வியாழன், டிசம்பர் 16, 2010

குழந்தைகளின் அனைத்து நோய்களுக்கு -ஒரே சிறந்த மருந்து அரவிந்தாஸவம்-Aravindasavam


குழந்தைகளின் அனைத்து நோய்களுக்கு -ஒரே சிறந்த மருந்து
அரவிந்தாஸவம்-Aravindasavam
(Refn -பைஷஜ்யரத்னாவளி - பாலரோகாதிகார)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல  25.600 லிட்டர்
2.            சர்க்கரை ஸர்கரா                    5.000     கிலோ கிராம்
3.            தேன் மது                      2.500     “
4.            திராக்ஷை த்ராக்ஷா                   1.000     “


முதல் மூன்றையும் நன்கு கலந்து அத்துடன் திராக்ஷையை இடித்துச் சேர்த்துப் பின்னர் கீழே குறிப்பிடப்படும்.

1.            தாமரைப்பூ கமல புஷ்ப (ரக்த கமல)             50 கிராம்
2.            விளாமிச்சை வேர் உஸுர                  50           “
3.            குமிழ் வேர் காஷ்மரீ                      50           “
4.            நீல ஆம்பல்பூ நீலோத்பல                  50           “
5.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                50           “
6.            ஏலக்காய் ஏலா                      50           “
7.            சிற்றாமுட்டி பலா                         50           “
8.            ஜடாமாஞ்சில் ஜடாமாம்ஸீ                 50           “
9.            கோரைக்கிழங்கு முஸ்தா                  50           “
10.          நன்னாரி ஸாரிவா                         50           “
11.          கடுக்காய்த்தோல் ஹரீதகீ                  50           “
12.          தான்றிக்காய்த்தோல் பிபீதகீ                50           “
13.          வசம்பு வாச்சா                       50           “
14.          நெல்லிமுள்ளி ஆமலகீ                    50           “
15.          கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ                    50           “
16.          நன்னாரி(கருப்புவகை) க்ருஷ்ணஸாரிவா          50           “
17.          அவுரிவேர் நீலீ                       50           “
18.          பேய்ப்புடல் பட்டோலா                     50           “
19.          பர்ப்பாடகம் பர்பாடக                  50           “
20.          மருதம்பட்டை அர்ஜுனத்வக்               50           “
21.          இலுப்பைப்பூ மதூகபுஷ்ப                   50           “
22.          அதிமதுரம் யஷ்டீமது                50           “
23.          மருவு மருவக                       50           “
24.          காட்டாத்திப்பூ தாதகீபுஷ்ப                  800         “


முதல் இருபத்து மூன்று சரக்குகளையும் ஒன்றிரண்டாகப் பொடித்து முன் கூறியதில் போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து சீலை செய்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும் :

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள் :    

  வலுவின்மை (பலக்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), ஜீரணக் குறைவு (அக்னிமாந்த்ய), குளிர்ச்சி உண்டாக்கி.

குறிப்பு :  

(i) குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களில் இது விசேஷமாக உபயோகப்படுகிறது.

(ii) சிலர் கருஞ்சிவதையை (த்ரிவ்ருத்) சேர்ப்பது வழக்கம்.

 (iii)
இப்போதெல்லாம் குழந்தைகளின் எல்லா நோய்களுக்கும் -ஆன்டி பயாடிக் என்று உடனே கொடுத்து விடுகிறார்கள் ..அது மிக பெரிய தவறு ..நோய் கட்டுக்குள் வரவில்லை ..நோயின் தீவிரம் கிருமிகளினால் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து -நல்ல கைதேர்ந்த குழந்தை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டி பயாடிக் கொடுக்கப்பட்ட வேண்டும் ..

உங்கள் குழந்தையின் எதிப்பு சக்தி அதிகமாக்க வேண்டுமா ?
உங்கள் குழந்தைக்கு பசி இல்லையா ?
உங்கள் குழந்தை அடிக்கடி சளி ,காய்ச்சல் வருகிறதா ?
உங்கள் குழந்தையின் நோய் உடனே சரியாகாமல்  -நாள் பட்டு கஷ்டபடுத்தி  குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறதா ?
உங்கள் குழந்தை மந்தாமாக இருக்கிறதா ?

உங்கள் வீட்டிலேயே  பக்க விளைவில்லாத ,அங்கில மருந்தோடு இணைந்து கொடுத்தாலும் பிரச்சினை இல்லாத -ஆயுர்வேத குழந்தை மருந்து வேண்டுமா ?

அது தான் -அரவிந்தாசவம் -

 

Post Comment

1 comments:

மச்சவல்லவன் சொன்னது…

தொடந்து பயனுள்ள மருத்துவ குறிப்புகளை, எங்களுக்காக எழுதிவரும் உங்களின் சேவைக்கு நன்றிகள் சார்.

கருத்துரையிடுக