திங்கள், அக்டோபர் 31, 2011

வீக்கமுள்ள மூட்டுக்கு -ஆமவாத தைலம்


வீக்கமுள்ள மூட்டுக்கு -ஆமவாத தைலம்  
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல                      3.6 லிட்டர்
2.            தயிர்த்தெளிவு ததிமஸ்து             1.800 கிலோ கிராம்
3.            புளியிலைச் சாறு திந்திரிணி பத்ரரஸ 1.800                     “
4.            நல்லெண்ணெய் திலதைல            0.900                     “


இவைகளை ஒன்று கலந்து அதில்


1.            கோஷ்டம் கோஷ்ட                  12.500 கிராம்
2.            சுக்கு சுந்தீ                           12.500        “
3.            வசம்பு வச்சா                        12.500        “
4.            முருங்கப்பட்டை சிக்ருத்வக்          12.500        “
5.            பூண்டு லசுன                        12.500        “
6.            கார்த்தோட்டி வேர் ஆதொண்டன்      12.500        “
7.            தேவதாரு தேவதாரு                 12.500        “
8.            கடுகு ஸ்வேதஸர்ஸப                12.500        “
9.            சித்தரத்தை ராஸ்னா                 12.500        “ 

இவைகளை அரைத்துக் கல்கமாகக் கலக்கிக் காய்ச்சி கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    நல்லெண்ணெய் 800 கிராம் சேர்ப்பது சம்பிரதாயம். தயிர் தெளிவு 900 கிராம், புளிய இலைச் சாறு 3.600 கிலோ கிராம் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.
 
பயன்படுத்தும் முறை: 


 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். தைலம் பூசிய பின் சூடான ஒத்தடம் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  

பொதுவாக வாத நோய்கள் (வாத ரோக), குறிப்பாக கீல்வாயு (சந்தி வாத), வீக்கங்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வீக்கமுள்ள எந்த மூட்டுக்கும் பொதுவாக எந்த தைலத்தையும் நாங்கள் தேய்க்க சொல்வதில்லை..வீக்கமுள்ள மூட்டுகளில் நிறைய தைலங்கள் வலிகளை அதிகமாக்குமே தவிர குறைக்காது ..ஆனால் வீக்கமுள்ள மூட்டில் தேய்க்க ஆமவாத தைலத்தை பயன்படுத்தலாம்
  2. ஆமவாத தைலம் -சூடு செய்து தேய்த்து பின் ஒத்தடம் கொடுக்க நல்ல பலன் ஆமவாதம் ,முடக்கு வாதத்தில் ,நீர்வாததில் நல்ல பலனை தரும்

               

Post Comment

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

உயிர் ஆற்றலை அதிகபடுத்தும் அற்புத மருந்து -விதார்யாதி க்ருதம்


உயிர் ஆற்றலை அதிகபடுத்தும் அற்புத மருந்து -விதார்யாதி க்ருதம்
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல             4.000 லிட்டர்
2.            பசுவின் நெய் க்ருத        2.000 கிலோ கிராம்
3.            பசுவின் பால் கோக்ஷீர     1.000          


இவைகளை ஒன்று கலந்து அதில்


1.            பால்முதுக்கன் கிழங்கு விடாரீ        12.500 கிராம்
2.            ஆமணக்கு வேர் எரண்டமூல          12.500      
3.            தேள் கொடுக்குப் பூண்டு வ்ருக்ஷிகாலி 12.500      
4.            மூக்கிரட்டை வேர் புனர்னவ          12.500      
5.            தேவதாரு தேவதாரு                 12.500      
6.            காட்டுளுந்து வேர் மாஷபர்ணீ         12.500      
7.            காட்டுப்பயிறுவேர் முட்கபர்ணீ         12.500      
8.            பூனைக்காலிவேர் ஆத்மகுப்தமூல       12.500      
9.            தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ   12.500      
10.          கோவைக்கிழங்கு பிம்பிமூல               12.500      
11.          கீரைப்பாலை ஜீவந்தி                  12.500      
12.          ஜீவகம் ஜீவக                        12.500      
13.          ரிஷபகம் ரிஷபக                     12.500      
14.          ஓரிலை ப்ரிஸ்னீபர்ணீ                12.500      
15.          மூவிலை சாலிபர்ணீ                 12.500      
16.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ            12.500      
17.          கண்டங்கத்திரி கண்டகாரீ             12.500      
18.          நெருஞ்சில் கோக்ஷுர                12.500      
19.          நன்னாரி ஸாரிவா                    12.500      
20.          சிறுசெருப்படை ஹம்ஸபாடி          12.500      


                இவைகளை கல்கமாக அரைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும்.


                 
அளவும் அனுபானமும்:     

 5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

                 
தீரும் நோய்கள்: 



இருமல் (காஸ), பலவீனம் (க்ஷய (அ) தாதுக்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), நெஞ்சினுள் அடிபட்டதன் விளைவாக ஏற்படும் ரத்த இருமல் (உரக்ஷத), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), மேல்மூச்சு வாங்குதல் (சின்ன ஸ்வாஸ (அ) தமகஸ்வாஸ), குன்மம் (குல்ம), உடம்புவலி (அங்கமர்த), வாயுத்தொல்லைகள்.

தெரிந்து கொள்ளவேண்டியவை
  1. ஆண்மை பெருகவும் ,வீர்யம் அதிகமாகவும் தக்க துணை மருந்தோடு பயன்படுத்தலாம்
  2. இனிப்பு சுவை ,உடலை பெருக்கும் குணம் உள்ளமையால் -பல வாத வியாதிகளுக்கும் தக்க துணை மருந்தோடு தரலாம்
  3. இளைப்பு ,மூச்சு வாங்குதலில் இந்த மருந்து நல்ல பலன் தரும்
  4. உடல் களைப்பு ,சோர்வுக்கும் -பசியின் தன்மை தெரிந்து உபயோகப்படுத்தினால் -மிக சிறந்த பலன்
  5. ஆண் பெண் -இருபாலரும் -தங்களது தாது நட்டத்திற்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்
  6. தினமும் சாபிடக்கூடிய -காய கல்ப மருந்தாக -பலஹீனமானவர்கள் ,வாத தேக வாக்குடையவர்கள் பயன்படுத்தலாம்
  7. ஓஜஸ் என்னும் உயிர் ஆற்றலை வலுப்படுத்தும் -
  8. நோய் எதிப்பு சக்தியை அதிகப்படுத்தும்
  9. நோயில்லாத ஆரோக்கிய மனிதனும் -ஆர்க்கியத்தை நிலை நாட்ட இந்த மருந்தை பயன்படுத்துவது நல்லது

               

Post Comment

சனி, அக்டோபர் 29, 2011

பித்தம் அதிகமாக உள்ள -தோல் நோய்களில் -திக்தக க்ருதம்


பித்தம் அதிகமாக உள்ள -தோல் நோய்களில் -திக்தக க்ருதம்

 (ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதபிரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பேய்ப்புடல் பட்டோல          50 கிராம்
2.            வேப்பம்பட்டை நிம்பத்வக்       50           “
3.            கடுகரோஹிணீ கடூகீ          50           “
4.            மரமஞ்சள் தாருஹரீத்ரா        50           “
5.            பாடக்கிழங்கு பாத்தா            50           “
6.            சிறுகாஞ்சூரி துராலபா           50           “
7.            பர்பாடகம் பர்பாடக             50           “
8.            பிராம்மி ப்ராஹ்மீ               50           “
9.            தண்ணீர் ஜல                  6.400     “


                இவைகளைக் கொதிக்கவைத்து 0.800 லிட்டர் ஆகக் குறுக்கிப் பசுவின் நெய் (க்ருத) 0.600 கிலோ கிராம் சேர்த்து அதில்
1.            பிராம்மி ப்ராஹ்மீ                12.500 கிராம்
2.            கோரைக்கிழங்கு முஸ்தா        12.500        “
3.            நிலவேம்பு பூநிம்ப               12.500        “
4.            வெட்பாலை அரிசி இந்த்ரயவ    12.500        “
5.            திப்பிலி பிப்பலீ                 12.500        “
6.            சந்தனம் சந்தன               12.500        “

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை சூடான பால் அல்லது வெந்நீருடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 





 அதிகமானதாகம் (த்ருஷ்ணா), பித்தக் கிறுகிறுப்பு (ப்ரம), எரிச்சல் (தாஹ), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), அக்கி (விஸர்ப்ப), ராஜபிளவை (பிடகா), பித்தகுஷ்டம் எனப்படும் உஷ்ணத்தாலேற்படும் தோல் நோய்கள், வேனல் கட்டிகள் (விஷ்போட்ட), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), கண்டமாலை (கண்டமால), புறையோடிய புண்கள் (நாடீவ்ரண), மற்றும் பலவித தோல் நோய்கள், அழற்சி நிலைகள்


தெரிந்து கொள்ளவேண்டியவை

  1. வறட்சியான தோல் நோய்களில் ,பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களில் இந்த மருந்து நல்ல வேலை செய்யும்
  2. உஷ்ணத்தை குறைக்க இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. நாள்பட்ட புண்களை ,புரையோடிய புண்களை ஆற்ற உதவும்
  4. சர்க்கரை நோயால் ஏற்படும் பாத எரிச்சலை  போக்கும் 

Post Comment

வெள்ளி, அக்டோபர் 28, 2011

பெண்களின் நோய்களுக்கு நல்ல மருந்து -ஸுகுமார க்ருதம்


நீண்ட நாளாக எழுத இயலாமைக்கு வருந்துகிறேன் ...\

போன பதிவில் -நண்பர் சக்தி மற்றும் நண்பர்கள் கேட்ட மாதிரி -வர்மம் பயிலுவது எங்கே என்பதை பற்றியும் எனக்கு வர்மம் கற்றுகொடுத்த ஆசான்கள் பற்றியும் வேறொரு பதிவில் தெளிவாக எழுதுகிறேன் ..
 

நாளை முதல் தொடர் பதிவுகளை எழுதுகிறேன் ..
பெண்களின் நோய்களுக்கு நல்ல மருந்து -ஸுகுமார க்ருதம்

(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மூக்கிரட்டைவேர் புனர்னவ மூல      5.000 கிலோ கிராம்
2.            வில்வமூலம் பில்வமூல             0.500          
3.            முன்னைவேர் அக்னிமாந்த           0.500          
4.            பெருவாகைவேர் ஸ்யோனாக         0.500          
5.            குமிழ்வேர் காஷ்மரீ                  0.500          
6.            பாதிரிவேர் பாட்டால                  0.500          
7.            மூவிலை சாலீபர்ணீ                  0.500          
8.            ஓரிலை ப்ரிஸ்னிபார்ணீ              0.500          
9.            முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ            0.500          
10.          கண்டங்கத்திரி கண்டகாரீ             0.500          
11.          நெருஞ்சில் கோக்ஷூர                0.500          
12.          கீரைப்பாலை ஜீவந்தி                 0.500          
13.          அமுக்கிராக்கிழங்கு அஸ்வகந்தா      0.500          
14.          ஆமணக்குவேர் எரண்டமூல          0.500          
15.          தண்ணீர் விட்டான் கிழங்கு ஸதாவரீ  0.500          
16.          தர்பைவேர் தர்பா                     0.500          
17.          ஆற்றுதர்பைவேர்                     0.500          
18.          அமவேர் காண இக்க்ஷூமூல         0.500          
19.          குசவேர் குசமூல                     0.500          
20.          கரும்பின்வேர் இக்க்ஷூமூல          0.500          
21.          கொட்டைக்கரந்தை ஹப்புஸ          0.500          
22.          தண்ணீர் ஜல                      51.200 லிட்டர்

                இவைகளை நன்கு கொதிக்கவைத்து 6.400 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டிய கஷாயத்தில்

1.            வெல்லம் குட                            1.500 கிலோ கிராம்
2.            ஆமணக்கெண்ணெய் எரண்டதைல          0.800                    
3.            பசுவின் நெய் க்ருத                     1.600                    
4.            பசுவின் பால் கோக்ஷீர                   1.600                    

                இவைகளை கலந்து அக்கலவையில்
1.            திப்பிலி பிப்பலீ                  100 கிராம்
2.            மோடி பிப்பலீ மூல               100     
3.            இந்துப்பு ஸைந்தவலவண       100        
4.            அதிமதுரம் யஷ்டீ              100        
5.            திராக்ஷை த்ராக்ஷா             100        
6.            ஓமம் அஜமோதா               100        
7.            சுக்கு சுந்தீ                     100        

                இவைகளை கல்கமாக அரைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும். 

அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 



 நாட்பட்ட மலச்சிக்கல் (புராண விபந்த), மூலம் (அர்ஸஸ்), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), பலவீனம் (தௌர்பல்ய), வாயு உபத்திரவம், குன்மம் (குல்ம),சூலை (சூல), குடலிறக்கம், வயிற்றுவலி (உதர சூல), மண்ணீரல் நோய்கள் (ப்லீஹரோக), வீக்கம் (விக்ரதி, ஸோப), கருப்பை/ பிறப்புறுப்புக் கோளாறுகள் (ஜனனேந்திரிய ரோக).
                பிரஸவ காலத்திற்கு சில மாதங்கள் முன்னதாகவே இந்த மருந்தைத் தொடர்ச்சியாக உபயோகிப்பது பிரஸவத்தை எளிதாக்குகிறது

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. சுகுமார கிருதம் -பெண்களுக்கு ஏற்படும் பெரும்பானையான நோய்கள் -கர்ப்பப்பை சார்ந்த நோய்களுக்கு  சிறந்த மருந்து
  2. எங்கெல்லாம் -வாதத்தை கீழ் நோக்கி தள்ளி -நோய்களை குணப்படுத்த இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..
  3. அபான வாயுவை சரி செய்ய -இந்த மருந்து -வாத பித்த நோய்களுக்கும் சிறந்த மருந்து
  4. குழந்தை இல்லாத பெண்களுக்கு சிநேக பானம் என்னும் -எண்ணை( நெய் ) குடிக்கும் சிகிசையில் இந்த மருந்தை ஐம்பது மிலியில் ஆரம்பித்து -படிபடியாக இருநூறு மிலி வரை குடிக்க வைத்து -பின் வாந்தி சிகிச்சை என்னும் பஞ்ச கர்ம சிகிச்சை செய்ய இந்த மருந்து நல்ல மருந்து ..
  5. சுக பிரசவத்திற்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்
     

Post Comment