டெங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 27, 2012

நில வேம்பு குடிநீர் -கஷாய சூர்ணம் இலவசம்

 தமிழ் நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்குவை தடுக்க ..தமிழக அரசு எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கி கொண்டு  வருகிறது ..
அக்டோபர் இருபத்து ஆறு அன்று தமிழக செய்தி குறிப்பு இது 

(இந்திய  மருத்துவத்தில், "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் ஆற்றல் கொண்ட நிலவேம்புக் குடிநீர், தமிழகத்திலுள்ள, வட்ட, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் விஜய் தெரிவித்தார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், தமிழகத்தில் பரவி வரும் "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் நோக்கில், சித்த மருத்துவத்தில், "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் ஆற்றல் கொண்ட, நிலவேம்புக் குடிநீரை, சென்னை, அரும்பாக்கம், இந்திய அரசினர் இந்திய மருத்துவமனை புறநோயாளிகளுக்கு வழங்கும் விழா, நேற்று மாலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர், இராமநாதன் சென்னை மாநகராட்சி மேயர், சைதை துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், தமிழக சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் விஜய் பங்கேற்று, நிலவேம்புக் குடிநீரை அருந்தி, பிறகு நோயாளிகளுக்கு வழங்கினார்.

விழாவில், அமைச்சர் விஜய் பேசியதாவது: "டெங்கு' காய்ச்சல் உள்ளிட்ட எந்த வைரஸ் காய்ச்சலுக்கும் தனியான சிகிச்சை கிடையாது. அவை தானாக சரியாகுபவை. "டெங்கு' காய்ச்சலை, நிலவேம்புக் குடிநீர் ஓரளவு குறைக்கும் ஆற்றல் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள நிலவேம்பு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. எனவே நிலவேம்புக் குடிநீரை அருந்துவதன் மூலம், "டெங்கு'வை தடுக்கலாம். இந்நீரை அருந்துவதால் பக்க விளைவுகள் கிடையாது, ஆங்கில மருந்துகளோடு, இதனை அருந்தலாம். நிலவேம்புக் குடிநீர் தமிழகத்திலுள்ள வட்ட, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

நிலவேம்புக் குடிநீர் குறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் இராமநாதன் மற்றும் இணை இயக்குனர் அப்துல்காதர் ஆகியோர் தெரிவித்ததாவது: நோய் கிருமியை எதிர்க்கும் குணம் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் நிலவேம்பு, காய்ச்சலின் போது ஏற்படும் தலைவலி, நீர் பாரத்தை அகற்றக் கூடிய மிளகு, செரிமானப் பிரச்னையை சரி செய்யக் கூடிய சுக்கு, சிறுநீர் பிரச்னை சரி செய்யும் சந்தனம், வாய் கசப்பை போக்கி, நீர்ச்சத்தை அளிக்கும் வெட்டி வேர், உடல் வெப்பத்தை அகற்றி, குளிர்ச்சியை அளிக்கும் பற்படாகம், பேய்ப்புடல், விளாமிச்சை வேர், வயிற்று வலியை போக்கும் கோரைக் கிழங்கு ஆகிய, ஒன்பது மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான், நிலவேம்புக் குடிநீர். காய்ச்சல் உள்ளவர்களும், காய்ச்சல் இல்லாதவர்கள் என, அனைவரும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். இந்த குடிநீரை அருந்தினால், "டெங்கு' காய்ச்சல் நம்மை நெருங்காது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.)


டெங்கு காய்ச்சல் பற்றிய -இந்திய மருத்துவம் கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

நில வேம்பு குடிநீரை நாமே எப்படி தயாரிப்பது எப்படி என்ற கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும்  ..

நிறைய நண்பர்கள் என்னிடம் நில வேம்பு குடிநீர் எங்கே தனியாக கிடைக்கும் என்று கேட்கிறார்கள் ...
இப்போது அரசே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்திய மருத்துவ பிரிவிலும் இலவசமாக கிடைக்கும் என்பது மிக்க மகிழ்ச்சியான செய்திதான் ..

 

தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் இலவசமாக அனுப்பி தர -இலவச சேவை செய்ய உள்ளோம்...


என்றாலும் ...என்னால் முடிந்த உதவியாக தமிழ் நாடு முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் ..வராமல் தடுக்கவும்
நில வேம்பு குடிநீர் ( ஐம்பது கிராம் முதல் -நூறு கிராம் வரை ) இலவசமாக அனுப்பித்தர நினைத்துள்ளோம் ..

உங்களுக்கு நில வேம்பு குடிநீர் சூர்ணம் இலவசமாக வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது இவைகள்
  1. உங்களுக்கு நில வேம்பு குடிநீர் வேண்டும் என்இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் இட வேண்டும்
  2. உங்கள் விலாசம்  இ மெயில் முகவரி ,தொலை பேசி எண் போன்ற விவரங்களை எனது இ மெயில் முகவரி curesure4u@gmail.com -அனுப்ப வேண்டும்
  3. நில வேம்பு குடிநீர் கஷாய சூர்ணம் இலவசமாக பெறலாம்
      .போஸ்டல் செலவு -கூரியர் செலவு மற்றும் மருந்தை அனுப்பும் செலவுகள்  மட்டும் ரூபாய் இருபத்தைந்து மட்டும் எங்களது விலாசத்திற்கு அனுப்பி தந்தால் ( மணி ஆர்டர் அல்லது -இ மணி பரிமாற்றம் மூலம் ) எங்களால் அனுப்பி தர இயலும் ..
  4. மணி ஆர்டர் அனுப்ப நீங்கள் எனது விலாசம் அல்- ஷிபா ஆயுர்வேத ஹோமியோ கிளினிக் -36/22-பீர் முஹம்மது தைக்கா தெரு கடையநல்லூர் ,தென்காசி வட்டம் ,திருநெல்வேலி மாவட்டம் -627 751-
  5. இந்த சேவையில் பங்கேற்க விரும்பும் வசதி படைத்தவர்களும் என்னை தொடர்பு கொள்ளலாம் ..
  6. மேலும் இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் ,வலை தல நண்பர்களுக்கும் பகிர்ந்தும் சேவை புரியுங்கள்

Post Comment

வியாழன், மே 24, 2012

டெங்கு காய்ச்சல் -வராமல் தடுக்கவும் -வந்தால் என்ன செய்யலாம் ?

டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வே அதை தடுக்கும் என்பதால் அதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ..

டெங்கு பற்றி கட்டுரை படிக்க தன்னம்பிக்கை தொடரில் மருத்துவர் ராஜேந்திரன் அவர்கள் எழுதிய கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும்


டெங்கு காய்ச்சலுக்கு ஆயுர்வேத சித்த மருந்துகளில் தடுப்பு மருந்துகள் உள்ளதா ?


  1. டெங்கு வராமல் தடுக்க -நில வேம்பு கஷாயம் தினமும் -காலை மாலை முப்பது மிலி வெறும் வயிற்றில் -மூன்று வாரங்கள் தொடர்ந்து எடுத்து கொண்டால் டெங்கு முதலான வைரசினால் பரவக்கூடிய காய்ச்சலை தடுத்து விட முடியும் ..
  2. டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய இடத்தில் உள்ளவர்கள் ,,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
  3. இந்த நில வேம்பு கஷாயம் -குடிநீர் எளிதாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் -சித்த மருத்துவ பிரிவில் -இலவசமாக கிடைக்கும்
  4. நிலவேம்பு தயாரிக்க நினைப்பவர்கள் ..இந்த கட்டுரையை( இங்கே கிளிக் செய்யவும் நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள் ) படித்து எளிதாக வீட்டிலே தயாரிக்கலாம் ..தயாரிக்க பயன்படும் மூலிகை பொருட்கள் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ..
  5. நில வேம்பு கஷாயம் கசப்பு சுவை உடையது ..கசப்பை தாங்காதவர்கள் பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம் ..அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம் ..
  6. ஆயுர்வேதத்தில் ..அம்ருதாரிஷ்டம்  இருபத்தைந்து மில்லி மருந்து சம அளவு வெந்நீருடன் காலை மாலை பருக ..வராமலும் தடுக்கலாம் ...வந்தாலும் பயப்படாமல்  ஓட ஓட விரட்டலாம் ..அம்ருதாரிஷ்டம் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்நோய் எதிர்ப்பு சக்தி தரும் -எந்த வித காய்ச்சலையும் குணபடுத்தும் -அமிர்தாரிஷ்டம்-Amrutha Arishtam
  7. மேலும் சடங்க பானியம் என்னும் -நில வேம்பில் உள்ள ஒன்பது பொருட்களில் உள்ளவற்றில் ஆறு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் குடிநீரும் நல்ல பலன் தரும் -இது பாட்டில் மருந்தாக பல கேரளா கம்பெனிகள் தயாரிக்கின்றன ..
  8. மேலும்வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்-டெங்கு காய்ச்சலுக்கும் நன்றாக பயன்படும் -இதுவும் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கிறது
  9. எனது பழைய கட்டுரைகளில் கூறியுள்ள காய்ச்சலுக்கு பயன்படும் இந்த மருந்துகளும் நன்றாக பயன்படும் ..
  10. மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்-Sudarshana choornam-என்ற மருந்து -எல்லாவிதமான காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகவும் ,காய்ச்சலை குணமாக்கவும் பயன் படும் என்பதில் இந்த கட்டுரையில் சவால் விட்டது போல் இப்போதும் என்னால் சவால் விட முடியும் .
  11. மேலும் சித்த மருந்துகளில் பிரம்மானந்த  பைரவம் ,வாத சுர குடிநீர் ,மிக மிக குறைந்த அளவிலே லிங்க செந்தூரம் போன்றவையும் காய்ச்சல் வராமலும் வந்தாலும் தடுக்கவும் உதவும்
டெங்கு காய்ச்சல் வந்த பின் ஆயுர்வேத சித்த மருத்துவம் என்ன செய்ய வேண்டும்

  1. காய்ச்சல் வந்த பின் முதலில் பட்டினி கிடப்பது நல்லது ...ஆயுர்வேதத்தில் லங்கனம் பரம ஔசதம் என்பார்கள் ...சத்தான எளிதில் செரிக்கூடிய கஞ்சி வகைகளே மிகவும் நல்லது ..திட உணவை முற்றிலும் காய்ச்சல் குறைந்தாலும் தவிர்ப்பது நல்லது
  2. ஊசி மருந்தை கொண்டு உடனடியாக காய்ச்சலை குறைக்கிறேன் என்று ஸ்டீராய்ட் கலந்த ஊசிகளை  தவிர்ப்பது நல்லது ...உங்களுக்கு ஊசி போட போகும் மருத்துவரிடம் இந்த ஊசியிலே டெக்சா அல்லது ஸ்டீராய்ட் இல்லேயே என்பதை உறுதிபடுத்துவது நல்லது ...ஏனெனில் ஸ்டீராய்ட் உடனடியாக காய்ச்சலை குறைக்கலாம் ...ஆனால் அதில் ஆபத்து அதிகம் ..
  3. மேலே சொன்ன ஆயுர்வேத மருத்களையும் சித்த மருத்துகளையும் சாப்பிடலாம்..
  4. ஆங்கில மருந்தோடு கூட நான் சொன்ன மேலே சொன்ன ஆயுர்வேத சித்த மருத்துகளை எடுத்துகொள்ளலாம் ...ஆங்கில மருந்தில் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தில்லை என்று அவர்களே சொல்லிவிட்டார்கள் ..
  5. ம்ருத்துன்ன்ஜய  ரசம் ,விஷம ஜ்வரான்குச லோஹம் ,வெட்டுமாரன் குளிகா போன்ற மருந்துகளும் நல்ல பலன் தரும்
டெங்கு காய்ச்சலால் இரத்த தட்டுக்கள் குறைகிறதே ..இதை தடுக்க ,சரி செய்ய வழி இல்லையா ?
  1. இரத்த தட்டுக்களை குறைய விடாமல் காக்கவும் ,இரத்த தட்டுக்களை மிக வேகமாக இரத்த பிளாஸ்மா ஏற்றுவது போல் வேகமாக கூட்ட அற்புத மருந்து ஆடாதோடை மூலிகை ...இது ஆயுர்வேதத்தில் இரத்த பித்த நோய்களில் மிக சிறந்த மருந்தாக கூறப்படுகிறது ...எனவே ..ஆரம்ப நிலையில் இரத்த தட்டுக்கள் குறைந்த நோயாளிகள் ( அதாவது ஒரு இலட்சத்திற்கும் மேல் இரண்டு இலட்சத்திற்கும் உள் உள்ளவர்கள் )..இந்த ஆடாதோடை இலையை சாறு எடுத்து அதனை சற்று சூடு செய்து ஐந்து முதல் பத்து மிலி அளவுக்கு ஒரு வாரம் சாப்பிட்டு வர  நல்ல பலன் தெரியும் ...ஒரே நாளில் அணுக்கள் கூடியிருப்பதை கண் கூடாக பார்க்கலாம்
  2. ஆடாதோடை பச்சை இலை கிடைக்காதவர்கள் ..ஆடாதோடை குடிநீராக கடைகளில் இருந்தும் ,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் பெற்று கொள்ளலாம் ..
  3. ஆடாதோடை இப்போது வசாகா என்ற மாத்திரையாக ஹிமாலய கம்பெனி தனி மூலிகை கேப்ச்யூளாக தாயாரிக்கிரார்கள் ...அருகில் உள்ள மருந்து கடைகளில் இதை எளிதாக பெற்று கொள்ளலாம்
  4. மேலும் மஹா மஞ்சிஷ்டாதி கஷாயம் ,இரகத்த பிட்டதாந்தக லோஹா மாத்திரைகளை,சீந்தில் சேர்ந்த மாத்திரைகளை  சாப்பிட்டும் அதிகமாக்கி கொள்ளாலாம் ..இரத்த தட்டுக்கள் ஐம்பதாயிரத்திற்கு உள்ளே உள்ளவர்கள் இதை மட்டும் சாப்பிட்டு ரிஸ்க் எடுக்க கூடாது ..அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் இரத்தம் ஏற்றுவது நல்லது ..
சந்தேகங்களை எனது மெயில் முகவரியில் கேட்கலாம் ..
நாங்கள் ..மேலே சொன்ன மருந்துகளை எங்களது கிளினிக்கில் இலவசமாக பல நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ..நோயாளிகள் சீக்கிரம் குணம் அடைகிராரர்கள் என்பதே அதில் சிறப்பு ..



எனது முந்தைய பதிவுகளான -கீழ்க்கண்ட கட்டுரைகள் காய்ச்சல் பற்றி பல விவரங்களை தரும் என்று நம்புகிறேன் ..

  1. மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு
  2. மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு
  3. விஷ காய்ச்சலுக்கு ஆயுர்வேதம்
  4. நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள்


Post Comment

செவ்வாய், மே 10, 2011

வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்



டெங்கு காய்ச்சல் –பன்றி காய்ச்சல் இரண்டையும் குணப்படுத்தும் –வராமல் தடுக்கும் மருந்து –பாரங்யாதி கஷாயம் 


வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:



1.            கண்டுபாரங்கி பார்ங்கீ      - 10 கிராம்
2.            கோரைக்கிழங்கு முஸ்தா        - 10       “
3.            பர்பாடகம் பர்பாடக             - 10       “
4.            கொத்தமல்லிவிதை தான்யக    - 10       “
5.            சிறுகாஞ்சூரி துராலபா           - 10       “
6.            சுக்கு சுந்தீ                     - 10       “
7.            நிலவேம்பு பூநிம்ப              - 10       “
8.            கோஷ்டம் கோஷ்ட             - 10       “
9.            திப்பலி பிப்பலீ            - 10       “
10.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ       - 10       “
11.          சீந்தில்கொடி குடூசீ              - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாக இடித்து காற்றுப்புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.
கஷாயம் தயாரிக்கும் முறை:
                கஷாயப் பொடி  - 60 கிராம்
                தண்ணீர்        - 960 மில்லி லிட்டர்
                                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறிய பின் வடிக்கட்டவும்.
  
அளவு:          

 30 – 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.
  தீரும் நோய்கள்:  

வாதகப சுரம் எனும் வளிஐயக்காய்ச்சல் (வாதகபஜ்வர), குளிர்சுரம் (விஷமஜ்வர), முறைக்காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர) போன்ற பல விதமான காய்ச்சல்கள், இருமல் (காஸ), ஜலதோஷம் முதலியன. வயிற்றிலுள்ள உருண்டை, தட்டை மற்றும் கொக்கிப் புழுக்களை (க்ருமி கோஷ்ட) வெளியேற்றவும், மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் பயனாகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை -

  1. மர்ம காய்ச்சல் ,வைரஸ் காய்ச்சல் ,நாள்பட்ட காய்ச்சல் ,விட்டு வரும் காய்ச்சல் அனைத்திற்கும் இந்த மருந்து நல்ல மருந்து -இதனுடன் வெட்டுமாரன் குளிகா அல்லது அம்ருதாரிஷ்டம் அல்லது நிலவேம்பு சார்ந்த மருந்துகளான மகா சுதர்சன மாத்திரையுடன் தந்தால் காய்ச்சல் ஓடியே போகும் என்று பந்தயம் கட்டலாம் ..
  2. காய்ச்சல் வந்த உடன் -கஷாயம் தருவது நல்லது இல்லை ,முதலில் வயிற்றுக்கு பட்டினி தான் நல்லது ,பசியின் தன்மை அறிந்துதான் கஷாயம் தருவது நல்லது
  3. பாரங்கி +பவள மல்லி இலை கசாயம் கூட காய்ச்சலை குறைக்கும்
  4. வெள்ளை அணுக்கள் குறைந்து போகிறது ,இரத்த தட்டுக்கள் குறைந்து போகும் பேர் தெரியா காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது
  5. டெங்கு காய்ச்சல் –அணுக்கள் குரைக்கிற காய்ச்சல் மற்றும் சளி சேர்ந்த கப காய்ச்சல் –இருமல் சார்ந்த காய்ச்சல் –வைரஸ் காய்ச்சல் எல்லா பெயர் தெரியாத காய்ச்சலுக்கும் இந்த மருந்தை பயமின்றி தரலாம் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர –உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகி –எல்லா விதமான வைரஸ் காய்ச்சலில் இருந்தும் தடுத்து கொள்ளலாம்.
    உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க –இயற்கையாக நோய்களில் இருந்து சீக்கிரம் விடுதலை பெற –ஆயுர்வேத ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி
    அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
    கடையநல்லூர் 90 4222 5333
    திருநெல்வேலி 90 4222 5999
    ராஜபாளையம் 90 4333 6888
    சென்னை 90 4333 6000


Post Comment