ஞாயிறு, மே 21, 2017

உடலுக்கு கேடாகும் நெய்

உடலுக்கு கேடாகும் நெய்

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். வர்தினி .,BHMS.,



இந்தியர்களுக்கு, நெய் பாரம்பரிய மிக்க உணவு. பல நூற்றாண்டுகளாக நமது சமையல் அறைகளில் நெய் ஆதிக்கம் செலுத்துகிறது. இனிப்புகளில் நெய் பயன்படுத்துவது அவர்களின் தரம் மற்றும் செழுமையின் சின்னமாக கருதப்பட்டது.

ஆரோக்கியமான கொழுப்பு உணவு மூளை சரியாக இயங்க தொடங்குகிறது மேலும் ஆயுர்வேத சூழலில், நீண்ட ஆயுள், புத்துயிர், இளமை தோற்றத்தை பராமரிப்பது மற்றும் முழு உடலின் மீளுருவாக்கம் ஆகியவற்றிலும் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.

மேலும் மத சடங்குகளுக்கு நெய் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

மேலும், மஞ்சள் காமாலை, ஹெப்படைடிஸ், Fatty Liver போன்ற நோய்க்கு நெய்யை தவிர்ப்பது நலம்.

நெய் அதிகமாக பயன்படுத்தினால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

மேலும், மருத்துவ ஆராய்ச்சி ரீதியாக, நெய், புற்றுநோயை தடுக்கிறது. ஜீரணத்திற்கு வழிவகுக்கிறது.



இத்தகைய மிக சிறந்த பண்புகளைக் கொண்ட நெய் நமக்கு எப்படி கிடைக்கிறது?

தூய்மையாகவா.? இல்லை கலப்படமாவா.?

நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நெய் பல பிராணிகள் விலங்குகளின் உடல் கொழுப்புடன் கலப்படம் செய்கின்றன என்று ஆய்வாக பரிசோதனை கூறுகிறது.

கடைகளில் கிடைக்கும் எந்த ஒரு நெய்யும் நெய் அல்ல! வனஸ்பதி தால்டாவையை நாம்  நெய் என்று நினைத்து வாங்குகிறோம்.

மாட்டு நெய் ஒரு வளமான CLA  (Conjugated Linolcic Acid) உள்ளது, மற்ற எண்ணெய்களை இந்த குறிப்பிட்ட கொழுப்பு அமிலத்தை கொண்டிருக்கவில்லை.

இந்தியாவில் கிடைக்கும் நெய் பெரும்பாலும் எருமை பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

நமக்கு கிடைக்கவிருக்கும் பெரும்பாலான எண்ணெய்கள் அதிக அளவு கொழுப்பு அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இது D.N.A வை சேதப்படுத்தும், Queensland Butter Board (QBB) இது Australia-வில் தடைசெய்யப்பட்டது, மேலும் Malaysia-வில் வேறு பெயரில் விற்கப்படுகிறது. இந்தியாவில் எந்த பெயரோ.?

தடைசெய்யப்பட்ட காரணம், இது பன்றி கொழுப்பால் செய்யப்பட்டது.

ஆராய்ச்சியின் அறிக்கையில் அசுத்தமதாகவும், மக்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுத்துவதாகவும் Kanhaiya Ghee  பற்றி கூறப்படுகிறது.

இதே போல் பல்வேறு நெய்களும் பல்வேறு கலப்படங்கள் உள்ளது.

கடைகளில் ,அழகான பேக்கிங்கில் கிடைக்கிற நெய் பெரும்பாலும் கலப்படம் உள்ளதாகவே உள்ளது என்கிறது ஒரு ஆய்வு நிறுவனம்

தாவர எண்ணையில் நிக்கல் கலந்து வேதி வினை புரிய வைத்து கட்டியாக்கி மேலும் சணல் எண்ணெய், பாமாயில் . நெய் மணம் கொண்ட எசன்ஸ் கலந்து கலப்பட நெய் மட்டுமே இப்போது எங்கும் கிடைக்கிறது ..

போலி அக்மார்க் முத்திரைகளை கொண்டுள்ளன பல நெய் தயாரிக்கும் நிறுவனங்கள் .





உடலை கெடுக்கும் போலி நெய் ..

நெய் இப்போது கிடைப்பதெல்லாம் பொய் ..


நெய் எப்போது கேடு ?

1.       வீட்டில் காய்ச்சாத –உருக்காத நெய் பெரும்பாலும் கலப்படமே –இந்த நெய் என்றுமே கேடு

2.       நல்ல தரமான் நெய்யே ஆனாலும் உருக்கி (சூடு செய்து உருக்கி ) சாப்பிடவில்லை எனில் கேடு தான் –அதனால் தான் நீர் சுருக்கி ,மோர் பெருக்கி ,நெய் உருக்கி  என்று நோய் அணுகா விதியில் சொல்லப்பட்டுள்ளது

3.       ஆமம் என்கிற வயிறு மந்த நிலையில் நெய் உண்பது கேடு –கபம் சார்ந்த நோய்களுக்கு நெய்யை தவிர்த்தல் நல்லது

4.       மஞ்சள் காமாலையில் நெய் முக்கியமாக சாப்பிடவே கூடாது

5.       Fatty liver என்கிற கொழுப்பு உள்ள கல்லீரல் நோயில் நெய்யை தவிர்த்தல் நல்லது

6.       நெய்யும் தேனும் சம அளவு சேர்த்து சாப்பிட கூடாது

7.       நல்ல சளி ,இருமல் –காய்ச்சல் உள்ள நிலையில் நெய்யை தவிர்த்தல் நல்லது –கர்ப்பிணிகள் அதிக இருமல் ,சளி ,காய்ச்சல் உள்ள நாட்களில் நெய்யை தவிர்த்தல் நல்லது

8.       செரிமானத்தின் தன்மை தெரியாமல் அளவுக்கு அதிகமாக நெய்யை சாப்பிடுவது வயிறு அஜீரணத்தை ,வயிற்று போக்கையும் ஏற்படுத்தும்

9.       கலப்பட நெய் இனிப்புகள் ,மைதா மாவில் கலக்கப்படும் நெய் பலகாரங்கள் உடல் நலத்திற்கு மிகவும் கேடு

10.   உடலில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் ,எடை அதிகமாக உள்ளவர்கள் ,இதய நோய் உள்ளவர்கள் ,கிட்னி நோய் உள்ளவர்கள் நெய்யை தவிர்த்தல் நல்லது


நெய்யா ? பொய்யா ?

கடைகளில் வாங்கி வீட்டில் பயன்படுத்தபடும் நெய்கள் தொண்ணூறு சதவீதம் பொய்யாக இருக்கும் என்று நாம் முன்பே சொன்னோம் .
நெய்யை வாங்கினாலே நம்மால் கண்டு பிடிக்க முடியாத நிலையில் ஸ்வீட் கடைகளில் ,இனிப்பு பலகாரத்தில் கலப்பட நெய்யால் ஆனா ஸ்வீட்சை எப்படி கண்டு பிடிப்போம் என்று யோசித்து பாருங்கள்
பிரபல்ய ஹோட்டல்களில் எப்படி கிலோ அறுநூறு ரூபாய் செலவாகும் ஒரிஜினல் நெய்யை சேர்ப்பார்கள் என்று நம்மால் நம்ப முடியும் ?

நல்ல நெய் மிக சிறந்த மருத்துவ குணம் உள்ளது

நல்ல நெய்யால் என்றுமே கேடு வர வாய்ப்பே இல்லை ..ஆனால் நல்ல நெய் கிடைக்கவில்லை என்று தெரிந்து கலப்பட நெய்யை அவசர கதியில் நம்மை போல் நம்பி பயன்படுத்துபவர்கள் மத்தியில் கலப்படத்தால் மட்டுமே நெய் நோய் தரும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கட்டுரை –அறிவே ஆயுதம் .பயன்படுத்தாத ஆயுதம் தேவை இல்லா சுமை .

வீட்டிலேயே நெய்யை பரிசோதிக்க சில எளிய முறைகள்.

ஒரு ஸ்பூன் அளவு நெய்யை நமது உள்ளங்கையில் போட்டால் அது உடனே உருக வேண்டும். அது உருகினால் அந்த நெய் தூய்மையானது. பொதுவாக, தூய நெய் உடல் வெப்ப நிலையில் உருகும்.

நெய்யை சூடு செய்தால், அது உடனே உருகி இருண்ட பழுப்பு நிற வண்ணம் தோன்றினால், அது சுத்தமான நெய், மாறாக, அது உருகுவதற்கு நீண்ட நேரம் எடுத்து, மஞ்சள் நிறமாக மாறினால் அது தூய்மையற்றது.

எளிய பரிசோதனையில் நெய்யின் போலித்தன்மையை தெரிந்து கொள்ள .- மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.

நெய் பொய்யானால் –நெய்யில் செய்கிற ஆயுர்வேத சித்த மருந்துகள் எப்படி வேலை செய்யும் ?

கலப்படம் இல்லா நெய் மருந்துகள் மூலம் ஆயுர்வேத சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் இல்லவே இல்லை .எங்களால் முடிந்த அளவுக்கு இயற்கையாய் கிடைக்கிற நெய்யில் செய்த மருந்துகளை    கொண்டே சிகிச்சை அளிக்கிறோம் .

ஆலோசனை மற்றும் முன்பதிவுக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக