ஞாயிறு, அக்டோபர் 27, 2013

இந்த தளம் பலன் உள்ளதா ?- அறிவா ? ஆபத்தா ?

      நமது தளம் மக்களுக்கு பலன் தருகிறதா ?என்ற குழப்பம் என்னுள் சில நாட்களாக கீழ் கண்ட எண்ணங்களை கொடுக்கிறது ..










  மூலிகை கதைகள் எழுதுகிற –மூட அறிவை வளர்க்கும் சில தளங்கள் எனது தளத்தின் கட்டுரையை காப்பி அடிப்பது –எது உண்மை எது போலி என்று தெரியாமல் போகிறது ...


2.       தீடீர் போலி டாக்டர்களை எனது தளம் உருவாக்குகிறதோ என்ற பயமும் எண்ணமும் அதிகம் இருக்கிறது ..

3.       சில மருந்துகளை மற்றும் தெரிந்து கொண்டு டாக்டர் என்று தனது பெயருக்கு முன் போட்டு கொண்டு ..கண் மூடித்தனமாக போலி வாக்குகளை மக்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கும் கூட்டம் -மருத்துவ கொள்ளை அடிக்கும் கூட்டம் ..உதாரணத்திற்க்கு தைராய்ட் நோய்க்கு காஞ்சனார குக்குலு என்ற மாத்திரை என்று மக்களுக்கு பயன் படும் என்று எழுதினால் –டீவியில் அடிக்கடி பேசும் /தினகரன் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கும் ஒரு .......... சித்த மருத்துவ நிலையம் என்ற வெறும் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காஞ்சனார குக்குலு மாத்திரையை ஒரு மாதத்திற்கு ஆறாயிரம்  முதல் இருபதாயிரம் வரை கொள்ளை அடிக்கிறது ..சீதாபழம இலை சாறு நன்று என்று சொன்னால் அதை கெடாமல் காக்கும் ஒரு எசன்ஸை கலந்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடவும் சொல்லி அதற்க்கு பல ஆயிரங்களை கொள்ளை அடிக்கிறது ..


4.       பகிர்வதால் பலன் உண்டு –மக்களுக்கு ஆயுர்வேத சித்தம் யுனானி அக்குபஞ்சர் சேர வேண்டும் என்ற நல்ல நோக்கில் எழுதும் போது அதில் பல பாதகங்கள் பல உள்ளது என்கிறது என்னுடன் மருத்தவம் படித்த நண்பர்கள் ..அது உண்மையோ என்று தோணுகிறது..


5.       லாட்ஜ் வைத்தியர்களும் ,டிவியில்  அரை மணி நேரத்திற்க்கு பேச குறைந்தது ஐம்பதாயிரம் கொடுக்கும் பெரும்பான்மையான டீவி வைத்தியர்களும் ...கொள்ளையடிக்கும் கூட்டமும் நேரடியாகவும் மறைமுகமாகமும் கொஞ்ச நஞ்சம் நமது பாரம்பரிய வைத்திய நம்பிக்கையை சிதைக்கிறார்கள் ..


6.       அந்த அடிக்ஷன் ,இந்த அடிஷன் என்று அரை மணி நேரம் டிவியில் விளம்பரம் பண்ணும் அடிக்ஷன் என்னும் குடி மறக்க விற்கும் மருந்துகளை மூன்று தடவை (ஒவ்வொரு தடவையும் ரூபாய் மூவாயிரத்து நூற்றைம்பது கொடுத்து )மொத்தம் கிட்டதட்ட பத்தாயிரத்திற்கு மேல் செலவு செய்தும் குடிப்பவர் திருந்தவில்லை என்று எங்களிடம் வருபர்களிடம் இதை ஏன் அவர்களிடம் குடிப்பவர் திருந்தவில்லையே என்று கேட்கவில்லையே என்றால் ..திரும்ப திரும்ப வாங்கி கொடுங்கள் என்கிறார்கள் என்கின்றனர் ..நமது தளத்தின் வலது மூலையில் ஒரு விளம்பரம் போட்டால் அவர்க்கு இந்த தளத்தின் மூலம் மொத்தம் ஐந்து மாதத்தில் இரண்டு விசாரணை கூட இல்லை என்கிறார் ..


7.       இலவச ஆலோசனை –போனில் மற்றும் இ மெயிலில் என்றால் கேட்கப்படும் கேள்விகளில் பெரும்பான்மையானவை ஆண்மை குறைவு பற்றியே இருக்கிறது ...மனம் சோர்வடைகிறது ...மற்ற கேள்விகளை  கேட்க மக்கள் மாட்டார்களோ என்று மனம் ஏங்குகிறது ...


8.       தளத்திற்கு பின்னூட்டம் இடப்படுவது கட்டுரை படிப்பவர்களுக்கு தோணாதோ ?

Post Comment

புதன், அக்டோபர் 23, 2013

பயணங்கள் தொடரவே செய்கின்றது ..




வாழ்க்கை வேகமாகி போனதால் ...
மருத்துவம் வியாபாரமாகிப் போனதால் ...
பயம் நிலைத்து போனதால் ...
நோய்கள் பெருகிப் போனதால் ..................................................................................................................பயணங்கள் தொடரவே செய்கின்றது ..









Post Comment

செவ்வாய், அக்டோபர் 22, 2013

மருத்துவம் வளர்கிறது மனிதம் தேய்கிறது ......


Post Comment

ஆயுஷ்


Post Comment

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

க்ஷிப்ர மர்மம் -கைகளில் உள்ள மர்ம புள்ளி

ரச வஹ ,பிராண வஹ ஸ்ரோதசையும்,அவலம்பக கபத்தையும் காப்பாற்றும் -சதை நாரினால் ஆன க்ஷிப்ர மர்மம்


Post Comment

தல ஹ்ருதய மர்மம் – கைகளில் உள்ள மர்ம புள்ளி ..

இந்த மர்ம புள்ளி –பிராண வஹ ஸ்ரோதஸ் உடன் தொடர்புடையது ...

Post Comment

சனி, அக்டோபர் 12, 2013

கைகளில் உள்ள மர்மங்கள் (இருகரங்கள்)

கைகளில் உள்ள வர்மங்கள் (இருகரங்கள்)

(Varmas in Upper Extremities)



  1. அடிக்குழி (தலஹிர்தயா) – Plantar Aponeurosis                              2
  2. சிப்பிரம் (ஷீப்ரா) – Firtst inter metacarpal ligament                                2
  3. கூர்ச்சம் (கூர்ச்சா) – Carpometacarpal and intercarpal ligament           2
  4. கூர்ச்சசிரம் (கூர்ச்சசிரா) – Lateral ligament of wrist joint                 2
  5. மணி பந்தம் (மணிபந்தா) – Wrist joint                                            2
  6. இந்திரவதி (இந்திரபஸ்தி) – Cubital fossa                                      2
  7. கூர்ப்பரம் (கூர்ப்பரா) – Elbow joint                                                    2
  8. ஆணி (ஆனி) – Tendon of biceps brachii muscle                                    2
  9. ஊர் (ஊர்வி) – Brachial artery                                                                  2
  10. உலோகிதை (லோகிதாக்ஷா) – Axillary vessel                                 2
  11. கட்சியாதரம் (கக்ஷீதாரா) – Brachial plexus                                         2


                                                                                                        மொத்தம்           22

Post Comment

வியாழன், அக்டோபர் 10, 2013

மர்ம வகைப்பாடு - உடற்கூறுபாட்டியல் வகைப்பாடு

     உடற்கூறுபாட்டியல் வகைப்பாடு (Regional Classification)

                இவ்வகைப்பாட்டியல் உடலை பாகங்களாக்கி அவைகளில் செறிந்துள்ள வர்மங்களை வகைப்படுத்தி கூறப்படுகின்றன. ஆயுர்வேத முறைப்படி உடலின் பாகங்களை ஐந்துவிதமாக பிரித்து மர்மங்கள் விளக்கப்படுகின்றன. அவைகள் பின் வருமாறு.

                கைகளில் உள்ள மர்மங்கள்                                                                  22
                கால்களில் உள்ள மர்மங்கள்                                                               22
                கழுத்து முதல் மூலம் வரை முன்பகுதி மர்மங்கள்                   12
       கழுத்து முதல் பின்பகுதியில் உள்ள மர்மங்கள்                         14
       தலை கழுத்து இவைகளிலுள்ள மர்மங்கள்                                37

                    மொத்தம்                      107

Post Comment

புதன், அக்டோபர் 09, 2013

எல்லா விதமான மார்பக கட்டிகளை கரைக்கும் –ஆயுஷ் மருத்துவம்

எல்லா விதமான மார்பக கட்டிகளை கரைக்கும் –ஆயுஷ் மருத்துவம் 


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.MBA

மார்பகத்தில் வரும் எல்லா கட்டிகளும் மோசமான கட்டிகள் இல்லை ..

சாதரணமாக வருகிற மார்பக கட்டிகளை எளிதாக ஆயுர்வேத –சித்த மருந்துகளில் கரைக்கலாம் ..எல்லா மார்பக கட்டிகளுக்கும் அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என்று இல்லை ...பயம் ஏற்படுத்தாத பல மார்பக கட்டிகளை அதிக பட்சம் ஆறு மாதத்தில் முழுவதுமாக கரைக்க முடியும் ...

மார்பகக் கட்டிகள்: 
சதை முடிச்சுகள்
நீர்க் கட்டிகள்
சீழ் கட்டிகள்.
சதை முடிச்சுகள்.


ஃபைப்ரோ அடினோஸிஸ் :

இதைத் தொட்டுப் பார்த்தால் பொடி கற்களும் மண்ணும் போட்டு மூடப்பட்ட துணியைத் தொடுவது மாதிரி நறநறவென்று இருக்கும்.

ஃபைப்பேரா அடினோமோ: 

சுண்டெலி மாதிரியே அங்கங்கே நகரும். தொடுவதற்கு ரப்பர் மாதிரி இருக்கும். இது ஒன்றாகவோ பல கட்டிகள் சேர்ந்தோ இருக்கலாம். இதனுடைய பிரச்சனையே மார்பகத்தின் வடிவம் அழகாக இருக்காது என்பதுதான்.

ஃபைப்ரோ அடினோஸிஸ்: 

பொதுவாக பெண்கள் பூப்படையும் பருவத்திலோ மெனோ பாஸ் நிலையிலோ ஏற்படக்கூடியது. மாத விலக்கிற்கு சில நாட்களுக்கு முன் இந்தக் கட்டி பெரிதாகும். அதிக வலி எடுக்கும்.

பெரிய ஃபைப்ரோ அடினோமா என்பது பொதுவாக வயதுக்கு வரும் நேரத்தில் ஏற்படுவது.

கொழுப்பு உருண்டை கட்டிகள்: 

தொட மிருதுவாக, முடிச்சு முடிச்சாக இருக்கும். திடீர் என்று வலி வந்தால் கட்டியின் அளவு பெரிதானாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நீர்க்கட்டிகள்: 

உடலில் உள்ள ஒருவகை நீர்கோத்து கட்டியாவது. இது பொதுவாக அக்குள் பகுதியிலும் அடி மார்புப் பகுதியிலும் ஏற்படுகிறது. வலி இருக்கும். மார்பகம் பெரிதாகும். கட்டி பெரிதாகி வலியும் அதிகரித்தால் கட்டியில் கிருமி பாதிப்பு எனலாம்.

சீழ்க்கட்டிகள் : 

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அவை ஏற்படும். சர்க்கரை நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை. சிகிச்சை செய்தவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோருக்கு சீழ் பிடித்து ஏற்படுவதுதான் இந்தக் கட்டிகள்

எல்லாக் கட்டியுமே புற்றுநோய் அல்ல. எந்தக் கட்டியையும் அலட்சியப்படுத்தவே கூடாது


மார்பக கேன்சர் பற்றி கூடுதல் தகவலுக்கு இங்கேகிளிக் செய்யவும் ..

ஆயுர்வேத மருந்துகளில் –பல்லாதகம் என்ற சேராங்கோட்டை சேர்ந்த மருந்துகளும் ,சேதனம் என்னும் குணம் உடைய மருந்துகளான வாரனாதி ,திர்யந்த்யாதி ,குக்குலு  திக்த்கம் கஷாயம் ,லேகன குணம் உடைய கிருத  மருந்துகளும் ,ஷட் குண செந்தூரம் ,தாம்ற பஸ்மங்களும்,..


சித்த மருத்துவத்தில் குரு மருந்துகளும் ,வான் மெழுகு ,நந்தி மெழுகு ..இடி வல்லாதி மெழுகு ,நரசிம்ஹ்க வல்லாதி லேஹ்யங்களும் ,

யுனானி மருந்தில் கமிரே அப்ரேஷம் ....அர்ஷதவாலா லேஹ்யமும் 

,ஹோமியோ மருந்தில் பைட்டோ லேக்கா சேர்ந்த மருந்துகளும் நல்ல பலன் தரும்,இன்னும் பல மருந்துகளும்  நல்ல பலன் தரும் .



எங்களது அனுபவத்தில் நாங்கள்  கேன்சர் அல்லாத சாதாரண மார்பக கட்டிகளை எளிதாக கரைக்க முடிகிறது ..

கேன்சர் என்ற சந்தேகம் எழ கூடிய கட்டிகளையும் கரைக்க முடிகிறது ..பரவிய முற்றிய நிலை கேன்சர் மார்பக கட்டிகளை நாங்கள் சிகிச்சைக்கு எடுப்பதில்லை ( எல்லாமே சாத்தியம் என்பது சுத்த பொய் –நாங்கள் நோயாளியின் தேவை அறிந்தே மருந்து கொடுப்பதுண்டு )...


அக்குபஞ்சர் சிகிச்சை மருந்துகளோடு சேர்த்து செய்து வருகிறோம்

ஹிஜாமா என்னும் சிறப்பு சிகிச்சையும் மார்பக கட்டுகளுக்கு மிக மிக சிறப்பாக செய்து நல்ல பலனை தருகிறோம்

அட்டை விடல் சிகிச்சை தேர்ந்தெடுத்து செய்வதால் –நல்ல பலனை எங்களது 

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை தர முடிகிறது 


மூன்று மாதத்தில் கட்டியின் அளவில் நல்ல மாற்றம் ( குறைந்த பட்சம் எண்பது சதம் )ஏற்பட்டால் மட்டுமே மருந்தை தொடர்வோம் ..

இதற்கென்று எனது மனைவி ஹோமியோ மருத்துவர் அவர்களின் மேற்பார்வையில் ஒரு தனி ப்ரோட்டோகால் ( வழி முறை ) வகுத்து செயல்படுகிறோம் ...ஏக இறைவன் துணை கொண்டு நல்ல முன்னேற்றமே  அனைத்து நோயாளிக்கும் உணர முடிகிறது ..


மார்பக் கட்டிகள் என்றால் உடனடியாக அறுவை சிகிச்சை என்று உடனடியாக சென்று விடாமல் முதலில் உங்களுக்கு வந்த கட்டி கரைக்க –அறுவை இல்லாமல் குணப்படுத்த முடியுமா என்று முதலில் ஆலோசனை பெற்று தகுதி வாய்ந்த மருத்துவரிடம் ,பெண் மருத்துவ ஆலோசனை உள்ள ,கொஞ்சம் கூட மிக படுத்தி சொல்லாத ,காசுக்கு ஆசைபடாத ஆயுஷ் மருத்துவமனையை கண்டறிந்து சிகிச்சையை எடுப்பது நல்லது –இந்த எல்லா தகுதியும் வாய்ந்த அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை சிகிச்சைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999

ராஜபாளையம் 90 4333 6888

Post Comment

திங்கள், அக்டோபர் 07, 2013

விடாத காய்ச்சலை விரட்டும் பவழ மல்லி என்னும் பாரிஜாதம்

விடாத காய்ச்சலை விரட்டும் பவழ மல்லி என்னும் பாரிஜாதம் 

டாக்டர்.அ,முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.,MBA





காய்ச்சல் தொடர்ந்து இருக்கும் போதும் ,அதிகமாக இருக்கும் போதும் நாம் வேறு வழியே இல்லாமல் ஆங்கில மருந்தை நாட வேண்டி உள்ளது . ஆண்டி பயாடிக் மருந்துகளையும் ,ஆண்டி பைரெட்டிக் என்னும் காய்ச்சலை குறைக்கும் மருந்துகளை பயன்படுத்தினாலும் குறையாத காய்ச்சல் பல இப்போது நிறைய உள்ளது .


மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் –பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகமாகி நமது பர்சை காலி செய்து விடும் நிலை தான் இன்றும் உள்ளது .


எனக்கு தெரிந்த நோயாளி ஒருவருக்கு காய்ச்சல் தொடந்து விட்டு விட்டு ஒரு வாரமாக இருந்தது –எல்லா பரிசோதனைகளும் சரியாக இருந்தது .அவருக்கு செய்யாத பரிசோதனைகளே இல்லை என்ற அளவுக்கு செய்து விட்டு இது பெயர் தெரியாத வைரஸ் காய்ச்சல் என்று சொல்லி ஆங்கில சிகிச்சைகள் தொடர்ந்தன . முதுகில் ஊசி போட்டு CSF என்கிற மூளையில் உள்ள திரவத்தில் கிருமி உள்ளாதா என்ற பரிசோதனை கூட அவருக்கு செய்தாகி விட்டது –அதுவும் நார்மல் . பத்து நாட்களுக்கு மேல் விட்டு விட்டு வரும் காய்ச்சல் என்ற நிலையில் எனக்கு அவரது மனைவி என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டார்கள் அவர் இருக்கும் நான் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவு . நடந்த விஷயங்கள் அனைத்தும் என்னிடம் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது . ஏதாவது செய்ய முடியுமா என்ற அழுகை குரல் . எனது ஆசான் வைத்ய உஸ்மான் அலி அவர்கள் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது . பவள மல்லி இலையை குடிநீராக்கி கொடுத்து வர சொன்னேன் .அந்த பெரிய மருத்துவ மனையிலே அவருக்கு ஒரு நாள் கொடுத்த உடன் காய்ச்சல் வருவது முற்றிலுமாக நின்று முழுவதுமாக சரியானார் .



இதே போல பல நோயாளிகளின் - பல பெயர் தெரியாத காய்ச்சலை குணமாக்கிய வித்தை இந்த பவள மல்லி இலைக்கு உள்ளது எனபது தான் கூடுதல் தகவல் .



இப்போதும் காய்ச்சல் என்ற உடன் டெங்கு ,அணுக்கள் குறைந்து போகிற காய்ச்சல் என்று அலறி அடித்து திருநெல்வேலியில் உள்ளா பெரிய பெரிய மருத்துவமனையில் நாற்பது ஆயிரம் ரூபாய் ,எண்பது ஆயிரம் ரூபாய் , லட்சதிற்கும் மேல் பணத்தை செலவு செய்தவர்கள் பல ஆயிரக்கணக்கில் எனது ஊரு கடையநல்லூரில் உள்ளனர் .


இந்த மூலிகையின் பெயர் –பவள மல்லி என்கிற பாரிஜாதம்



தாவரவியல் பெயர் -Nyctanthes arbortristis

பெயர் தெரியாத காய்ச்சல் ,,,
எலி காய்ச்சல் ..
நிண நீர் நெரி கட்டிய காய்ச்சல் ...
விடாத காய்ச்சல் ..
கிருமிகளால் வரும் காய்ச்சல் ...
குமட்டல் ,வாந்தியுடன் வருகிற காய்ச்சல்
குளிர் காய்ச்சல் .
மலேரியா காய்ச்சல்
அணுக்கள் குறைகிற காய்ச்சல்
பெயர் தெரியாத காய்ச்சல்
வைரஸ் காய்ச்சல்


தயாரிக்கும் முறை

 பாரிஜாதம் என்னும் பவள மல்லி இலைகளை பத்து எண்ணம் 
( 10 numbers ) பறித்து இருநூறு மிலி தண்ணீர் ஊற்றி  இருபத்தைந்து மிலியாக கொதிக்க வைத்து வடி கட்டி வற்ற வைத்து குடிக்க கொடுக்க வேண்டும் .இரண்டு வேளை முதல் மூன்று வேளையும் கொடுக்கலாம் .வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது –ஐந்து நாட்கள் வரையும் கொடுக்கலாம்

பலன் -

மேலே சொன்ன காய்ச்சல் உடனே சரியாகும்..


ஆங்கில மருந்தோடு கொடுக்கலாமா ?

ஆம் ,எந்த பயமும் இல்லாமல் ஆங்கில மருந்தோடு கொடுக்கலாம் .


நிலவேம்பு குடிநீர் கிடைக்காதவர்கள் இந்த குடிநீரை மாற்றாக பயன் படுத்தலாம் .

இடுப்பு வலிக்கும் ,கழுத்து வலிக்கும் ,வலிகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும்  இந்த குடிநீர் சரியாக கேட்கும் என்பது கூடுதல் தகவல்

குறிப்பு –காய்ச்சல் –ஜுரம் பல காரணிகளால் வருகிறது .தக்க மருத்துவர் ஆலோசனையுடன் இதை பயன் படுத்துவது நல்லது


சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )



Post Comment