வெள்ளி, ஜூலை 10, 2015

மூலிகை கதைகளும் -உண்மை தெரியாமல் Forward செய்யும் செம்மறியாட்டு கூட்டங்களும் .

எதில் பித்தம் தெளியும் என்று அலைகிற நோயாளிகளுக்கு நடுவே ..
திரும்பிய பக்கமெல்லாம் இலவச மருத்துவ துணுக்குகள் ..
செய்து பார்த்தால் தான் என்ன ?  என்று எளிமையான தகவல்கள் ..
முயன்று பார்த்த பின் கிடைத்த தோல்விக்கு பாரம்பரிய மருத்துவத்தை குறை கூறும் நிலை தான் இப்போது ...


எது உண்மை ?
எது ஆதாரம் மிக்கது ?
எது சரகர் ,சுஸ்ருதர் ,வாக்பட்டார் ,அகத்தியர் ,சித்தர்கள் சொன்னது ?
எந்த நிலையில் எந்த மருத்துவம் செய்யவேண்டும் ?




திரும்பிய பக்கமெல்லாம் படிக்காத மருத்துவர்கள் ..
இந்த நிலை தொடர்ந்தால் எல்லோரும் சித்த ,ஆயுர்வேத மருத்துவர்கள் ஆகி விடுவார்கள் போலும் ?

முன்னுக்கு பின் முரணான மருத்துவ செய்திகள் ..
அறிவியல் என்று ஆராய்ந்த பின்னும் தோல்விகள் உள்ள மருத்துவ அறிவுகள்
திக்கெங்கும் பரவி மூலிகை கதைகள் ...
வீட்டுக்கே வந்து நிற்கும் மூலிகை மருந்துகள் (டெலி மார்கெடிங் )
திரும்ப திரும்ப சொல்லப்படும் பொய்யான போலியான மருத்துவ ,அழகு சார்ந்த விளம்பரங்கள் ...


என்ன செய்வது ?

உண்மையை எடுத்து சொல்வதா ?





Post Comment