சனி, மே 16, 2020

வஜ்ரம் ( வைரம்) போன்ற உடலை பெற....*


வஜ்ரம் ( வைரம்போன்ற உடலை பெற....*


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்




நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை..

பஞ்சகர்ம சிகிச்சைகளுள் (வமனம், விரேசனம், நஸ்யம், வஸ்தி, ரக்தமோக்ஷணம்) தினமும் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுவது (தினச்சரியை அத்யாயம் மூலம்) நஸ்ய சிகிச்சை மட்டுமே ...



நாசி துவாரம் வழியாக கொடுக்கப்படும் சிகிச்சை நஸ்யம்... அதாவது எண்ணெய் துளிகள் / மூலிகை சாறு / மூலிகை பொடி / தூமம் (herbal smoke) போன்றவற்றை நாசி துவாரம் வழியாக செலுத்துவது.



கழுத்து மற்றும் சிரசில் உள்ள நோய்களை சரிசெய்ய ஆயுர்வேத ஆச்சார்யாக்கள் (முனிவர்கள்) கையாண்ட குறுக்குவழி என்றே கூறலாம்.



ப்ரதிமர்ஷ நஸ்யம் என கூறப்படும் எளிய முறை நஸ்ய சிகிச்சையை அனைவரும் அவரவர் வீடுகளில் சுயமாகவே எடுத்துக்கொள்ளலாம்.. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைத்துவயதினரும் எல்லா காலங்களிலும் வெறும் பத்தே நிமிடங்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்துகொள்ளலாம்...




சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முறை...*


அதிக காற்றோட்டம் இல்லாத அறையை தேர்வு செய்துகொள்ள வேண்டும். முகம் மற்றும் கழுத்து பகுதியை தைலம் (தன்வந்தர தைலம் அல்லது கற்பூராதி தைலம் சிறந்தது) கொண்டு மிதமான அழுத்தத்துடன் மசாஜ் செய்துகொள்ளவேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான மசாஜ்க்கு பின் சுடு நீரில் முக்கி பிழியப்பட்ட பருத்தித்துணியினால் முகத்தை ஒற்றி எடுக்கவேண்டும். சௌகரியமாக படுத்துக்கொண்ட நிலையில் கழுத்தை உயர்த்தி தலையை சற்று தாழ்வாக வைத்துக்கொண்டு இரண்டு நாசிகளிலும் இரண்டு துளிகள் வீதம் தைலத்தை (அணு தைலம் சிறந்தது) விடவேண்டும். தைலம் நாசி துவாரத்தின் உள்சென்றதை உறுதிசெய்த பின் வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து கொள்ளவேண்டும்.



கிடைக்கும் பலன்கள்...*


நாள்பட்ட நோய்கள் அதாவது முகவாதம், தலைவலி, ஒவ்வாமை, வலிப்பு, பற்கள் சம்மந்தமான அனைத்து பாதிப்புகள், முகத்தில் உண்டாகும் வீக்கம், காது சம்மந்தமான அனைத்து பாதிப்புகள், இளநரை, கண் புறை முதலான அணைத்து கண் நோய்கள், மன நோய், நாசியில் உண்டாகும் தொந்தரவுகள், கழுத்து வலி, டான்சில், தோள்பட்டை வலி, புற்றுநோய், திக்குவாய், புலன்களின் தொய்வு, தூக்கமின்மை, மனஅழுத்தம், பயம், க்ரோதம், சோகம் போன்ற மனம் சார்ந்த பாதிப்புகள், காய்ச்சல், முடியுதிர்வு...இன்னும் பலவற்றிற்கு தீர்வு .



நாசித்துவாராம் வழியாக செலுத்தப்பட்ட மருந்து எளிதாக நரம்பு மண்டலத்தை அடைவதால் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பலம் பெறுகின்றன, இரத்த ஓட்ட அதிகரிப்பால் பொலிவான சருமத்துடன் எந்த நோயும் நம்மை நெருங்காது வைரம் போன்ற உடலுடன் ஆயுட்காலம் நீளுகிறது.



நோயின்றி ஆரோக்கியமானவர்களும் இச்சிகிச்சைக்கு தகுதியானவர்களே... நோய் அல்லது உடல் உபாதைகளால் பீடிக்கப்பட்டவர்கள் அருகிலிருக்கும் ஆயுர்வேத மருத்துவரை அணுகுவதால் நோய்க்கான ஆலோசனை மற்றும் சிறந்த தைலத்தை பரிந்துரைக்கப்பெறலாம்...



குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இச்சிகிச்சையை பின்பற்றுவது சுவாசம் வழியாக செல்லும் வைரஸ்களை தாக்கி அளித்துவிடுவதால் பாதிப்பிலிருந்து தப்பித்துவிடலாம்.



ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

ஆயுர்வேதம் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

0 comments:

கருத்துரையிடுக