வியாழன், ஜூன் 29, 2017

ஓஜஸ் எனும் உயிர்சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி -உயிர் ஆற்றல் -ஓஜஸ் 


டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .சுதா ., BAMS



உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்று பலரும் இப்போது ஆயுர்வேத மருத்துவத்தை நாடி வருகிறார்கள் .உடலின் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு மாத்திரையை தொடர்ந்து சாப்பிட கிடைத்து விடுமா ? வெறும் சத்து மாத்திரைகளை உண்டு வந்தால் அந்த நோய் எதிர்ப்பு சக்தி கூடி விடுமா ?. இந்த கேள்விக்கு பதில் நாம் ஓஜஸ் பற்றி தெரிந்து கொண்டால் கிடைத்து விடும்




ஆயுர்வேதத்தில் ஒஜஸ் என்பது சப்த தாதுக்களின் ( ஏழு தாதுக்கள் ) சாரம்சமாகும். ஆரோக்யமான உடலின் ஏழு தாதுக்களும் ஓஜஸின்- நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. உடலை நோயில் இருந்து விலக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.



ஓஜஸ் எங்கிருக்கிறது ?




உடல் முழுவதும் பரவி இருக்கிறது ..
இதயத்தை ஸ்தானமாக கொண்டு உடல் முழுவதும் பரவி உடலை இயக்குகின்றது


ஓஜஸ் குணம்:

ஸ்நிக்தம் - எண்ணெய்த்தண்மை
சோமாத்மகம் - நீர் போன்று
சந்த - தெளிவாக
ஈசத்லோனபீதகம் - கொஞ்சம் மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு




சரகரின் கூற்றுப்படி ஓஜஸ் 10 குணமுடையது.

குரு - கனமானது
சீத       -         குளிர்ச்சியானது
ம்ருது        -         மிருதுவான
ஷ்லக்ஹனம்        - மென்மையானது
பஹல       -        அடர்த்தியானது
மதுரம்        - இனிப்பு சுவையுடையது
ஸ்திரம் - திடமானது
ப்ரசன்னம் - தெளிவானது
பிச்சிலம் - பிசுக்குத்தன்மை
ஸ்நிக்தம் - எண்ணெய்த்தன்மை


ஓஜஸ் எப்படி இருக்கும் ?

நிறம் நெய் போன்றும் , சுவையானது தேன் போன்றும் , வாசம் வறுத்த நெய் போன்றும் இருக்கும்.


ஓஜஸ் எப்படி உருவாகிறது ?


ஓஜஸ் கரு வயிற்றில் உருவாகும்போதே உருவாகின்றது. கரு வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது. கரு வயிற்றில் இருக்கும்போதே ஓஜஸ் ஆனது அதனுடைய இடமான இதயத்தை சென்றடைகின்றது.

ஓஜஸ் என்னும் உயிர்சக்தி குறைவாக இருந்தால் மனிதனின் ஆயுட்காலமும் குறைவுதான்



ஓஜஸின் வகைகள் எத்தனை ?.

பர மற்றும் அபர என்று இரண்டு விதமான ஓஜஸ்கள் உண்டு.


பர ஓஜஸ் :

மிக முக்கியத்தவம் வாய்ந்த வாழ்க்கை சார்ந்து இருந்தது
இதயத்தை இடமாக கொண்டுள்ளது
அளவு : 8 சொட்டு


அபர ஓஜஸ்:

இது உடல் நலத்தை சார்ந்தது
இது உடல் முழுவதும் பரவி காணப்படும்
அளவு : அர்த்த அஞ்சலி ப்ரமானம் அதாவது அரை கை அளவு - 10 - 15 மிலி


ஓஜஸ் குறைய காரணங்கள்:

அளவுக்கு அதிகமான கோபம் , பசி , கவலை , பேராசை , பொறாமை , சோர்வு , அதிக உடற்பயிற்சி , அதிக உபவாசம் இருப்பது , அளவுக்கு குறைவாக உணவு உட்கொள்வது , மதுபழக்கம் , பயம் ,  கலப்பட உணவு , பழைய உணவுகள் , இரவில் கண் விழித்தல் , இரவு தூக்கத்தை தவிர்ப்பது , கெட்ட கிருமிகளின் தாக்குதல் , பாக்டீரியா மற்றும் நுண்கிருமிகள் , வைரஸ் தாக்குதல்கள் , விபத்துகள் மூலம் அதிகப்படியான இரத்தப்போக்கு , விந்து அதிகமாக விரயம் , விஷம் எடுத்துக்கொள்வது போன்றவற்றால் ஓஜஸ் ஆனது விரைவில் குறையக்கூடும்.


இப்படி குறையும்போது உடலில் உள்ள உயிர்சக்தியே இல்லாமல் போகின்றது
ஓஜோ நாசம் / சிதைவு


சுஷ்ருதசம்ஹிதா சூத்திர ஸ்தானத்தில் ஓஜோ சிதை 3 விதத்தில் நடைபெறுகிறது.


ஓஜோ விஸ்ரமம்

அறிகுறிகள்

சந்தி விஷ்லோஷனம் - அனைத்து  மூட்டுகளிலும் வலி மற்றும் மற்றும் பலகீனம்
காத்ரசத     -        விரைவில் தளர்ச்சி , களைப்பு அடைதல்
தோஷ்ச்யவன  -     உடலில் உள்ள அனைத்து தோஷங்களையும் அதிகரிக்கும்
க்ரிய சன்னிரோதம் - உடல் இயக்கங்கள் அனைத்தும் தடைபெறும்

ஓஜோ வயாபத்:

ஸப்த குருதாத்ரதா - உடல் கனமாகவும் மற்றும் இழுத்துப்பிடிப்பது
வாத சோபம் - வாததோஷ அதிகரித்து உடல் முழுவதும் கட்டிகளை உருவாக்கும்.
வர்ணபேதா - தோலில் கருந்திட்டுகள்
க்ளானி - விரைவில் சோர்வு
தந்ரா - களைப்பு , ஒழுங்கற்ற முறையில் உடல் உறுப்புகள் செயல்படும்
நிரே - அதிகப்படியான உறக்கம்


ஓஜோக்ஷயம்:

1. மூர்ச்சா - சுயநினைவு இல்லை
2. மாம்சக்‘யம் - உடல் தசை குறைப்பாடு
3. மோக - திரிபுணர்ச்சி
4. ப்ரலாப - பொருத்தமில்லாமல் பேசுவது , உளறுவது
5. மரணம் - மரணம்

இவ்வாறாக ஓஜஸ் உயிர்சக்தி நமது உடலில் குறையும் போது மரணத்தை எட்டுகிறது.


ஓஜஸை அதிகப்படுத்த செய்ய வேண்டியவை:

பால் , நெய் மற்றும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவு
யோகா , பிரணாயாமம் , உடற்பயிற்சி , மனபயிற்சி , மனதை ஒரு நிலைப்படுத்துதல்
இறைவனை வேண்டுதல்


ஆயுர்வேத மருந்துகள் :

ச்யவனப்ராஷ்
சாரஷ்வதாரிஷ்;டம்
ப்ரம்ம ரசாயனம்
அமலக இரசாயனம்
குடுச்சி ( சீந்தில் கொடி )
ஆம்லா ( நெல்லிக்காய் )
அஸ்வகந்த ( அமுக்கிரா கிழங்கு )
சதாவரி ( தண்ணீர்விட்டான் கிழங்கு )
திரிபலா ( நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் )
அஸ்வகந்தாரிஷ்டம்
பலாரிஷ்டம்
அஷ்வகந்தாதி லேகியம்
ஷீரபலா தைலம்
பலாஅஸ்வகந்தாதி தைலம்
மகாராஜாபிரசரின்யாதி தைலம்
சிலாது
மகா கல்யாணக க்ருதம்
ப்ரம்மி வடி

ஓஜஸ் –உயிர் சக்தியை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆலோனைக்கு
ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


Post Comment

செவ்வாய், ஜூன் 27, 2017

நீங்கள் அடுத்த வீட்டின் அந்தரங்கத்தை எட்டி பார்பவரா ?

உங்களது வீட்டில் நடப்பவற்றை யாராவது திருட்டுத்தனமாய் பார்க்க அனுமதிப்பீர்களா ?


டாக்டர் .அ .முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA


ஒட்டு கேட்பது குற்றமா ?

மறைந்து இருந்து நோட்டம் விடும் பழக்கம் பெரிய நோயா ?


ஒரு செயல் அதை  செய்யும் போது குற்ற உணர்வு உங்களுக்கு வரும் என்றால் அது ஒரு தவறாகத்தான் இருக்க முடியும் . மனித உணர்வுகள் புனிதமானவை ..மீடியாக்கள் –டிவி நிகழ்சிகள் அனைத்தும் நாம் செய்வது குற்றம் என்ற உணர்வுக்கே வர முடியாமல் தொடர வைத்து விடுகிறது .




இப்போது நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக நூல் பக்கத்தில் உள்ள வீடியோக்களை எதேச்சையாக பார்க்கும் போது கவனித்த விஷயம் –அந்த வீடியோவின் பார்வையாளர்கள் கிட்டத்தட்ட எழு லட்சம். நான் அந்த தொலை காட்சியின் டி ர் பி யை பற்றி கணக்கு எடுக்கவே இல்லை . நம்மை அடுத்த வீட்டை எட்டிபார்க்கும் ஒரு மிக மோசமான் ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை நமது மனதில் குப்பையாக விதைக்கபோகிறோம் .









நீங்கள் மன நோயாளியாக மாற விரும்புவீர்களா ?

  • அடுத்தவரை ஒப்பிட்டு வாழ்வதே நமது எல்லா மன நோய்க்கும் காரணம்


  • மற்றவரின் அந்தரங்கம் அறிந்து கொள்வது சரி என்று பட கூடிய மோசமான மன நிலைக்கு தள்ளபடுவோம்


  •  கீழ்த்தரமான மன நிலையை மாற்றாமல் நாம் செய்யும் தவறுக்கு நாம் வக்கீலாகவும் ,அடுத்தவர் தவறுக்கு நீதிபதியாகவும் மாறி –குறையை ஒத்து கொள்ளாத மன நிலைக்கு தள்ளபடுவோம்


  • அடிமையாகி விடுவோம் – நம்மை நமது மன நிலையை தூய்மையாக்க முடியாது என்ற நிலைக்கும் –அடுத்து என்ன ? என்று நமது நேரத்தை குப்பையாக்கி அடிமையாய் கிடப்போம்


  • பாசம் ,பணிவு ,அன்பு ,உறவுகள் என்ற சொற்கள் இனி கனவு உலகத்தில் மட்டுமே இருக்கபோகிறது .நிகழ் உலகத்தை மறந்து  நிழல் உலகத்தில் மீள முடியா மன நோயாடு வாழ்வோம்


  • உயிர் போகும் அளவுக்கு கண் முன் பிரச்சனை இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் நமது கவனம் வேறு எதை நோக்கியோ பயணிக்கும் ..


  • நமது பாரம்பரியத்தில் –கலாசார அடையாளம் எல்லாம் இழந்து வெறும் சதை பிணங்களாய் வாழ்வோம் . நீச்சல் உடை அணிந்து நடு வீட்டில் இருக்கலாம் என்ற மேற்கத்திய கலாசாரம் இதன் மூலம் புகுத்த படும் போது நமது சுய அடியாளம் இழந்து பரதேசிகளாய் மாறிப்போவோம்


  • காசுக்காக எதை செய்யவோம் துணிவோம் ..பணம் எல்லாம் செய்யும் என்ற மன அமைதி இல்லா நிலைக்கு தள்ளபடுவோம்


  • Moral Value , Attitude எல்லாம் தலை கீழாய் மாறிபோகும் –வாழ்க்கை சீரழிந்து போகும்


  • இது என்னை பாதிக்காது என்று உங்களது மன நிலைக்கு மட்டும் தான் தள்ள படுவீர்கள்


  • சம தோஷ சம தாது ..பிரசன்ன ஆத்மேந்திர்ய மன என்ற –ஆரோக்யமான மன நிலை என்று ஒன்று எதுவும் இருக்க போவதில்லை ..நமது மனம் கேவலமான மன நிலைக்கு வந்து அதுவே இல்ல உடல் மன நோய்க்கும் காரணமாய் மாறி விடும்


பொழுதுபோக்கு நமது ஆயுள் முழு பொழுதையும் போக்கிவிடும் பயன் இல்லாமல் –நோயுடன் ..நீங்கள் இந்த வலையில் சிக்க விரும்புகிறீர்களா ?

நிகழ் காலத்தில் –உணர்வோடு –அமைதியோடு வாழ இயற்கை சித்தாந்தகளை கடைபிடிப்போம் .மெய் உணர்வோடு வாழ்வோம் .
இயற்கை ஆயுஷ் மருத்துவம் மற்றும் மன நல ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )






Post Comment

திங்கள், ஜூன் 26, 2017

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

இஸ்லாமிய சொந்தங்களுக்கும் மாற்று மத சகோதர்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்


டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். I. ஜவாஹிரா பானு .,BHMS.,




🌙 இஸ்லாம் என்றால் அமைதி, சமாதானம்

🌙 ஒரு ஆத்மாவை வாழ வைத்தவர் -உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார். (அல் குர்ரான் 5:32)  என்று உலக மக்கள் அனைவரையும் மனித நேயத்தோடு வாழ வைக்க சொல்கிறது இஸ்லாம் மார்க்கம்...அன்பு அமைதிக்கான மார்க்கம் இஸ்லாம்.


🌙 உங்கள் மார்க்கம் உங்களுக்கு ..எங்கள் மார்க்கம் எங்களுக்கு ( அல் குர்ரான் 109 :6)   என்று மற்ற சகோதரர்கள் மதத்தை மதிக்க சொல்கிறது இஸ்லாம்.


🌙 கப்பலோட்டிய தமிழன வ உ சி யின்  கப்பலுக்கான விலையை  97 % ஐ நன்கொடையாக கொடுத்தவர் வள்ளல் ஹபிபுர் ரஹ்மான்..ஏழை எளியவர்களை ஜக்காத் மூலம் உதவ சொல்லும் , தியாகத்தை  சொல்வது இஸ்லாம் மார்க்கம்


🌙 அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு பொருள் ஒரே இறைவன் , அவனது சக்தி சமமாக , அவனது சக்திக்கு மேலே  யாரும் இல்லாதவன். என்று பொருள் –,இதைத்தான் வள்ளுவன் கூட தனக்குவமை இல்லாதான் ...என்று சொல்கிறார்...அந்த ஒரு பேராற்றல் மிக்க கருணை மிக்கவனிடம் ,நம்மை படைத்து ,உணவளிக்கும் ஏக இறைவனே நமக்கு எல்லாவற்றிற்கும் போதுமானவன் .


🌙 மறுமையே சிறந்ததும் நிலையானதும் ஆகும் (அல் குர்ரான் 87:17)  - இறப்புக்கு பின் சுவர்க்க வாழ்க்கைக்கு இந்த இம்மை வாழ்கையை வீணும் விளையாட்டும் இன்றி வேறில்லை (  அல் குர்ரான்  6:32) – இறை பொருத்தமான வாழ்கையே நல்லது என்கிறது இஸ்லாம்


🌙 யூதர்களின் பிடியில் உள்ள எல்லா  மீடியாக்களும் –இஸ்லாம் என்றாலே தீவிர வாதம் என்கிறது –அரிதாய் எங்கோ நடப்பதை எல்லா இடத்தில நடப்பது போன்று மிகை படுத்தி வெளி விடும் இந்த மீடியாக்ளுக்கு இஸ்லாமிய தண்டனை சட்டம் பற்றி தெரியவில்லை . ஆனால் மனித நேயத்தில் இஸ்லாமியனை வெள்ளம் வந்த போது , சுனாமி வந்த போது,லண்டனில் தீ வந்த போது,சாக்கடையை அள்ள புறப்பட்ட போது ,இரத்த தானத்தில் –இன்னும் பல நிகழ்வுகள் அடையாளம் காட்டத்தான் செய்கிறது .

.
🌙 இறைவன் நாடியவனுக்கு ஆட்சியை கொடுப்பவன் . எந்த சோதனைகள் வந்தாலும் இறை பொறுத்தத்தை நாடியே வாழ்பவன் இஸ்லாமியன் . பொறுமையை கொண்டும் ,தொழுகையை கொண்டும் எப்போதும் ஏக இறைவனிடம் உதவி கேட்போம் .கடுகை விட மிக சிறிய பொருள் வானத்தில் இருந்தாலும் ,பூமியில் இருந்தாலும் அவனுக்கு தெரியாமல் ஒன்று இல்லை என்பதை உணர்ந்து வாழ்வோம்


🌙 பிறப்பால் இந்தியன் ,உணர்வால் தமிழன் ,வாழ்க்கை முறையில் இஸ்லாமியன் என்று நாட்டுப்பற்று உள்ளவன் இஸ்லாமியன் .வெறும் கிரிக்கெட்டில் மட்டுமல்ல வெளிப்படுவது நாட்டுப்பற்று எங்கள் இரத்தத்தில் உள்ளது தேசியப்பற்று

🌙 இறை அச்சத்தை அதிகபடுத்திய இந்த ரமலான் மாதத்தில் –நோன்பு இன்னும் இறை நெருக்கத்தை அதிபடுத்தி இருக்கும் என்று உணர்வோடு உலக மக்கள் அனைவருக்காகவும் பிரார்தித்து , ஏக இறைவனிடம் உங்களுக்கும் ,உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும்  எனக்கும் அமைதி ,சந்தோசம் ,வளம் ,நிம்மதி ,உடல் நலம் ,பொருள் நலம் ,நிறைவுத்தன்மை பெற பிரார்தித்தவனாக இனிய ரமலான் வாழ்த்துக்களை  தெரிவித்து கொள்கிறேன்

. 🌙  ஒற்றுமையே பலம் –வேற்றுமையில் ஒற்றுமையுடன் அமைதியுடன் ஆனந்தமாய் வாழ வாழ்த்தும்

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )




Post Comment

சனி, ஜூன் 24, 2017

உடல் எடை குறைக்க ஆரோக்கியமற்ற வழிமுறைகள்

மரணத்தை கூட வரவைக்கும் தவறான உடல் எடை குறைப்பு வழி முறைகள்



டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர்.G.வர்தினி .,BHMS.


Danger  of Wrong W ay to Reduce Weight-




இந்த  தலைமுறையில்  இருக்கும் நம் அனைவரும் உடலின் எடை மீது மிக அதிக கவனம் செலுத்துகிறோம். இப்போதைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடையை குறைக்க தீவிர சிந்தனை செய்கின்றனர். அதற்காக அவர்கள் அபாயகரமான காரியங்கள் பல செய்கின்றனர்.


எடை இழக்க பல வழிகள்  உண்டு.  ஆனால்  அது அனைத்தும் நல்லது அல்ல. இதனால் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் ஆற்றலும் உள்ளது. உடல்  எடையை குறைப்பதற்காக நம் மேற்கொள்ளும் வழிகளில்  உள்ள பயங்கரத்தை நாம் பார்ப்போம் .


எடை இழக்க ஆரோக்கியமற்ற வழிகள் :-


உணவை  தவிர்த்தல்  (Skipping  Meals , Fasting)

உடல் எடையை தவிர்க்க நம் அனைவரும் கையாளும்  ஒரே  வழி  உணவுகளை  தவிர்ப்பதாகும்.  ஆனால் இது  உடலுக்கு  மிக  மோசமான  விளைவுகளை  தரவள்ளது. மேலும்  உணவுகளை   தவிர்த்துக்கொண்டே வந்தால் காலப்போக்கில் வளர் சிதை மாற்றம்  அடைந்து உடல் எடையை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது . கடுமையாக   விரதம் இருந்தால் உடல் எடை   குறையலாம் . ஆனால்   நினைவில்  கொள்ளுங்கள்  நீங்கள்   இழக்கும்  எடை , விலைமதிப்பற்ற  தசைகளையும்  , வளர்ச்சிதை   மாற்றத்தையும்  குறைக்கிறது . இதனால்  வளர்ச்சிதை மாற்ற  நோய்கள்  மற்றும்  நீரழிவு   ஆபத்துகள்  வர  வல்லது .



குறைந்த   கலோரி  உணவுகள் :-

நம்  உடலுக்கு  கொழுப்புகள்  மிக  முக்கியம் . ஆரோக்கியமான   கொழுப்புகள்  , கொழுப்பை   எரிக்க   உதவுகிறது . குறைந்த  கலோரி  உணவுகளை  எடுப்பதால்  உடலுக்கு   தேவையான  வைட்டமின்கள்  மற்றும்  தாதுக்கள்   நமக்கு  சரிவர  கிடைப்பதில்லை .இதனால்  உடல்  எடையை   மட்டும்   குறைக்காமல்   நாம்  பல்வேறு  நோய்களையும்  வரம்  பெற்று  வாங்கிக்கொள்கிறோம்.

மருத்துவ  மேற்பார்வைப்படி  ஒரு  நாளைக்கு  1,200 கலோரிகள்   எடுக்க வேண்டும் . அவ்வாறு  எடுப்பதனால்  ஆரோக்கியமான  எடையோடு   நோயற்று  வாழலாம் .



மருந்துகள்   மற்றும்  மாத்திரைகள்  :-



எடை  இழப்புக்கான  மாயமான    மாத்திரைகள்  எதுவும்  இல்லை . ஆனால்  துரதிருஷ்டவசமான , கோகைன்  போன்ற   மருந்துகள்  விரைவான  ஆற்றல்  தருகின்றது . மேலும்  அது   இதயத்தையும் , மூளையையும்  கடுமையாக  பாதிக்கின்றது . மேலும்  மலச்சிக்கலையும்  உண்டுபடுத்தும் .இதை  தவிர்த்து  மேலும் , பல்வேறு   பாதிப்புகளையும்  வழங்கவள்ளது .


நீங்கள்   மருந்துகளை   எடுத்துக்கொள்ளும் .  நபராக  இருந்தால்  உங்கள்   மருத்துவரிடம்  அதன்  பக்கவிளைவுகளையும்  கேட்டுக்கொள்வது  நல்லது .



Fad Diet :-

ஆரோக்கியமற்ற   மற்றும்  சமநிலையற்ற  உணவு   மூலம்  விரைவான  எடை  இழப்பாகும் .எந்தவித  உடற்பயிற்சியும்  இல்லாமல்  இது  எடையை  குறைக்க  வல்லது . ஆனால் , இது  நமது   உடலில்  இருக்கும்  நீரினை  குறைக்கிறது .



அதிக    உடற்பயிற்சி  :-


ஊட்டச்சத்து  குறைவாக  உள்ளவர்கள்  , உடல்  எடையை  குறைக்க  தீவிரமாக  உடற்பற்சி  மேற்கொண்டால்  அது  பல  மோசமான  விளைவுகளை   தரவல்லது . இதனால்  நீர்ப்போக்கு  மற்றும்  *Electrolyte Imbalance*  போன்றவை  ஏற்படும் . உடல்  எடையை  இழக்க  வேண்டியது   அவசியம் . ஆனால்  அது  ஆரோக்கியமான  உணவு  மற்றும்  உடற்பயிற்சி   மூலம்  மேற்கொள்ள  வேண்டும்.




கடுமையாக   வாந்தி  எடுத்தல் :-



இப்போதைய   இளையர்கள்  பலர்  , தங்கள்  உண்டபின்  , அது  உடல்  எடையை  அதிகரிக்கும்  என்று எண்ணி ,சுயமாக  கட்டாயமாக  வாந்தி  எடுக்கின்றனால்  இதனால்  உடல்  எடை  குறையும்  என்கிறார்கள் . இது  மிகவும்  தவறு . மீண்டும்  மீண்டும்  வாந்தியெடுத்தால்  உமிழ் நீர்ச்சுரப்பிகளில்   நீர்போக்கு  மற்றும் வீக்கத்தை  ஏற்படுத்தும்   அதே  போல் , வயிற்று  அமிலம்  உங்கள்   உணவுக்குழாய்  மற்றும்  பல்  சிதைவை  ஏற்படுத்தும்   மேலும்  Bullumia  என்ற  வழிவகுக்கும் . 




நீர் சத்தை  இழக்கும் கழிவு நீக்க  மற்றும்  Detox   Plans :-

உடலில்  இருக்கும்  நீரையும்  , மலத்தையும்  வெளிக்கொண்டு  வருவது  ஆபத்தானது .  இதனால்  நீர்போக்கு  மற்றும்  Electrolyte  Imbalance போன்றவை  ஏற்படுத்தும் . மருத்துவமேற்பார்வை இல்லாமல்    திரவம்  நிறைய  இழப்பு  ஆபத்தானது .மேலும்  உண்ணாவிரதத்தை  கடைபிடித்தால்  அது  அபாயகரமான   பல  பாதிப்புகளை  தரவல்லது .அதற்கு  பதிலாக , நீங்கள்  சாப்பிட  வேண்டிவற்றை  கவனத்தில்  கொள்ளுங்கள்   உங்கள்  உடலை  சுத்தப்படுத்தவோ  அல்லது  குறைக்கவோ  விரும்பினால் , நிறைய  தண்ணீர்  குடிக்கவும் ,உயர்  ஃபைபர்  உணவுகளை  நிறைய  சாப்பிடவும் . 




அறுவை  சிகிச்சை :-




இது , கடைசியான  வழி , உடல்  எடை  குறைக்க  பல்வேறு வழிகள்   தோற்றுபோனாலும்  அறுவை  சிகிச்சை   எடையை  குறைக்கலாம் .



ஆனால்  இது  பல்வேறு   பக்கவிளைவுகளை   தரவல்லது .
உடல்  இழப்பு   என்பது  ஆரோக்கியமான  எடையை  தக்கவைப்பதே  ஆகும் . நாம்  வாழும்  வாழ்க்கைக்கு  ஏற்ப  நமது  உணவு  முறைகளை   தேர்ந்தெடுக்கவேண்டும் . மேலும்  ஆரோக்கியமான  உணவு, மற்றும்  ஆரோக்கியமான  உடற்பயிற்சியை  நோயில்லாத  வாழக்கைக்கு  வழிசெய்யும்.



இயற்கை மருத்துவ சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை, சென்னை)

Post Comment

அக்னி கர்மா என்னும் ஆயுர்வேத அதிவேக குணமளிக்கும் சிகிச்சை

அக்னி  கர்மா என்னும் ஆயுர்வேத அதிவேக குணமளிக்கும் சிகிச்சை

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர்.ஜீவா.,BAMS.



'தீயினால் சுட்டப்புண் உள்ளாரும்" என தொடங்கும் பொன்னான குறள் அனைவரும் அறிந்த ஒன்றே. இக்காலத்தில் பரவக்கூடிய  நோய்களையும் மருத்துவமுறைகளையும் மனதில் கொண்டு இக்குறளினை "தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் தீராதே அறுவைசிகிச்சையினால் சில நோய்கள்" என சிந்திக்கலாம்.


அதாவது  அறுவைசிகிச்சையினால் கூட குணப்படுத்த முடியாத சில நோய்களையும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அக்னிகர்மா- தீயினைக் கொண்டு குணப்படுத்தலாம்.  



அக்னிகர்மா என்றால் என்ன.?

☘️ அக்னி-நெருப்பு

☘️ கர்மா -சிகிச்சை




அக்னிகர்மா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ பொருட்கள் :-



☘️ சலாகா
☘️ மஞ்சள் பொடி
☘️ கற்றாழை



அக்னி கர்மா சிகிச்சை முறை :-

முதலில் அக்னிகர்மம் செய்யும் உடல்பகுதியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின் சலாகாயினை நன்றாக சூடு செய்து சிகிச்சை செய்யக் கூடிய இடத்தில் நிதானமாக தொட வேண்டும்.சுட்ட இடத்தில் உடனடியாக கற்றாழையைக் கொண்டு தேய்த்து மஞ்சள் பொடியினை தூவி கட்டி விட வேண்டும்.



சிகிச்சைக்காலம்:-

☘️ 3 நொடிகள்
☘️ அதிகபட்சம்-5 நிமிடங்கள்



அக்னி கர்மா  சிகிச்சையின்  நன்மைகள் :-


☘️ இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

☘️ வலி நிவாரணியாக செயல்படுகிறது.

☘️ நரம்புகளின் செயலினை தூண்டுவிக்கிறது.

☘️ தசை வீக்கம் (ம) விறைப்பினை குறைக்கிறது  

☘️ நோய்தொற்று கிருமிகளை அழிக்கிறது.




குணப்படுத்தப்படும் நோய்கள் :-












☘️ எலும்பு மற்றும் மூட்டுகள் சார்ந்த நோய்கள்

☘️ தராத புண்கள்

☘️ கட்டிகள்

☘️ உள் (ம)வெளியுற மூல நோய்

☘️ பெளத்திரம்

☘️ புற்றுநோய்கள்

☘️ யானைக்கால் நோய்

☘️   அதிக இரத்தக் கசிவு.



சிகிச்சையின் சிறப்பம்சங்கள் :-

மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சைகளை ஒப்பிடும் போது மிக விரைவில் நோய்களை குணப்படுத்தக் கூடியது.

☘️ குணப்படுத்தப்பட்ட நோய் மீண்டும் உற்பத்தியாகாது.

☘️ தொற்று கிருமிகள் எதுவும் பரவாது.

☘️ பக்கவிளைவுகள் ஏதும் இல்லை


சிகிச்சைக்காலம் மிகவும் குறைவு :-

பல லட்சங்கள் கொடுத்தும் குணப்படுத்த முடியாத நோய்களை மிகக்குறைந்த செலவில் எவ்வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் அக்னிகர்ம சிகிச்சையின் மூலம் முழுவதுமாக குணப்படுத்த தகுந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுப்பீர்.

ஆகையால் தகுந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுப்பீர்.



இயற்கை மருத்துவ சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை, சென்னை)

Post Comment