ஞாயிறு, டிசம்பர் 25, 2011

செம்பருத்தி தைலம் செய்வது எப்படி ?


ஜபாபத்ரியாதி தைலம் 
(செம்பருத்தியாதி தைலம்)                             (ref-ஸஹஸ்ரயோகம்)    
 செம்பருத்தி தைலம் செய்வது எப்படி  ?
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            செம்பருத்தி இலை ஜபாபத்ரி     200 கிராம்
2.            கீழாநெல்லி பூ ஆமலகீ          200        
3.            வில்வ இலை பில்வ பத்ர       200        
4.            விருட்சிப்பூ விருக்ஷிக புஷ்ப          200        
5.            அருகம்புல் தூர்வா              200        
6.            வெற்றிலை நாகவல்லி பத்ர          200        
7.            துளசி இலை துளசி பத்ர        200        
8.            ஜாதிமல்லி இலை மாலதி பத்ர  200        
9.            அவுரி இலை நீலி பத்ர          200        

இவற்றை நன்கு இடித்துப் பிழிந்தெடுத்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய் (நாரிகேள தைல) 800 கிராம், தேங்காய்ப் பால் (நாரிகேள க்ஷீர) 800 கிராம், நன்கு விழுதாக அரைத்த

10.          அதிமதுரம் யஷ்டீ              33 கிராம்
11.          சீரகம் ஜீரக                     33          
12.          கருஞ்சீரகம் கிருஷ்ணஜீரக       33          

ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து காய்ச்சிப் பதத்தில் வடிகட்டவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

 சிரங்கு (பாமா), அரிப்பு (கண்டு), கரப்பான் (விஸர்ப்ப) போன்ற தோல் நோய்கள் (சர்ம ரோக), முக்கியமாக குழந்தைகளின் மேற்கூறிய நிலைகளில் மிகச் சிறந்தது. தலைப் பொடுகுக்கு (சிரகண்டு) இதனைப் பயன்படுத்துவதுண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆயுர்வேதத்தில் செய்யபடும் இந்த செம்பருத்தி தைலமும் -சித்த முறைப்படி செய்யப்படும் செம்பருத்தி தைலமும் ஒன்றல்ல
  2. பொடுகுக்கு -துர்துற பத்ராதி தைலம் + வெட்பாலை தைலம் + இந்த தைலம் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்
  3. இந்த தைலம் -தோல் வியாதிகளிலும் நல்ல பலன் தரும்

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

நல்ல தகவல் நன்றி நண்பரே
என்றும் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக