ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 06, 2015

சென்னை வெள்ள நிவாரணத்தில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் காய்ச்சி கொடுக்க வேண்டுமா ?

நில வேம்பு குடிநீரை இலவசமாக பெற வேண்டுமா ?


சென்னை வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு டெங்கு,சிக்கன் குனியா ,மற்றும் விஷ காய்ச்சல் வராமல் தடுத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நில வேம்பு குடிநீர் சூர்ணம் இலவசமாக தயாராக உள்ளேன் ..

எந்த இயக்கத்தில் இருந்து மக்களுக்கு இலவசமாக நில வேம்பு குடிநீரை தயாரித்து தர இருந்தாலும் இந்த தொலை பேசி மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம் ..


இலவசமாக பெற விரும்பும் இயக்கங்கள் செய்ய வேண்டியவை .

நிலவேம்பு குடிநீர் சூரணம் தர இயலும் -நீங்கள் குறைந்த பட்சம் ஆயிரம் நபர்களுக்காவது காய்ச்சி கொடுக்க முடியும் ,இலவசமாக  விநியோகிக்க முடியும் என்ற உத்தரவாதம் தர வேண்டும் .

தொடர்பு எண். 9688778640.

குறிப்பு - ஏற்கனவே சில  மாதங்களாக நில வேம்பு  குடிநீரை இலவசமாக வழங்கி வருகிறோம்..


தனி நபர்களோ ,சிறிய குடும்பத்திற்கு மட்டும் நில வேம்பு குடிநீர் வேண்டுபவர்களோ ,  என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் விரும்பி கேட்டு கொள்கிறேன் .





Post Comment

வெள்ளி, அக்டோபர் 16, 2015

இனி எப்போதும் நிலவேம்பு குடிநீரும் இலவசம்

 நிலவேம்பு கஷாயம் இனி எப்போதும் இலவசம் ..
டெங்கு காய்ச்சலுக்கு ஹோமியோ மருந்து இலவசம்


பருவ மாற்றத்தால் வருகிற பெயர் தெரியாத காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக நிலவேம்பு குடிநீர் இருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை ..

கடந்த வருடம்  இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு  நாம் நிலவேம்பு கஷாயத்தை இலவசமாக கொடுத்து   பயனுற செய்து -அவர்கள் நோய் தீர நம்மால் முடிந்த சேவைகளை ஏக இறைவன் துணை கொண்டு சில  இயக்கங்களுடன் செய்து முடித்தோம் ..

அதற்கான பழைய இடுகைகளின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

ஓராயிரம் பயனுற்ற நமது அடுத்த இலவச நில வேம்பு குடிநீர் முகாம்

சென்னையில் காய்ச்சலை விரட்டும் இலவச நில வேம்பு குடிநீர்

நான்காயிரம் மக்கள் இலவசமாக பருகிய நில வேம்பு குடிநீர் முகாம்

இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ முகாம் 

முப்பது ஆயிரம் இலவசமாக அருந்திய நில வேம்பு குடிநீர் முகாம் -கடையநல்லூரில்

புத்தாண்டு அன்று இலவச நிலவேம்பு குடிநீர் முகாம்

சங்கரன்கோயில் இலவச நிலவேம்பு குடிநீர் முகாம்

---------------------------------------

அதை போலவே இந்த வருடமும் பல இயக்கத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் முகாம் நடத்த உள்ளோம் .

கிட்டதட்ட இந்த மாதத்திலே பல நிலவேம்பு முகாம்களை நாம் இலவசமாக நடத்த துவங்கி விட்டோம் .

திருநெல்வேலி பகுதி மற்றும் நமது மருத்துவ நிலையங்கள் உள்ள கடையநல்லூர் ,திருநெல்வேலி ,சென்னை (கீழ் கட்டளை ,மடிப்பாக்கம் ,வேளச்சேரி ,தாம்பரம் ),ராஜபாளையம் பகுதிகளில் எந்த இயக்கத்தில் இருந்து நிலவேம்பு குடிநீர் கேட்டாலும் நாம் இலவசமாக நிலவேம்பு குடிநீரை வழங்க தயாராக உள்ளோம் .

அதன் ஒரு பகுதியாக முகாம் மட்டுமல்லாது ..
இப்போது நமது எல்லா அல் -ஷிபா ஆயுஷ் மருத்துவ மனைகளிலும் தினமும் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம் .


கடையநல்லூரில் தினமும் இலவச முகாம் ..




திருநெல்வேலியில் தினமும் இலவச முகாம் ..


சென்னையில்  தினமும் இலவச முகாம் ..


ராஜபாளையத்தில்  தினமும் இலவச முகாம் ..

உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இந்த இலவச மருத்துவ சேவை விஷயத்தை எடுத்து சொல்லி -டெங்கு ,சிக்கன் குனியா மற்றும் உள்ள மர்ம காய்ச்சல்களிருந்து மக்களை காப்பாற்ற ஷேர் செய்யுமாறும் கேட்டு கொள்கிறோம் ..

மேலும் இலவச டெங்கு காய்ச்சலுக்கு ஹோமியோ மருந்தும்  தரப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .

எங்களோடு இணைந்து மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் , மருத்துவ முகாமுக்கு பண உதவி செய்ய விருப்பம் உள்ளவர்களும் நமது இலவச மருத்துவ ஆலோசனைக்கான தொலை பேசி எண் 9688778640  -தொடர்பு கொள்ளளலாம் .





Post Comment

வியாழன், ஜனவரி 22, 2015

முப்பது ஆயிரம் இலவசமாக அருந்திய நில வேம்பு குடிநீர் முகாம் -கடையநல்லூரில்

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் இலவச நிலவேம்பு குடிநீர் முகாம் ...


பல மர்ம காய்ச்சல்களை கடையநல்லூர் சந்தித்து வந்து இருக்கிறது ..
கடந்த வருடம் அணுக்களை குறைக்க கூடிய டெங்கு காய்ச்சல் இங்கு தான் முதன் முதலில் கண்டு அறியப்பட்ட்டது ..அதற்கு முன் சிக்கன் குனியாவும் இங்கே தான் முதன் முதலில் தொடங்கியது என்ற ஒரு வரலாறும் இங்கே இருக்கிறது ,,,

ஆனால் இந்த வருடம் ராஜ பாளையத்தில் மர்ம காய்ச்சல் துவங்கியுள்ளது ..

பெயர் தெரியாத காய்ச்சலை நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவ மனை கடந்த நவம்பர் மாதம் முதலே பல இயக்கத்துடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் ,செங்கோட்டை ,சங்கரன்கோயில்  பகுதிகளில் பல இலவச நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாமை சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்துள்ளது .இந்த முகாம்களில் பல ஆயிர கணக்கான மக்கள் பயன் பெற்றனர் ..

இதன் தொடர்ச்சியாக கடைய நல்லூர் நகராட்சியில் மக்களுக்கு இலவசமாக நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாம் துவங்க வேண்டும் என்று முயன்ற போது தமிழ் நாடு தௌஹீத் ஜாமத் கடையநல்லூர் கிளை நமது அல் ஷிபா மருத்துவ மனையை நம்மை தொடர்பு கொண்டது ..நாம் அவர்களுக்கு இலவசமாக பல கிலோ கணக்கில் நில வேம்பு குடிநீரை வழங்கியது ..நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையும் தமிழ் நாடு தௌஹீத் ஜாமத் கடையநல்லூர் கிளையும் இணைந்து கடந்த எட்டு நாட்களாக கடையநல்லூரின் பல பகுதிகளில் அதிகாலையிலேயே பெரிய பிரியாணி ஆக்கும் சட்டிகளில் வைத்து சுட சுட மக்களுக்கு வழங்கியது. ஒரே நாளில் கடையநல்லூரின் பல  இடங்களிலும் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது . மக்கள் தூக்கு சட்டிகளில் வாங்கி குடும்பமாக வீட்டிலும் பருகினர் .இந்த எட்டு நாட்களில் குறைந்தது முப்பதாயிரத்திற்கு மேல் மக்கள் நில வேம்பு குடிநீரை பருகி பயன் பெற்றனர் .
ஏக இறைவனின் துணை கொண்டு இந்த வருடம் மர்ம காய்ச்சல்கள் ,டெங்கு காய்ச்சல்  போன்றவை தடுக்கப்பட்டு விட்டன என்றே நாம் சொல்லலாம் .

இந்த சேவையில் நம்மோடு துணை ,நமது இலவச நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு சேர்த்ததில் தமிழ் நாடு தௌஹீத் ஜாமத் கடையநல்லூர் கிளை மிக பெரிய பங்கு ஆற்றியது ..
சில புகைபடங்கள் உங்களுக்காக 































Post Comment

புதன், ஜனவரி 21, 2015

புத்தாண்டு அன்று இலவச நிலவேம்பு குடிநீர் முகாம்

கடந்த புத்தாண்டு அன்று ( 1/1/15) திருநெல்வேலி மாவட்டம் வீரசிகாமணி யில் வைத்து நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையும் -SDPI  சேர்ந்து இலவச  நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் ஒன்றை நடத்தியது .
பல மக்கள் பயன் பெற்றனர்





Post Comment

செவ்வாய், டிசம்பர் 16, 2014

சங்கரன்கோயில் இலவச நிலவேம்பு குடிநீர் முகாம் ( 14/12/2014 ஞாயிறு )

தொடர்ச்சியாக நாம் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து இலவச நிலவேம்பு  குடிநீர் வழங்கும் முகாம் நடத்தி வருகிறோம் .

காய்ச்சலை தடுக்கவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ,டெங்கு ,சிக்கன் குனியா போன்ற மர்ம காய்ச்சலை விரட்டவும் இலவச நிலவேம்பு குடிநீர் முகாமை   தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் சங்கரன்கோயில் கிளையுடன் இணைந்து நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை வழங்கிய இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் கடந்த ஞாயிறு 14/12/2014  அன்று நடத்தினோம் ..

ஆயிரம் பயனாளிகள் சங்கரன் கோயில் பகுதியிலும் அதனை சுற்றயுள்ள பகுதியுளும் இந்த முகாமில் ஆர்வத்துடன் நிலவேம்பு குடிநீரை பருகி பயன் பெற்றனர் ..









Post Comment

செவ்வாய், டிசம்பர் 09, 2014

ஓராயிரம் பயனுற்ற நமது அடுத்த இலவச நில வேம்பு குடிநீர் முகாம்

 7/12/2014- ஞாயிற்றுகிழமை  அன்று திருநெல்வேலி மாவட்டம் ,தென்காசி வட்டம் பண்பொழி கிராமத்தில் தாருஸ்லாம் பள்ளி வளாகம் மற்றும் பண்பொழி கிராமத்தில் ஆறு இடங்களில் நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையும்  SDPI இயக்கத்துடன் இணைந்து காய்ச்சலை தடுக்கவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இலவச நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது .இந்த முகாமில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனாளிகள் இலவசமாக நில வேம்பு  குடிநீரை பருகி பயன் பெற்றனர் .இந்த முகாமில் இலவசமாக நாம் நில வேம்பு குடிநீரை வழங்கினோம் .









Post Comment