செவ்வாய், டிசம்பர் 13, 2011

அதிசயம் -வழுக்கையில் முடி வளர -ஆயுர்வேத தைலம் -நீலிபிருங்காதி தைலம் Neeli brungadhi thailam


அதிசயம் -வழுக்கையில் முடி வளர -ஆயுர்வேத தைலம் -நீலிபிருங்காதி தைலம் Neeli brungadhi thailam
 (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அவுரிச்சாறு நீலிஸ்வரஸ                  800 கிராம்
2.            கரிசாலைச்சாறு ப்ருங்கராஜஸ்வரஸ        800         “
3.            முடக்கத்தான் சாறு இந்த்ரவல்லீரஸ        800         “
4.            நெல்லிக்காய்ச்சாறு ஆமலகீரஸ            800         “
5.            வெள்ளாட்டின் பால் அஜக்ஷீர               800         “
6.            தேங்காய்ப்பால் நாரிகேளக்ஷீர              800         “
7.            எருமைப்பால் மகிஷக்ஷீர                  800         “
8.            பசுவின் பால் கோக்ஷீர                     800         “
9.            நல்லெண்ணெய் திலதைல                 800         “

இவைகளை ஒன்று சேர்த்து அத்துடன்

1.            அதிமதுரம் யஷ்டீ              35 கிராம்
2.            குன்றிமணி (குண்டுமணி) குஞ்ஜா     35           “

இவைகளை மேலே கூறிய பால் வகைகளில் சிறிதுவிட்டு அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டாவும். பின்னத் இறுதியாக அஞ்சனக்கல் (அஞ்ஜன) 35 கிராம் பொடித்துப் பாத்திர பாகமாக போட்டுக் கலக்கி பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    சம்பிரதாயத்தில் அஞ்சனக்கல் ¼ பங்கு உபயோகிக்கப்படுகிறது.


பயன்படுத்தும் முறை:       

தலைக்குத் தேய்க்கும் படியான (சிரோப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.


தீரும் நோய்கள்: 



நரை (காலித்ய), வழுக்கை (பாலித), முடியுதிரல் (கேஸபாத), முடிவளர்ச்சி குன்றல், முடியுடர்த்தியின்மை, கண்ணெரிச்சல் (நேத்ரதாஹ), சூடு, தொடர்ந்து உபயோகிக்க உடல், முக்கியமாகக் கண் குளிரும். ஓரளவுக்கு முடியும் கருமையடையும், தலைமுடித் தைலமாக உபயோகிக்கப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வழுக்கை வராமல் தடுக்கும்
  2. இளநரை போக்கும்
  3. முடியின் வேருக்கு ஆற்றல் தரும்
  4. முடிக்கு போஷாக்கு தரும்
  5. பல கம்பெனிகள் தங்களது பிரான்ட் நேமுடன் இந்த தைலம் தயாரிக்கிறார்கள் -ஆனால் அதில் உள்ள பார்முலாவே வேறு ..பல பொய்யான கம்பெனிகள் நீலி பிருங்காதி தைலம் என்று -ஆயுர்வேத சித்த புத்தகம் சொல்லாத பார்முலாவை பயன்படுத்தி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் ..
  6. டிவிக்களில் விளம்பரத்தில் வரும் அந்த தைலம் ,இந்த தைலம் -அமேசான் காட்டு மூலிகை என்று அண்ட பொய் ஆகாச பொய் மூட்டைகளை சொல்லி விற்கப்படும் மூலிகை தைலத்தை விட இந்த தைலம் ஆயிரம் மடங்கு  அற்புதமானது
  7. பல கம்பெனிகள் நல்லெண்ணையில் இந்த தைலம் செய்யாமல் -தேங்காய் எண்ணையில் செய்கிறார்கள் -தேங்காய் எண்ணையில் செய்யப்படும் நீலி பிருங்காதி தைலத்தை விட நல்லெண்ணையில் செய்த தைலமே ஆற்றல் மிக்கது ..பலன் தரக்கூடியது .
  8. முடி கொட்டுவதை நிறுத்தும் ,முடி நன்றாக வளர செய்யும்
  9. ஆட்டுப்பால் ,மாட்டுப்பால் ,எருமைப்பால் -சேருவதால் -தைலம் நல்ல வாசனை இருக்காது என்றாலும் துர்நாற்றம் அடிக்காது
  10. கண்ணெரிச்சல் ,உடல் சூடு தணிக்க செய்யும்
  11. குளிப்பதற்கு முன்னும் ,குளித்த பின்னும் இந்த தைலம் ஆறு மாத காலம் உபயோகித்து வர நிச்சயம் நல்ல பலன் தரும்
  12. ஆண் ,பெண் ,குழந்தைகள் என்று எல்லோரும் உபயோக்கலாம்.
  13. நிறைய குளிர்ச்சி என்றாலும் சளி பிடிக்காது -பயம் வேண்டாம் ..
  14. எனது அனுபவத்தில் ஆயுர்வேத சாஸ்திர புத்தகம் சொல்லும் பல நூறு முடி வளர வைக்கும் மூலிகை தைலங்களில் எல்லோருக்கும் பயன்படக்கூடியது இந்த தைலம்..
  15. நண்பர்களே -பக்கத்தில் உள்ள கேட்கட்டில் எனது மருத்துவமனை விலாசம் ,எனது உண்மை பெயர் வெளிவிட வேண்டுமா ? என்று வாக்கு எடுக்கிறேன் ..உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள் ...
குறிப்பு
உள்ளுக்கும் மருந்து சாப்பிடுவது நல்லது
வழுக்கையில் முடி முளைக்கும் என்று யார் விளம்பரம் பண்ணினாலும் நம்பவே நம்பாதீர்கள் -அது பொய் (ஆனால் இந்த தைலம் நல்ல வழுக்கை ஏற்பாடாமல் தடுக்கும் ,முடி வளர வைக்கும் )


Post Comment

22 comments:

பெயரில்லா சொன்னது…

நண்பரே எனக்கு இந்த‌ தைலம் தேவை படுகின்றது. எனக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கின்றது.எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து கூறவும்.

