வெள்ளி, ஜூன் 15, 2012

உணவு விஷமாதலால் ஏற்படும் பாதிப்புக்கு - ஆனந்தபைரவ ரஸ Anandha Bairava Ras


புட் பாய்சனிங் என்னும் உணவு விஷமாதலால் ஏற்படும் பாதிப்புக்கு -
ஆனந்தபைரவ ரஸ Anandha Bairava Ras
   (ref-பஸவராஜீயம் - ஜ்வராதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த லிங்கம் (ஷோதித ஹிங்குள) 30 கிராம் எடுத்துப்போதுமான அளவு துருஞ்சிப் பழச்சாறு (மாதுலங்கஸ்வ ரஸ) விட்டறைத்து அத்துடன் பொடித்துச் சலித்த  
1.                சுக்கு சுந்தீ                     10 கிராம்                        
2.            மிளகு மரீச்ச                   40           “                            
3.            திப்பிலி பிப்பலீ                40           “
4.            பொரித்த வெங்காரம் டங்கண    30           “
                           
  இவைகளின் சூரணம்
5.            தனியே சிறிது துருஞ்சிப்பழச் சாறுவிட்டரைத்து விழுதாக்கிய சுத்தி செய்த நாபி (ஷோதித வத்ஸ நாபி) 30 கிராம்
இவைகளைச் சேர்த்து மேலும் சிறிது துருஞ்சிப் பழச்சாறு விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    துருஞ்சிப் பழச்சாற்றுக்கு பதிலாக எலுமிச்சம்பழச்சாறு உபயோகிப்பது சம்பிரதாயம்.

அளவு:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் தேன் அல்லது இஞ்சி சாற்றுடன் கொடுக்கவும். மற்ற பொருத்தமான அனுபானங்களுடனும் கொடுக்கலாம்.
தீரும் நோய்கள்:  



காய்ச்சல் (ஜ்வர), கழிச்சல்காய்ச்சல் (ஜ்வராதிஸார), ஆமவாதம் (ஆமவாத), பசியின்மை (அக்னி மாந்த்ய), செரியாமை (அஜீர்ண), உடல்வலியுடன் கூடிய காய்ச்சல், பேதி (அதிஸார), சீத பேதி (ப்ரவாஹிஹ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ).
  • பேதி, சீதபேதி, பெருங்கழிச்சல் போன்ற நிலைகளில் இது குடசப்பாளைவித்து (இந்த்ரயவ), லவங்கப்பட்டை (லவங்கத்வக்), சீரகம் (ஜீரக) ஆகியவற்றின் சூரணத்துடன் தரப்படுகிறது.
  • காய்ச்சல், செரியாமை, பசியின்மை, உடல்வலியுடன் கூடிய காய்ச்சல் போன்ற நிலைகளில் இது தேன் திரிகடுகுச் சூரணத்துடனோ அல்லது இஞ்சிச் சாற்றுடனோ அல்லது கொத்துமல்லி (தான்யக), மிளகு (மரீச்ச), பர்பாடகம் (பர்பாடக), சீந்தில் (குடூசி) மற்றும் லவங்கப்பட்டை (லவங்கத்வக்) ஆகியவற்றின் சூரணத்துடனோ தரப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆம அதிசாரம் என்னும் -சளியோடு சேர்ந்த சீத பேதிக்கு சிறந்த மருந்து இது ...
  2. உணவு விஷமாதல் என்னும் புட் பாய்சனிங் என்னும் நிலையில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. ஆமம் அதிகமாக உள்ள காய்ச்சலிலும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..
  4. நாள் பட்ட கிராணி கழிச்சளுக்கும் இந்த மருந்தை நம்பிக்கையோடு பயன்படுத்தலாம் ...
  5. மார்கெட்டில் மிக எளிதாக கிடைக்கிறது ..ஒரு மாத்திரை ஒரு ரூபாய்க்குள் தான் இருக்கிறது ..

Post Comment

பசியின்மையால் வருகிற நோய்களுக்கு -அக்னிதுண்டீவடீ -Agni thundi vat


பசியின்மையால் வருகிற நோய்களுக்கு -அக்னிதுண்டீவடீ -Agni thundi vat
  (ref-பைஷஜ்யரத்னாவளி அக்னிமாந்த்யாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

I.        சுத்தி செய்த ரஸம் ஷோதிதரஸ      10 கிராம்
2.      சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக  10          

இவைகளைச் சேர்த்துக் கஜ்ஜளி செய்து அத்துடன்

1.            ஓமம் அஜமோதா                               10 கிராம்
2.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  10          
3.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்10          
4.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10          
5.            கொடிவேலி வேர் சித்ரக                         10          
6.            சீரகம் ஜீரக                                     10          
7.            வாயுவிடங்கம்  -  விடங்க                       10          

இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம், மற்றும் பொடித்த

II.           

 1.            ஸர்ஜக்ஷாரம் ஸர்ஜக்ஷார             10 கிராம்
2.            யவக்ஷாரம் யவக்ஷார                10          
3.            இந்துப்பு ஸைந்தவலவண            10          
4.            கல்லுப்பு ஸ்வர்ச்ச லவண            10          
5.            சோற்றுப்பு ஸமுத்ர லவண                10          
6.            பொரித்த வெங்காரம் டங்கண சூர்ண   10          
தனித்தனியே சிறிது சாறுவிட்டரைத்து விழுதாக்கிய சூர்ண ஆகியன மற்றும்

III.            

1.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்ஸநாபி           10 கிராம்
2.            சுத்தி செய்த எட்டிக்கொட்டை - ஷோதிதவிஷமுஷ்டி 160    
ஆகியவற்றைச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீர ரஸ) கொண்டு நன்கு அறைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் வரை வெந்நீர், எலுமிச்சம் பழச்சாறு, தேன், இஞ்சிச்சாறு அல்லது ஜீரகக் கஷாயத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  


பசியின்மை (அக்னி மாந்தியம்), செரியாமை (அஜீர்ண), ருசியின்மை (அருசி) முதலிய ஜீரணக்கோளாறுகள், பெருங்கழிச்சல் (கிராணி) மற்றும் செரியாமையின் காரணமாக ஏற்படும் காய்ச்சல் (ஆமஜ்வர).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. ஆமம் என்ற செரியாத நிலையால் வரும் நோய்களுக்கு இந்த மருந்தை கொடுத்து ஆரம்பித்தால் நல்ல பலன் தெரியும் ..
  2. அஜீர்ணத்தால் ஏற்படுகிற கிரகணிக்கும் இந்த மருந்து நல்ல பலன் தரும் ..
  3. இந்த மருந்தை எனது கிளினிக்கில் கொடுத்து நல்ல பலன் கிடைத்துள்ளது ...நான் ஆமவாததிர்க்கும் இந்த மருந்தை பயன் படுத்துவதுண்டு ..

Post Comment

புதன், ஜூன் 13, 2012

அஜீரணத்தை சரி செய்யும் ஆதித்ய ரஸ -Adithya Ras


அஜீரணத்தை சரி செய்யும் ஆதித்ய ரஸ -Adithya Ras
(ref-யோகரத்னாகரம் - அஜீர்ணப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்திசெய்த லிங்கம் ஷோதித ஹிங்குள        10 கிராம்
2.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்ஸநாப           10          
3.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக            10          
4.            சுக்கு சுந்தீ                                     10          
5.            மிளகு மரீச்ச                                   10          
6.            திப்பிலி பிப்பலீ                                 10          
7.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  10          
8.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக் 10          
9.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10          
10.          ஜாதிக்காய் ஜாதீபல                             10          
11.          இலவங்கம் லவங்க                             10          
12.          இந்துப்பு ஸைந்தவலவண                       10          
13.          கல்லுப்பு ஸ்வர்ச்சலவண                        10          
14.          சோற்றுப்பு ஸமுத்ரலவண                      10          
15.          கருப்பு உப்பு பிடலவண                         10          
16.          வளையலுப்பு காச்சலவண                       10          

இவைகளை லிங்கம், கந்தகம், நாபி, பொடித்துச் சலித்த சரக்குகளின் சூர்ணம், உப்பு வகைகள் என்ற வரிசைக் கிரம்முறைப்படி முறையே ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ), துருஞ்சிச்சாறு, (மாதுலங்கஸ்வரஸ), நாரத்தம்பழச்சாறு, புளிப்பு மாதுளைச் சாறு (தாடிமஸ்வாஸ) மற்றும் புளிப்பான பழச் சாறுகளை ஏழு தடவை சரக்குகள் மூழ்கும் அளவிற்கு ஊற்றி ஊறவைத்து அரைத்துப் பதத்தில் எடுத்து 100 மில்லிகிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும். 

                எலுமிச்சம்பழச் சாற்றை மட்டும் அரைக்க உபயோகிப்பது சம்பிரதாயம்.

அளவும் அனுபானமும்:     

 ஒரு மாத்திரை வீதம் ஒரு வேளை முதல் மூன்று வேளைகள் வரை தேன் அல்லது இஞ்சி சாற்றுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

 பசியின்மை (அக்னிமாந்த்யம்), செரியாமை (அஜீரண) முதலிய ஜீரணக் கோளாறுகள், காய்ச்சல் (ஜ்வர) போன்ற நிலைகளில் சுக்குக் கியாழத்துடனோ சுக்கு, மிளகுக்கியாழத்துடனோ வழங்கப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. இந்த மருந்து பொதுவாக மார்க்கெட்டில் தயாரித்து ரெடி மேடாக கிடைப்பதில்லை ..

Post Comment

ரஸௌஷதங்கள்



                 
  • பாதரஸம், கந்தகம், அப்ரகம் போன்ற கனிமப் பொருள்களை முக்கிய மருந்துகளாகக் கொண்டுத் தயாரிக்கப்படும் மருந்துகளான ரஸௌக்ஷதங்கள் இந்தப் பிரிவின் கீழ் கூறப்படுகின்றன.
                 
  • இவைகள் தூள் வடிவிலோ, குளிகைகள் வடிவிலோ இருக்கலாம். மருந்துச் சரக்குகளை நன்கு கலந்து கல்வத்தில் இட்டு அரைத்து இவைகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஸ்வரஸம், கஷாயம் போன்றவற்றில் இவைகள் பாவனை செய்யப்படுகின்றன.
                 
  • இவைகள் பெரும்பாலும் உட்கொள்ளவே உபயோகிக்கப் படுவதால், முறைப்படி நன்கு சுத்தி செய்த மூலப் பொருள்களையே மருந்து செய்ய உபயோகிக்க வேண்டும். சுத்தி முறைகளும் நன்கு செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் இவைகள் கொடிய தீங்கை விளைவிக்கும்.
                 
  • அப்ரகம் போன்ற கனிமப் பொருள்களும், தாம்ரம் போன்ற உலோகப் பொருள்களும் பஸ்மமாக்கப்பட்ட பின்னரே மருந்து செய்ய உபயோகிக்கப்படுகின்றன.
                 
  • செய்முறையில் மற்ற சரக்குகளுடன் இலிங்கமும், கந்தகமும் சேர்க்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ள சமயங்களில் இரண்டையும் தனித் தனியே சுத்தி செய்து பொடித்துச் சேர்த்தறைத்த பின்னரும், இலிங்கம் மாத்திரம் சேர்க்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பின் அதைச் சுத்தி செய்து அரைப்புக்குக் குறிப்பிட்டுள்ள திரவத்தில் சிறிது சேர்த்து நன்கு அறைத்த பின்னர் மட்டுமே பொடித்துச் சலித்த மற்ற சரக்குகளின் சூர்ணத்தைச் சேர்த்து அரைக்க வேண்டும்.
               
  •  அவற்றுடன் பஸ்மங்களை சேர்க்க வேண்டுமென கூறப்பட்டிருப்பின் அவைகளைச் சரக்குகளின் சூரணங்களை சேர்க்கும் முன்னரே சேர்த்துச் சிறிது அறைத்துப் பின்னர் சூரணம் சேர்த்தரைக்க வேண்டும்.
                 
  • செய்முறையில் ரஸமும், கந்தகமும் பங்கு கொண்டால் கந்தகத்தை பொடித்தபின்னர் அத்துடன் ரஸத்தைச் சேர்த்து இரண்டு கஜ்ஜளிஎன்று கூறப்படும் கறுத்த நிறத் தூளாகும் வரை நன்கு அறைத்துப் பிறகு பஸ்மங்களையும், சரக்குகளின் பொடித்துச் சலித்த சூரணத்தையும் சேர்க்க வேண்டும்.
                 
  • மற்ற மருந்துகளுடன் வெள்ளி அல்லது தங்கம் சேர்வதாக இருந்தால் அவைகளை ரேக்காகச் செய்துக் கொண்டு முதலில் அவற்றை ரஸத்துடன் சேர்த்தரைத்துக் கொண்டு அதன் பின்னர் கந்தகத்தைச் சேர்த்துக் கஜ்ஜளியாக்கவும்.
                 
  • வங்கம், நாகம் இவைகளை உருக்கி திரவித்த நிலையில் அடுப்பிலிருந்து இறக்கி பக்குவமாக ரஸத்தை திரவித்த உலோகத்துடன் பக்குவமாகக் கலந்து பின்னர் கந்தகம் சேர்த்து அரைக்க வேண்டும்.
                 
  • கந்தகத்தைப் போன்றே தாளகம், மனோசிலை போன்ற கனிஜப் பொருள்களைத் தளுக்கு இன்றி நன்கு பொடித்து அரைத்த பின்னரே சேர்க்கவேண்டும். வத்ஸநாபி, எட்டிக் கொட்டை, ஊமத்தன் விதை இவைகளை சுத்தி செய்து தனியே சிறிது சாறுவிட்டு ஊறவைத்து அரைத்துச் சேர்க்க வேண்டும்.
                 
  • நேர்வாளத்தைச் சுத்தி செய்துத் தனியே அரைத்து மாத்திரையாக உருட்டும் தருணத்தில் சேர்க்க வேண்டூம். மற்ற தாவரச் சரக்குகளைச் சேர்க்கும் விஷயத்தில் அவைகளைப் பற்றி சூரணப்ரகரணத்தில் கூறியுள்ள பொது விதிகளை அனுசரிக்க வேண்டும்.
                 
  • மருந்துக் கலவை மூழ்கும் வரை சாறு வகைகள், கஷாயம் முதலியவற்றை ஊற்றி வைப்பதை பாவனைஎன்பர். பல தடவைகள் பாவனை செய்யும்படி கூறப்பட்டுள்ள இடங்களில் முதலில் ஊற்றிய திரவம் ஓரளவு வற்றிய பின்னரே இரண்டாம் முறை திரவம் ஊற்றப்பட வேண்டும். கல்வத்திலிட்டுத் தொடர்ந்து அரைப்பது திரவத்தை விரைவில் வற்றச் செய்கிறது. அவ்விதம் அரைப்பதை மர்தனம்என்பர். இவ்விரு முறைகளும் மருந்துகளைத் திறம்படச் செயலாற்றச் செய்கின்றன.
                 
  • ரஸௌஷதங்களில் அரைப்பு என்னும் அம்சம் மிகவும் முக்கியமானது. மருந்துகளின் நோய் நீக்கும் திறன் அவற்றின் அறவையின் தரத்தையே பெரிதும் பொருத்து இருக்கிறௌத். மேலும் அறவை நன்கு அமையாத மருந்துகளை உருட்டுவதும், நல்ல வடிவுடைய மாத்திரைகளாக்குவதும் மிகவும் கடினம்.
                 
  • ஆகையால் கஷாயம், சாறு, பால், மூத்திரவகைகள் போன்ற திரவங்களைக் கொண்டு செய்முறையில் குறிப்பிட்டுள்ளபடி நன்கு அரைக்கவேண்டும். இவைகளைச் சிறிய அளவில் முறைப்படி அவ்வப்போது தயாரித்துக் கொள்ள வேண்டும்.
                 
  • செய்முறையில் குறிப்பிட்டுள்ள கஷாய வகைகளில் சுத்தி செய்த குக்குலுவை நன்கு கரைத்துக் கொதிக்க வைத்து கெட்டிப்பாகு செய்து அத்துடன் பொடித்துச் சலித்த சூரணங்களைச் சேர்த்து மாத்திரையாக உருட்டியும் குக்குலு சேரும் மருந்துகளைத் தயாரிக்கலாம்.
                 
  • சரியான பதத்தில் விரல்களில் சிறிது நெய் தடவிக் கொண்டு உருட்ட வேண்டியவைகளை உருட்டியும், பொடிக்க வேண்டியவைகளைப் பொடித்துச் சலித்தும், வில்லைகளாக்க வேண்டியவைகளை முறைப்படி யந்திர உதவியால் வில்லைகளாக்கியும் இவைகளைத் தயாரிக்க வேண்டும்.
                
  •  மாத்திரைகளை உருட்ட அதற்கெனத் தயாரிக்கப்பட்ட யந்திரத்தை உபயோகிப்பது சிக்கனமானது. மாத்திரைகள் சீராக அமைவதுடன் குறுகிய காலத்தில் மிகுந்த அளவு மாத்திரைகளைச் செய்யவும் முடிகிறது.
                 
  • வாசனைச் சரக்குகளான கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், புனுகு முதலியவைகளை மாத்திரைகளாக உருட்டும் தருணத்திலேயே சேர்க்க வேண்டும்.
                 
  • பச்சை கற்பூரத்தைத் தனியே கல்வத்திலிட்டுப் பொடித்துச் சலித்துச் சேர்த்தரைக்க வேண்டும்.
                 
  • கஸ்தூரியையும் அரைத்தே சேர்க்க வேண்டும்.அதில் கிடக்கும் ரோமங்களை நீக்கிவிட வேண்டும்.
                 
  • புனுகைக் குப்பியுடன் சூடான தண்ணீரில் வைத்து உருக்கி மெல்லிய துணியின் வழியே பிழிந்து வடிகட்டிச் சேர்க்கவும்.
                 
  • குங்குமப்பூ, கோரோசனை, அம்பர் போன்றவைகளைத் தனியே சிறிது சாறுவிட்டு, அரைத்துக் கலவையுடன் சேர்த்துச் சிலமணி நேரம் தொடர்ந்து  அறைக்க வேண்டும்.
                 
  • யோகத்திலுள்ள மருந்துச் சரக்குகளை யொட்டியே இவற்றின் நிறமும், மணமும் அமைகின்றன. இவைகள் பொதுவாக வீரியமுடன் நெடுநாட்கள் வரை இருக்க வல்லவை.
  • மாத்திரைகளை நிழலில் உலர்த்திக் காயவைக்கவும்
     
மூட நம்பிக்கைகள் ....ஆயுர்வேத மருந்துகள் ,சித்த மருந்துகளில் நிறைய மெட்டாலிக் காம்பௌண்ட்ஸ் சேர்வதால் அவைகள் உடலுக்கு பாதகம் கிட்னியை பாதிக்கும்  என்று எல்லோராலும் நம்பபடுகிறது ...அதில் ஒரு சதம் கூட உண்மையில்லை ...இந்த ரச ஔஸதந்கள் கூட பக்க விளைவுகள் இல்லாதவை ...பிறந்த குழந்தை முதல் நூறு வயது பெரியவர் கூட பயமில்லாமல் ஆயுர்வேத சித்த மருந்துகளை எடுத்துகொள்ளலாம் ..
            .    

Post Comment