புதன், செப்டம்பர் 21, 2011

எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் - ஷட்பல க்ருதம் Shatphala grutham


எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் - ஷட்பல க்ருதம் Shatphala grutham
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் ராஜயக்ஷ்ம சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல        2.400 லிட்டர்
2.            பசுவின் நெய் க்ருத        0.600 கிலோ கிராம்
3.            பசுவின் பால் கோக்ஷீர     0.600          

இவைகளை நன்றாகக் கலந்து அதில்


1.            திப்பிலி பிப்பலீ      25 கிராம்
2.            மோடி பிப்பலீ மூல        25  
3.            செவ்வியம் சவ்ய          25  
4.            கொடிவேலி வேர் சித்ரக   25  
5.            சுக்கு சுந்தீ                25  
6.            யவக்ஷாரம் யவக்ஷார     25  

                இவைகளைக் கல்கமாக அறைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:     

 5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:  



பசியின்மை (அக்னிமாந்த்ய), நாட்பட்ட பெருங்கழிச்சல் (க்ரஹணீ), பெருவயிறு (உதர), சூலை (சூல), குன்மம் (குல்ம), மண்ணீரல் பெருக்கம் (ப்லீஹ வ்ருத்தி), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), குடற்புண்கள், ராஜயக்ஷ்மா எனப்படும் TB

தெரிந்து கொள்ளவேண்டியவை ..

  1. ஆயுர்வேதத்தின் அடிப்படையான விஷயங்களில் ஒன்று  -ஸ்ரோதஸ் என்பதாகும் .நமது  உடல் பதிமூன்று வகையான  ஸ்ரோதஸ்களால் ஆக்கப்ட்டுள்ளது ..புரிவதற்காக ஸ்ரோதசை உடலே ச்ரோஷஸ் மயம் எனலாம் .ஸ்ரோதஸ் என்றால் என்ன -ஒரு குழாய் ,ஒரு இரத்த தந்துகிகள் ,இணைப்பை ஏற்படுத்தும் பாலம் ,தாதுக்களை கடத்திடும் ஒரு வழி....என்றும் பலவாறு புரியலாம் ...
  2. பலவைதாமான நோய்க்கு இந்த ஸ்ரோதசில் ஏற்படக்கூடிய அடைப்பே காரணம் எனலாம் -உதாரணதிற்கு கருக்குழாய் அடைப்பு ,விந்து  குழாய் அடைப்பு ,இதய அடைப்பு ,என்று அடைப்புகள் அனைத்தும் ஆயுர்வேதத்தில் ஸ்ரோதோ ரோதம் என்று அளிக்கபடுகிறது  ..இந்த பொதுவாக எல்லா நோய்க்கும் காரணமான ஸ்ரோதோ ரோதம் என்பதனை சரி seyyum -முக்கிய மருந்தாக இந்த மருந்து உள்ளது
  3. கருக்குழாய் அடைப்புக்கும் தக்க துணை மருந்தோடு தர குணமாகும் என்பது இதற்க்கு உதாரணம்
  4. melum இந்த மருந்து காச நோய்க்கும் ,இளைத்துகொண்டே போகும் நோய்க்கும் தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் கிடைக்கும்


Post Comment

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்


பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு ஸதாவரீரஸ (அ) கஷாய         3.200 கி.கிராம்
2.            நெருஞ்சில் கஷாயம் கோக்ஷுர ஸ்வரஸ (அ) கஷாய         3.200       “
3.            பசுவின் நெய் க்ருத                                  1.600       “
4.            பசுவின் பால் கோக்ஷீர                               3.200        “
இவைகளை ஒன்று கலந்து அதில்
1.            பால்முதுக்கன் கிழங்கு விடாரீ                        12.500 கிராம்
2.            சந்தனம் சந்தன                                12.500       “
3.            மூங்கிலுப்பு வம்சலோசன                            12.500       “
4.            திராக்ஷை த்ராக்ஷா                                   12.500       “
5.            அதிமதுரம் யஷ்டீ                                    12.500       “
6.            கோரைக்கிழங்கு முஸ்தா                             12.500       “
7.            வெள்ளரி விதை த்ரபுஸ பீஜ                               12.500       “
8.            ஏலக்காய் ஏலா                                 12.500       “
9.            சுத்திசெய்த கோமூத்திர சிலாஜது ஷோதித கோமூத்ர ஷிலாஜித்           12.500       “
10.          திப்பிலி பிப்பலீ                                 12.500       “
11.          ஆம்பல் கிழங்கு உத்பலகந்த                       12.500       “
12.          ஓரிலைத் தாமரை பத்மசாரிணி                       12.500       “
13.          மீனாங்கண்ணி மீனாக்ஷி                              12.500       “
14.          கோரைக்கிழங்கு முஸ்தா                             12.500       “
15.          காகோலீ காகோலீ                                   12.500       “
16.          க்ஷீரகாகோலீ க்ஷீரகாகோலீ                         12.500       “
17.          ஜீவகம் ஜீவக                                      12.500       “
18.          ருஷபகம் ருஷபக                                    12.500       “
19.          காட்டுளுந்துவேர் மாஷபர்ணீ                          12.500       “
20.          காட்டுப்பயிறு வேர் முட்க பர்ணீ                       12.500       “
21.          மேதா மேதா                                        12.500       “
22.          மஹா மேதா மஹா மேதா                           12.500       “
23.          சீந்தில்கொடி குடூசி                                   12.500       “
24.          கர்க்கடக சிருங்கி கர்க்கட ச்ருங்கி                           12.500       “
25.          கூகை நீறு துகக்ஷீர                                  12.500       “
26.          பதிமுகம் பத்மக                                     12.500       “
27.          நாமக்கரும்பு காண இக்க்ஷூ                          12.500       “
28.          ருத்தி ருத்தி                                         12.500       “
29.          விருத்தி விருத்தி                                    12.500       “
30.          திராக்ஷை த்ராக்ஷா                                   12.500       “
31.          கீரைப்பாலை ஜீவந்தி                               12.500       “
32.          அதிமதுரம் யஷ்டீ                                    12.500       “
                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும். ஆறியபின் அதில் பொடித்துச் சலித்த சர்க்கரை (ஸர்க்கர) 400 கிராம், தேன் (மது) 800 கிராம் இவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: 




 நீர்ச்சுருக்கு (மூத்திரக்கிரிச்சர), நீர்த்தாரை அழற்சி போன்ற சிறுநீர் தொடர்பான நோய்கள், உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப் போக்கு (ரத்த பித்தம்), பெரும்பாடு (அஸ்ரிக்தர), வெள்ளை (ஸ்வேத ப்ரதர), கருப்பை எனப்படும் கருப்பாயஸக் கோளாறுகள் (யோனிதோஷம்).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. பெண்களின் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் சம்பந்தமான பிரச்சனைகளை இந்த மருந்து எளிதாக தீர்க்கும்
  2. மோக உணர்வு ,லிபைடோ -செக்ஸ் ஆசை இல்லாத பெண்களுக்கு இந்த மருந்து நல்ல வரம்
  3. மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு இயற்கையான ஹார்மோன் ரீ பிளேஸ் மென்ட் தெரபி ஆக இந்த மருந்தை உபயோக படுத்தலாம் ..
  4. பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் தரும் ..தாய்பால் சுரக்க உதவும்
  5. மாத விலக்கு வந்து பதினான்கு நாட்கள் கழித்து (கருமுட்டை  வெடித்த பின் ) இந்த மருந்தை சாப்பிட்டு வர காரணம் தெரியாமல் கரு வளர்ச்சியினை ,கரு பிடிப்பதில் உள்ள கோளாறுகளுக்கும் ,குழந்தை இன்மைக்கும் உதவும் (ப்ர்ஜச்டீறான் வேலையை ஒழுங்கு படுத்தும் )
  6. ஆண்களின் பெண்களின் மேக வெட்டை நோய்க்கும் பயன் படுத்தலாம்
  7. ஆண்களும் தாரளமாக சாப்பிடலாம் 
  8. பார்த்தோலின் சுரப்பி சரிவர வேலை செய்யாமல் ,பெண் உறுப்பு வழ வழப்பின்மைக்கும் இந்த மருந்து வேலை செய்யும்

Post Comment

திங்கள், செப்டம்பர் 12, 2011

குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis


குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis-பலஸர்பிஸ்
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் உத்தர ஸ்தானம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல        3.200 லிட்டர்
2.            பசுவின் பால் கோக்ஷீர     3.200 கிலோ கிராம்
3.            பசுவின் நெய் க்ருத        0.800        

இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்

1.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                      12.500 கிராம்
2.            கோஷ்டம் கோஷ்ட                             12.500      
3.            கிரந்தி தகரம் தகர                              12.500      
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       12.500      
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     12.500      
6.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 12.500      
7.            சர்க்கரை ஸர்க்கர                               12.500      
8.            வசம்பு வச்சா                                  12.500      
9.            மஞ்சள் ஹரீத்ரா                               12.500      
10.          மரமஞ்சள் தாருஹரீத்ரா                        12.500      
11.          அதிமதுரம் யஷ்டீ                              12.500      
12.          மேதா மேதா                                   12.500      
13.          ஓமம் அஜமோதா                               12.500      
14.          கடுகரோஹிணீ கடுகீ                      12.500      
15.          கீரைப்பாலை ஜீவந்தி                      12.500      
16.          பெருங்காயம் ஹிங்கு                      12.500      
17.          காகோலீ காகோலீ                              12.500      
18.          அமுக்கிராக்கிழங்கு அஸ்வகந்தா                 12.500      
19.          தண்ணீர் விட்டான் கிழங்கு ஸதாவரீ             12.500      

                இவைகளைச் சர்க்கரை, பெருங்காயம் நீங்கலாக அரைத்துக் கல்கமாகக் கலக்கவும். பெருங்காயத்தைப் பொரித்துப் பொடித்துச் சேர்க்கவும். பின்னர் கலவையைக் காய்ச்சி மத்யம பதத்தில் இறக்கி வடிக்கட்டவும். ஆறியபின் சர்க்கரையைப் பொடித்துக் கலக்கவும்.

குறிப்பு:     

நெய்க்கு சமம் பாலும், 25 கிராம் சர்க்கரையும் சேர்ப்பது சம்பிரதாயம்.
புஷ்ய நக்ஷத்திரங்களில் இதைத் தயாரிக்க வேண்டும் என்று நூல் கூறுகிறது.

இதை பலக்ருதம்என்றும் அழைப்பர்.

அளவும் அனுபானமும்:    



5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: குழந்தைகளின் வளர்ச்சியின்மை, குழந்தைகளை ஸ்கந்தக்ரஹம் பீடித்தல் (பாலக்ரஹ), போன்ற குழந்தைகளின் நோய்கள் (பாலரோக), விந்துக் கோளாறுகள் (சுக்ர தோஷ (அ) சுக்ர விகார), ஆண்மைக் குறைவு, கருப்பை நோய்கள் எனும் கருப்பாயஸ ரோக (யோனி விகார), மலட்டுத் தன்மை (வந்த்யத்வ), கர்ப்பிணி நோய்கள் (கர்ப்பிணி ரோக), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), சூதகக்கட்டு (நஷ்டார்த்வ).

                
தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. காரணம் தெரியாத மலட்டு தன்மைக்கு -குறிப்பாக பெண்களின் உள்ள காரணம் தெரியாத குழந்தை இன்மைக்கு இந்த மருந்து மிக சிறந்த மருந்து
  2. எனது அனுபவத்தில் ..கரு முட்டை வெடிப்பதில் உள்ள பிரச்சனை,கருப்பை சுவர் தடிமன்  (என்டோமெட்ரியம் தடிப்பு ),கரு முட்டை வளர்ச்சி இன்மை போன்ற விஷயங்களால் ஏற்படும் குழந்தை இல்லாத குறைக்கு -தக்க துணை மருந்தோடு கொடுக்க -ஆறு மாதத்தில் நல்ல பலன் தரும் ..
  3. பலம் (phala )என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு கருமுட்டை என்றும் பொருள்

Post Comment