புதன், மே 31, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (நிறைவு பகுதி ) முதுமை காணாத ஆரோக்கியமான இளமை வாழ்க்கைக்கு :-

ஆயுர்வேதத்தில் அழகியல்  (நிறைவு பகுதி )
முதுமை காணாத ஆரோக்கியமான இளமை வாழ்க்கைக்கு :-


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS






ஆயுர்வேதம் என்றால் இங்கே சோப் ,ஷேம்ப் என்றே பலராலும் அறியப்பட்டு வருகிறது . ஆயுர்வேதம் என்கிற வாழ்க்கை அறிவியலை  மேற்கத்திய கலாசாரத்தால் இன்றைய உலகத்தில் வெறும் புற அழகுக்கு மட்டும் தான்  தவறாக விளம்பரம் செய்யபடுகிறது.


ஒரு மூலிகையை சேர்த்தால் இங்கே துணி துவைக்கும் கெமிகல் பவுடர் கூட ஆயுர்வேதம் என்று விளம்பரபடுத்த படுகிறது.


ஓரிரு மூலிகையை பயன்படுத்துவதால் மட்டுமே ஆயுர்வேத அழகு நிலையங்கள் என்று தவறாக புரிந்து கொள்ளபடுகிறது .பியூட்டி பார்லர்கள் தரும் செயற்கை அழகை ஆயுர்வேதம் என்கிற போலி பெயரில் மக்களை சென்றடைகிறது .


ஆயுர்வேதம் என்றாலே மசாஜ் சென்டர் என்கிற நிலையம் என்கிற அளவிலே தான் தமிழ் நாட்டில் அறியப்பட்டு வருகிறது .


தமிழ்நாட்டில் 5 % அளவு மக்கள் மட்டும் ஆரோக்யதிற்க்காக ஆயுர்வேதத்தை நாடுகிறார்கள் என்கிறது ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.


21 மூலிகையை கொடுத்து வளர்த்தால்     இங்கே பிராய்லர் கோழியும் மூலிகை கோழியாகும் என்கிறது இந்த போலி வியாபர உலகம்


மூலிகை கதைகள் பார்வேர்ட் செய்யும் பலருக்கு இந்த மூலிகை எங்கே பவுடராக கிடைக்கும் என்கிறது என்பதே முதல் கேள்வியாக இருக்கிறது ..மருதாணியையும் கெமிகல் கலந்த மெஹந்தி பவுடரும் ஒன்றே என்று இந்த தமிழ் சமூகம் நம்பி கொண்டிருக்கிறது .பாக்கெட்டில் ஆயுர்வேதம் கிடைக்கும் என்று போலி லேபிளில் உண்மை என்று expiry தேதி மட்டுமே பார்க்கிறது இந்த சமூகம் .


நூறு மிலி ரோஸ் வாட்டர் எப்படி மலிவு விலையில் கிடைக்கிறது என்று கேள்வி கேட்க மறுக்கிறது இந்த சமூகம்.


கலப்படம் எப்படி செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்யும் இந்த உலகத்தில் ஆர்கானிக் என்கிற போர்வையில் வருகிற பூதங்களை அழகிய ஆபத்து –எது உண்மை –எது போலி என்று தெரிந்து கொள்ள மறுக்கிறது இந்த உலகம் .


அரைகுறை மூலிகை அறிவை கொண்டவர்கள் பலருக்கு திடீர் வைத்தியனாய் பரிணமித்து விடுகிறார்கள். காவி உடையும் ,தாடியும் கொண்டால் இங்கே சித்தர் என்று நம்ப பெரிய கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது .


விழிப்புணர்வு ஒன்றே ஆயுர்வேத சித்த –தாய் மருத்துவத்தை எனது தாய் நாட்டு மக்களுக்கு சென்றடைய வைக்கும் என்று நம்பியவனாக இரவின் பல மணித்துளிகளை மக்களுக்கு விதைத்து கொண்டே இருக்கிறேன் –இந்த புனித ரமலான் மாதத்திலும் ஓய்வை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையிலும் என் பணி பிணி நீக்க செய்வதிலே என்று தொடர் எழுத்தை அறப்போராக செய்து கொண்டே இருக்கிறேன் .


ரசாயனம் என்கிற ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒரு பிரிவான என்றும் ஆரோக்யமாய் –இளமையாய் ,முதுமை தொட்டு விடாமல் வாழும் ஒரு பகுதியை மக்களுக்கு சென்றைடைய வைக்க என்னால் ஆன ஒரு சிறிய முயற்சி ..

முதுமை காணாத ஆரோக்கியமான இளமை வாழ்க்கைக்கு :-

ஆயுர்வேத மூலிகைகள் :-


  • சீந்தில்
  • கடுக்காய்
  • நெல்லிக்காய்
  • கன்னிக்கொடி
  • பாலைக்கீரை
  • தண்ணீர்வீட்டான் கிழங்கு
  • பிரம்மி
  • புல்லத்தி
  • மூக்கிரட்டை



ஆயுர்வேத மருந்துகள் :-


  • ச்யவனப்ராஷம்
  • சாரஸ்வதாரிஷ்டம்
  • ப்ருங்கராஜாசவம்
  • பஞ்சாரவிந்த சூரணம்
  • சிவகுளிகா
  • ப்ரம்ம ரசாயணம்
  • நரசிம்ம ரசாயணம்
  • பிருஹத் பூர்ணசந்திர ரஸ்
  • லட்சுமிவிலாச ரஸ்



ஆயுர்வேத சிகிச்சைகள் :-



  • o இரசாயன சிகிச்சை
  • o வாஜிகரண சிகிச்சை
  • o அப்யங்கம்
  • o குடிப்ராவேஷிகம்
  • o வஸ்தி
  • o நவரக் கிழி
  • o க்‌ஷீர தாரா



வெளிபிரயோகம் மட்டும் அழகை தராது ..ஆரோக்யமான வாழ்க்கை தான் அழகின் அடிப்படை என்று மக்களே தெரிந்து கொள்ளுங்கள் .

அந்த காலத்தில் ராஜாக்களுக்கு பயன்பட்ட ராஜ வைத்தியங்கள் ஆயுர்வேதம் இன்று கடைசி குடிமகனுக்கும் சென்றடைந்து  –பலனடைய வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று நம்பியவனாக விழிப்புணர்வே இன்றைய தேவை –ஒன்றிணைந்து இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இந்திய மருத்துவத்தாலே நலம் பெறுவோம்.
சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)

Post Comment

செவ்வாய், மே 30, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -5)-உடல் எடையை குறைக்க

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -5)
பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் எடையினை குறைப்பதற்கு


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS


அழகை விரும்பும் யாரும் குண்டாய் இருக்க விரும்புவதே இல்லை . தொந்தி ,உடலில் அதிகமான சதை ,கூடி கொண்டே போகும் உடல் எடை இதை மையமாய வைத்து  உலகத்தில் எத்தனை  எத்தனை வியாபரங்கள் ..

காதில் பூ அல்ல பூக்கூடை வைக்கும் அளவுக்கு எந்த ஒரு ஆதாரம் இல்லா மருத்துவ துணுக்குகள் ,மருத்துவ கதைகள் .எது உண்மை எது பொய் ?. உடல் எடையை குறைப்பது உண்மையில் எளிது அனால் இழந்த எடையை தக்க வைத்து கொள்ளத்தான் யாருக்கும் இங்கே வழிகள் தெரியவில்லை.


வீட்டில் தூங்கும் உடல் பயிற்சி இயந்திரங்கள் ,மறந்து போன யோகா பயிற்சிகள் ,நடக்க மறந்த கால்கள் ,ஆசையை அடக்க முடியாத வாய்கள் என எல்லாமே இங்கே துவங்குவது எளிது ..கடைபிடித்து காப்பற்றுவது தான் கஷ்டம் .


ஆயுர்வேதத்தில் உடல் எடை கூட காரணம் சரியான ஜீரண சக்தி இல்லாத நிலை –ஆமம் என்கிற பசி அறியா உடலில் தேங்கும் விஷம் –இதை தான் நவீன மருத்துவம் மெட்டபாலிக் சின்ட்றோம் என்கிறது .தொற்றா நோய்களுக்கு முக்கிய காரணம் வாழ்வியல் மாற்றங்கள் ,மன அழுத்தம். இந்த வேகமான உலகத்தில் சாப்பிட்டுவது ,பார்டி கொடுப்பது ,டீ கொடுத்து உபசரிப்பது ,குளிர்பானங்களை கொடுத்துதான் அன்பை வெளிப்படுத்தி அன்பானவர்களை நோயாளியாக்கி விடுகிறோம்- உணவு கலாசாரம் விஷம் உள்ளதாய் இருக்கிறது.


ஆயுர்வேதம் உடல் எடை குறைக்கும் சிகிச்சைகளை லங்கண சிகிச்சை முறைகளை ,கபத்தை குறைக்கும் அப தர்பண சிகிச்சை முறைகளை கையாள சொல்கிறது ..இந்த சிகிச்சை முறைகளை பின்னர் வாய்ப்பு வரும்போது விரிவாக பார்போம்


பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் எடையினை குறைப்பதற்கு :-

ஆயுர்வேத மூலிகைகள் :-

  •              கோரைகிழங்கு
  •              ஆவில் என்ற புங்கம் வேர்
  •              குக்குலு
  •              பிரம்மி
  •              சீந்தில்
  •              கற்றாழை
  •              கடுக்காய்
  •              சுக்கு
  •              மிளகு
  •              திப்பிலி
  •              மஞ்சள்
  •              மரமஞ்சள்
  •              கொட்டம்
  •              வசம்பு
  •              கொடுவேலி
  •              அதிவிடயம்
  •              கடுகரோஹினி
  •              அதிமதுரம்



ஆயுர்வேத மருந்துகள் :-

  •              வராதி கஷாயம்
  •              வரணாதி கஷாயம்
  •              லோஹாசவம்
  •              ஆரோக்ய வர்தினி வடி
  •               மேதோஹர குக்குலு
  •              நவக குக்குலு
  •              திரிபலா சூர்ணம்
  •              அமிரதாதி குக்குலு
  •              திரிபலா குக்குலு
  •              குக்குலு பஞ்ச பல சூர்ணம்




ஆயுர்வேத சிகிச்சைகள் :-


  • o             உத்வர்தணம்
  • o             வமனம்
  • o             விரேசனம்
  • o             லேகன வஸ்தி
  • o             ஸ்வேதனம்
  • o             யோகாசனம்
  • o             வியாயாமம்



லைப்போ சக்ஷன் என்று கொழுப்பை கரைக்கும் அறுவை சிகிச்சை அவசியம் இல்லை ..நீராவி குளியலில் உட்கார வைத்து உடலின் நீர் சத்து குறைந்த உடன் உடனடியாக ஏற்படும் உடல் இழப்பை காட்டி ஒரு கிலோ குறைக்க இத்தனை ரூபாய் என்று ,இத்தனை இஞ்ச் குறைக்க இவ்வளவு பணம் என்று பணம் பறிக்கும் கொள்ளை கும்பலை பற்றி அறிந்து கொள்வது அவசியம் .உடல் எடை குறைக்க உதவும் ஸ்பா போன்ற அழகு நிலையங்களில் பக்க விளைவும் ஆபத்துமே நிறைந்து உள்ளது .


ஸ்தௌல்யம் என்கிற உடல் எடை கூடிய நிலையை மாற்ற ஆயுர்வேதம் இன்னும் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள சொல்கிறது ..எந்த நோயால் உடல் பருமன் உண்டாகிறது என்று தெரிந்து தக்க உணவு அட்டவணை ,செய்ய வேண்டியவை என்ன ,செய்ய கூடாதவை என்ன என்று ஆயுர்வேத பட்டியல் நீள்கிறது .தகுந்த ஆயுர்வேத சித்த மருத்துவரை அணுகி உடல் எடை குறைய தக்க ஆலோசனை பெற்றே உடல் எடையை குறைப்பது நல்லது .

சிறந்த ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)

Post Comment

திங்கள், மே 29, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -4) உடல் எடை கூட

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -4)

உடல் எடை அழகுடன் ஆரோக்யமாய் கூடிட


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS


மெலிந்த உடலுக்கு பல மருத்துவ காரணங்கள் உள்ளது ..முகம் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும்  உடல் மிகவும் மெலிந்து இருந்தால் அழகாய் தோன்றாது


ஆயுர்வேதத்தில் ப்ரும்ஹன சிகிச்சை என்று மெலிந்தவர்களை குண்டாக்கிட சிறப்பு சிகிச்சைகள் ,மருந்துகள்  பற்றியும் –உடல் எடை போட செய்ய வேண்டியவை ,செய்யக்கூடாதவை பற்றியும் விரிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது. ஜிம்முக்கு போகிறவர்கள் சாப்பிடுகிற புரத மாவு போல் அல்லாது முழு உணவு திட்டத்தையும் ஆயுர்வேதம் அலசி ஆராய்கிறது .
உடல் பருமனாக வேண்டுமானால் முதலில் உடல் சூடு அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும் . ஜீரண சக்தி சரியாக இருக்க வேண்டும். எழு தாதுக்கள் சீராக இருக்க வேண்டும் .அமைதியான மனம் வேண்டும் .



பால்முதுக்கன் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு ,நிலப் பூசணி, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, அக்ரூட் பருப்பு (Walnut), பிஸ்தா பருப்பு, அத்திப் பழம், சாலாமிசிரி (Orchismascula), வெள்ளரி விதை, பூசணி விதை, முருங்கை விதை, அமுக்குரா, பருத்திப் பால், நெல்லிக் கனி, பேரீச்சம்பழம், முருங்கைப் பூ, முருங்கை பிசின், சர்க்கரை, பசும்பால் ஆகியவை உடல் போஷாக்கு தருபவை. கறுப்பு எள், வேர்க்கடலைப் பருப்பு, கறுப்பு உளுந்து, உலர்ந்த திராட்சை, பனைவெல்லம் போன்றவையும் பலன் தரலாம். மாம்சம் மாம்சேன வர்ததே என்கிறது ஆயுர்வேதம் –அதாவது மாம்ச உணவுகள் உடல் மாமிசத்தை கூட்டும்.எனவே Non Veg உணவுகள் –மாம்ச சூப்புகள் நல்ல பலன் தரும் ,



இயற்கை முறையில் உடல் எடையை அதிகரிக்க

ஆயுர்வேத மூலிகைகள் :-


  • பாலை 
  • பால்பெருக்கி
  • அமுக்கரா
  • அம்மான்பச்சரிசி
  • சிற்றாமுட்டி
  • வெண்பூசணி 
  • காட்டு பருத்தி
  • தண்ணீர்விட்டான் கிழங்கு
  • அதிமதுரம்



ஆயுர்வேத மருந்துகள் :-


  • அஷ்வகந்த லேகியம்
  • கூஷ்மாண்மட அவலேகியம்
  • விதார்யாதி லேகியம்
  • ச்யவனப்ராஷ லேகியம்
  • வசந்த குசுமாகர ரஸ்
  • அஷ்வகந்த சூர்ணம்
  • நரசிம்ஹா ரசாயனம் 
  • ப்ருஹத் சாகல்யாதி கிருதம் 



ஆயுர்வேத சிகிச்சைகள் :-


  • o அப்யங்கம்
  • o நவரக்கிழி
  • o ப்ரும்ஹன வஸ்தி



குறுக்கு வழியில் குண்டாக முயல கூடாது ..உடல் எடை குறைய என்ன காரணம் என்று தெரிந்தே தக்க சிகிச்சை எடுக்க வேண்டும் .

ப்ரமேஹம் என்கிற சர்க்கரை நோயில் உடல் எடை குறையும்- அதற்க்கு வேறு வகையான ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளது

ராஜயக்ஷ்மா என்கிற உடல் தேய்வு நோயிலும் உடல் எடை குறையும் –அதற்க்கு ஆயுர்வேதத்தில் அற்புதமான சிகிச்சைகள உண்டு .ப்ரைமரி காம்ளெக்ஸ் நோயால் உடல் எடை கூடாத குழந்தைகளுக்கு ஆயுர்வேதத்தில் சிறப்பு சிகிச்சைகள் உள்ளது

கிரஹனி  என்கிற கிராணி கழிச்சல் நோயிலும் உடல் எடை கூடாது- அதற்கு ஆயுர்வேதத்தில் பல சிகிச்சைகள் உள்ளது

ஹைப்பர் தைராய்ட் நோயால் உடல் எடை குறைந்தவரை குண்டாக்க ஆயுஷ் சிகிச்சையால் முடியும்

கடைகளில் விற்கபடுகிற கண்ட கண்ட ப்ரோட்டின் மாவுக்களை தரமானது என்று சாப்பிட்டு உடலுக்கு கேடு விளைவித்து கொள்ளாதீர்கள். உடல் எடை கூட எக்காரணத்தை கொண்டும் ஸ்டீராய்ட் கலந்த மருந்துகளை எடுத்துகொள்ளாதீர்கள்.

ப்ரும்ஹன சிகிச்சை எடுத்து உடல் எடை கூட தக்க சித்த ஆயுர்வேத மருத்துவரை ஆலோசனை பெறுங்கள் . சிறந்த ஆயுர்வேத சித்த ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)

Post Comment

ஞாயிறு, மே 28, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -3) -கண் அழகு

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -3)

அழகுடன் கூடிய கூர்மையான கண்பார்வைக்கு

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS

காந்த கண் அழகை விரும்பாதவர் உலகத்தில் யாரும் இல்லை .புருவத்தை திருத்துதல் ,கண் இமைக்கான அழகு ,வித விதமான காண்டாக்ட் லென்ஸ் வரை கண்ணில் இன்றைய அழகு சாதனங்கள் விரிந்து கிடக்கிறது. கண்ணுக்கு மை தீட்டிய காலம் எல்லாம் இப்போது மலைஏறி விட்டது . அஞ்சனக்கல்லை நாம் மறந்தே போய் விட்டோம்.. வெறும் கருப்பு பென்சில்கள் கண்ணை கறையாக்குகிறது.

எண் வகைதேர்வில் கண் ஒரு மிக முக்கியமான பரிசோதனை .கண்ணை வைத்து பல நோய்களை எளிதாக கணித்து விட முடியும் என்கிறது சித்த ,ஆயுர்வேத மருத்துவம். கண் சார்ந்த நோய்களை இந்திய மருத்துவம் சொன்ன அளவுக்கு எந்த மருத்துவமும் சொல்ல வில்லை என்பது மறுக்க முடியாத உண்மை .அறுவை சிகிச்சையின் தந்தை ஆச்சார்யர் சுஸ்ருதர் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னே கண்ணில் பல அறுவை சிகிச்சைகளை செய்து வந்துள்ளார் ..ஆனால் இன்று நாமோ ஆயுர்வேதம் என்ற பெயரிலே வெறும் கண்ணின் புற அழகை மட்டும் ஆயுர்வேதம் செய்கிறது என்று நம்புகிறோம் .



  
அழகுடன் கூடிய கூர்மையான கண்பார்வைக்கு :-

ஆயுர்வேத மூலிகைகள் :-

  •              நெல்லிக்காய்
  •              கடுக்காய்
  •              தான்றிக்காய்
  •              திராட்சை
  •              திப்பிலி
  •              சீரகம்
  •              பாலைக்கொடி (ஜீவந்தி)
  •              மணத்தக்காளி
  •              சுகந்தமரம்
  •              கற்றாழை
  •              பூண்டு
  •              வெட்டிலைக்கஸ்தூரி
  •              இலவங்கப்பட்டை
  •              வேப்பிலை             நொச்சி
  •              தாமரை
  •              சிவப்பு சந்தனம்
  •              தண்ணீர்விட்டான் கிழங்கு
  •              அதிமதுரம்


ஆயுர்வேத மருந்துகள் :-

  •              மகா திரிபலா க்ருதம்
  •              ஆமலகி சூர்ணம்
  •              சைளவீராஞ்சனம்
  •              திரிபலா சூரணம்
  •              ஆக்ஷபீஜாதி குலிகா
  •              இளநீர் குழம்பு
  •              நேத்ராமிர்தம்
  •              ஜீவந்தியாதி க்ருதம்


ஆயுர்வேத சிகிச்சைகள் :-



  • o             நேத்ர தர்பணம்
  • o             அஞ்சனம்
  • o             நேத்ர புடபாகம்
  • o             நேத்ர சேகம்
  • o             ஆஷ்சோதனம்
  • o             நேத்ர விடாலகம்
  • o             பாத அப்யங்கம்
  • o             திராடகம்


நாம் இங்கே தெளிந்து கொள்ள வேண்டியது ..கண்ணாடி இல்லாமல் கண் பார்வையை கொடுக்க கூடியது ஆயுர்வேதம். கண்ணின் புருவ ,இமை மற்றும் வெளிப்புற அழகை மட்டுமல்லாது கண்ணின் அக அழகையும் ஆயுர்வேதம் உறுதியாய் காக்கும்

உடல் சூட்டை குறைக்காமல் ,இயற்கையான உணவை பேணாமல் ,இரவு சரியாக தூங்காமல் ,கணிணியே ,செல்போனே கதியே என்று வாழும் கண்கள் உண்மையில் முகத்தில் புண்கள் என்று தெளிவோம் ..

கண் உள்ளும் புறமும் அழகாய் மாற தகுந்த ஆயுர்வேத சித்த மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள் ..சிறந்த ஆயுஷ் சிகிச்சைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)

Post Comment

சனி, மே 27, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -2 ) பொலிவான முகம் , உ டல் அழகை பெற

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -2)

( ஆரோக்கியமான முகம் மற்றும்  உடல் பொலிவினை பெற )

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS

உலகத்தில் உள்ள எல்லா அழகு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு முகத்தை வெள்ளையாக்க ஆயுர்வேதம் என்கிற வியாபர யுக்தியை பின்பற்றுகிறார்கள் ..ஒரே ஒரு மூலிகை எசன்சை சேர்த்து விட்டு ஆயுர்வேத  முக அழகு மருந்து என்று கூசாமல் பொய் சொல்லி சந்தை படுத்திகிறது ..


மஞ்சளை முகத்தில் தேய்க்க மறுக்கும் நாகரிக மங்கையர்கள்   பலர் இங்கே உள்ளனர் ..இவர்களிடம்  ..Turmeric Face வாஷ் என்று பொய் சொல்லி விளம்பரம் செய்தால் போதும் ..   டிவியில் காண்பதெல்லாம் உண்மை என்று கண்டதை எல்லாம்    முகத்தில் வாங்கி பூசிக்கொண்டு எமாந்து போகிறார்கள் ..இவர்களுக்கு   நாற்பது வயதில் முழு வயோதிகத்தை வந்தே விடுகிறது  அதை மறைக்க ஏறாத ஸ்பா எல்லாம் ஏறி  ஆயுர்வேதிக் அழகு நிலையம் என்றால் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் ஏமாந்து போகிறவர்கள் தான் அதிகம் .

இங்கே ஆயுர்வேதம் என்கிற பெயரில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த போலிகள் தான் அதிகம் என்பதை மறுக்கவே முடியாது . பெட்ரோலியம் ஜெல்லி கலக்காமல் எந்த முக கிரீம்களும் வர முடியவே முடியாது என்கிற நிலை தான் இங்கே உள்ளது .


ஆரோக்கியமான முகம் (ம) உடல் பொலிவினை பெற :-

ஆயுர்வேத மூலிகைகள் :-
  •              சந்தனம்
  •              வெட்டிவேர்
  •              நன்னாரி
  •              புன்னை
  •              பதுமுகம்
  •              அதிமதுரம்
  •              மஞ்சட்டி
  •              அருகம்புல்


ஆயுர்வேத மருந்துகள் :-

  •              குங்குமாதி தைலம்
  •              நால்பாமராதி தைலம்
  •              தினேஷவல்யாதி தைலம்
  •              லசீகாம்ருதம் தைலம்
  •              தூர்வாதி தைலம்
  •              சந்தனாதி தைலம்
  •              திரிபரா தைலம்


ஆயுர்வேத சிகிச்சைகள் :-

  • o             உத்வர்தனம்
  • o             அபியங்கம்
  • o             கஷாய தாரா
  • o             முக லேபம்
  • o             நவரக்கிழி
  • o             க்‌ஷீர தாரா
  • o             நஸ்யம்



உலக அழகி பட்டங்களை அள்ளி தந்து இந்திய அழகியல் துறையில் அந்நிய ஆதிக்க பொருட்கள் நம்மை பயமுறுத்துகிறது ,,எது உண்மை ,,எது பொய் என்று பிரித்து அறிய முடியாத அளவுக்கு அசலை மிஞ்சுகிறது போலிகள் . 

திரும்பிய பக்கமெல்லாம் மூலிகை அழகு நிலையங்கள் இதில் எது உண்மை அது பொய் ?

எதோ ஒரு மூலிகையை வைத்து அழகு நிலையம் வைத்தால் அது ஆயுர்வேதிக் அழகு நிலையம் ஆகி விடும் என்ற நிலைதான் இந்தியா முழுவதும் ..

ரசாயனம் என்னும் காய கல்ப என்றுமே இளமையாக இருக்க வைக்க உள்ளும் புறமும் சிகிச்சை மேற்கொள்ள ஆயுர்வேதம் சொல்கிறது ..தகுந்த ஆயுர்வேத மருத்துவமனையில் தகுதி வாய்ந்த மருத்துவர் ஆலோசனை படி ,தகுந்த நிபுணத்துவம் உள்ள தெரபிஸ்ட்களின் உதவியோடு இந்த சிகிச்சைகளை எடுத்து கொள்ள அணுக வேண்டியது அவசியம் .தகுந்த அழகியல் ஆலோசனைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை

கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)

Post Comment

வெள்ளி, மே 26, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -1 முடி வளர)

ஆயுர்வேதத்தில் அழகியல் -பாகம் 1 
(நீளமான அழகுடன் கூடிய தலைமுடியினை பெற)

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்என்பார்கள் ஆனால், அம்முகத்தின் அழகிற்காக பல செயற்கை அழகு நிலையங்களை தேடி நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

தலைமுடியில் சாயம் பூசுதல் (Hair Colouring), முடியினை நேராக்குதல் (Hair Straightening), புருவத்திற்கு (Eyebrow Threading), முகத்திற்கு (Facial, Face Bleach) கால்களுக்கு (Menicure & Pedicure) என தலை முடியிலிருந்து கால் நகங்கள் வரை செயற்கை ரசாயனங்களை பணம் குடுத்து உபயோகிக்கும் காலம் இது.

இதற்கு என்ன மாற்று எவ்வாறு இயற்கையான முறையில் முகம் (ம) உடல் அழகினை பேணிகாப்பது என்ற அனைவரது கேள்விக்கும் பதில் இதோ..


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுர்வேத ஆச்சார்யாக்களால் எழுதப்பட்ட அழகுடன் கூடிய ஆரோக்கிய வாழ்வியல் முறைகள் பற்றிய குறிப்பேடுகள் உங்களுக்காக...

நீளமான அழகுடன் கூடிய தலைமுடியினை பெற :-

ஆயுர்வேத மூலிகைகள் (பாவப்ரகாஷ நிகண்டு) :-
  •  தான்றிக்காய் 
  • அதிமதுரம்
  •  கார்போக்கரிசி
  •  சேராங்கொட்டை
  • குமதி
  •  நொச்சி
  •  குன்றில்மணி
  • அவுரி
  •  கரிசலாங்கன்னி
  •  செம்பருத்தி\
  •  எள்
  •  சுள்ளி 
  •  அகமை
  • வாழை
  • ஆட்டுப்பால்



ஆயுர்வேத மருத்துகள் :-

  • ப்ருங்கராஜ தைலம்
  • கைய்யோன்பதி தைலம்
  •  நீலீப்ருங்காதி தைலம்
  •  பிருங்காமலக தைலம்
  •  தூர்வாதி கேர தைலம்
  • துர்துரபத்ராதி தைலம்
  • மாலதியாதி தைலம்
  •  குந்தலகாந்தி தைலம்
  • திரிபலா கேர தைலம்


ஆயுர்வேத சிகிச்சைகள் :-


  • சிரோ அப்யங்கம்
  •  சிரோ பிச்சு
  •  சிரோ தாரா
  • சிரோ வஸ்தி
  •  நஸ்யம்

குறிப்பு -

மேலே குறிப்பிட்டுள்ள  மருந்துகளும் ,சிகிச்சைகளும் ஒவ்வொரு தனி தனி மனிதருக்கும் அவர்களின் தேக ப்ரக்ருதிக்கு தக்காவாறு மாறுபடும் .அழகியல் நிலையத்தில் இந்த சிகிச்சைகளை செய்வது ஆபாத்தானது. 

சரியான மருந்தை எண்ணையை  தேர்ந்தெடுக்காமல் செய்யப்படும் சிகிச்சை நினைத்த பலனை தராது ..அதே சமயத்தில் மோசமான எதிர்விளைவுகளையும் உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது 

சுய சிகிச்சை ஆயுர்வேத அழகியல் சிகிச்சையில் ஆபத்தானது 


நமது ஆயுர்வேதம் ஆச்சார்யாக்களால் கூறப்பட்ட இயற்கை விதிமுறைகளை கண்டுக்கொள்ளாமல் செயற்கை முறை ரசாயணங்களை பயன்படுத்துவதால் ஆரோக்கியத்துடன் சேர்த்து ஆயுளையும் குறைத்துக் கொள்கின்றோம். தகுந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுத்து ,தகுந்த ஆயுர்வேத மருத்துவமனையை தேர்ந்தெடுத்து இளமையான ஆரோக்கிய வாழ்வினை பெறுவீர்

அழகியல் சார்ந்த தீர்வுகள் ,முடி வளர ,முடி கொட்டாமல் இருக்க ,தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை பெற


அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)


Post Comment

புதன், மே 24, 2017

எல்லா நோய்க்கும் தீர்வாகும் வர்ம மருத்துவம்

எல்லா நோய்க்கும் தீர்வாகும் வர்ம  மருத்துவம் 

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure) .,BAMS.,M.Sc.,MBA


வர்மம் என்றால் என்ன ?

வர்மம் என்பது உயிர் ஆற்றல் . வர்மம் என்பது உயிர் நிலைகளின் ஓட்டம்”. வர்மம் என்பது உயிர்சக்தி தடம்புரியும் புள்ளிகள். உயிர்நிலைப் புள்ளிகளடங்கிய சக்தி ஓட்டங்களில் அடியோ, தாக்குதலோ ஏற்படும்போது உடலில் உலாவும் உயிர்வேகம் அதனை தொழிலை செய்யாமல் பிறழ்ந்து மரணத்தையோ, உடல் ஊனத்தையோ, தொடர்ந்த வலிகளையோ ஏற்படுத்தும். அவை தசைகளிலோ, தசை நார்களிலோ, நரம்புகளிலோ இரத்தக் குழாய்களிலோ, எலும்புகளிலோ, மூட்டுகளிலோ அமைந்திருக்கும் இந்த புள்ளிகளில் 3 தோஷங்களும், தச வாயுக்கள் ,தச நாடிகள் ,நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் 5 பூதங்களும், ஓஜஸ் எனும் ஏழு தாதுக்களின் சாரங்களும், சத்வ, ரஜ, தம குணங்களும் அதனதன் விகிதாச்சார அடிப்படையில் புதைந்து கிடக்கின்றன. இவை உடலில் உள் உறுப்புகளையும், பிரபஞ்சத்தையும் 13 ஸ்ரோதஸ் எனும் Channels எனும் வழிகளும், பாஹ்ய அந்தர் எனும் உள் வெளி மார்கங்களையும் 6 சக்கரங்களையும் இணைத்து வைக்கும் மாயப் புள்ளிகள்.


வர்ம மருத்துவம் என்றால் என்ன ?

எல்லா நோய்க்கும் காரணம் தச நாடிகளின் பாதிப்பு ,சர ஓட்டத்தில் ஏற்படுகிற தடை , வர்ம புள்ளிகளின் ஆற்றல் குறைபாடு ,பிரபஞ்சத்தோடு ஏற்படுகிற பிணைப்பில் ஏற்படுகிற தடை ,தச வாயுக்களின் தடை ,முக்குற்ற வேறுபாடு , உடலின் பஞ்ச பூதங்களின் மாறுபாடு இந்த அனைத்து காரணத்தையும் நமது உடலில் உள்ள வர்ம புள்ளிகளை ஒழுங்காக்குவதன் மூலம் ,வர்ம புள்ளிகளின் ஆற்றல் மாறுபாட்டை சரி செய்வதன் மூலம் நாம் குணப்படுத்த முடியும் என்பதே வர்ம மருத்துவத்தின் சாராம்சம் .சீனத்து அக்குபஞ்சர் சிகிச்சைக்கு  நமது வர்ம மருத்துவமே தாய் என்கிறது வரலாறு.


வர்ம மருத்துவத்தில் குணமாகும் நோய்கள் எவை ?

வர்மம் மருத்துவம் என்றால் நமது அனைவருக்கு நினைவுக்கு வருவது இந்தியன் தாத்தா தான் . உயிரை கொள்ள , ஆளை அடிக்க ,செயல் இழக்க செய்யத்தான் இந்த வர்ம மருத்துவம் என்று நாம் தவறாக புரிந்து வைத்திருக்கிறோம். சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இருக்கும் இந்த வர்ம மருத்துவம் பல நோய்க்களுக்கு மருந்து இல்லாமலும் சிகிச்சை அளிக்கிறது .

1. முதுகு வலி ,கழுத்து வலிக்கு காரணமான டிஸ்க் பிரச்சனைகள்

2.  மூட்டு எலும்பு தேய்மானம் ,மூட்டு வலி , டென்னிஸ் எல்போ ,முடக்கு வாதம் ,தோள்பட்டை வலி ,குதிகால் வலி  மற்றுமுள்ள அனைத்து வலிகளுக்கும்

3. நரம்பியல் நோய்கள் நடுக்கு வாதம் பார்க்கின்சொனிசம், மைக்ரேன் ,பக்கவாதம் , முக வாதம் ,நரம்பு தளர்ச்சி

4. வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய் ,இரத்த அழுத்தம் தூக்கமின்மை ,மன அழுத்தம் ,பதட்டம் ,வயிற்று புண்

5. ஆஸ்த்மா அலர்ஜி ,உடல் எதிர்ப்பு ஆற்றல் குறை நோய்கள்

6.  காரணம் தெரியாத தலைசுற்று

7. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் , CP child ,Autism ,Hyperactive Child, குழந்தைளின் ஞாபக மறதி, பிடி வாதம்

8.  சுக பிரசவம் எளிதாக்கிட

9. விந்து அணுக்கள் இல்லாத நிலை ,கரு முட்டை இல்லாத நிலை ,குழந்தை இன்மைக்கும்

10. ஆபத்து காலத்தில் உயிரை காப்பாற்ற உதவும்


அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்  வர்ம மருத்துவத்தில் சிறப்பு என்ன ?

இருபது  ஆண்டுகள் வர்ம மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த மருத்தவரின் ஆலோசனையோடு ,பல வர்ம ஆசான்களிடம் வர்மம் பயின்ற ,முறையாக மருத்துவம் படித்த ,MD ( Siddha)  சிறப்பு மருத்துவமாக பயின்ற சித்த மருத்துவர்களின் துணையோடு வழிகாட்டுதலோடு ,வர்ம மருத்துவத்துடன் ஆயுர்வேத மர்ம சிகிச்சையும் ,பஞ்ச கர்ம சிகிச்சை முறைகளையும் சேர்ந்து வர்ம சிகிச்சை அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் சிறப்பு

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் ஏழு தடவை சிகிச்சையில் முன்னேற்றத்தை உணரலாம்.

ஆபத்து காலத்தில் உடனடியாக தீர்வை வர்ம மருத்துவம் கொடுத்தலும் பல நாள்பட்ட நோய்களுக்கு வாரம் ஒரு முறை அல்லது இரு முறை வர்ம சிகிச்சை என்று தொடர்ந்து குறைந்தது ஏழு தடவை சிகிசையிலே பல நாள்பட்ட நோய்கள் குணமாகும் / முன்னேற்றத்தை உணர முடியும்.மேலே சொன்ன அனைத்து நோய்களுக்கும் ஆண் பெண் மருத்துவர்களை கொண்டு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கபடுகிறது . ஏற்கனவே எடுத்து கொண்டிருக்கும் மருந்துளோடு சேர்ந்தும் சிகிச்சை அளிக்கபடுகிறது. பக்க விளைவுகள் எதுவும் இல்லை ,பத்தியம் இல்லை ,மருந்து எதுவும் சாப்பிட வேண்டியதே இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு .

உடலில் நரம்பு மண்டலம் , எலும்பு மண்டலம் , தசை மண்டலம் , என்ற மூன்று பகுதிகளிலும் நோய்கள் கண்ட நிலையில் இவற்றை முற்றிலும் குணப்படுதுவதே எங்களின் சிறப்பாகும் வர்ம தத்துவங்களையும் + தச நாடி ஓட்டம் அறிந்து நாடி பார்த்து வர்ம மருத்துவத்தில் முறையாக பயிற்சி பெற்ற சித்த மருத்துவத்துவரால் மருந்தில்லாமல் சிகிச்சை  அளிக்கப்படும். ஆலோசனை மற்றும்  முன் பதிவுக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை  9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)

Post Comment