செவ்வாய், மார்ச் 31, 2020

சுவாச மண்டல நோய்களில் சிறந்த மருந்து -தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம் -Dashamoola katutryadhi Kashayam

சுவாச மண்டல நோய்களில் சிறந்த மருந்து -தசமூலகடுத்ரயாதி கஷாயம்  -Dashamoola katutryadhi Kashayam
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

















1.            வில்வவேர் – பில்வமூல                    - 10 கிராம்
2.            முன்னைவேர் – அக்னிமாந்த்ய               - 10       “
3.            பெருவாகைவேர் – ஸ்யோனாக               - 10       “
4.            குமிழ்வேர் – காஷ்மரீ                        - 10       “
5.            பாதிரிவேர் – பாட்டலா                    - 10       “
6.            மூவிலைவேர் – சாலிபர்ணீ                - 10       “
7.            ஓரிலைவேர் – ப்ரிஸ்னிபர்ணீ               - 10       “
8.            முள்ளுக்கத்திரிவேர் – ப்ருஹத்தீ             - 10       “
9.            கண்டங்கத்திரி வேர் – கண்டகாரீ             - 10       “
10.          நெருஞ்சில் – கோக்ஷூர                     - 10       “
11.          சுக்கு – சுந்தீ                                 - 10       “
12.          மிளகு – மரீச்ச                              - 10       “
13.          திப்பிலி – பிப்பலீ                            - 10       “
14.          ஆடாதோடைவேர் – வாஸாமூல             - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுபுகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.


கஷாயம் தயாரிக்கும் விதம்:

கஷாயப் பொடி – 60 கிராம்
 தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்ட வேண்டியது.

அளவு:   
        
30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  





இருமல் (காஸ)இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ)காய்ச்சல் (ஜ்வர)விலாப்பகுதியில் வலி (பார்ஸ்வருஜா)இடுப்பு வலி (டிரிக்கருஜா) மற்றும் பல வித வாயுப் பிடிப்புகளும்வாத ரோகங்களும்கபவாத ஜ்வரம் எனப்படும் Pneumonia விலும்மற்றும் மூச்சுமண்டலம் சார்ந்த நோய்களிலும் ரஸபூபதி ரஸம் மற்றும் தேனுடன் தரப்படுகிறது. டைபாய்டு போன்ற காய்ச்சல்களில் கால கூட ரஸஸன்னிபாத பைரவ ரஸ போன்றவற்றுடனும்இருமல்சளி போன்றவற்றில் சீதாம்சுரஸதாளீசாதி சூரணம் மற்றும் ரஸபூபதி ரஸத்துடனும் தரப்படுகிறது. தலைவலிஉடல்வலி ஆகியவற்றில் ஸ்வர்ண வாதராக்ஷசவாதகஜாங்குஸ போன்ற ரஸௌஷதங்களுடன் தரப்படுகிறது.

மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகிக்கலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை-
  1. தஷமூலங்கள் ,திரிகடுகு ,ஆடாதோடை சேர்ந்த மருந்து என்பதால் -எந்த வித நுரையீரல் ,காது மூக்கு தொண்டை சார்ந்த நீர் நோய்கள் ,பீனசம் என்னும் சைனசைட்டீஸ் ,அலர்ஜி,ஆஸ்த்மா வுக்கு இந்த மருந்து சிறந்தது .
  2. தமக சுவாசம் என்னும் ஆஸ்த்மாவுக்கு -வ்யோஷாதி வடகம் என்ற மருந்தோடு சாப்பிட நல்ல பலன் தெரியும் 
  3. உடல் வலி ,அசதிக்கும் ,பசியின்மைக்கும் ,இடுப்பு வலிக்கும் இந்த மருந்தை தரலாம் 
  4. உண்மையான தஷமூலங்கள் சேர்கிறார்களா என்பதை பொறுத்துதான் மருந்து வேலை செய்யும் விதம் மாறுபடும் 

சுவாச மண்டல வைரஸ் நோய்களில் இந்த மருந்தையும் ஆராய்ச்சியின் அடிப்படையில் முயன்று பார்க்கலாம். தக்க துணை மருந்தாக பயன்படுத்தலாம். 

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333 
திருநெல்வேலி 9042225999 
ராஜபாளையம் 9043336888 
தேனி 904727577 
சென்னை 9043336000 

Post Comment

திங்கள், மார்ச் 30, 2020

கொரோனா காய்ச்சலில் ...வாத சுர குடிநீரா ? அல்லது கப சுர குடிநீரா ?

கொரனோ வைரஸ் காய்ச்சலில் பயன்தரப்போவது வாத சுர குடிநீரா ? 
அல்லது கப சுர  குடிநீரா ?


டாக்டர். அ. முகமது சலீம்., BAMS.,M.Sc.,MBA

எச்சரிக்கை.  ஆராய்ச்சிகள் எதுவும் முறையாக நடத்தபட்ட பின்பே நாம் எதனையும் உறுதியாக கூற முடியும். 

ஆனால் திடீர் மருத்துவர்கள் , படிக்காத மேதைகள் வாத சுர குடிநீர் குடித்தால் கொரோனாவை ஒழித்து  விடலாம் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கதைகளை விடுகிறார்கள். 

அவர்கள் கொடுக்கிற மருந்தை குடித்தால் எல்லோரையும் கட்டி பிடிக்காலமாம். பரவாதாம். பயமே வேண்டாம் என்று சமூக விலகல் என்ற ஒன்றையே கேள்வி குறியாக்கும் ஒரு ஆபத்தான ஒரு மோசமான விஷயத்தை சொல்கிறார்கள்.ஐயா மருத்துவம் படிக்காத மேதையே .. அவருக்கு கூஜா தூக்கும் மக்களே.. ஒரே ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்.. 

கேள்வி ஒன்று 

அவர். மருந்தே கண்டு பிடித்தார் என்ற வைத்து கொள்வோம். ஆனால் இந்த அரசாங்கம் சொல்கிற தனித்திரு , வீட்டில் இரு , சமூக விலகளை கடை பிடிக்க அவசியமே இல்லை என்பது எந்த விதத்தில் சரி ?


கேள்வி இரண்டு . 

அவர் சொல்கிற வாத சுர குடிநீர் சாப்பிட்டால் நமக்கு இந்த கொரோனா வராது என்று .. கடையில் இந்த வாத சுர  குடிநீரை சாப்பிட்டு ( அது உண்மையோ அல்லது போலியாக தயாரிக்கப்பட்டதோ ) நமக்கு இனி கொரோனா வராது என்று வெளியில் நடமாடினால் .. ஒரு வேளை  அவர்களுக்கு பாதித்து இருந்து மற்றவர்களை பாதித்தால் எப்படி ? இது சரியா ?



ஒரு வாதத்திற்கே எடுத்து கொள்வோம் . 

வாத சுர குடிநீரில் என்ன உள்ளது என்று பார்ப்போம் 



வாத சுரம் என்றால் என்ன ?

இந்த சித்தர் பாடலை பார்ப்போம் 


இந்த வைரஸ் காய்ச்சலில் வலிகள் இருக்குமா ? இந்த வைரஸ் காய்ச்சல் முக்குற்ற தத்துவ படி .. 
--------------------------------------------------------------------------------------------------------------------
கொரோனா முக்குற்றத் தத்துவ ஒப்பீடு :


குறிகுணங்களை  காட்டாதது :
கபத்தின் பண்பு

************************

சிறு சுரம் = கபம்

சீரற்ற சுரமாக இருந்தால் மட்டுமே வாதம்
(Fluctuations -high and low)
எனவே இது வாதசுரம் இல்லை

பித்தம் = அதீத வெப்பம்
103 /104
Like in dengue
எனவே  இது பித்தசுரம் இல்லை

Periodical பித்தத்தின் பண்பு
அதுவும் இங்கு இல்லை

************************
மலக்கட்டும்
கடுமையான வலியும்
வாத சுரத்தின் பண்புகள்
மேலும் கொட்டாவி விடுதல்  இல்லை
எனவே இது வாதசுரம் அல்ல

கண் எரிச்சல்
சிவத்தல்
உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்ற குறிகுணங்கள் இல்லை எனவே இதை பித்தசுரம் அல்ல

************************

சிறு சுரமும்
சளியும் துவக்கம்
இது கபத்தின் பண்பு

தொண்டைக்கட்டு (கபம் )
விழுங்க சிரமம்

அதில்
வாதம் சேரும் போது :
வலி ஏற்படுகிறது
வறட்சி ஏற்படுகிறது
(Sore throat-dry cough)

கீழ்நோக்குங்கால் பாதிப்பால்
Diarrhea

மேல்நோக்குங்கால் பாதிப்பால் Nausea vomiting

கப வாதச்சேர்க்கையால்
பித்தம் படிப்படியாக குறைகிறது

சளியை பிரித்து வெளியேற்ற முடியாத நிலை

பித்தம் முற்றிலும் அழியும் போது கபவாதத்தால்
பிராணனுக்கு  தடை

மூச்சுத்தடை

உயிரிழப்பு

பித்தம் காரணமாக இருந்தால்
சளி எப்படி  உறையும்?

முக்குற்ற தத்துவம் விளக்கியது நன்றி.
மரு.ஜெ.ஸ்ரீராம்
மரு.கோகுலக் குமார்



எல்லா பெரும்பான்மையான சித்த மருத்துவர்களின் அனுபவ அறிவு , முக்குற்ற அறிவு , சேவை மனப்பான்மை , அரசு சித்த மருத்துவர்களின் தன்னலம் அற்ற உழைப்பின் எண்ணம் எல்லாம் கப சுர குடிநீர் இந்த கொரோனா வைரஸ் ஒழிக்க இந்த மருந்தையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி சரியான அணுகு  முறைகளோடு பயன்படுத்தலாம் என்பதே.. 

வேண்டுகோள்; மருத்துவம் என்பது புனிதம் ஆனது .. மருத்துவர்கள் இந்த நோயை எப்படியாவது ஒழிக்க போராடுகிறார்கள்... சிலர் அதில் தன் உயிரையும் துச்சம் என நினைத்து கற்ற கல்வி இந்த மக்களை காப்பாற்றாதா என்று சுய நலம் இல்லாமல் உழைக்கிறார்கள். எது போலி , எது உண்மை என்று சரியாக சிந்தியுங்கள். யாரையும் குறை கூற வில்லை .. அரை குறை அறிவு ஆபத்தானது... தெரியாது என்பதை தெரியாது என்பவனே  சிறந்த அறிவாளி, தமிழன் என்றால் எளிதில் எதையும் நம்புவான் என்று ஏமாற்றும் பலர் இங்கே இருக்கிறார்கள்.  

அரசு சொல்வதை கேட்போம். குடிநீர் குடித்து விட்டோம் நமக்கு இந்த கொரோனா வராது என்று அலட்சியம் செய்யாதீர்கள்.. நீங்கள் மட்டுமல்ல உங்களால் பலரும் பாதிப்பு அடைவார்கள் என்று கவனத்துடன் செயல் படுங்கள் 


Post Comment

ஞாயிறு, மார்ச் 29, 2020

வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும் மருந்து-பாரங்யாதி கஷாயம்

வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும் மருந்து-பாரங்யாதி கஷாயம்

எந்த வித காய்ச்சலையும் சரி செய்யும் பீரங்கி இந்த பாரங்கயாதி கஷாயம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)



கப சுர குடிநீர்க்கு சமமான ஓர் ஆயுர்வேத மருந்தை நாம் தயாரித்து தர வேண்டும் என்றால் அது இந்த பாரங்கயாதி கஷாயம் ஒன்று ஆகும். சித்த மருந்துகள் பல்வேறு பலனை தந்தாலும் ஆயுர்வேத மருந்துகளும் நல்ல பலனை தர வல்லது .


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கண்டுபாரங்கி – பார்ங்கீ                   - 10 கிராம்
2.            கோரைக்கிழங்கு – முஸ்தா              - 10       “
3.            பர்பாடகம் – பர்பாடக                      - 10       “
4.            கொத்தமல்லிவிதை – தான்யக       - 10       “
5.            சிறுகாஞ்சூரி – துராலபா                   - 10       “
6.            சுக்கு – சுந்தீ                                           - 10       “
7.            நிலவேம்பு – பூநிம்ப                         - 10       “
8.            கோஷ்டம் – கோஷ்ட                       - 10       “
9.            திப்பலி – பிப்பலீ                               - 10       “
10.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ            - 10       “
11.          சீந்தில்கொடி – குடூசீ                        - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாக இடித்து காற்றுப்புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கப சுர குடிநீரில் உள்ள  கண்டு பாரங்கி என்னும் சிறு தேக்கு , கோரைக்கிழங்கு , சிறுகாஞ்சூரி, கோஷ்டம், சீந்தில்கொடி, நிலவேம்பு, முள்ளுக்கத்திரி, சுக்கு இந்த பாரங்கயாதி கஷாயத்தில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு .








கஷாயம் தயாரிக்கும் முறை:
                கஷாயப் பொடி  - 60 கிராம்
                தண்ணீர்        - 960 மில்லி லிட்டர், இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறிய பின் வடிக்கட்டவும்.
  
அளவு:          

 30 – 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.



  தீரும் நோய்கள்:  
வாதகப சுரம் எனும் வளிஐயக்காய்ச்சல் (வாதகபஜ்வர)குளிர்சுரம் (விஷமஜ்வர)முறைக்காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர) போன்ற பல விதமான காய்ச்சல்கள்இருமல் (காஸ)ஜலதோஷம் முதலியன. வயிற்றிலுள்ள உருண்டைதட்டை மற்றும் கொக்கிப் புழுக்களை (க்ருமி கோஷ்ட) வெளியேற்றவும்மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் பயனாகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை -

1.       மர்ம காய்ச்சல் ,வைரஸ் காய்ச்சல் ,நாள்பட்ட காய்ச்சல் ,விட்டு வரும் காய்ச்சல் அனைத்திற்கும் இந்த மருந்து நல்ல மருந்து -இதனுடன் வெட்டுமாரன் குளிகா அல்லது அம்ருதாரிஷ்டம் அல்லது நிலவேம்பு சார்ந்த மருந்துகளான மகா சுதர்சன மாத்திரையுடன் தந்தால் காய்ச்சல் ஓடியே போகும் என்று பந்தயம் கட்டலாம் ..

2.       காய்ச்சல் வந்த உடன் -கஷாயம் தருவது நல்லது இல்லை ,முதலில் வயிற்றுக்கு பட்டினி தான் நல்லது ,பசியின் தன்மை அறிந்துதான் கஷாயம் தருவது நல்லது 


3.       பாரங்கி +பவள மல்லி இலை கசாயம் கூட காய்ச்சலை குறைக்கும் 

4.       வெள்ளை அணுக்கள் குறைந்து போகிறது ,இரத்த தட்டுக்கள் குறைந்து போகும் பேர் தெரியா காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது 


5.       வைரஸ் காய்ச்சல் –அணுக்கள் குரைக்கிற காய்ச்சல் மற்றும் சளி சேர்ந்த கப காய்ச்சல் –இருமல் சார்ந்த காய்ச்சல் –வைரஸ் காய்ச்சல் எல்லா பெயர் தெரியாத காய்ச்சலுக்கும் இந்த மருந்தை பயமின்றி தரலாம் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர –உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகி –எல்லா விதமான வைரஸ் காய்ச்சலில் இருந்தும் தடுத்து கொள்ளலாம்.

உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க –இயற்கையாக நோய்களில் இருந்து சீக்கிரம் விடுதலை பெற –ஆயுர்வேத ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
தேனி                   9047277577
சென்னை 90 4333 600

Post Comment

திப்பிலி எனும் மிக சிறந்த வைரஸை எதிர்க்கும் மருந்து.

திப்பிலி எனும் மிக சிறந்த வைரஸை எதிர்க்கும் மருந்து.

டாக்டர். அ.முகமது சலீம்.,BAMS.,M.Sc., MBA.,

எளிதாக கிடைக்கும் மூலிகைகளை கொண்டு இந்த கொடிய வைரஸை
எப்படி ஆதாரத்துடன் அழிக்க முடியும் என்கிற ஓர் போராட்டதில் ஓர் பகுதியாக
ஆயுர்வேதத்தை எட்டு துறைகளாக பிரிக்கிறார்கள் ஆயுர்வேத நூல்களை எழுதிய மருத்துவ வல்லுனர்கள் சரகர் ,சுஷ்ருதர், வாக்பட்டர். எந்த எட்டு பிரிவுகளில் ஒன்று தான் இந்த ரசாயனம் மற்றும் வாஜீகரணம் என்கிற ஒரு துறை. மக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு என்றும் இளமையாக ஆரோக்கியமாக வாழ வழி சொல்கிறது இந்த துறை.


இந்திய மருத்துவதின் தந்தை என்று போற்றப்படும் சரகர் எழுதிய மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சரக சம்ஹிதையில் -சிகிச்சைகளை பற்றி விளக்கும் முதல் அத்தியாயமே ரசாயனம் என்கிற மணரமில்லா பெரு வாழ்வு அல்லது என்றுமே இளமை அல்லது நோய்கள் இல்லாத வாழ்க்கை பற்றிய குறிப்புகள்.


திப்பிலி என்கிற ஒரு அற்புத மூலிகை வயதாகாமல் என்றும் இளமையாக இருக்க உதவ கூடிய மூலிகையாக பயன் படுத்த சொல்கிறது.
எப்படி பயன் படுத்தலாம்


எளிதாக நாம் செய்ய கூடிய முறை . திப்பிலி என்கிற இந்த பிப்பலியை சரியான முறையில் சுத்தம் செய்து .. பொடித்து வைத்து கொண்டு .. நெய்யில் வறுத்து வைத்து கொண்டு .. குறைந்தபட்சம் ஐநூறு மில்லி கிராம முதல் ஒன்றரை கிராம் அளவுக்கு நெய் அல்லது தேன் கலந்து காலை ஆகாரத்திக்கு முன் மற்றும் காலை ஆகாரதிர்க்கு பின்னும் தக்க மருத்துவரின் ஆலோசனை படி எதுத்து கொள்ள இந்த கொடிய வைரஸ் நோயில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் .
கால அளவு அதிக பட்சம் ஐந்து நாட்கள் இரண்டு நாட்கள் இடைவேளை என்று ஒரு மாதம் ( மிக மிக அதிக பட்சம்)



எச்சரிக்கை -திப்பிலி அதிகமான சூடு - வயிறு புண் மற்றும் பித்த தேகம் உள்ளவர்கள் மிக கவனத்துடன் மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிப்பது நல்லது


அதில் முக்கியமானது வர்தமனா பிப்பலி என்கிற ஒரு முறை - இது மிக மிக கட்டாயமாக ஓர் முறையாக படித்த ஆயுர்வேத மருத்துவரின் கீழ் உள் நோயாளியக சில குறிப்பிட்ட நாட்களுக்கு தங்கி இருந்து எடுக்க கூடிய முறை - இது கொரோனா நோயால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு தக்க பத்தியத்துடன் தரலாம்.


குறிப்பு - மிளகு பற்றி தனி ரசாயனம் என்கிற முறையில் பயன்படுத்துகிற முறை பற்றி ஆயுர்வேத கிரந்தங்களில் சிறப்பாக இல்லை எனவே மிளகை விட திப்பிலியே சிறந்தது.




 இந்த கட்டுரையுடன் ஆதாரங்களை இணைத்துள்ளேன்.

மேலும் ஆலோசனை பெற
அல் ஷிபா ஆயூஷ் மருத்துவனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 90422225999
தேனி 9047277577
ராஜபாளையம் 90433335888
சென்னை 9043336000
பிடித்து இருந்தால் பகிரலாமே

Post Comment