செவ்வாய், டிசம்பர் 06, 2011

நரம்புக்கு உரம் அளிக்கும் தைலம் -க்ஷீரபலா தைலம் (சாதாரணம்)


நரம்புக்கு உரம் அளிக்கும் தைலம் -க்ஷீரபலா தைலம் (சாதாரணம்)
 (ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பசுவின் பால் கோக்ஷீர          3.200 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல             3.200 லிட்டர்
3.            நல்லெண்ணெய் திலதைல      800 கிராம்

இவைகளை ஒன்றாகக் கலந்து அத்துடன் குருந்தொட்டி வேர் (பலாமூல) 250 கிராம் அரைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

பயன்படுத்தும் முறை:      

உட்கொள்ளவும், வெளி உபயோகத்திற்கும் பயனாகிறது. தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும், மூக்கிலிடவும் கூடப் பயன்படுகிறது.

                 
தீரும் நோய்கள்


 வாதநோய்கள் (வாத ரோக), நரம்புத் தளர்ச்சி (நாடீ தௌர்பல்ய) மற்றும் சாதாரண பலவீனம் (தௌர்பல்ய).

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. இந்த க்ஷீர பலா தைலம் -பொதுவாக மசாஜ் செய்ய உதவும்
  2. நரம்பு சார்,வாத நோய்களுக்கு இந்த மருந்து நல்ல பலன் தரும்
  3. குருந்தொட்டி மூலிகை சிறந்த நரம்பு உரமாக்கி என்பது மூலிகை மருத்துவத்தில் எல்லோருக்கும் தெரியும்
  4. மூட்டு தேய்மானத்திற்கு -இந்த தைலம் +மகா நாராயண தைலம் + தான்வந்தரம் தைலம் மூன்றையும் கலந்து தேய்த்தால் மூட்டு பசை உண்டாகி மூட்டு வலி குணமாகும் என்பது எனது அனுபவம்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக