பசியின்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பசியின்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 03, 2012

சளி இருமலுக்கு உதவும் -வியோஷாதி குடிகா


சளி இருமலுக்கு உதவும் -வியோஷாதி குடிகா
  (ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்ட)
தேவையான மருந்துகள்:
1.            திரிகடு (வகைக்கு) திரிகடு                   12.5 கிராம்
2.            சீமைக் கொடுக்காய்ப்புளி ஆம்லவேதஸ     12.5        “
3.            செவ்வியம் சவ்ய                          12.5        “
4.            தாளிச பத்திரி தாளீச                       12.5        “
5.            கொடிவேலிவேர் சித்ரகமூல                12.5        “
6.            சீரகம் ஜீரக                                12.5        “
7.            புளி திந்திரிணீ                            12.5        “
8.            ஏலக்காய் ஏலா                          3.25        “
9.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்          3.25        “
10.          சிறுநாகப்பூ நாககேஸர                    3.25        “
11.          வெல்லம் குட                          250         “
செய்முறை: 
   
 இவைகளைப் பொடித்து சலித்து முறைப்படி ரவைகளாக்கி பதத்தில் 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாகச் செய்யவும்.
அளவு:          

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை.
தீரும் நோய்கள்: இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (காஸஸ்வாஸ), பீனிசம் (பீனஸ), நாட்பட்ட மூக்கழற்சி.



தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. அடிக்கடி சளி பிடிப்பவர்களுக்கு ஆன்டி பயாடிக் போல உதவும் ..
  2. தொண்டை வலிக்கு -தொண்டை அழற்சிக்கு இந்த மருந்தை உபயோகிக்கலாம்
  3. வ்யோஷம் என்றால் திரிகடு என்று பொருள்
  4. கொடுவேலி இருப்பதால் மருந்தின் வீர்யம் ஆங்கில மருந்துக்கு இணையாக வேலை செய்யும்
  5. டான்சிலைட்டீசுக்கு -ஹோமியோ நல்ல மருந்தான பெல்லடோனா ,பெரைட்டா கார்ப்  போன்ற மருந்தோடு தர நல்ல பலன் தெரிகிறது

Post Comment

வியாழன், ஜூன் 23, 2011

பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )-செய்வது எப்படி ?


பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )
 (ref-வைத்யசிந்தாமணி - அருசிப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

வெல்லம் குட                         2.725 கிராம்
 
            
இதைப் பாகு செய்து வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகத்தில்

பசுவின் நெய் (க்ருத) 454 கிராம் சேர்த்து அத்துடன்

1.            தோல் நீக்கித் துண்டாக்கிய பின் பச்சையாக 2.520 கிலோ கிராம் அளவுக்கு எடை நின்றதும், பின்னர் வெய்யிலில் காயவைத்து நெய்யில் வறுக்கப்பட்டதுமான இஞ்சி

2.            மிளகு மரீச்ச                  - 150 கிராம்
3.            திப்பிலி பிப்பலீ                    - 106   
4.            மோடி பிப்பலிமூல              - 106   
5.            சுக்கு சுந்தீ                        - 66      
6.            ஜாதிக்காய் ஜாதீபல             - 66      
7.            ஏலக்காய் ஏலா                 - 66      
8.            கொடிவேலி வேர் சித்ரக         - 66      
9.            மூங்கிலுப்பு வம்ஸலோசன      - 66      

                இவைகளைப் பொடித்துச் சலித்துச் சூரணத்தைக் கலந்து தேன் (மது) 360 கிராம் சேர்த்து பத்திரப் படுத்தவும்.

அளவு:         
 2 முதல் 5 கிராம் வரை இரண்டு வேளைகள்.

தீரும் நோய்கள்:           

செரியாமை (அக்னி மாந்த்ய) (அ) அஜீர்ண), ருசியின்மை (அருசி), உணவில் விருப்பமின்மை (அரோசக); அதிகரித்த பித்தக் கோளாறுகள் (அமலபித்த), மகவீன்ற பெண் மணிகள் (ப்ரஸித்த ஸ்திரீகள்) தொடர்ந்து உண்ணும் லேகியமாக இதனை உபயோகிக்கலாம்.

தெரிந்து கொள்ள வேண்டிவை
  1. இது சித்த மருத்துவத்தில் தயாரிக்கபடும் இஞ்சி லேஹியத்திர்க்கு ஒப்பானதே தவிர -சித்த மருத்துவத்தில் செய்யப்படும் இஞ்சி லேஹியத்தின் பார்முலா வேறு (அதை சித்த மருத்துவ தயாரிப்பில் சொல்கிறேன் )
  2. தீபாவளி லேஹியம் என்று -இதற்க்கு வேறு பெயர் சூட்டி -மார்க்கெட்டில் கடை வைப்பவர்கள் ஏராளம் ..நீங்களும் செய்து விற்கலாம்
  3. இந்த மருந்தை தயாரிக்கும் கம்பெனிகள் குறைவு
  4. நாமே எளிதாக தயாரிக்கலாம்

Post Comment

புதன், ஜூன் 15, 2011

வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் - பில்வாதி லேஹ்யம்



வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் - பில்வாதி லேஹ்யம்
  (ref-ஹைஸ்ரயோகம் - லேஹ்யப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            வில்வவேர் பில்வமூல    1.280 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல               5.120  லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 1.280 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதில் பழைய வெல்லம் (புராணகுட) 640 கிராம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகு வரும்போது,

1.            கோரைக்கிழங்கு முஸ்தா                  10 கிராம்
2.            கொத்தமல்லி விதை தான்யக              10                        
3.            சீரகம் ஜீரக                                 10          
4.            ஏலக்காய் ஏலா                            10          
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்             10          
6.            சிறுநாகப்பூ - நாககேஸர                     10          
7.            சுக்கு சுந்தீ                                 10          
8.            மிளகு மரீச்ச                             10          
9.            திப்பிலி பிப்பலீ                           10          

இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தைச் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்.

அளவு:     
 2 முதல் 5 கிராம் வரை இரு வேளைகள்.

  தீரும் நோய்கள்:          



 வாந்தி (சர்தி), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அ) உணவில் விருப்பமின்மை (அருசி (அ) அரோசக), பித்தம் அதிகரித்து அதிக உமிழ் நீர் சுரத்தல் (ப்ரஸேக) போன்ற பலவித பித்த நோய்கள் மற்றும் கழிச்சல் (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சீதபேதி (ரக்தாதிஸார) போன்ற பலவித வயிற்றுப் போக்குகள்.


Post Comment

செவ்வாய், ஜூன் 14, 2011

ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்


ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்
 (ref-சரகசம்ஹிதா காஸ சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:







1.            வில்வவேர் பில்வமூல                    100 கிராம்
2.            முன்னைவேர் அக்னிமாந்த                 100        
3.            பெருவாகை வேர் ஸ்யோனாக              100        
4.            குமிழ்வேர் காஷ்மரீ                       100        
5.            பாதிரி வேர் பாட்டால                      100        
6.            மூவிலை சாலிபர்ணீ                       100        
7.            ஓரிலை ப்ரிஸ்னிபர்ணீ                     100        
8.            கண்டங்கத்திரி கண்டகாரீ                  100        
9.            முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ                 100        
10.          நெருஞ்சில் கோக்ஷூர                     100        
11.          பூனைக்காலி வேர் ஆத்ம குப்தாமூல        100        
12.          காக்கரட்டான் வேர் சங்க புஷ்பீமூல         100        
13.          கிச்சிலிக் கிழங்கு ஸட்டீ                   100        
14.          சித்தாமுட்டிவேர் பலாமூல                 100        
15.          யானைத் திப்பிலி கஜ பிப்பலீ              100        
16.          நாயுருவி வேர் அபமார்கமூல               100        
17.          மோடி பிப்பலீமூல                         100        
18.          கொடிவேலி வேர் சித்ர மூல               100        
19.          கண்டு பாரங்கி பார்ங்கீ                     100        
20.          புஷ்கர மூலம் கோஷ்ட                    100        
21.          நன்கு முதிர்ந்த கடுக்காய் ஹரிதகீ         100 எண்ணிக்கைகள்
22.          யவை அரிசி யவா                       3.200 கி.கிராம்
23.          தண்ணீர் ஜல                           16.000 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து யவை அரிசி வெந்தவுடன் வடிகட்டவும். அவ்விதம் வடிகட்டிய கஷாயத்தில் 5.000 கிலோ கிராம் வெல்லம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வெல்லம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி அதில் முன்பு கஷாயத்தில் வெந்த 100 கடுக்காய்களை சேர்த்துக் கொதிக்க வைத்துப் பாகத்தில்

1.     பசுவின் நெய் க்ருத                                     200 கிராம்
2.     நல்லெண்ணெய் திலதைல                               200        
3.     வறுத்துப் பொடித்துச் சலித்த திப்பிலி பிப்பலீ சூர்ண         200        

                                இவைகளை முறையே சேர்த்துக் கிளறி ஆறிய பின்னர் தேன் (மது) 200 கிராம் சேர்த்துப் பத்திரப்படுத்தவும்.

ஆனால் சம்பிரதாயத்தில்
                கஷாயச் சரக்குகள் (யவை அரிசி தவிர)    2.000 கி.கி
                தண்ணீர்                                  16.000 லிட்டர்


                இவைகளுடன் 100 கடுக்காய்களையும் மூட்டையாகக் கட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து 4.000 லிட்டர் ஆகக் குறுக்கிக் கஷாயம் வடிகட்டப்படுகிறது.

                வெந்த கடுக்காய்கள், மூட்டையில் இருந்து எடுக்கப் பட்டுக் கொட்டைகள் நீக்கப்படுகின்றன. பின்னர் அவைகளை ஆட்டுக்கல்லில் நன்கு அறைத்து விழுதாக்கி துணியின் வழியே தேய்த்து (வஸ்திரகாளனம்) நார் முதலியன நீக்கப்படுகின்றன.

                பின்னர் மேலே குறிப்பிட்ட

1.            வடிக்கட்டிய கஷாயம்            4.000 லிட்டர்
2.            வெல்லம் குட                5.000 கி.கிராம்
இவைகளைச் சிறிது சூடாக்கி வடிகட்டி அத்துடன் முன்பு சித்தமாக்கிய கடுக்காய் விழுது நன்கு கலக்கப்படுகிறது. அக்கலவையுடன் தனியாக 4 பங்கு தண்ணீரில் யவம் நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டித் தயார் செய்யப்பட்ட யவை அரிசி கஷாயமும் சேர்க்கப்பட்டுக் கொதிக்க வைக்கப்படுகிறது. பின்னர் பாகத்தில் முன் கூறியபடி நெய் முதலியன சேர்க்கப்பட்டு பத்திரப் படுத்தப்படுகிறது.

                சிலர் கஷாயத்தில் வெந்த கடுக்காயைக் கொட்டை நீக்கி வெய்யிலில் வைத்துக் காய்ந்த பின் பொடித்துச் சலித்துப் பாகுடன் சேர்ப்பர்.

குறிப்பு:     

இதற்கு அகஸ்திய ஹரீதகீஎன்றும், “அகஸ்த்ய ஹரீதகீரஸாயனஎன்றும் பெயருண்டு.


அளவும் அனுபானமும்:     

 1 முதல் 2 கடுக்காய் வரை ஒரு டீஸ்பூன் லேஹ்யத்துடன் இரு வேளைகள் (அ) 6-12 கிராம் லேஹ்யம் 2-3 வேளைகள் பால் அல்லது வெந்நீருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  



இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (ஸ்வாஸகாஸ), பீனசம் (பீனஸ), விக்கல் (ஹிக்க), நச்சுக்காய்ச்சல் (விஷமஜ்வர), பலக்குறைவு (க்ஷய), குன்மம் (குல்ம), நாட்பட்ட பெருங்கழிச்சல் (கிராணி). இது ஒரு ரஸாயனமாகக் கருதப்படுகிறது.

தெரிந்து  கொள்ள வேண்டியவை
  1. ஆஸ்த்மாவிற்கு இந்த லேஹியத்துடன் தஷமூலகடுத்ரயாதி கஷாயம் ,நாயோபாயம் கஷாயம் ,வ்யோஷதி வடகம் போன்ற மருந்துகளோடு எடுத்து கொள்ள நிரந்தர தீர்வை தரும்
  2. நோய் எதிர்ப்பு சக்தி பெருகிட -தொடர்ந்து சாப்பிட்டால் -சளி தொந்தரவுகள் விட்டொழிந்து போகும்
  3. அகஸ்த்ய ரசாயனம் -இருமலை  சரி செய்யும்


Post Comment