சனி, மார்ச் 23, 2013

தோல் நோய்களில் நல்ல பலன் தரும் -ஏலாதி சூர்ணம்


ஏலாதிச் சூரணம்
ELADHI CHOORNAM (SIDDHA MEDICINE)
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
            “ கொள்ளவே யேலாதிச் சூர ணங்கேள்
               குணமான லவங்கமொன்று மிளகி ரண்டு
   விள்ளவே நாகம்நாலு தாளிச மெட்டு
   விதமான குகைநீறு பதினா றாகும்
   நள்ளவே சுக்கதுதான் முப்பத் திரண்டு
   நலமான வேலமது வறுபத்து நாலு
   கள்ளவே சர்க்கரைதான் சமனாய்க் கூட்டிக்
   கலந்துபுதுக் கலசமதில் பதனம் பண்ணே. “
-       சித்த வைத்திய திரட்டு



சேரும் பொருட்களும்அளவும் :
கிராம்பு                      0.39 %            மிளகு                         0.79 %
சிறுநாகப்பூ                1.57 %            தாளிசபத்திரி             3.15 %
கூகைநீர்                    6.30 %            சுக்கு                           12.60 %
ஏலக்காய்                   25.20 %          சர்க்கரை                    50.00  %
அளவும்துணை மருந்தும் :
கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது வெந்நீரில் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள் :
பித்தவாயுவாயுகிரந்திவிரணம்அரிகிரந்திசில்விஷம்குட்டம்குறைநோய்பெரும்பாடுஎலும்புருக்கிஆரம்ப குஷ்டம்சொறிசிரங்கு.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள ஏலாதி சூரணமும் ஆயுர்வேத மருந்தில் உள்ள ஏலாதி சூரணமும் ஒன்றல்ல ..

தோல் நோய்களில் இந்த ஏலாதி சூரணத்துடன் பலகறை பற்பம் கலந்து தர மிக நல்ல பலன் அளிக்கும் ..
பித்த வாயு ,எரி  வாயுக்கு இந்த மருந்தோடு சங்கு பற்பம் கலந்து தர நல்ல பலன் தரும் ..



Post Comment

0 comments:

கருத்துரையிடுக