்று கேட்டறிந்துகொள்ளுங்கள்.

உணவிற்கு முன் கை கழுவும் முறையை தெளிவுபடுத்தி கட்டாயமாக்குங்கள்.



*உறைவிடம்* 

அவர்கள் இருக்கும் அறையையே அல்லது இடத்தையோ மிக தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம்.

தூசு அதிகம் அல்லது பொதுவாக நகர்ப்புற வீடுகளில் வசிப்பவர்கள் துடைப்பத்தால் வீட்டை பெருகுவதை விட vaccum cleaner கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது.

அவர்களின் அறையில் ஏ.சி இல்லாமல் மின்விசிறி மட்டும் பயன்படுத்த அறிவுறுத்துங்கள்.

அவர்களின் அறையில் அனாவசிய பொருட்கள் சேர்வதை தவிர்த்திடுங்கள்.

மரத்தால் ஆனா கட்டில் மெத்தை இல்லாமல்  பயன்படுத்துவது சிறந்தது.
அவர்கள் அறையை ஒரு நாளைக்கு ஒரு வேளைஎனும் தூபணமிடுங்கள்.

துப்பணமிடும் பொருட்கள் அரக்கு, மஞ்சள், அதிவிடயம், கடுக்காய், கோரைக்கிழங்கு, அரேணுகம், ஏலக்காய், லவங்க இலை, தகரம், கொட்டம், ஞானல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.



*உள்ளம்*

அவசியம் தியானத்தை கட்டாயமாக்குங்கள்.

இறை வழிபாட்டில் அவர்களை முன்னிறுத்துங்கள்.

விரும்பிய பாடல்கள்,நாடகங்கள்(டிவி சீரியல் அல்லாத ), படங்கள், நகைச்சுவை, செய்திகள் பார்க்க அவர்களோடு இணைந்திடுங்கள்.

அவ்வப்போது உறவினர்க்கோ, நண்பர்களுக்கோ அலைபேசியில் உரையாட ஊக்கப்படுத்துங்கள்.

உங்களை வழிநடத்தவும் / பராமரிக்கவும்  அவர்களின் முக்கிய பங்கை உணர்ந்திட செய்யுங்கள்.



*தடுப்பு மருந்து*


எந்த மருந்தும் ஆராச்சியில் நிரூபிக்க முடியாமல் போனாலும் -ஆயுர்வேத  மருந்துகள் பல வைரஸ்  கொல்லும்  சக்தி உள்ளது .. அதை பற்றி பல கட்டுரைகளில் எடுத்து சொல்லியாகி  விட்டது ..

குடும்ப மருத்துவரையோ / சிறந்த ஆயுர்வேத  சித்த மருத்துவரையோ ஆலோசித்து அவர்கள் தருகிற உடல் எதிர்பாற்றல் மிக்க மருந்துகளை எடுத்து கொள்ளலாம்

தடுப்பு மருந்தாக Arsanic Album எனும் ஹோமியோ மருந்தை கொடுங்கள்.கேரளாவில் உள்ள எல்லா மறுத்துவமனைகளிலும்  இந்த மருந்தை கொடுக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.


சுயநலம் மிகுந்த உலகில் மாசற்ற அன்பை தருவது பெற்றோர்கள் மட்டுமே.
இறந்தபின் வணங்குவதை விட இருக்கும் போதே அவர்களை மகிழ்வித்து மகிழ்வோம்.



சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனைக்கு அணுகவும் 

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக