சனி, அக்டோபர் 27, 2012

நில வேம்பு குடிநீர் -கஷாய சூர்ணம் இலவசம்

 தமிழ் நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்குவை தடுக்க ..தமிழக அரசு எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கி கொண்டு  வருகிறது ..
அக்டோபர் இருபத்து ஆறு அன்று தமிழக செய்தி குறிப்பு இது 

(இந்திய  மருத்துவத்தில், "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் ஆற்றல் கொண்ட நிலவேம்புக் குடிநீர், தமிழகத்திலுள்ள, வட்ட, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் விஜய் தெரிவித்தார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், தமிழகத்தில் பரவி வரும் "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் நோக்கில், சித்த மருத்துவத்தில், "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் ஆற்றல் கொண்ட, நிலவேம்புக் குடிநீரை, சென்னை, அரும்பாக்கம், இந்திய அரசினர் இந்திய மருத்துவமனை புறநோயாளிகளுக்கு வழங்கும் விழா, நேற்று மாலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர், இராமநாதன் சென்னை மாநகராட்சி மேயர், சைதை துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், தமிழக சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் விஜய் பங்கேற்று, நிலவேம்புக் குடிநீரை அருந்தி, பிறகு நோயாளிகளுக்கு வழங்கினார்.

விழாவில், அமைச்சர் விஜய் பேசியதாவது: "டெங்கு' காய்ச்சல் உள்ளிட்ட எந்த வைரஸ் காய்ச்சலுக்கும் தனியான சிகிச்சை கிடையாது. அவை தானாக சரியாகுபவை. "டெங்கு' காய்ச்சலை, நிலவேம்புக் குடிநீர் ஓரளவு குறைக்கும் ஆற்றல் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள நிலவேம்பு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. எனவே நிலவேம்புக் குடிநீரை அருந்துவதன் மூலம், "டெங்கு'வை தடுக்கலாம். இந்நீரை அருந்துவதால் பக்க விளைவுகள் கிடையாது, ஆங்கில மருந்துகளோடு, இதனை அருந்தலாம். நிலவேம்புக் குடிநீர் தமிழகத்திலுள்ள வட்ட, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

நிலவேம்புக் குடிநீர் குறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் இராமநாதன் மற்றும் இணை இயக்குனர் அப்துல்காதர் ஆகியோர் தெரிவித்ததாவது: நோய் கிருமியை எதிர்க்கும் குணம் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் நிலவேம்பு, காய்ச்சலின் போது ஏற்படும் தலைவலி, நீர் பாரத்தை அகற்றக் கூடிய மிளகு, செரிமானப் பிரச்னையை சரி செய்யக் கூடிய சுக்கு, சிறுநீர் பிரச்னை சரி செய்யும் சந்தனம், வாய் கசப்பை போக்கி, நீர்ச்சத்தை அளிக்கும் வெட்டி வேர், உடல் வெப்பத்தை அகற்றி, குளிர்ச்சியை அளிக்கும் பற்படாகம், பேய்ப்புடல், விளாமிச்சை வேர், வயிற்று வலியை போக்கும் கோரைக் கிழங்கு ஆகிய, ஒன்பது மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான், நிலவேம்புக் குடிநீர். காய்ச்சல் உள்ளவர்களும், காய்ச்சல் இல்லாதவர்கள் என, அனைவரும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். இந்த குடிநீரை அருந்தினால், "டெங்கு' காய்ச்சல் நம்மை நெருங்காது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.)


டெங்கு காய்ச்சல் பற்றிய -இந்திய மருத்துவம் கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

நில வேம்பு குடிநீரை நாமே எப்படி தயாரிப்பது எப்படி என்ற கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும்  ..

நிறைய நண்பர்கள் என்னிடம் நில வேம்பு குடிநீர் எங்கே தனியாக கிடைக்கும் என்று கேட்கிறார்கள் ...
இப்போது அரசே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்திய மருத்துவ பிரிவிலும் இலவசமாக கிடைக்கும் என்பது மிக்க மகிழ்ச்சியான செய்திதான் ..

 

தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் இலவசமாக அனுப்பி தர -இலவச சேவை செய்ய உள்ளோம்...


என்றாலும் ...என்னால் முடிந்த உதவியாக தமிழ் நாடு முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் ..வராமல் தடுக்கவும்
நில வேம்பு குடிநீர் ( ஐம்பது கிராம் முதல் -நூறு கிராம் வரை ) இலவசமாக அனுப்பித்தர நினைத்துள்ளோம் ..

உங்களுக்கு நில வேம்பு குடிநீர் சூர்ணம் இலவசமாக வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது இவைகள்
  1. உங்களுக்கு நில வேம்பு குடிநீர் வேண்டும் என்இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் இட வேண்டும்
  2. உங்கள் விலாசம்  இ மெயில் முகவரி ,தொலை பேசி எண் போன்ற விவரங்களை எனது இ மெயில் முகவரி curesure4u@gmail.com -அனுப்ப வேண்டும்
  3. நில வேம்பு குடிநீர் கஷாய சூர்ணம் இலவசமாக பெறலாம்
      .போஸ்டல் செலவு -கூரியர் செலவு மற்றும் மருந்தை அனுப்பும் செலவுகள்  மட்டும் ரூபாய் இருபத்தைந்து மட்டும் எங்களது விலாசத்திற்கு அனுப்பி தந்தால் ( மணி ஆர்டர் அல்லது -இ மணி பரிமாற்றம் மூலம் ) எங்களால் அனுப்பி தர இயலும் ..
  4. மணி ஆர்டர் அனுப்ப நீங்கள் எனது விலாசம் அல்- ஷிபா ஆயுர்வேத ஹோமியோ கிளினிக் -36/22-பீர் முஹம்மது தைக்கா தெரு கடையநல்லூர் ,தென்காசி வட்டம் ,திருநெல்வேலி மாவட்டம் -627 751-
  5. இந்த சேவையில் பங்கேற்க விரும்பும் வசதி படைத்தவர்களும் என்னை தொடர்பு கொள்ளலாம் ..
  6. மேலும் இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் ,வலை தல நண்பர்களுக்கும் பகிர்ந்தும் சேவை புரியுங்கள்

Post Comment

ஞாயிறு, அக்டோபர் 14, 2012

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் ..

சர்க்கரை இல்லாமல் இப்போது எந்த உணவுமே இல்லை ...சர்க்கரை சேராமல் பல மருந்துகளில் சிரப்புகள் செய்ய முடியாது ..மருந்துகள் கூட இல்லை என்ற நிலை உள்ளது ...
இந்த சர்க்கரை உடலுக்கு நல்லது தானா ?
வெள்ளை சர்க்கரை இந்த அளவுக்கு உடலுக்கு கேடு ?...

சரி இந்த சர்க்கரை எப்படி தயாரிக்கபடுகிறது ?...


கரும்பில் இருந்து பிழியப்பட்ட சாறுடன் எழு நிலைகளில் பல்வேறு வேதி பொருட்கள் ,அமிலங்கள் பயன்படுத்தப்பட்டு பின்னரே சர்க்கரை உருவாக்கபடுகிறது ...

அம்மோனியா  பை புளுயிடு பாக்டீரியா , பாஸ்போரிக் அமிலம் ,சுண்ணாம்பு நீர் , சல்பர் டை ஆக்சைட் ,பாலி எலக்ட்ரோலைட் ,காஸ்டிக் சோடா ,சலவை சோடா ,சோடியம் ஹைட்ரோ சல்பேட் ..இவ்வாறு எழு நிலைகளில் கரம்பு சாறுடன் வினி புரிகின்ற இந்த நச்சு பொருகள் யாவும் இறுதியில் கழிவாகி  போய் விடுமா ?...என்றால் இல்லவே இல்லை ...

சல்பர் டை ஆக்சைட் ஆர்சனிக் என்று பொருளும் சர்க்கரையுடன் தங்கி விடுகிறது ..அது மட்டுமல்ல வெள்ளை ஆக்க பயன்படுத்தபடும் ப்ளீசிங் வேளையில் சாக்பவுடர், கார்போனிக் வாயு, சல்பர் டையாக்சைட், ஸ்ட்ரோடையம், ஹைட்ராக் சைட், சல்ஃப்யூரிக் ஆசிட் போன்ற பல விதமான ரசாயன பொருட்களின் மீது சர்க்கரை திரவம் உரசிக் கொண்டு போகும் போதுதான், அது ‘பளிச்’சென வெண்மையாகிறது





பாஸ்போரிக் அமிலத்தின் பக்க விளைவு
பல்லின் எனாமல் அரித்தது விடும்'
எலும்பு சீக்கிரம் தேய்வு அடையும் ..
சீக்கிரம் முகத்தில் முதுமை வரும் ...தோல் சுருங்கும்
காஸ்டிக் சோடா பக்க விளைவு
துணி துவைக்கவும் பயன்படும் இந்த வேதிப்பொருள் ..கெமிக்கல் பர்ன் என்னும் எரிச்சலை கொடுக்கும் ...

 செரிமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வயிறில் புண்ணை அல்சரை ,ஜீரண சக்தியை கெடுக்கும் ..வாய்வை உண்டு செய்யும்
 மேலும் பொதுவாக வெள்ளையாக்க பயன்படும் வேதிபோருட்களும் ,சர்க்கரையில் பொதுவாக சேரும் வேதிபோருட்களும் ...


 செரிமான நொதி பொருட்களின் தன்மையை மாற்றி வளர் சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் .
இதனால் செரியாமை ஏற்படும் ..பசி மந்தபடும்

வயிறு பானை போல் வீங்கும்
உடல் தேவைக்கு அதிகமாக குண்டாகும்..
அடிக்கடி சர்க்கரை அளவில் மாறுபாடு உண்டாகி மயக்கம் உண்டாகும்..
வளர் சிதை மாற்றம் உண்டாகும் ..ஹார்மோன் கோளாறுகள் உண்டாகும் ..தைராய்ட் நோய் உண்டாகும் , குழந்தை இன்மைக்கும் காரணமாகும் ,சர்க்கரை நோய் வரும் ..சத்துக்களை உறிஞ்சும் குடல் உறிஞ்சுகள் செயல் இழக்கும் ..மொத்தத்தில் நடை பிணமாக வாழ நேரும்



பல்வேறு  ஆராய்ச்சியாளர்கள் ..பல்வேறு ஆராய்ச்சியின் முடிவாக ..தெளிவாக எடுத்து கூறும் உண்மை இது ...இதை பற்றி ஆராய்ச்சிகள் பற்றி தேவை விவரங்கள் அறிய விரும்புவோர் ..என்னை தொடர்பு கொள்ளலாம் ..இ மெயிலில் தகவல்கள் அனுப்பி தரப்படும் ...

நாம் செய்யவேண்டியவை ....
  1. குழந்தைகளுக்கு சாக்லேட் என்ற பெயரில் இந்த விஷத்தையும் வாங்கி தர வேண்டாம் ..
  2. அரு சுவை உணவில் மற்ற சுவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...
  3. வெள்ளை சர்க்கரைக்கு பதில் ..பனை வெல்லம் ,கருப்பட்டி ,கரும்பு வெல்லம் ,பனங்கற்கண்டு பயன்படுத்துவது நல்லது ..
  4. தேநீரால் நாம் வெள்ளையனுக்கு அடிமையானோம் ...வெள்ளை சர்க்கரையால் இப்போது வெள்ளையன் மருத்துவத்துக்கு அடிமையாவோம் என்பதை மனதில் கொண்டு ...நோயில்லாமல் காப்பதே இந்திய மருத்துவத்தின் கடமை என்பதை சொல்லும் விதமாக ..சர்க்கரை தவிர் ...நோயின்றி வாழ் என்று சொல்வோம் ..
  5. நான் எனது வீட்டில் இப்போது சுத்தமான தேனை இனிப்புக்காக சேர்க்கிறோம் என்பதை தெரிவித்தவனாக ...

Post Comment

செவ்வாய், அக்டோபர் 02, 2012

சர்வ ரோக நிவாரணி -தான்வந்தரம் குடிகா-Dhanwantaram Gutika


வாயுக்களை ஒழுங்கு செய்யும் சர்வ ரோக நிவாரணி -தான்வந்தரம் குடிகா-
தான்வந்த்ர குடிகா-Dhanwantaram Gutika
(ref-ஸர்வரோக சிகித்ஸாரத்னம் சுவாஸ, ஹித்மாப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:



1.            ஏலக்காய் (தோல் நீக்கிய அரிசி) ஏல               10 கிராம்
2.            சுக்கு சுந்தீ                                         10          
3.            கடுக்காய் (தோல் நீக்கியது) ஹரீதகீ பலத்வக்      10          
4.            ஜாதிக்காய் ஜாதீபல                               10          
5.            முள்ளுக்கத்திரி வேர் ப்ருஹத்தீ                    10          
6.            ஆசாளி விதை அதஸீபீஜ                         10          
7.            சீரகம் ஜீரக                                      10          
8.            வால் மிளகு கங்கோல                           10          
9.            நிலவேம்பு பூநிம்ப                               10          
10.          ருத்ராக்ஷம் ருத்ராக்ஷ                           10          
11.          தேவதாரு தேவதாரு                            10          

இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம்

12.          கண்டி வெண்ணெய் (பொடித்த்து) கண்டிவெண்ண
இவற்றைக் கல்வத்திலிட்டு ஜீரகக் கஷாயம் விட்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில்

13.          பொடித்துச் சலித்த பச்சைக் கற்பூரம் –     கற்பூர       10 கிராம்
14.          இளஞ்சூட்டில் உருக்கி வடிக்கட்டிய  
புனுகு கந்தமார்ஜர வீர்ய                                  10          


                இவற்றையும் சேர்த்து நன்கு கலக்கி அரைத்து 50 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர வைத்துப் பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    

 கண்டி வெண்ணெய்யைப்பற்றி பலவிதமான அபிப்பிராய பேதங்கள் நிலவுவதால் ருமிமஸ்தகி என்ற பூனைக்கண் குங்கிலியம் சேர்ப்பது சம்பிரதாயம்
                 
அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது ஜீரக கஷாயத்துடன் இரண்டு முதல் நான்கு வேளைகள். சிலர் பலாச பத்ரம், பூநிம்பம், ஜீரக கஷாயத்துடன் தருவர்.

தீரும் நோய்கள்:  




இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), விக்கல் (ஹிக்க), வாந்தி (சர்தி), மார்வலி (ஹ்ருச் சூல), காய்ச்சல் (ஜ்வர), இருதய பலவீனம் (ஹ்ருத்தௌர்பல்ய), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக) வாயு உபத்திரவங்கள், இதயத்திற்கு வலுவூட்டக் கூடியது
.
                குழந்தைகளுக்கு உண்டாகும், மேற்கூறிய வியாதிகளில் இது விசேஷமாக உபயோகிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வர பிரஸவம் எளிதாகும்.


தெரிந்து கொள்ள வேண்டியது ..
  1. எனது கிளினிக்கில் அதிகம் நான் உபயோகிக்கும் மருந்துகளில் மிக மிக முக்கியமானது இந்த மருந்து என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் ..
  2. ஆயுர்வேதத்தில் பொதுவாக தான்வந்தரம் என்று தன்வந்தரியின் பெயர் தாங்கும் அனைத்து மருந்துகளும் மிக மிக முக்கியமானவை ..
  3. உடம்பில் உள்ள தச வாயுக்களில் (ஆயுர்வேத சாஸ்திரங்கள் பஞ்ச வாயுக்கள் என்று சொல்கின்றன ) எந்த தடையை நீக்க வேண்டுமானாலும் ,ஒழுங்கு படுத்த வேண்டுமானாலும் இந்த மருந்தை மிக மிக நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் ..
  4. இந்த மருந்து ஒரு அற்புத மருந்து ...
  5. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மருந்து ...
  6. ஹார்ட் அட்டாக்கின் போது பயன்படுத்தப்படும் ஆங்கில மருத்துவத்தில் நாக்குக்கு அடியில் வைக்கப்படும் சார்பிட்ரெட் ,நைட்ரோ கிளிசரின் -போன்ற மருந்துக்கு இணையாக இதயத்தில் ஏற்படும் வலியை நீக்கும் ..இதயத்தை வலுவாக்கும் ..இதயத்திற்குள் இருக்கும் வாயுவை ஒழுங்கு செய்யும் (இதய அடைப்பை நீக்க துணை மருந்தாக வேலை செய்யும் )
  7. சாதாரண வயிறு உப்புசம் ,செரியாமை ..வயிறு ஏற்றம் முதல் அனைத்து ஜீரண மண்டல நோயை நீக்கும் ..குணப்படுத்தும்.
  8. புனுகு சேர்க்க வில்லை என்றால் இந்த மருந்து வேலை செய்யவே செய்யாது ...பல கம்பெனிகள் புனுகு என்ற மருந்தை சேர்ப்பதில்லை ...புனுகில் போலியானதை சேர்த்தாலும் இந்த மருந்து வேலை செய்யாது ...
  9. சுவாசம் -இளைப்பு ..மூச்சு வாங்குதல் ..நடந்தால் மூச்சு வாங்குதல் போன்றவற்றில் நல்ல பலன் அளிக்கும் ..
  10. எழு மாதத்திற்கு பின் தொடந்து சாப்பிட சுக பிரசவம் ஆகும் ..
  11. இரண்டு மாத்திரைகளை -காலை மாலை ஆகாரத்திற்கு முன் வெந்நீரில் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் ..
  12. தினமும் எல்லோரும் பயன்படுத்தலாம் ..

Post Comment

மேக வேட்டை நோய்களிலும் -பால் வினை நோய்களிலும் பயன்படும் - தேவகுஸும ரஸாயனம் Devakusuma Rasayanam


மேக வேட்டை நோய்களிலும் -பால் வினை நோய்களிலும் பயன்படும் -
தேவகுஸும ரஸாயனம் Devakusuma Rasayanam
(ref-வைத்யகஸப்தஸிந்து - ரஸகற்பூரவிதி)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸகற்பூரம் ஷோதித ரஸகற்பூர     10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக             10          

இவைகளைத் தனியே பொடித்துப் பிறகு இரண்டையும் சேர்த்தரைத்து அத்துடன் நன்கு பொடித்துச் சலித்த



1.            சந்தனம் சந்தன          10 கிராம்
2.            இலவங்கம் லவங்க       10          

இவைகளைச் சேர்த்து அவற்றை 

1.            வேப்பம்பட்டைக் கஷாயம் நிம்பத்வக் கஷாய
2.            புங்கம்வேர்க் கஷாயம் கரஞ்ஜத்வக் கஷாய
3.            கீழாநெல்லிச்சாறு பூஆமலகீ ஸ்வரஸ
4.            முருக்கன் பட்டை கஷாயம் பலாசத்வக் கஷாய

இவற்றால் அரைத்து அத்துடன் மேலே கூறிய சாறுகளில் ஏதாவதொன்று விட்டுத் தனியே அரைத்தெடுத்து குங்குமப்பூ (குங்கும) 10 கிராம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றுபட நன்கு அறைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் கஸ்தூரி (கஸ்தூரி) 2.500 கிராம் சேர்த்தரைத்து 50 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை ஒன்று முதல் மூன்று வேளைகள் தேன், பால் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

 பரங்கிப் புண்ணின் (பிரங்கரோக உபதம்ஸ), பலவித நிலைகள், நாட்பட்ட பலவித தோல் நோய்கள் (புராணத்வக் ரோக), குதிகால் வாதம் (வாத ரக்த), கீல்வாயு (சந்திகாதவாத) போன்ற வாத நோய்கள் (வாத ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. பால் வினை நோய்களிலும் -இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
  2. நாள்பட்ட ஆறாத புண்களிலும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. மறைவிடங்களில் வரும் புண்களில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்



Post Comment