திங்கள், பிப்ரவரி 29, 2016

விந்து முந்துதலில் இருந்து எளிதாக விடுபட எளிய பயிற்சி

நடக்கவே பயப்படும் வாலிபர்கள் ..

எப்போது நாற்காலி கிடைக்கும் என்று சிறிது நேரம் கூட நிற்க முடியாத இளைஞர்கள் ..

இரு சக்கர வாகனத்தை கர்ணனின் கவசம் போன்று பிறக்கும் போதே ஒட்டி பிறந்தது போல் கால் இருப்பதையே மறந்த ஆண்கள் ..

இவை தான் முக்கிய காரணம் ..



எப்படி விந்து முந்துதலில் இருந்து குணமடைவது ?

அதற்கு இந்த கெகல் என்னும் பயிற்சி நன்கு பலன் அளிக்கிறது ...

கெகல் பயிற்சி ...



ஆண் எந்த வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இந்த கெகல் பயிற்சி. நமது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி பின் தளர்த்துவதே இப்பயிற்சி ஆகும். மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் சுருக்கி 5 வினாடிக்கு பிறகு மூச்சை வெளிவிடும்போது தளர்த்திக் கொள்ளவும்.

செய்முறை :

1. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை விரித்து வைத்துகொண்டு செய்யலாம்.

2. அமர்ந்த நிலையில் கால்களை நீட்டி கைகளை இடுப்பின் பக்கவாட்டில் ஊன்றிக்கொண்டு கால் பதங்களை எதிரெதிர் பக்கம் திருப்பி செய்யலாம்.

3. பத்மாசனம் நிலையில் அமர்ந்து செய்யலாம்.

4. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி பாதம் தரையில் பட்டிருக்கும்படி வைத்துக்கொண்டு மூச்சை இழுக்கும்போது இடுப்பை மட்டும் மேலே தூக்கிகொண்டும் வெளிவிடும் போது இடுப்பை கீழே இறக்கி பழைய நிலையிலும் வைத்து செய்யலாம்.

5. தரையில் கைகளை ஊன்றி கால் முட்டியும் தரையில் ஊன்றி இருப்பது போல் செய்யலாம்.

6. சுவர் அல்லது மேசை பிடித்துக்கொண்டு நின்ற நிலையில் கால்விரல்களை மட்டும் ஊன்றி மேலே எழும்பி செய்யலாம்.


மூல பந்தம் என்னும் யோகாவின் ஒரு பயிற்சியும் விந்து முந்துதலுக்கு மிக நல்ல பலன் அளிக்கிறது ..

மூல பந்தம்



மூலபந்தம் - ஜலந்திர பந்தத்தில் இருந்து கொண்டு மூலத் தசைகளை உள் நோக்கி இழுப்பதே மூல பந்தம். இதைப் பயிற்சி செய்பவர்களுக்கு உணர்வுகள் அடித்தள மூளை வரை சென்று நாளமில்லாச் சுரப்பிகளை நன்கு , சீராக இயங்கச் செய்திடும். ஜலந்திர பந்தம், எண்முக முத்திரை, மூலபந்தம் மூன்றும் ஒரு சேர செய்யும் போது உள்ளே சென்ற காற்றானது எந்த வழியாகவும் செல்ல முடியாமல் மூலாதாரத்திற்கு மேல் உள்ள நடு நாடியின் மூடியிருக்கும் வாசலில் போய் மோதும்..

சரியான இப்பயிற்சிகள் மிக நல்ல பலனை தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லவே இல்லை ..

பின் குறிப்பு -கெகல் பயிற்சி செய்யும் போது வாயில் சில மூலிகை எண்ணைகளை அடக்கி செய்தால் வெகு விரைவாக விந்து முந்துதலுகுக்கு நல்ல பலன் தரும் .ஜீவந்த்யாதி க்ருதம்,கபிகச்சு தைலம் ..இன்னும் சில மருத்துவ எண்ணைகள் நல்ல பலன் தரும் 

இந்த பயிற்சிகளை தக்க தகுதி வாய்ந்த மருத்துவர் மூலம் கற்று ,அதனுடன் வாயுக்களை ஒழுங்கு செய்யும் மருந்துகளை சரியாக எடுத்து கொள்வதன் மூலம் விந்து முந்துதலை மிக விரைவாக நிரந்தரமாக குணமாக்கலாம் ..

விந்து முந்துதல்  குறை உள்ளவர்கள் தக்க மருத்துவரை நாடி அவர்கள் சொல்கிற வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்தி தக்க ஆயுர்வேத சித்த மருந்துகளை கொண்டு சிகிச்சை பெற வேண்டும் .

என்னிடம் ஆலோசனை பெற கடையநல்லூரில் 90 4222 5333 என்ற எண்ணிலும்,சென்னையில் ஆலோசனை பெற  90 4333 6000 என்ற எண்ணிலும், திருநெல்வேலியில் ஆலோசனை பெற 90 4222 5999 என்ற எண்ணிலும், ராஜபாளையத்தில் ஆலோசனை பெற  90 4333 6888  என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளாலாம் .ஆண்மை குறைவு சம்மந்தமாக சந்தேகம் கேட்க இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் .ஆலோசனை முன் பதிவு appointment க்கு மட்டும் இந்த எண்களை தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் 

Post Comment

ஆண்மைக் குறைவுக்கு மருந்து என்ற அதி பயங்கர ஏமாற்று வேலை


விந்து முந்துதல் மருந்து மாத்திரைகளினால் தீருமா ?

திரும்பிய பக்கமெல்லாம் ஆண்மை குறைவு விளம்பரங்கள் ..

இரவு டிவி யை ஆன் செய்தால் -ஆண்மையை குறைவா என்ற பேட்டிகள் ...

ஆன்லைனில் ஏகப்பட்ட ஆண்மை அதிகரிக்கும் மருந்துகளின் விளம்பரங்கள் ..

எனது curesure4u@gmail.com வரும் கேள்விகளில் எண்பது சதவீதம் ஆண்மை பற்றிய கேள்விகள் ..

எனது இலவச மருத்துவ தொலைபேசியில் வரும் அழைப்பில் 80 % ஆண்மை குறைவு பற்றிய சந்தேகங்கள் ...

என்ன செய்தால் மக்களின் சந்தேகம் தீரும் ?

மருந்து மாத்திரைகளினால் விந்து முந்துதல் சரியாகி விடுமா ?



இரத்த அழுத்தம் ,சர்க்கரை நோய் என்று வாழ்வியல் நோயினால் பாதிக்கபட்டு வயாகரா சாப்பிட்டால் பக்கவாதம் வருமோ -பக்க விளைவு வருமோ என்று பயந்தவர்களுக்கெல்லாம் மூலிகை மருந்து பாதுகாப்பானது என்று ஆயுர்வேதம் சித்த மருத்துவம் பார்க்கலாம் என்று திடீர் வைத்தியம் பார்பவர்களே மிக அதிகம் ...

அஸ்வகந்தா சாப்பிட்டால் குதிரை பலம் வரும் என்று தவறாக புரிந்து கொண்டு உலகளவில் செக்ஸ் வளர்க்கும் மூலிகைகளை பயன்பாட்டை அதிகரிக்கும் வணிகப்பார்வை -அதி பயங்கரமானது..

ஆயுர்வேதம் சொல்கிற வாஜீகரண சிகிச்சைகளை பேணாமல் ,சித்த மருத்துவம் சொல்கிற நோய் அணுகா விதியை பேணாமல் -வெறும் சமையல் மந்திரம் மட்டும் ஆண்மை அதிகரிக்கும் -விந்து முந்துதலுக்கு தீர்வை தர இயலுமா என்ன ?


எத்தனை மூலிகை கட்டு கதைகள் இந்த வலை தளங்களிலே ..வெறும் cut copy paste என்ற மந்திரத்தை கற்றுள்ள இங்குள்ள பல எழுத்தாளர்கள் எது வந்தாலும் உடனடியாக Forward செய்து விடுவார்கள் ..எது உண்மை ,எந்த மூலிகை எந்த விதத்தில் எப்படி எடுக்க வேண்டும் என்றே தெரியாமல் பாட்டி வைத்தியம் செய்யும் சில கூகிள் வைத்தியர்கள் ..

ஐந்தரை வருடம் ஆயுர்வேத மருத்துவ படிப்பு படித்து ,கிட்டதட்ட இருபது வருடங்கள் பிரைவேட் ப்ராக்டீஸ் என்னும் நிலையில் உள்ள என்னை போல் உள்ள அப்பாவிகளுக்கு மனிதம் கலந்த மருத்துவம் தெரியுமே தவிர ஏமாற்ற ,பொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாது ..இதை விட்டுட்டு சப்ஜெக்டுக்கு வருவோம் ..

ஓரிதழ் தாமரை ,நிலபனங் கிழங்கு ,பூமி சர்க்கரை கிழங்கு ,பூனை காலி விதை ,ஜாதிக்காய் ,வெள்ளை முசலி என்னும் நிலப்பனையில் ஒரு வகை ,சாலமிசிரி ,நெருஞ்சில் முள் ,அஸ்வகந்தா ,நீர்முள்ளி விதை ,முருங்கை விதை இதை போன்ற மிக சிறந்த மூலிகைகள் ஆண்மையை அதிகரிக்கும் என்பதில் எள் அளவுக்கும் சந்தேகமே இல்லை..சில மூலிகைகள் வாத நோயாளிக்கு சிறந்தது ,சில மூலிகைகள் கப நோயாளிக்கு சிறந்தது ,பல மருந்துகள் முக்குற்றங்கள் சம படுத்தும் ..ஆனால்...இன்னும் பல பல ஆண்மை அதிகரிக்கும் மூலிகைகள் உங்களுக்கு வேலை செய்யும் என்பதற்கு என்ன ஆதாரம் ?..ஆயுர்வேதம் சொல்கிறது ஒவ்வொரு மனிதனும் தனி தன்மை வாய்ந்தவன் .ஒரு ப்ரக்ருதி (தேக வாக்கின் தன்மை ) நோயாளிக்கும் இன்னொரு பிரகிருதி நோயாளிக்கும் ஒரே நோய்க்கு மருந்து வெவ்வேறு ,சிகிச்சை அளிக்கும் முறையே வேறு வேறு ..இதை கூட நாம் கணக்கில் எடுத்து கொள்ளலாம் ..


ஆயுர்வேத ,சித்த ,யுனானி சாஸ்திர மருந்துகள் அனைத்தும் நன்றாக வேலை செய்யும் –இதை எப்போதும் மறுப்பதற்கே இல்லை ..ஆனால் இங்கே கம்பெனி பேட்டன்ட்  என்று ஆயுர்வேத ,சித்த மருந்துகள் என்ற பெயரிலே  மிக சிறந்த மூலிகைகளோடு ஆங்கில மருந்தை  Tadalfil ,sildenafil கலந்து கொடுத்து ஏமாற்றுகிறார்கள் 

ஏமாற்றி காசு பார்க்கும் சில தரம் பெரிய மருந்து கம்பெனிகளின் தரத்தை இங்கே பார்க்கலாம் ..

இந்த தளத்தை சென்று பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 


மேலும் பிரபலமாக விளம்பரம் செய்து வந்த முசலி பவர் எக்ஸ்ட்ரா என்னும் மருந்தை கேரளாவில் தடை செய்தார்கள் என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் ..மேலும் இந்த விவரம் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 




திரும்பிய பக்கம் எல்லாம் மூலிகை மருத்துவம் என்று ஆங்கில மருந்தான  Tadalfil ,sildenafil போன்ற பக்க விளைவுகள் அதிகம் உள்ள மருந்துகளை கலந்து மனசாட்சியை அடமானம் வைத்து வியாபாரம் செய்கிறார்கள் ..

இதை விட மோசம் ஒன்று உள்ளது ..இது உணவு பொருள் என்று FSSAI என்று லைசன்சை வாங்கி கொண்டு இது ஆண்மைக்கு உதவும் ,விந்து முந்துதலுக்கு உதவும் என்று பொய் சொல்லி கேப்ஸ்யூல்களை ஆங்கில மருந்து Tadalfil ,sildenafil கலந்து மூலிகை -உணவு என்று நா கூசாமால் டிவிகளில் பொய் விளம்பரங்கள் கொடுத்து வியாபாரம் செய்கிறார்கள் ..என்ன செய்வது ..

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் ..

பொய் ,போலிகள் ,போலி வைத்தியர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள்.லாட்ஜ் வைத்தியர்கள் ஊர் ஊராக சுற்றி மனிதனின் பலஹீனத்தை பயன்படுத்தி இந்த நிலை இல்லாத அற்ப வாழ்வுக்கு ஏமாற்றி தலை முறை தலைமுறைக்கு சேர்த்து வைக்கிறார்கள் ..அவர்கள் திருந்த போவதும் இல்லை ..ஆயுர்வேதம் ,சித்த மருத்துவம் என்று உண்மையான பாரம்பரிய மருத்துவத்தை கெடுத்து கொண்டு அலைகிறார்கள் .என்ன சொல்வது ?சிலர் curesure என்ற புனை பெயரில் எழுதிற www.ayurvedamaruthuvam.blogspot.com என்ற தளத்தையே காப்பி அடித்து தாங்கள் எழுதியது போல் நல்லவர்களாக காட்டி கொள்வார்கள் .


இதற்க்கு தீர்வு 
எந்த மருந்து யாருக்கு தேவை என்று தெரிய வேண்டும் 

எல்லா ஆண்மை குறைவுக்கும் ஒரே மருந்து இருக்கவே முடியாது ..
அதுவும் எல்லோருக்கும் ஒரே மருந்து வேலை செய்யும் என்று சொல்வதற்கு இல்லை  

நோய்க்கான தக்க காரணம் அறிந்து சிகிச்சை செய்ய வேண்டும் ..

விளம்பரங்களில் வருகிற மருந்தை பெரும்பாலும் நம்ப கூடாது ..

விந்து முந்துதல் போன்ற குறை உள்ளவர்கள் தக்க மருத்துவரை நாடி அவர்கள் சொல்கிற வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்தி தக்க ஆயுர்வேத சித்த மருந்துகளை கொண்டு சிகிச்சை பெற வேண்டும் .

காசுக்கு அசைபடாத உண்மையான  பாரம்பரிய மருத்துவர்களை என்றுமே குறை சொல்லவில்லை ..மருத்துவ பின் புலமே இல்லாத திடீர் என்று பாரம்பரிய மருத்துவர்கள் என்ற போலி மருத்துவர்கள் மட்டும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காலம் காலமாக ஒரே இடத்தில வைத்தியம் செய்கிற உண்மையில் மருத்துவ பின் புலம்  பாரம்பரியம இருக்கிற மருத்வர்களிடமும் சிகிச்சை பெறலாம். மருத்துவ படிப்புள்ளவர்களும் மருந்து கம்பெனி சொல்வதை உண்மை என்று கேட்டு தவறான மருந்தை எழுதவும் வாய்ப்புள்ளது எனபதை மறுப்பதற்கு இல்லை




என்னிடம் ஆலோசனை பெற கடையநல்லூரில் 90 4222 5333 என்ற எண்ணிலும்,சென்னையில் ஆலோசனை பெற  90 4333 6000 என்ற எண்ணிலும், திருநெல்வேலியில் ஆலோசனை பெற 90 4222 5999 என்ற எண்ணிலும், ராஜபாளையத்தில் ஆலோசனை பெற  90 4333 6888  என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளாலாம் .ஆண்மை குறைவு சம்மந்தமாக சந்தேகம் கேட்க இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் .ஆலோசனை முன் பதிவு appointment க்கு மட்டும் இந்த எண்களை தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் .

முடிந்த வரை கட்டுரைகளை படித்தாலே தெளிவு கிடைக்கும் என்கிற அளவில் ஏக இறைவன் நாடினால் தொடர்ந்து எழுத முயல்கிறேன் .



Post Comment

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

கடையநல்லூரில் மட்டும் டெங்கு ஒழிப்பதில் சிரமம் ஏன் ?

கடையநல்லூரில் மட்டும் டெங்கு ஒழிப்பதில் சிரமம் ஏன் ?



ஒவ்வொரு வருடமும் மர்ம காய்ச்சல் ,விஷ காய்ச்சல் ,சிக்கன் குனியா காய்ச்சல் ,இன்னும் பெயர் தெரியாத காய்ச்சல்கள் அனைத்தும் தமிழ்நாடு முழுவதும் பரவினாலும் –முதலில் கண்டு பிடித்து ஆரம்பித்து வைப்பது மற்றும் கடுமையாக பாதிப்பது என்னவோ தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் என்ற எமது ஊரே...

கடையநல்லூரில் சில  உயிர்களை ஒரு சில வருடங்களாக கொள்ளை கொண்ட டெங்கு  .சிக்கன் குனியா போன்ற விஷ காய்ச்சல் -இப்போது கூட இந்த 2016 பிப்ரவரி மாதத்தில் முகமது தமீம் என்ற கல்லூரி மாணவன் இறந்த செய்தி மனதை மிகவும் பாதிக்கவும் செய்கிறது ..

நல்ல சுத்தமான தண்ணீரில் வளரக்கூடிய இந்த வைரஸை பரவ வைக்ககூடிய ஏடிஸ் கொசுவை நமது கடையநல்லூரில் ஒழிப்பது சிரமம் ஏன்?

