வெள்ளி, டிசம்பர் 31, 2010

தசமூலம் (Dashamoolam)என்ற வீர்யம் தரும் பத்து மூலிகை பொருட்களின் படங்கள்


தஷ மூலம் -என்னும் பத்து மூலிகைகளின் வேர்கள் ..எவை எவை ..
தச மூலம் என்னும்  இந்த பத்து பொருட்களும் சேர்ந்தது தான் தசமூலம் என்ற இந்த கூட்டு மருந்துகள் ..

இந்த தச மூலத்தை கொண்டு பல ஆயுர்வேத மருந்துகளை செய்வதுண்டு -அதாவது ஆயுர்வேத மருந்தைகள் பலவற்றில் இந்த தசமூலம் என்னும் இந்த பத்து மூலிகை பொருட்களின் சேர்மானம் சேர்க்கபடுகிறது ...

உங்களுக்காக இந்த பத்து மூலிகைகள் -தச மூல மூலிகைகளின் படங்கள்

























அடுத்து -தஷமூலரிஷ்டம் தயாரிப்பது எப்படி
 

Post Comment

செவ்வாய், டிசம்பர் 28, 2010

சிறுநீரில் விந்து வருவதை தடுக்கும் மருந்து - சந்தனாஸவம்-Chandanasavam


சிறுநீரில் விந்து வருவதை தடுக்கும் மருந்து - சந்தனாஸவம்-Chandanasavam

(Ref-பைஷஜ்யரத்னாவளி - சுக்ரமேகாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல       25.600   லிட்டர்
2.            சர்க்கரை ஸர்க்கர                         5.000     கிலோ கிராம்
3.            வெல்லம் குட                            2.500     “

இவைகளைக் கலந்து அதில் திராக்ஷை – (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்து சேர்த்து அதில்,

1.            சந்தனம் சந்தன                            50  கிராம்
2.            குருவேர் ஹ்ரீவேர்                        50           “
3.            கோரைக்கிழங்கு முஸ்தா                  50           “
4.            குமிழ் காஷ்மரீ                             50           “
5.            நீல ஆம்பல் கிழங்கு நீலோத்பல கந்த       50           “
6.            ஞாழல் பூ ப்ரியாங்கு                      50           “
7.            பதிமுகம் பத்மக                          50           “
8.            பாச்சோத்திப்பட்டை லோத்ரா               50           “
9.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                      50           “
10.          செஞ்சந்தனம் ரக்த சந்தன                  50           “
11.          பாடக்கிழங்கு பாடா                        50           “
12.          நிலவேம்பு பூநிம்பா                        50           “
13.          ஆலம்பட்டை வாதத்வக்                   50           “
14.          அரசம்பட்டை அஸ்வத த்வக்               50           “
15.          பூலாங்கிழங்கு (கிச்சலிக்கிழங்கு)- ஸட்டீ      50           “
16.          பர்பாடகம் பர்பாடக                        50           “
17.          அதிமதுரம் யஷ்டீமது                       50           “
18.          சித்தரத்தை ராஸ்னா                       50           “
19.          பேய்ப்புடல் பட்டோல                      50           “
20.          மந்தாரைப்பட்டை காஞ்சனாரகத்வக்         50           “
21.          மாம்பட்டை ஆம்ரத்வக்                    50           “
22.          இலவம்பிசின் சால்மலீ நிர்யாஸம்               50           “


இவைகளைப்  பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து முறைப்படி ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

குறிப்பு:-    சர்க்கரையும், திராக்ஷையும் வகைக்கு 75 சதவிகிதமும், வெல்லம் 87.5 சதவிகிதமும் அதிகமாகச் சேர்ப்பது சம்பிரதாயம்.

அளவும் அனுபானமும்:-  

   10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இருவேளைகள்.


தீரும் நோய்கள்:- 

நீரெரிச்சல், நீர்ச்சுருக்கு எனும் மூத்திரச்சுருக்கு (மூத்திரகிரிச்சர), மூத்திர நாள அழற்சி (மூத்திரவாகஸ்ரோததுஷ்டி) சிறுநீருடன் விந்து கழிதல் (சுக்ரமேஹ), சீழ்மேகம் (பூயமேஹ), வெள்ளை (ஸ்வேதப்ரதர), பலவீனம் (தௌர்பல்ய), அதிக உடற்காங்கை (சர்வாங்க தாஹ), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக).

இந்த மருந்து உடல் உஷ்ணத்தை குறைக்க பயன் படுகிறது ..
ஆண்களின் தூக்கத்தில் விந்து அதிக வெளியேற்றதையும் ,சிறுநீருடன் விந்து வெளியேறுவதையும் குறைக்க ,குணபடுத்த உதவும் ..
பெண்களின் வெள்ளை போக்கை சரி செய்யும் ..

இந்த சந்தனாசவம் மற்ற துணை ஆயுர்வேத மருந்துகளோடு கொடுக்கப்பட வேண்டும் ..சந்தேகங்களை கேளுங்கள் ..
 

Post Comment

திங்கள், டிசம்பர் 27, 2010

மக்களுக்கு இந்திய மருத்துவத்தில் சேவை செய்ய ஒரு இனிய ஆரம்பம்

AYUSH & Traditional Medicine Research Institute -என்ற ..இந்திய மருத்துவம் ,பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் என்ற ஒரு தன்னார்வு நிறுவனம் இன்று இனிதே பதிவு செய்யப்பட்டது ..





உலக மக்களுக்கும் ,இந்திய மக்களுக்கும் ஆயுர்வேதம் ,யோகா & நேச்சுரோபதி,யுனானி ,சித்தா ,ஹோமியோபதி மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் பயன் அடைய -விழிப்புணர்வு பெற ,இலவச ஆலோசனை பெற ,மூலிகை வளர்ப்பு பற்றி தெரிய ,நோய் நீங்க ஒரு இந்த தன்னார்வு நிறுவனம் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் ..

இதில் மெம்பெர் ஆகவும் ,பயன் பெறவும் ,இணைத்து கொள்ளவும் ,சேவை செய்யவும் ,சேவை செய்ய உதவி செய்பவர்களையும் வரவேற்கிறோம் ..

Post Comment

சனி, டிசம்பர் 25, 2010

முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவம்-Brungarajasavam


முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவம்-Brungarajasavam
(ref-கதநிக்ரஹ - ஆஸவாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1.            கரிசாலைச்சாறு பிருங்கராஜ ஸ்வரஸ 12.800 லிட்டர் 
அளந்தெடுத்து அதில்


2.            வெல்லம் குட                  10.000 கி.கிராம் கரைத்து அத்துடன்


1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ                400         கிராம்
2.            திப்பிலி பிப்பலீ                            100         “
3.            ஜாதிக்காய் ஜாதீபல                             100         “
4.            இலவங்கம் லவங்க                             100         “
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்                  100         “
6.            ஏலக்காய் ஏலா                            100         “
7.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர                   100         “
8.            சிறு நாகப்பூ நாககேஸர                         100         “


இவைகளை முறைப்படி கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:   

  15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 


முடி கொட்டுதல் (ரோம சத),தாதுக்கள் நலிவடைதல் (தாதுக்ஷயம்), இளைப்பு (கார்ஸ்ய), பலவீனம் (தௌர்பல்ய), இரத்த சோகை எனும் வெளுப்பு நோய் (பாண்டு), காமாலை (காமால), கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத் ப்லீகவ்ருத்தி), பெண்களின் மலட்டுத்தன்மை (நஷ்ட புஷ்பக), காங்கை (சர்வாங்க தாஹ), நாட்பட்ட காய்ச்சல் (புராணஜ்வர), இருமல் (காஸ).



குறிப்பு:    சாறு, வெல்லம், கடுக்காய்ப் பொடி இவைகளை மட்டும் சேர்த்து 15 நாட்கள் வரை வைத்து இருந்து பின்பு திப்பிலி முதலானவற்றைச் சேர்க்க வேண்டுமென நூலில் கூறப்பட்டுள்ளது.
கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல் 200 கிராம் சேர்ப்பது சம்பிரதாயம்.

 இந்த மருந்தை தொடர்ந்து -பத்திலிருந்து -பதினைந்து பாட்டில்களாவது சாப்பிட்டால் -முடி கொட்டுவது நின்று -நன்றாக முடி வளர வாய்ப்புள்ளது ..

Post Comment

வெள்ளி, டிசம்பர் 24, 2010

மேக நோயை விரட்டும் -பப்பூலாரிஷ்டம்-Baboolarishtam


மேக நோயை விரட்டும் -பப்பூலாரிஷ்டம்-Baboolarishtam

(Ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            கருவேலம்பட்டை பப்பூலத்வக்              10.000   கி.கிராம்
2.            தண்ணீர் ஜல                               51.200   லிட்டர்
இவைகளை கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் 15.000 கிலோ கிராம் மற்றும்

1.            திப்பிலி பிப்பலீ            100  கிராம்
2.            ஜாதிக்காய் ஜாதீபல             50           “
3.            தக்கோலம் தக்கோல      50           “
4.            ஏலக்காய் ஏலா            50           “ 
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்  50           “
6.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி   50           “
7.            சிறு நாகப்பூ நாககேஸர         50           “
8.            இலவங்கம் லவங்க             50           “
9.            மிளகு மரீச்ச                   50           “
10.          காட்டாத்திப்பூ தாதகீபுஷ்ப       100         “

இவைகளை முறைப்படி கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:  
 10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இருவேளைகள்.

தீரும் நோய்கள்: 

 வயிற்றுப் போக்கு (அதிஸார), நாட்பட்ட பேதி (அ) பெருங் கழிச்சல் (கிரஹணீ), நீரிழிவு (ப்ரமேஹ, மதுமேஹ), குட்டம் (குஷ்ட), இருமல் (காஸ), இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ) எலும்புருக்கி நோய் (க்ஷயம்), குருதிக் குறைபாடுகள் (ரத்த தோஷங்கள்). சீழ் மேகத்தில் (பூயமேஹ) 4 முதல் 8 மடங்கு நீரில் இதனைச் கலந்து ஆண், பெண் குறிகளைக் கழுவ உபயோகிக்கலாம்.

Post Comment

செவ்வாய், டிசம்பர் 21, 2010

எல்லா விதமான வலிகளை போக்கும் -சூப்பர் டானிக் -பலாரிஷ்டம்-Balarishtam


எல்லா விதமான வலிகளை போக்கும் -சூப்பர் டானிக் -பலாரிஷ்டம்-Balarishtam
(ref பைஷஜ்யரத்னாவளி - வாதவ்யாத்யதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            சித்தாமுட்டிவேர் பலாமூல                 5.000  கிலோ கிராம்
2.            அக்கராக்கிழங்கு அஸ்வகந்தா              5.000     “
3.            தண்ணீர் ஜல                              51.200   லிட்டர்


இவைகளை கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் 15.000 கிலோ கிராம் மற்றும்


1.            கீரைப்பாலை விடாரி                      100  கிராம்
2.            ஆமணக்கு வேர் ஏரண்டமூல               100         “
3.            சித்தரத்தை ராஸ்னா                       50           “
4.            ஏலக்காய் ஏலா                            50           “
5.            முதியார் கூந்தல் ப்ரஸாரணி              50           “
6.            இலவங்கம் லவங்க                       50           “
7.            விளாமிச்சைவேர் உசீர                     50           “
8.            நெருஞ்சில் கோக்ஷூர                     50           “
9.            காட்டாத்திப்பூ தாதகீ புஷ்ப                 800         “
இவைகளை முறைப்படி கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.



அளவும் அனுபானமும்:    

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இருவேளைகள்.


தீரும் நோய்கள்:  

பசியின்மை (அக்னி மாந்த்ய),  
பலவீனம் (தௌர்பல்ய),
நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய),  
கீல்வாயு (வாத ரக்த),  
ஆம வாதம் (ஆமவாத),
வாத நோய்கள் (வாதஜரோக).

Post Comment

திங்கள், டிசம்பர் 20, 2010

சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி-Ayaskruthi


சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி-Ayaskruthi
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் சிகித்ஸா ஸ்தான)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            வேங்கை அஸன                              1.000     கி.கிராம்
2.            கொடுகாரை (நரிவேங்கை)- தினிஸ                1.000     “
3.            பூர்ஜப்பட்டை பூர்ஜத்வக்                    1.000     “
4.            மருதம்பட்டை அர்ஜூனத்வக்               1.000     “
5.            ஆவில்தோல் கரஞ்ஜ                      1.000     “
6.            கருங்காலி கதிர                           1.000     “
7.            வெண் கருங்காலி ஸ்வேதகதிர             1.000     “
8.            வாகை சிரீஷ                             1.000     “
9.            இருபூள்கட்டை (தோதகத்தி) சிம்ஸூப       1.000     “
10.          சிறுகுறிஞ்சான் மேஷ ஸ்ருங்கி             1.000     “
11.          சந்தனம் சந்தன                            1.000     “
12.          செஞ்சந்தனம் ரக்தசந்தன                   1.000     “
13.          மரமஞ்சள் தாரு ஹரித்ரா                  1.000     “
14.          பனைவேர் தாளமூல                      1.000     “
15.          புரசு பலாஸ                              1.000     “
16.          காரகில் அகரு                            1.000     “
17.          தேக்கு ஸாகதாரு                         1.000     “
18.          குங்கிலியமரம் ஸால                      1.000     “
19.          கொட்டைப்பாக்கு ச்ரமுக                   1.000     “
20.          வெள்ளை நாகமரம் தவ                   1.000     “
21.          வெட்பாலைப்பட்டை குடஜத்வக்            1.000     “
22.          குந்துருக்கமரம் சாககர்ண                  1.000     “
23.          பெருவாகை மரம் ஸ்யோனாக              1.000     “
24.          தண்ணீர் ஜல                             102.400 “


இவைகளை நன்கு கொதிக்க வைத்து 25.600 ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் 10.000 கிலோ கிராம், தேன்  1.630 கிலோ கிராம் சேர்த்து அத்துடன் 


1.            வெட்பாலை அரிசி இந்தரயவ               50  கிராம்
2.            பெருங்குரும்பை மூர்வா                   50           “
3.            கண்டுபாரங்கி பார்ங்கீ                    50           “
4.            கடுகரோஹிணீ கடுகீ                    50           “
5.            மிளகு மரீச்ச                             50           “
6.            அதிவிடயம் அதிவிஷா                    50           “
7.            கள்ளி ஸ்னுஹி                           50           “
8.            ஏலக்காய் ஏலா                          50           “
9.            பாடக்கிழங்கு பாட்டா                    50           “
10.          ஜீரகம் ஜீரக                               50           “
11.          பெருவாகை ஸ்யோனாக                   50           “
12.          மருக்காரை மதனபல                       50           “
13.          ஓமம் அஜமோதா                         50           “
14.          வெள்ளைக்கடுகு ஸ்வேதஸர்ஸப           50           “
15.          வசம்பு வாச்சா                             50           “
16.          கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக                 50           “
17.          பெருங்காயம் ஹிங்கு                        50           “
18.          வாயுவிடங்கம் விடங்க                    50           “
19.          தைவேளை பஸுகந்தா                    50           “
20.          திப்பிலி பிப்பலீ                            50           “
21.          மோடி பிப்பலீ மூல                        50           “
22.          செவ்வியம் சவ்ய                          50           “
23.          கொடிவேலிவேர் சித்ரக                    50           “
24.          சுக்கு சுந்தீ                                50           “
25.          இரும்புத்தகடு திகினலோஹபத்ர            800         “


இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு இரும்புத் தகட்டை கருங்காலித்தணலில் பழுக்கக் காய்ச்சி க்ஷெ கலவையில், தகடு கரையும் வரையில் நனைத்துக் காட்டாத்திப்பூ ஒரு கிலோ கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்: 

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 இரத்த சோகை எனும் வெளுப்பு நோய் (பாண்டு),  
பிரமேசம் (ப்ரமேஹ),  
குட்டம் (குஷ்ட),  
வெண்குட்டம் (ஸ்வித்ர),  
மூலம் (அர்ஷ),  
செரியாமைக் கோளாறுகள் (அஜீர்ண),
நாட்பட்ட சீதபேதி (ரத்தாதிகார),  
அதிக உடற்பருமன் (மேதோவ்ருத்தி),  
குடற்பூச்சிகள் (க்ருமி கோஷ்ட).


குறிப்பு:    இரும்புத் தகட்டிற்குப் பதிலாக சுத்தி செய்த இரும்பு அரப் பொடியை அக்கலவையைச் சிறிது விட்டு நன்கு அரைத்துக் கலக்கியும், கருங்காலியின் குணம் மேலோங்க கஷாயச் சரக்குகளுடன் கருங்காலியையே 2.500 கிலோ அதிகமாகச் சேர்த்துக் கஷாயமாக்கி உபயோகித்துத் தயாரிப்பதும் சம்பிரதாயம். நன்கு ஸந்தானம் ஆவதற்காக காட்டாத்திப்பூ சேர்க்கப்படுகிறது.

குறிப்பு -சர்க்கரை ,தேன் மருந்தில் சேருவதால் -பாத எரிச்சலை கட்டுபடுத்த நினைக்கும் சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்து இந்த மருந்தை சாப்பிட வேண்டும் -இந்த மருந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாது என்பது உறுதி ..

Post Comment

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

பெண்களின் அனைத்து நோய்க்கும் சர்வ நிவாராணி -அசோகாரிஷ்டம்-Asokarishtam


பெண்களின் அனைத்து நோய்க்கும் சர்வ நிவாராணி -அசோகாரிஷ்டம்
அசோகாரிஷ்டம்-Asokarishtam
(Ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்த்ரீரோகாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            அசோகப்பட்டை அசோக த்வக்              5.000  கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல                               51.200   லிட்டர்
3.            வெல்லம் குட                             10.000 கிலோ கிராம்

முதலிரண்டு சரக்குகளையும் நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் சேர்த்து அத்துடன் 

1.            கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக                 50  கிராம்
2.            கோரைக்கிழங்கு முஸ்தா                  50           “
3.            சுக்கு சுந்தீ                                50           “
4.            மரமஞ்சள் தாருஹரித்ரா                   50           “
5.            ஆம்பல்கிழங்கு உத்பலகந்த                50           “
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது)- ஹரீதகீ      50           “
7.            தான்றிக்காய் (கொத்டை நீக்கியது)- பிபீதகீ      50           “
8.            நெல்லிமுள்ளி ஆமலகீ                    50           “
9.            மாம்பருப்பு ஆம்ராஸ்தி மஜ்ஜ              50           “
10.          ஜீரகம் ஜீரக                               50           “
11.          ஆடாதோடை வாஸாபத்ர                  50           “
12.          சந்தனம் சந்தன                            50           “
13.          காட்டாத்திப்பூ தாத்கீபுஷ்ப                  800         “


இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து சீலிலமண் செய்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும் :  

  15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.

  தீரும் நோய்கள் :

                பெரும்பாடு (அஸ்ரித்தர), வெள்ளை படுதல் (ஸ்வேதப்ரதர), வெட்டை, சூதக சூலை (ஆர்த்தவ சூல, யோனி ருஜா போன்றன), பெண்களின் மலட்டுத் தன்மை (நஷ்ட புஷ்பக) போன்ற பெண்களின் தீவிர நோய்கள் (தீவ்ரஸ்த்ரீ ரோக).

                சூதகக்கட்டு (நஷ்டார்த்தவ), சூதக சூலை (ஆர்த்தவ சூல) போன்றவற்றில் அசோகாதி வடியுடன் தரப்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மைக்கு (நஷ்ட புஷ்பக) சதாவரீ ரஸாயனம், அஸ்வகந்தாரிஷ்டத்துடன் தரப்படுகிறது. 

வலியும், பெருமளவில் ரத்தப் போக்குடனும் கூடிய வீட்டு விலக்குக் கோளாறுகளில் பப்பூலாரிஷ்டத்துடன் தரப்படுகிறது. 

வெள்ளப் போக்கில் (ஸ்வேத ப்ரதர) அப்ரகபஸ்ம, அயநிமிளை, காந்தம், சீந்தில், சர்க்கரை, இலவங்கப்பொடி, தாளீச பத்ரி, பனைவெல்லம், அமுக்கரா கிழங்கு தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியவற்றுடன் தரப்படுகிறது. 

இது கருப்பை மற்றும் அதைச் சார்ந்த தசைகளுக்கு வலுவூட்டுவதுடன் மாதாந்திர ருதுப் போக்கை ஒழுங்கு படுத்துகிறது.

Post Comment