செவ்வாய், டிசம்பர் 27, 2011

சொல்லலாமா வேண்டாமா ?

எனது உண்மை பெயர் என்ன ?
எனது ஊர் எது ?
நான் மருத்துவ சேவை செய்யும் ஊர் எது ?

சொல்லலாமா  வேண்டாமா ?

சொல்ல வேண்டாம் என்பதற்கு நான் நினைத்த  காரணங்கள்
  1. என்னை பற்றி விளம்பரம் ஆகி விடும் -சுய விளம்பரம் விட -ஆயுர்வேத மருத்துவ அறிவே மக்களுக்கு வேண்டும்
  2. ஆயுர்வேதம் மக்களை சென்றடைந்தால் போதும் -தமிழ் நாடு -இந்தியா முழுவதும் படித்த நல்ல ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளனரே -தேவை என்றால் அவர்களை நாம் பரிந்துரை செய்யலாம் என்ற எண்ணம்
  3. மருந்துகளை -அனுப்பி தர சொன்னால் என்ன செய்வது ?-எனக்கு அதற்க்கு நேரம் ஒதுக்க முடியுமா என்ற எண்ணம்
  4. இந்த தளத்தை பார்த்து என்னை பார்க்க நேரில் வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு  தோன்றினால் என்ன செய்ய -இருக்கிற நோயாளிகளையே பார்க்க நேரம் ஒதுக்க முடியவில்லையே ?..\
  5. இன்னும் சொல்ல முடியாத காரணங்கள் -மூன்று உள்ளது ..
தெரிவிக்க வேண்டும் என வாக்களித்த நண்பர்களே ..உங்கள் காரணம் என்ன ?..

பின்னூட்டத்தில் காரணம் அறிய முயல்கிறேன் ...உங்கள் வாக்குக்கு நன்றி ..

Post Comment

6 comments:

Swami சொன்னது…

ரொம்ப நல்லா பதிவு எழுதறீங்க. ஆனா உங்களை மறைத்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? உங்க நோக்கம் மக்களுக்கு நல்லது பண்ணுவது என்றால், கூட இன்னும் இதே அலைவரிசை கொண்ட மருத்துவர்களை ஒன்று சேர்த்துக்கொண்டு மக்களளுக்கு நம் மண்ணின் பெருமை ஆயுர்வேதத்தை எடுத்து சொல்லலாமே. மருந்து அனுப்ப சொன்னால் என்ன, வேலை இல்லாத இளையவர் எத்தனை பேர் இருக்கின்றனர்,அவர்கள் உதவியோடு செய்யலாமே,

உங்களை மாதிரி நல்ல திறமையும், விளம்பரம் வேண்டாம் என்று ஒதுங்கி கொள்ளும் போக்கும் உள்ள மருத்துவர்களால், திறமையற்ற, பணம் சம்பாதிப்பதே நோக்கம் என்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் ஊடகங்களின் வாயிலால் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். ( மயிலாப்பூர் மருத்துவர், பேரு மறந்து போச்சு ) அதனால், வெளிய வாங்க அண்ணே.

Anand, Salem சொன்னது…

i second swami

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,

தங்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள எல்லோரும் ஆவலாக உள்ளோம் .


என்னை பற்றி விளம்பரம் ஆகி விடும் -சுய விளம்பரம் விட -ஆயுர்வேத மருத்துவ அறிவே மக்களுக்கு வேண்டும்
இது தாங்கள் தன்னடக்கத்தை காட்டுகிறது .ஒருவர் தன் பெயரை,தன்னை பற்றி கூறுவது சுய விளம்பரம் கண்டிப்பாக ஆகாது


ஆயுர்வேதம் மக்களை சென்றடைந்தால் போதும் -தமிழ் நாடு -இந்தியா முழுவதும் படித்த நல்ல ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளனரே -தேவை என்றால் அவர்களை நாம் பரிந்துரை செய்யலாம் என்ற எண்ணம்

நீங்கள் ஆயுர்வேத மருத்துவம் மீது கொண்டுள்ள பற்றை காட்டுகிறது.வளர்க!வாழ்க ! தாங்கள் எண்ணம் !

மருந்துகளை -அனுப்பி தர சொன்னால் என்ன செய்வது ?-எனக்கு அதற்க்கு நேரம் ஒதுக்க முடியுமா என்ற எண்ணம்

மருந்துகளை அனுப்பி தர சொன்னால், முடிந்த அளவு தங்களுக்கு தெரிந்த நல்ல கடைகளை முகவரிகளை தெரிவிக்கலாம் .

இந்த தளத்தை பார்த்து என்னை பார்க்க நேரில் வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றினால் என்ன செய்ய -இருக்கிற நோயாளிகளையே பார்க்க நேரம் ஒதுக்க முடியவில்லையே
தங்களால் முடிந்தால் நேரில் பார்க்கவும் .இல்லாவிட்டால் தங்களுக்கும் பரிச்சயப்பட்ட நல்ல மருத்துவ ஆலோசகரை பரிந்துரை செய்யலாம் .தாங்கள் இரண்டாம் கேள்வியே இதற்கு விடை (தமிழ் நாடு -இந்தியா முழுவதும் படித்த நல்ல ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளனரே -தேவை என்றால் அவர்களை நாம் பரிந்துரை செய்யலாம் என்ற எண்ணம் )



இன்னும் சொல்ல முடியாத காரணங்கள் -மூன்று உள்ளது ..

இது தாங்கள் தனிப்பட்ட கருத்து



முடிவுரை

தங்களை பற்றி அவசியம் தெரிவிக்கலாம் ,தெரிவிக்கலாம் ,தெரிவிக்கலாம் .இதில் பாதகம் இருப்பதாக தெரியவில்லை .கண்டிப்பாக பலர் பயனடைய வாய்ப்பு உள்ளது .மேலும் தங்கள் ஆயுர்வேத மருத்துவம் வளரவும் பலர் நன்மை பெறவும் ,தங்கள் உழைப்பு முழுமை அடையவும் உங்கள் நல்ல எண்ணம் நிறைவேறவும் .தங்கள் முழுவிவரம் தெரிவிக்கலாம்.

Damu சொன்னது…

mudiyala

curesure Mohamad சொன்னது…

நண்பர்களே நன்றி ..உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க என்னை வெளிப்படுத்தியாகிவிட்டது ..

venkatesan.P சொன்னது…

Why you are hiding yourself.
It is the right time to expose yourself to the workd.

with regards
venkatesan

கருத்துரையிடுக