பெயரில்லா சொன்னது…

நீங்கள் கூறியுள்ள முறைப்படி தயாரிக்கப்பட்ட தைலம் எங்கு கிடைக்கும்?

Swami சொன்னது…

நல்ல பதிவு. இந்த ஆயில் எங்கே கிடைக்கும், எப்படி வாங்குவது?

sakthi சொன்னது…

பல கம்பெனிகள் தங்களது பிரான்ட் நேமுடன் இந்த தைலம் தயாரிக்கிறார்கள் -ஆனால் அதில் உள்ள பார்முலாவே வேறு ..பல பொய்யான கம்பெனிகள் நீலி பிருங்காதி தைலம் என்று -ஆயுர்வேத சித்த புத்தகம் சொல்லாத பார்முலாவை பயன்படுத்தி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் ..

உண்மை நண்பரே ,

நட்புடன் ,
கோவை சக்தி

curesure Mohamad சொன்னது…

இந்த தைலம் எல்லா ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கும் ..உங்கள் ஊர் சொன்னால் எங்கு கிடக்கும் என்று சொல்லலாம் ..

Swami சொன்னது…

indha thailam chennaiyil enge kidaikkum? brand name enna?

Swami சொன்னது…

indha thailam chennaiyil enge kidaikkum? brand name enna?

பெயரில்லா சொன்னது…

இனி வழுக்கை ஏற்படாமல் தடுக்கும் என்கிறீர்களா ? ஏற்பட்ட வழுக்கைக்கு ஒன்றும் செய்ய இயலாதா ? :(

பெயரில்லா சொன்னது…

வழுக்கையில் முடி வளர என்று தலைப்பில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உள்ளே அதுபோல சொல்லவில்லையே, ஏற்படாமல் தடுக்கும் என்றுதானே சொல்லி இருக்கிறீர்கள்.

மனோ சொன்னது…

Where can we get this in Erode?

curesure Mohamad சொன்னது…

@பெயரில்லாவழுக்கையில் முடி வளர என்று தலைப்பில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உள்ளே அதுபோல சொல்லவில்லையே, ஏற்படாமல் தடுக்கும் என்றுதானே சொல்லி இருக்கிறீர்கள்?--

எல்லா வழுக்கைக்கும் பொருந்தாது ..உண்மை ..தலைப்பில் சொன்னது ஆயுர்வேத சாஸ்திர புத்தகங்கள் சொன்னது ...அது உண்மை ..ஆனால் இன்று கிடைக்கும் அதே மருந்தில் செய்தாலும் அது வழுக்கை வராமல் தடுக்கும் என்றே எடுத்து கொள்வது நல்லது

curesure Mohamad சொன்னது…

@பெயரில்லா

இனி வழுக்கை ஏற்படாமல் தடுக்கும் என்கிறீர்களா ? ஏற்பட்ட வழுக்கைக்கு ஒன்றும் செய்ய இயலாதா ?

வயதை பொருத்து சரி செய்யமுடியுமா அல்லது தவிர்க்க முடியுமா என்று சொல்ல முடியும் ....ஏற்பட்ட வழுக்கை முப்பதை தாண்டினால் கொஞ்சம் கஷ்டம் ,நாற்பதை தாண்டினால் சரி செய்ய முடியாது

curesure Mohamad சொன்னது…

எந்த பிராண்ட் பெயரையும் குறிப்பிட முடியாது ..அருகில் உள்ள சித்த ஆயுர்வேத கடைகளில் முதலில் கேட்டுப்பாருங்கள் ...நான் எழுதியுள்ள அனைத்து மருந்துகளும் பெரும்பாலும் மார்கெட்டில் கிடைக்க கூடியவை ..

இருநூறு மிலி தைலத்துக்கு இருநூறு முதல் நானூறு வரை செலவாகும் ..
ஆட்டுப்பால் பெரும்பாலான கம்பெனிகள் சேர்ப்பதில்லை என்று உறுதியாக கூற முடியும் ..எனவே இந்த தைலத்தை தரம் கருதி கம்பெனி பெயர் சொல்ல இயலவில்லை..மன்னிக்கவும்

Murshid சொன்னது…

அண்ணா எனக்கு 18 வயதுதான் ஆகிறது. ஆனல், எனக்கு வழுக்கை விழுந்துள்ளது. எனக்கு எந்த மருந்து பலன் தரும்? உதவுங்கள்

Suresh Chandran சொன்னது…

gdsfg

esakki சொன்னது…

sure

Narendhar சொன்னது…

i am in salem.......in salem where can i got this thailam............?pls help me brother..........

rajkumar சொன்னது…

@Murshid Ahamed

manikandan சொன்னது…

manikandan சொன்னது…

enadhu mugavari salem,attur.enkku intha thayalam.engu kitaikkum.pls hlp me.sir

பெயரில்லா சொன்னது…

from where did we get in cuddalore?

New சொன்னது…

ungal mugavari vendum sir..

கருத்துரையிடுக