சனி, மே 23, 2015

தீராத முதுகு வலியா ? முதுகு தண்டுவட டிஸ்க் பிரச்சனையா ?



தீராத முதுகு வலியா ?
அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என்று சொல்கிறார்களா ?

அறுவை சிகிச்சை இல்லா ஆயுஷ் மருத்துவத்திற்கு 
சென்னையில் ஆலோசனை -

24/5/2015 ஞாயிறு காலை பத்து மணி முதல் மாலை ஏழு மணி வரை என்னை சென்னை -கீழ்கட்டளை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சந்தித்து ஆலோசனை பெறலாம் ..

சென்னையில் முன் பதிவுக்கு 90 4333 6444, 90 4333 6000



Post Comment

வெள்ளி, மே 22, 2015

மூலிகை தந்தை வைத்ய உஸ்மான் அலி இயற்கை எய்தினார்

மூலிகைகளின் அரசர் ,மூலிகைகளின் தந்தை  என்று எங்களை போன்ற மருத்துவர்களால் போற்றப்படும் வைத்ய உஸ்மான் அலி அவர்கள்  21/5/2015 அன்று இயற்கை எய்தினார் ..

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று .

  • அவர் ஒரு நடமாடும் மூலிகை அகராதி ..
  • தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று பல தாவரவியல் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியவர் ..
  • மகாராஷ்டிரா ஆரோக்ய மண்டல் போன்ற பெரிய பெரிய தொண்டு நிறுவங்களை நிறுவ மூல காரணமானவர் ..
  • உலக புகழ் பெற்ற குஜராத் ஆயுர்வேத பல்கலை கழகத்தின் Asst.Director  that is formar OSD Gujarat Ayurvedic University -யாக பணியாற்றியவர்
  • சென்னை அடையார் இம்ப்காப்ஸ் என்ற சித்த ஆயுர்வேத யுனானி  மருந்தகளை தயாரிக்கும் மிக பெரிய நிறுவனத்தை துவங்கிய காலத்தில் இவருடைய பங்கு மிக அளப்பரியது .தலைமை தாவரவியல் வல்லுனராக மட்டுமல்லாது இம்பாகாப்ஸ் செம்மையாக நடைபெற சிறப்பு துவக்கம் தந்தவர் .
  •  டேம்ப்கால்  நிறுவனத்தின் முதல் தலைமை தாவரவியல் வல்லுனராகவும் இருந்தவர்  பல மூலிகைகளை மக்களுக்கு சென்றடைய உதவியர் .
  • CTMR பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் தலைவர் .இந்த தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு களப்பணிகள்  ஆராய்ச்சிகள் செய்தவர் .
  • அனைத்து சித்த மருத்துவர்களுக்கும் ஒரு மூலிகை தந்தை .பல சித்த மருத்துவர்களுக்கே மூலிகைகளை அடியாளம் காட்டி , அவர்களுக்கு தெரியாத எளிய பயன்களை சொல்லி கொடுத்த ஆசான் .
  • கிட்னி பெயிலியருக்கு பூனை மீசை மருந்து மிக சிறப்பாக வேலை செய்யும் என்று கண்டு பிடித்து சொன்ன மிக சிறந்த மேதை http://www.ayurvedamaruthuvam.blogspot.com/2014/01/blog-post_16.html
  • எங்களது  சென்னை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தை துவக்கி வைத்தவர் .http://www.ayurvedamaruthuvam.blogspot.com/2014/11/blog-post.html 
  • என்னை அவரது மகன் என்று குற்றாலம்  பராசக்தி  கல்லூரியின்  ஒரு மிக பெரிய கருத்தரங்கில் சொல்லி மகிழ்ந்தவர் .My son என்று என்னை அழைப்பவர் .
  • ஒற்றை மூலிகை பயன் பற்றி  எங்களை போன்ற மருத்துவர்களுக்கு வழி காட்டியவர் .
  • எனது உடன் பிறவா சகோதரர் Dr.சித்தீக் அலி MD ( Siddha)  அவர்கள் எப்போதும் வைத்ய உஸ்மான் அலி  அவர்களிடம் இருந்து பல இருந்து பல விஷயங்களை கற்று மருத்துவர்களுக்கு வழி காட்டியவாறு .முதலாளி என்று எனது சகோதரர் சித்தீக் அலி அவர்களை அழைப்பர்கள் .
  • யாரிடமும் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காத மூலிகை மேதை அவர் .
 எம்மை போன்ற மருத்துவர்களுக்கு வழி காட்டியாக ,தந்தையாக ,ஆசானாக இருந்தவர் 21/5/2015 வியாழன் காலையில் இயற்கை  எய்தினார் .அவர்கள் இடத்தை யாரும் நிரப்ப இயலாது .மாறா துக்கத்துடன் கவலையுடனும் அவரது மறுமை வாழ்வின் வெற்றிக்காக அழுது பிரார்த்தித்தவனாக ...



Post Comment