சனி, மார்ச் 23, 2013

தோல் நோய்களில் நல்ல பலன் தரும் -ஏலாதி சூர்ணம்


ஏலாதிச் சூரணம்
ELADHI CHOORNAM (SIDDHA MEDICINE)
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
            “ கொள்ளவே யேலாதிச் சூர ணங்கேள்
               குணமான லவங்கமொன்று மிளகி ரண்டு
   விள்ளவே நாகம்நாலு தாளிச மெட்டு
   விதமான குகைநீறு பதினா றாகும்
   நள்ளவே சுக்கதுதான் முப்பத் திரண்டு
   நலமான வேலமது வறுபத்து நாலு
   கள்ளவே சர்க்கரைதான் சமனாய்க் கூட்டிக்
   கலந்துபுதுக் கலசமதில் பதனம் பண்ணே. “
-       சித்த வைத்திய திரட்டு



சேரும் பொருட்களும்அளவும் :
கிராம்பு                      0.39 %            மிளகு                         0.79 %
சிறுநாகப்பூ                1.57 %            தாளிசபத்திரி             3.15 %
கூகைநீர்                    6.30 %            சுக்கு                           12.60 %
ஏலக்காய்                   25.20 %          சர்க்கரை                    50.00  %
அளவும்துணை மருந்தும் :
கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது வெந்நீரில் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள் :
பித்தவாயுவாயுகிரந்திவிரணம்அரிகிரந்திசில்விஷம்குட்டம்குறைநோய்பெரும்பாடுஎலும்புருக்கிஆரம்ப குஷ்டம்சொறிசிரங்கு.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள ஏலாதி சூரணமும் ஆயுர்வேத மருந்தில் உள்ள ஏலாதி சூரணமும் ஒன்றல்ல ..

தோல் நோய்களில் இந்த ஏலாதி சூரணத்துடன் பலகறை பற்பம் கலந்து தர மிக நல்ல பலன் அளிக்கும் ..
பித்த வாயு ,எரி  வாயுக்கு இந்த மருந்தோடு சங்கு பற்பம் கலந்து தர நல்ல பலன் தரும் ..



Post Comment

பித்த மயக்கத்திற்கு -சளிக்கு மருந்தாகும் -அதிமதுரச் சூரணம்


அதிமதுரச் சூரணம் 
ADIMADURA CHOORNAM ( SIDDHA MEDICINE )
சிகிச்சா ரத்தின தீபம்
சேரும் பொருட்களும்அளவும் :

அதிமதுரம்                 3.125 %                      கோஷ்டம்                  3.125 %         
மஞ்சிட்டி                    3.125 %                      ஏலம்                           3.125 %
நெல்லிவற்றல்           3.125 %                      சடாமாஞ்சில்             3.125 %
சுக்கு                           3.125 %                      மிளகு                         3.125 %
திப்பிலி                      3.125 %                      திப்பிலிமூலம்                        3.125 %
பச்சைக் கற்பூரம்       3.125 %                      செஞ்சந்தனம்                        3.125 %
கிராம்பு                      3.125 %                      தாளிசபத்திரி             3.125 %
சீரகம்                         3.125 %                      சிறுநாகப்பூ                3.125 %
சர்க்கரை                    50.000 %
அளவும்துணை மருந்தும் :
கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது தேனுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
சித்தப் பிரமைபித்த கிருகிருப்புவாய் நீரூறல்அரோசகம்வாந்தி
பத்தியம் :
இச்சா பத்தியம்
 தெரிந்து கொள்ள வேண்டியவை ..
ஆயுர்வேத மருத்தவத்தில் கூறபடுகிற யஷ்டி  சூர்ணத்திற்க்கும் இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது ..
பித்த மயக்கத்திற்கு  முசுமுசுக்கை சூரணத்துடன் -திராக்ஷாதி கஷாயத்துடன் தர நல்ல பலன் தரும் ..
சளி ,குரல் கம்மல் ,தொண்டை புண் போன்ற நோய்க்கும் தரலாம் 

Post Comment

அஜீரணத்தை போக்கும் அற்புத மருந்து -அஷ்ட தீபாக்கினிச் சூரணம்






அஷ்ட தீபாக்கினிச் சூரணம் -ASTA DEPPAGNI CHOORNAM  ( SIDDHA MEDICINE)
சிகிச்சா ரத்தின தீபம்


சேரும் பொருட்களும்அளவும் :
சுக்கு                           12.50 %                      மிளகு                         12.50 %
திப்பிலி                      12.50 %                      ஓமம்                           12.50 %
இந்துப்பு                     12.50 %                      சீரகம்                         12.50 %
கருஞ்சீரகம்               12.50 %                      பெருங்காயம்             12.50 %
அளவும்துணை மருந்தும் :
கிராம் முதல் 3 கிராம் வரை இரண்டு அல்லது மூன்று வேளைகள் நெய்யுடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
வயிற்றில் உண்டாகும் வாயுக்களை பரிகரிக்கும்குன்மரோகத்தில் முதற்குறியாகிய அஜீரணத்தைப் போக்கும்.
கிடைக்கும் அளவு :           100 கிராம்     500 கிராம்
குறிப்பு :
போஜன சமயத்தில் அன்னத்தில் முதலில் நெய் சேர்த்து உண்டு பின்னர் எளிதில் சீரணிக்கக்கூடிய பதார்த்தக் குழம்பினங்களுடன் சாப்பிட சீரணமாகும்.

தெரிந்து  கொள்ள வேண்டியவை ..
ஆயுர்வேதத்தில் கூறப்படுகிற அஷ்ட சூரணமும் இதுவும் ஒன்று ..
சமையலறையில் உள்ள பொருட்களில் செய்யபடுகிற இந்த மருந்து நமது முதலுதவிபெட்டியிலும் இருக்க வேண்டிய அற்புத மருந்து இது 

Post Comment

வெள்ளி, மார்ச் 22, 2013

எல்லா நோய்க்கும் ஓர் மருந்து -அமுக்ரா சூர்ணம்


அமுக்கராச் சூரணம் -AMUKRA CHOORNAM (SIDDHA MEDICINE)
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
            “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
               குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
               தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
  தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
  வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
  விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
  நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
  நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
 செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “
-       அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360
சேரும் பொருட்களும் அளவும் :


இலவங்கம்                0.39 %                        சிறுநாகப்பூ                0.79 %                       
ஏலம்                           1.57 %                        மிளகு                         3.15 %
திப்பிலி                      6.30 %                        சுக்கு                           12.60 %
அமுக்கரா வேர்         25.20 %                      சர்க்கரை                    50.00 %

அளவும்துணை மருந்தும் :
கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம்இடப்பாட்டு ஈரல் நோய்குத்துவாய்வுவெட்டைபிரமியம்இக்கல்பாண்டுஇரைப்புஇளைப்புச் சயம்வறட்சிகை கால் எரிவு தீரும்.
கிடைக்கும் அளவு :         100 கிராம்     500 கிராம்
குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
சித்த மருத்தவத்தில் மேலே கூறப்பட்ட அமுக்ராசூர்ணமும் ,ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிற அஸ்வகந்தா  சூரணமும் ஒன்றில்லை ..
உடலை வலுபடுத்தும் ..வன்மையாக்கும் ..
ஆண்மை அதிகரிக்கும் என்று மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது தவறு ..

எல்லா நோய்க்கும் ஓர் மருந்து -அமுக்ரா சூர்ணம் 

குறிப்பு -இனி சித்த மருந்து செய் முறைகளும் நடு நடுவே தொடரும் ..
இந்த பான்ட் பிடிக்காதவர்கள் ,திறக்க இயலாதவர்கள் தொடர்பு கொள்ளலாம் ..


Post Comment