எனக்கு தெரிந்த காரணங்கள் ..
  •  நல்ல தண்ணீர் ஓரிரு நாட்கள் இடைவேளையில் விடப்படுகிறது ..இங்குள்ள மக்கள் நாட்கணக்கில் ( குறைந்தது இரு நாட்கள் முதல் அதிக பட்சம் பத்து நாட்கள் வரை ) சிறிய மற்றும் பெரிய பாத்திரங்களில் சேமித்து வைக்கிறார்கள் .அவர்களது தொட்டிகளிலும் சேமித்து வைக்கிறார்கள் . இந்த அண்டா குண்டாக்களை ஒழுங்காக மூடுவதும் இல்லை ...அவர்களது தண்ணீர் தொட்டியை ஒழுங்காக கழுவதும் இல்லை  ..
  • கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வரும் சுகாதார துறை மருத்துவர்கள் ,சுகாதார ஆய்வாளர்கள் ,மஸ்தூர் என்னும் பணியாளர்களை அவர்கள் நமது வீடுகளில் உள்ளே சென்று ஏடிஸ் கொசுவின் லார்வாக்கள் அவர்கள் பிடித்து வைத்துள்ள பாத்திரங்களை பார்க்க /சோதிக்க அனுமதிப்பதே இல்லை என்பது தான் கசப்பான உண்மை .
  • பெரும்பான்மையான வீடுகளில் ஆண் மக்கள் வெளி நாடுகளில் ஊர்களில் பிழைப்பை தேடி சென்றுள்ளனர் .பெண்கள் மட்டும் தனியாக உள்ள வீட்டில் பொதுவாக எந்த சுகாதார ஆய்வாளரும்,சுகாதார துறை ஊழியரும்  பரிசோதிப்பது என்பது மிக மிக கடினம்.
  •  அபேட் என்னும் கொசுவை ஒழிக்கும் மருந்தை நல்ல தண்ணீரில் கலக்க யாரும் பொதுவாக அனுமதிப்பதே இல்லை .எதோ பிச்சை காரர்கள் வந்து பிச்சை கேட்பவர்களை விட கேவலமாக மஸ்தூர்களை நடத்தும் அவலமும் இங்கே தான் நடக்கிறது ..கிரில் கேட்டின் வழியாக அவர்கள் தரும் அபேட் மருந்தை வேண்டா வெறுப்பாக வாங்கி உள்ளே சென்று கீழே தான் பலர் ஊற்றுகிறார்கள் .அந்த மருந்து சாக்கடையில் கலக்க  வேண்டிய மருந்து என்று பலர் நினைத்து இருக்கிறார்கள் .
  • பெரிய பெரிய தெருவிலே இந்த கஷ்டம் என்றால் சிறிய சிறிய சந்து பொந்துக்களில் உள்ள வீடுகளில் எப்படி கொசு ஒழிப்பு எப்படி சாத்தியம்?
  • அடிக்கடி கொசு புகை மருந்தை மட்டும் அடித்தால் மட்டுமே போதுமா ? ..இன்று கொசு புகை Fogging அடிக்க வரவில்லை என்பது மட்டுமே பெரிய குறையாக தெரியும் நமது மக்களுக்கு சேமித்து வைத்துள்ள நல்ல தண்ணீரில் கொசுவின் லார்வா இருக்கிறதா என்பதை பார்க்க தெரிவதில்லை.
  •   நல்ல காற்றோட்டம் வர வழி இல்லாத ஜன்னல் இல்லாத வீடுகளே பொது சுவர் வீடுகளே அதிகம் ..நல்ல காற்று வேண்டுமானால் இங்கே எப்போதும் வெளியில் கிடைக்கலாம் ..வீட்டின் உள்ளே கிடைக்குமா என்பது தான் சந்தேகம். சென்னை ,மும்பை போன்ற நகரங்களின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு  சவால் விடுகிற விலையில் உள்ள இங்குள்ள வீட்டு மனைகள் ..ஒரு சென்ட் நாற்பது இலட்சம் கூட பத்தாது ..இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் வீட்டு மனைகள் பொதுவாக நீளம் நாற்பது முதல் அறுபது வரை ,ஆனால் அகலமோ குறைந்தது ஒன்பது அடி முதல் பதினாலு –பதினாறு அடி வரை தான் உள்ளது ..சுற்றிலும் பொது சுவர்..காற்று வரும் ஆனால் வராது ..நன்கு கட்டமைக்கபட்ட விதத்தில் தெருக்களை விட –அப்படி இல்லாத தெருக்களே மிக மிக அதிகம் ..இதில் ஆரோக்கியம் பேணுவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து ..இனி மேலாவது நல்ல கற்றோட்டதுடன் வீடுகள் அமைந்தால் நல்லது


  •         சாக்கடை தண்ணீரில் இந்த கொசுக்கள் வளர்வதில்லை என்றாலும் ,இங்கே சாக்கடையில் தான் குப்பைகளை மக்காத கீஸ் பை என்னும் carry  bag இல் கட்டி போடுகிறார்கள் என்பதும் ..வீட்டின் முன்னே ஓடுகிற சாக்கடை பல இடங்களில் திறந்தே கிடக்கிறது ..திறந்துள்ள சாக்கடை வீதிகளின் முக்குகள் அனைத்தும் குப்பை பைகள் ..




மேலே கூறிய காரணங்கள் தவிர்க்கபட்டு மக்கள் சுகாதார பணிகளில் சேர்ந்து ஒத்து உழைத்தால் தான் இதே மாதிரியான டெங்கு போன்ற காய்ச்சலை தடுக்க இயலும் ..


Post Comment

விந்து முந்துதல் -தகவல்கள் ..நிவாரணங்கள்



விந்து முந்துதல்.

விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.

பத்து ஆண்களில் ஒருவர் என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தகவல்கள்  தெரிவிக்கின்றன. உறவின் போது பெண் உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.







வாஜீகர்ண சிகிச்சை மூலம் விந்து முந்துதலுக்கு ஆயுர்வேதத்தில் சிறப்பு சிகிச்சை அளிக்கலாம் ..

வாஜீகர்ண சிகிச்சை பற்றி படிக்க இங்கே கிளிக்  செய்யவும் ..

ஆயுர்வேத வாஜீகர்ண சிகிச்சை பெற -ஆலோசனை பெற முன் பதிவுக்கு  www.healz.in  தொடர்பு கொள்ளவும் 

Post Comment

சனி, பிப்ரவரி 27, 2016

விந்து முந்துதலை குணமாக்கும் யுனானி மருந்து -ஹப்-எ-ஜிர்யான்


விந்து முந்துதலை குணமாக்கும் -விந்துவை கட்டியாக்கும் ,விந்து ஒழுகுதலை குணப்படுத்தும் யுனானி மருந்து -ஹப்-எ-ஜிர்யான்


ஹப்--ஜிர்யான்
(Ref-கராபாதீனேஜதீத்)

தேவையான மருந்துகள் :
1.    உலர்ந்த ஸிங்காரா கிழங்கு -       ஸிங்காராகுஷ்க்             100 கிராம்
2.    ஆலம்பால்ஷீரேபர்கத்                     வேண்டிய அளவு

செய்முறை :
            
ஸிங்காராவை நன்றாகப் பொடித்து ஒரு கல்வத்திலிட்டு ஆலம்பால் வேண்டிய அளவு சேர்த்து மாத்திரை உருட்டும் பதம் வரை நன்றாக அரைத்து 500 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.


            
அளவு : 4 மாத்திரைகள் வீதம் பசுவின் பாலுடன் (நுரைப் பால்) ஒரு நாளைக்கு இருவேளைகள்.

           
தீரும் நோய்கள் : தூக்கத்தில் இந்திரியம் (விந்து) நழுவுதல் (கஸ்ரத்--எஹ்டிலம்), சீக்கிரத்தில் இந்திரியம் வெளிப்படுதல் (சுரத்--இன்ஜால்), சுக்கிரமேகம் (ஜிர்யான்), தானே விந்து வெளிப்படல் (ஸைலான்--மணி)


தெரிந்து கொள்ளவேண்டியவை ..


  1. முதலில் உடலின் உஷ்ணம் குறைவாக்கப்பட வேண்டும் 
  2. அபான வாயுவின் தன்மை ஒழுங்குற சமநிலை படுத்தல் வேண்டும் 
  3. நீர்த்து போன விந்துவை கட்டிதன்மை பெறவும் ,விந்து முந்துதலை சரியாக்கவும் ,விந்து ஒழுகுதலை குணப்படுத்த தக்க ஆயுர்வேத ,யுனானி மருந்துகளுடன் இந்த மருந்தை கொடுத்து வந்தால் மிக விரைவாக பலன் தெரியும் 
  4. இந்த மருந்து Qurs -e -Jiryan  என்ற பெயரிலும் கிடைக்கிறது .
  5. தரமான மருந்தை நல்ல மருந்து செய்பவர்களிடம் பெறுவது நல்லது .(www.healz.in)

Post Comment