புதன், ஏப்ரல் 29, 2020

நிஜம்..நிழல்.

நிஜம்..நிழல்.

உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கு ஓர் இரகசியம் 


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்

பொதுவாகவே நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரையும்  ஒவ்வொரு விதமான ஆரோக்கியம் / ஆரோக்கிய குறைபாட்டுடன் சந்திக்கின்றோம்...


ஒருபுறம் நூறு வயதை கடந்தும் சிறந்த  ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்புடன் வாழும் மனிதர்களை இன்றளவும் நம்மால் காண முடிகிறது...

மறுபுறம் ஒரு வயது குழந்தை முதல் இளம்வயதினர் என  சிகிச்சைகாக பரபப்பாய் ஓடும் கூட்டத்தையும் காண்கிறோம்...

இந்த வேறுபாடு எதனால்...?

இறைவன் அனைவருக்கும் பொதுவாகவே உலகை படைத்தான்... உணவு சங்கிலியை உண்டாக்கினான்...
அழகிய, ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஜீவராசிகள் அனைத்திற்கும் அனைத்தையும் கொடுத்தான்..

ஆனால் சரியான விடையை தேர்வு செய்... என்ற வினாதாளோடு கொடுத்துவிட்டான்...

நிஜம் எது நிழல் எது என்று பொறுமையாக நிதானமாக சிந்தித்தால் மட்டுமே விடை சரியாக அமையும்..

முதல் கோணல் முற்றும் கோணல்...

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சென்றால் கட்டாயம் குழந்தைகளுக்கென்று ஒரு மருந்தகம் வைத்திருப்பார்கள்..

அதில் காய்ச்சலுக்கு, சளிக்கு, இருமலுக்கு, வயிறு வலிக்கு, தும்மலுக்கு என வகை வகையாக மாத்திரைகளும், சிரப்புகளும் வைக்கப்பட்டிருக்கும்... காலாவதி ஆனதும் அனைத்தும் குப்பையில்...

இதுபோன்ற ஆண்டிபயாடிக் பிற ஆங்கிலமருந்துகளால் குழந்தைகள் நோயெதிர்ப்பு சக்தியின்றியும், அரைகுறை ஆரோக்கியத்துடனும் வளர்கிறார்கள்..

நிஜத்தில் ஒரு மருந்து போதும்... காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல், தும்மல், இருமல், வயிற்று வலி, செரிமான கோளாறு, வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, வாய்ப்புண், சருமநோய், அம்மை, பேச்சு திறன் குறைபாடு ... இன்னும் பல... சர்வரோக நிவாரணியாக பயன்படும் மருந்து ஒன்று ஆயுர்வேதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது....

*அரவிந்தாசவம்...*

இம்மருந்தில் அடங்கியுள்ள மூலிகைகள்...

தாமரை, வெட்டிவேர், குமுதை, நீலாம்பல், மஞ்சிட்டி, குறுந்தொட்டி, ஜடாமாஞ்சி, ஏலக்காய், கோரைக்கிழங்கு, நன்னாரி, கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், வசம்பு, பூலாங்கிழங்கு, சிவதைவேர், அவுரி, முசுமுசுக்கை, துசா, மருதம், இலுப்பை, அதிமதுரம், முரல், உலர்திராட்சை, மலையத்தி, தேன், சர்க்கரை...முதலானவை.

இம்மருந்தினால் குழந்தைகளுக்கு உண்டாகும் நோய் தீர்வதுடன் எதிர்காலத்தில் எந்த நோயும் வராமலும் (சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் உட்பட) பாதுகாக்கிறது..

இந்த இனிப்பான மருந்தில் சிறப்பான ஒன்று காலாவதி இம்மருந்திற்கு இல்லை...

ஜீவிக்கும் அனைத்திற்கும் மரணிப்பும் உண்டு மறுக்கவில்லை...

ஆனால் வாழ்நாட்கள் நகர்வது மருந்துகளை சார்ந்து இருந்துவிடக்கூடாது...

மருத்துவ ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்..


AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக