செவ்வாய், அக்டோபர் 20, 2015

இலவச வர்ம மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமா ?

வர்ம மருத்துவம் என்னும் எல்லா விதமான நோய்களுக்கும் மருந்தில்லா மருத்துவ வரம்




வர்மம் என்றால் என்ன ?

வர்மம் என்பது உயிர் ஆற்றல் . வர்மம் என்பது உயிர் நிலைகளின் ஓட்டம்”. வர்மம்என்பது உயிர்சக்தி தடம்புரியும் புள்ளிகள். உயிர்நிலைப் புள்ளிகளடங்கிய சக்தி ஓட்டங்களில் அடியோ, தாக்குதலோ ஏற்படும்போது உடலில் உலாவும் உயிர்வேகம் அதனை தொழிலை செய்யாமல் பிறழ்ந்து மரணத்தையோ, உடல் ஊனத்தையோ, தொடர்ந்த வலிகளையோ ஏற்படுத்தும். அவை தசைகளிலோ, தசை நார்களிலோ, நரம்புகளிலோ இரத்தக் குழாய்களிலோ, எலும்புகளிலோ, மூட்டுகளிலோ அமைந்திருக்கும் இந்த புள்ளிகளில் 3 தோஷங்களும், தச வாயுக்கள் ,தச நாடிகள் ,நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் 5 பூதங்களும், ஓஜஸ் எனும் ஏழு தாதுக்களின் சாரங்களும், சத்வ, ரஜ, தம குணங்களும் அதனதன் விகிதாச்சார அடிப்படையில் புதைந்து கிடக்கின்றன. இவை உடலில் உள் உறுப்புகளையும், பிரபஞ்சத்தையும் 13 ஸ்ரோதஸ் எனும் Channels எனும் வழிகளும், பாஹ்ய அந்தர் எனும் உள் வெளி மார்கங்களையும் 6 சக்கரங்களையும் இணைத்து வைக்கும் மாயப் புள்ளிகள்.


வர்ம மருத்துவம் என்றால் என்ன ?
எல்லா நோய்க்கும் காரணம் தச நாடிகளின் பாதிப்பு ,சர ஓட்டத்தில் ஏற்படுகிற தடை , வர்ம புள்ளிகளின் ஆற்றல் குறைபாடு ,பிரபஞ்சத்தோடு ஏற்படுகிற பிணைப்பில் ஏற்படுகிற தடை ,தச வாயுக்களின் தடை ,முக்குற்ற வேறுபாடு , உடலின் பஞ்ச பூதங்களின் மாறுபாடு –இந்த அனைத்து காரணத்தையும் நமது உடலில் உள்ள வர்ம புள்ளிகளை ஒழுங்காக்குவதன் மூலம் ,வர்ம புள்ளிகளின் ஆற்றல் மாறுபாட்டை சரி செய்வதன் மூலம் நாம் குணப்படுத்த முடியும் என்பதே வர்ம மருத்துவத்தின் சாராம்சம் .சீனத்து அக்குபஞ்சர் சிகிச்சைக்கு  நமது வர்ம மருத்துவமே தாய் என்கிறது வரலாறு.



வர்ம மருத்துவத்தில் குணமாகும் நோய்கள் எவை ?

வர்மம் மருத்துவம் என்றால் நமது அனைவருக்கு நினைவுக்கு வருவது இந்தியன் தாத்தா தான் . உயிரை கொள்ள , ஆளை அடிக்க ,செயல் இழக்க செய்யத்தான் இந்த வர்ம மருத்துவம் என்று நாம் தவறாக புரிந்து வைத்திருக்கிறோம். சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இருக்கும் இந்த வர்ம மருத்துவம் பல நோய்க்களுக்கு மருந்து இல்லாமலும் சிகிச்சை அளிக்கிறது .
  1. முதுகு வலி ,கழுத்து வலிக்கு காரணமான டிஸ்க் பிரச்சனைகள்
  2. மூட்டு எலும்பு தேய்மானம் ,மூட்டு வலி , டென்னிஸ் எல்போ ,முடக்கு வாதம் ,தோள்பட்டை வலி ,குதிகால் வலி  மற்றுமுள்ள அனைத்து வலிகளுக்கும்
  3. நரம்பியல் நோய்கள் –நடுக்கு வாதம் பார்க்கின்சொனிசம், மைக்ரேன் ,பக்கவாதம் , முக வாதம் ,நரம்பு தளர்ச்சி
  4. வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய் ,இரத்த அழுத்தம் தூக்கமின்மை ,மன அழுத்தம் ,பதட்டம் ,வயிற்று புண்
  5. .ஆஸ்த்மா அலர்ஜி ,உடல் எதிர்ப்பு ஆற்றல் குறை நோய்கள்
  6. காரணம் தெரியாத தலைசுற்று
  7. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் , CP child ,Autism ,Hyperactive Child, குழந்தைளின் ஞாபக மறதி, பிடி வாதம்
  8. சுக பிரசவம் எளிதாக்கிட
  9. விந்து அணுக்கள் இல்லாத நிலை ,கரு முட்டை இல்லாத நிலை ,குழந்தை இன்மைக்கும்
  10. ஆபத்து காலத்தில் உயிரை காப்பாற்ற உதவும்

ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் வர்ம மருத்துவத்தில் சிறப்பு என்ன ?
இருபத்தைந்து ஆண்டுகள் வர்ம மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த மருத்தவரின் ஆலோசனையோடு ,பல வர்ம ஆசான்களிடம் வர்மம் பயின்ற ,முறையாக மருத்துவம் படித்த ,MD ( Siddha)  சிறப்பு மருத்துவமாக பயின்ற சித்த மருத்துவர்களின் துணையோடு ,வர்ம மருத்துவத்துடன் ஆயுர்வேத மர்ம சிகிச்சையும் ,பஞ்ச கர்ம சிகிச்சை முறைகளையும் சேர்ந்து வர்ம சிகிச்சை மேற்கொள்வதே  ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தின் சிறப்பு.


ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் ஏழு தடவை சிகிச்சையில் முன்னேற்றத்தை உணரலாம்.
ஆபத்து காலத்தில் உடனடியாக தீர்வை வர்ம மருத்துவம் கொடுத்தலும் பல நாள்பட்ட நோய்களுக்கு வாரம் ஒரு முறை அல்லது இரு முறை வர்ம சிகிச்சை என்று தொடர்ந்து குறைந்தது ஏழு தடவை சிகிசையிலே பல நாள்பட்ட நோய்கள் குணமாகும் / முன்னேற்றத்தை உணர முடியும்.மேலே சொன்ன அனைத்து நோய்களுக்கும் ஆண் பெண் மருத்துவர்களை கொண்டு ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை அளிக்கபடுகிறது . ஏற்கனவே எடுத்து கொண்டிருக்கும் மருந்துளோடு சேர்ந்தும் சிகிச்சை அளிக்கபடுகிறது. பக்க விளைவுகள் எதுவும் இல்லை ,பத்தியம் இல்லை ,மருந்து எதுவும் சாப்பிட வேண்டியதே இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு .

உடலில் நரம்பு மண்டலம் , எலும்பு மண்டலம் , தசை மண்டலம் , என்ற மூன்று பகுதிகளிலும் நோய்கள் கண்ட நிலையில் இவற்றை முற்றிலும் குணப்படுதுவதே எங்களின் சிறப்பாகும் வர்ம தத்துவங்களையும் + தச நாடி ஓட்டம் அறிந்து நாடி பார்த்து வர்ம மருத்துவத்தில் முறையாக பயிற்சி பெற்ற சித்த மருதுவத்துவரால் மருந்தில்லாமல் சிகிச்சை  அளிக்கப்படும். ஆலோசனை மற்றும்  முன் பதிவுக்கு  ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444


வருகிற ஞாயிறு 25/10/2015 காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை வர்ம மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற நமது ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் வர்ம மருத்துவத்தில் உலகத்திலே மிக சிறந்த வர்ம மருத்துவர் மற்றும் அவரது தலைமையில் ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழு –இலவசமாக வர்ம மருத்துவ சிகிச்சை மேற் கொள்ள உள்ளார்கள் –உங்களுக்கு தெரிந்த நோயாளிகளுக்கு இதை ஷேர் செய்து அவர்கள் பயன் பெற உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் . முன் பதிவுக்கு  90 4333 6444





Post Comment

வெள்ளி, அக்டோபர் 16, 2015

இனி எப்போதும் நிலவேம்பு குடிநீரும் இலவசம்

 நிலவேம்பு கஷாயம் இனி எப்போதும் இலவசம் ..
டெங்கு காய்ச்சலுக்கு ஹோமியோ மருந்து இலவசம்


பருவ மாற்றத்தால் வருகிற பெயர் தெரியாத காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக நிலவேம்பு குடிநீர் இருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை ..

கடந்த வருடம்  இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு  நாம் நிலவேம்பு கஷாயத்தை இலவசமாக கொடுத்து   பயனுற செய்து -அவர்கள் நோய் தீர நம்மால் முடிந்த சேவைகளை ஏக இறைவன் துணை கொண்டு சில  இயக்கங்களுடன் செய்து முடித்தோம் ..

அதற்கான பழைய இடுகைகளின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

ஓராயிரம் பயனுற்ற நமது அடுத்த இலவச நில வேம்பு குடிநீர் முகாம்

சென்னையில் காய்ச்சலை விரட்டும் இலவச நில வேம்பு குடிநீர்

நான்காயிரம் மக்கள் இலவசமாக பருகிய நில வேம்பு குடிநீர் முகாம்

இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ முகாம் 

முப்பது ஆயிரம் இலவசமாக அருந்திய நில வேம்பு குடிநீர் முகாம் -கடையநல்லூரில்

புத்தாண்டு அன்று இலவச நிலவேம்பு குடிநீர் முகாம்

சங்கரன்கோயில் இலவச நிலவேம்பு குடிநீர் முகாம்

---------------------------------------

அதை போலவே இந்த வருடமும் பல இயக்கத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் முகாம் நடத்த உள்ளோம் .

கிட்டதட்ட இந்த மாதத்திலே பல நிலவேம்பு முகாம்களை நாம் இலவசமாக நடத்த துவங்கி விட்டோம் .

திருநெல்வேலி பகுதி மற்றும் நமது மருத்துவ நிலையங்கள் உள்ள கடையநல்லூர் ,திருநெல்வேலி ,சென்னை (கீழ் கட்டளை ,மடிப்பாக்கம் ,வேளச்சேரி ,தாம்பரம் ),ராஜபாளையம் பகுதிகளில் எந்த இயக்கத்தில் இருந்து நிலவேம்பு குடிநீர் கேட்டாலும் நாம் இலவசமாக நிலவேம்பு குடிநீரை வழங்க தயாராக உள்ளோம் .

அதன் ஒரு பகுதியாக முகாம் மட்டுமல்லாது ..
இப்போது நமது எல்லா அல் -ஷிபா ஆயுஷ் மருத்துவ மனைகளிலும் தினமும் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம் .


கடையநல்லூரில் தினமும் இலவச முகாம் ..




திருநெல்வேலியில் தினமும் இலவச முகாம் ..


சென்னையில்  தினமும் இலவச முகாம் ..


ராஜபாளையத்தில்  தினமும் இலவச முகாம் ..

உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இந்த இலவச மருத்துவ சேவை விஷயத்தை எடுத்து சொல்லி -டெங்கு ,சிக்கன் குனியா மற்றும் உள்ள மர்ம காய்ச்சல்களிருந்து மக்களை காப்பாற்ற ஷேர் செய்யுமாறும் கேட்டு கொள்கிறோம் ..

மேலும் இலவச டெங்கு காய்ச்சலுக்கு ஹோமியோ மருந்தும்  தரப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .

எங்களோடு இணைந்து மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் , மருத்துவ முகாமுக்கு பண உதவி செய்ய விருப்பம் உள்ளவர்களும் நமது இலவச மருத்துவ ஆலோசனைக்கான தொலை பேசி எண் 9688778640  -தொடர்பு கொள்ளளலாம் .





Post Comment