ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

இப்போது கிடைக்கிற பெருங்காயம் -பெருங்காயமே இல்லை
  1. நூற்றுக்கு நூறு வேதி பொருளும் -பெருங்காய வாசனை திரவுமும் -மைதா மாவும் தான் 
  2. டப்பாக்களில் -பாக்கெட்டுகளில் விற்கப்படும் பெருங்காய வெளி தோற்றத்தில் அதை அவர்கள் தெளிவாக எழுதி உள்ளார்கள் நாம் தான் அதை படிப்பதில்லை ..
  3. அறுபத்தைந்து சதவீதம் பசை தான் உள்ளது ..







உண்மையான பெருங்காயம் எப்படி இருக்கும் ?அதற்க்கு என்ன பெயர் ?


பால்காயம் என்று எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் 




இந்த பெருங்காயம் உபயோகித்தால் என்ன ஆகும் ?

எல்லா நோய்க்கும் காரணமாகும் ..வயிறு புண்ணாகும் ,வயிற்றில்  வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..மயக்கம் வரும் ...




எப்படி நாம் பெருங்காயம் கலப்படம் கண்டறிய முடியும்?

பெருங்காயம் ரெசின், வர்ண, சோப்பு கல், ஸ்டார்ச், மற்றும் சுண்ணாம்பு போன்ற பொருட்கள் கலப்படம் இருக்கிறது. மாதிரி சிறிய அளவு எடுத்து சிறிதளவு நீர் சேர்த்து மெதுவாக சுழற்றினால். தூய பெருங்காயம் நீரில் கரையக்கூடியது மற்றும் பால் வெள்ளை தோன்றும், அது கலப்படம் இருந்தால் தீர்வு வண்ண தோன்றுகிறது. மாதிரி நீருடன் soapstone, கலப்படம் இருந்தால், அதே வழியில், விஷயத்தை செட்டில். தூய்மை கண்டறியும் மற்றொரு எளிய முறை, முள் முனை மாதிரி சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது வைக்கவும். பெருங்காயம் விரைவில் பிரகாசமான சுடர் கொடுக்கிறது மற்றும் மாசுக்களால் உள்ளன எரிகிறது. ஸ்டார்ச் கண்டுபிடிக்கும் asfoetida தீர்வு அயோடின் டிஞ்சர் சேர்க்க. நீல நிற கெமிக்கல் ஸ்டார்ச் முன்னிலையில் காட்டுகிறது.


பெருங்காயம்: ரெசின் மற்றும் வண்ண (கலப்படம் செய்ய உதவும் பொருள்)
ரசாயன பரிசோதனை: சோதனை குழாயில் பெருங்காயம் ஒரு சிறிய அளவு எடுத்து கொள்ளுங்கள். வடிகட்டிய தண்ணீரை 3 மில்லி சேர்த்து மெதுவாக குழாய் குலுக்கல். தூய பெருங்காயம் விரைவில் நீரில் கரையக்கூடியது, மற்றும் ஒரு பால் வெள்ளை நிற உற்பத்தி செய்கிறது. ஆனால் ரசாயன வண்ண மூலம் கலப்படத்தின் வழக்கில், கலவையை வண்ண இருக்க கூடாது. பெருங்காயம் தூய்மை கூட ஃபோர்செப்ஸ் முனையின் மீது, அது ஒரு சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது அதே வைப்பதன் மூலம் சோதனை. பெருங்காயம் பின்னால் அசுத்தங்கள் விட்டு, விரைவில் பிரகாசமான நெருப்பு எரியும் உற்பத்தி செய்கிறது.


Post Comment

திங்கள், ஏப்ரல் 22, 2013

கருப்பை கட்டிகள் -கருப்பை புற்று நோயை குணப்படுத்தும் கல் வாழை .


கருப்பை கட்டிகள் -கருப்பை புற்று நோயை குணப்படுத்தும் கல் வாழை .










பாபநாசம் ..பதினென் சித்தர் மூலிகை பொழிலில் நிறைய கல் வாழைகள் உள்ளன ..

மருத்துவர்  மைகேல் ஜெயராஜ் அவர்களின் பராமரிப்பில் அவைகள் நன்கு வளர்ந்து வருகின்றன ..கருப்பை புற்றுநோயையும் அழிக்க  ஆற்றல் வாய்ந்த இந்த கல் வாழைகள் ..இரண்டு குலை தள்ளி உள்ளது ..ஒன்று பூ பூத்திருக்கிறது .காணக்கிடைக்காத காட்சிகள் இவை ..


.பதினென் சித்தர் மூலிகை பொழிலை பற்றிய எனது பழைய கட்டுரை படிக்க ங்கே கிளிக் செய்யவும் 

Post Comment

புதன், ஏப்ரல் 17, 2013

உடல் இளைத்த க்ஷய நோய்க்கும் -அனீமியா நோய்க்கு லோகநாத ரஸ Loahanadha Rasa


உடல் இளைத்த க்ஷய நோய்க்கும்  -அனீமியா நோய்க்கு லோகநாத ரஸ Loahanadha Rasa
                                                                                                
(ஆதாரம் -பஸவராஜீயம் - க்ஷயப்ரகரண)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           20 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக         20           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.            பலகரை பற்பம் – வராட பஸ்ம         80 கிராம்
4.            மண்டூர பற்பம் – மண்டூர பஸ்ம        80           “
5.            அயபற்பம் – லோஹபஸ்ம             40           “

சேர்த்து பின்னர்

1.            மூக்கரட்டை வேர் கஷாயம் – புனர்னவ கஷாய
2.            பிரண்டைச்சாறு – அஸ்திஸம்ஹிர்த ரஸ
3.            ஆடாதோடைச்சாறு – வாஸாபத்ர ரஸ
4.            கொடிவேலி வேர் கஷாயம் – சித்ரமூல கஷாய
5.            நீர்பிரம்மிச்சாறு – நிர்ப்ரஹ்மீ ஸ்வரஸ
இவைகளைக் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் நன்கு அரைத்து கோலி போன்ற உருண்டைகளாக்கி வெய்யிலில் உலர்த்தவும். உலர்ந்தபின் அவற்றை அகலிலிட்டுச் சீலை மண்பூசி குக்குடபுடத்தில் புடமிடவும். ஆறிய பின்னர் அவ்வுருண்டைகளை நன்கு பொடித்து நிறுத்து அதன் எடைக்குச் சமம் பொடித்துச் சலித்த மிளகுச் சூர்ணம் சேர்த்து அவைகளை

1.            வெற்றிலைச்சாறு – நாகவல்லி பத்ரஸ்வரஸ
2.            இஞ்சிச்சாறு – ஆர்த்ரக ஸ்வரஸ
3.            கரிசாலைச்சாறு – ப்ருங்க ராஜ ஸ்வரஸ
4.            நொச்சியிலைச்சாறு – நிர்குண்டீஸ்வரஸ
5.            கொட்டைக் கரந்தைச்சாறு – ஹப்புஸ ஸ்வரஸ
6.            முருங்கைப்பட்டைக்கஷாயம் – சிக்ருத்வக் கஷாய
7.            திரிபலாகஷாயம் – த்ரிபலா கஷாய
இவற்றைக் கொண்டு தனித்தனியே ஒரு நாள் நன்கு ஊற வைத்து அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



நாட்பட்ட சுரம் (புராண ஜ்வர)இருமல் (காஸ)இழைப்பு (ஸ்வாஸ)க்ஷயம் (க்ஷய)இரத்த சோகை (பாண்டு)காமாலை (காமால)வீக்கம் (ஸோப)ரத்தக் குறைவு (ரக்தால்பத)காங்கை (அதிக அளவில் உடல் கொதித்தல்)ஜீரணக் கோளாறுகள்.

நாட்பட்ட சுரத்தில் அமிர்தாரிஷ்டத்துடனும்இருமல்இழைப்பில் வாஸாரிஷ்டத்துடன் மட்டுமோ (அ) வாஸாரிஷ்டம்கற்பூராதி சூரணத்துடனும்க்ஷயத்தில் தாளீசாதி சூர்ணம் (அ) சீதோபலாதி சூர்ணத்துடனும்பாண்டுகாமாலைவீக்கம் போன்ற நிலைகளில் முக்கியமாக புனர்னவாஸவத்துடனோ (அ) மூக்கிரட்டை கஷாயத்துடனோ தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 

காச  நோய்க்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
இரத்த சோகையை அடியோடு அழிக்கும் ..
நாள்பட்ட சுரத்தினால் வரும் பலஹீனத்தை சரி செய்யும் -தெம்பு தரும் .


Post Comment

இரத்த சோகையை குணமாக்கும் -லோஹரஸாயனம் Loha Rasayanam


இரத்த சோகையை குணமாக்கும் -லோஹரஸாயனம் Loha Rasayanam 
                                                                                              
  (ஆதாரம் -ரஸயோக ரத்னாகரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக         10           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.            அயபற்பம் – லோஹபஸ்ம             30 கிராம் சேர்த்து அரைத்து பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து மூன்று நாட்கள் அரைத்துக் கோலி போன்ற மாத்திரைகளாக உருட்டி உலரவைத்து அவற்றை ஓர் தாமிரப் பாத்திரத்தில் போட்டு மூடிச் சீலைமண்பூசி நெற்குவியலில் புதைத்து மூன்று நாட்கள் வைக்கவும். 3- ஆம் நாள் உருண்டைகளைப் பிரித்தெடுத்துக் கல்வத்திலிட்டுப் பொடி செய்து மூன்று நாட்கள் அரைத்துப் பின்னர் அக்கலவையை இரும்புக் கல்வத்திலிட்டு

1.            துளசிச்சாறு – துளசி ஸ்வரஸ
2.            திரிகடுகஷாயம் – திரிகடுகஷாய
3.            சித்தரத்தைக் கஷாயம் – ராஸ்னா கஷாய
4.            சீந்தில் கஷாயம் – குடூசீ கஷாய
5.            கொடிவேலிவேர் கஷாயம் – சித்ரக கஷாய

இவைகளைக் கொண்டு வகைக்கு மூன்று நாட்கள் அரைத்த பின்னர் அக்கலவையை இரும்புக் கல்வத்திலிட்டு

6.            திரிபலா கஷாயம் – திரிபலா கஷாய
7.            நொச்சியிலைச்சாறு – நிர்குண்டீ ஸ்வரஸ
8.            மாதுளை ஓடு கஷாயம் – தாடிமத்வக் கஷாய
9.            தாமரைக்கிழங்குச்சாறு – கமலமூல ஸ்வரஸ
10.          கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ஸ்வரஸ
11.          அம்மையார் கூந்தல் கஷாயம் – ப்ரஸாரிணி கஷாய
12.          புரசம்பட்டை கஷாயம் – பலாஸத்வக் கஷாய
13.          வாழைக்கிழங்குச்சாறு – ரம்பா ஸ்வரஸ
14.          விஷ்ணுக்கிராந்திச்சாறு – விஷ்ணுகிராந்தி ஸ்வரஸ
15.          கருவேலம்பட்டைக் கஷாயம் – பப்பூலத்வக் கஷாய

இவற்றைக் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் வரை வைத்தரைத்து உலர்ந்தபின் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

100 முதல் 200 மில்லி கிராம் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

இரத்த சோகை (பாண்டு)காமாலை (காமால)வீக்கம் (ஸோப)இரத்தக் குறைவு (ரக்தால்பத)பலவீனம் (பலக்ஷய / தௌர்பல்ய).
                இது மற்ற மருந்துகளுடன் சேர்ந்து வலுவூட்டிச் செய்கைக்காக (Tonic Action) கொடுக்கப் படுவதுண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை .

எலும்பு மஜ்ஜைகளில் ஆற்றலை அதிகபடுத்தி -இரத்தத்தை அதிகபடுத்தும் .

ஹீமோ க்லோபின் அளவு ஆறுக்கு  குறைவாக இருந்தாலும் வெகு வேகமாக நார்மல் அளவுக்கு கொண்டு வரும் நல்ல மருந்து இது ..

Post Comment

கழிச்சலை குணபடுத்தும் -லசுனாதிவடி Lasunadhi Vati

கழிச்சலை குணபடுத்தும் -லசுனாதிவடி   Lasunadhi Vati                                                           
  (ஆதாரம் -லோலம்பராஜீயம் - விக்ஷூசிகாசிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            தோல் நீக்கிக் கல்வத்திலிட்டு நன்கு
       அரைத்து விழுதாக்கிய பூண்டு / லசுன             10 கிராமுடன்
2.            சீரகம் – ஜீரக                                     10 கிராம்
3.            சுக்கு – சுந்தீ                                     10           “
4.            திப்பிலி – பிப்பலீ                                 10           “
5.            மிளகு – மரீச்ச                                   10           “

இவைகளை நன்கு பொடித்துச் சலித்த சூர்ணம்

6.            சுத்தி செய்த கந்தகம் (பொடித்தது) – ஷோதித கந்தக      10           “
7.            இந்துப்பு (பொடித்தது) – ஸைந்தவ லவண                10           “
8.            பால் பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) – ஹிங்கு     10           “

இவற்றைச் சேர்த்து நன்கு கலந்த அரைத்துப் பின்னர் அவற்றை எலுமிச்சம்பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ) கொண்டு ஏழு நாட்கள் அரைத்துப் பதத்தில் 200 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
குறிப்பு:    எலுமிச்சம்பழச்சாறுக்கு பதில் வேப்பம் பட்டைக் கஷாயம் உபயோகிப்பதும் உண்டு.

அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 2 முதல் 3 வேளைகளுக்கு வெந்நீர் அல்லது மோருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்


பேதி (அதிஸார)பெருங்கழிச்சல் (க்ரஹணீ)வாந்திபேதி (விஷூஸிகா) எனும் காலராபசியின்மை (அக்னிமாந்த்ய)வயிற்றுப்புசம் (ஆனாக) மற்றும் பலவித ஜீரணக் கோளாறுகள்இந்நிலைகளில் இது அஜமோதார்க்க அல்லது கற்பூராத்யர்க்கத்துடன் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
1. சீத பேதி முதல் -புட் பாய்சன் வரை -கிராணி கழிச்சல் முதல் -காலரா வரை -பேதிக்கு நல்ல பலன்  தரும் மருந்து இது 



Post Comment

செவ்வாய், ஏப்ரல் 16, 2013

குழந்தை ஈன்ற தாய்க்கு வரும் எல்லா நோய்க்கும் -லக்ஷ்மீ நாராயண ரஸ -லக்ஷ்மி நாராயண ரச-Lakshmi Narayana Rasa


குழந்தை ஈன்ற தாய்க்கு வரும் எல்லா நோய்க்கும் -லக்ஷ்மீ நாராயண ரஸ -லக்ஷ்மி நாராயண ரச-Lakshmi Narayana Rasa 
                                                                                                
(ஆதாரம் -பைஷஜ்யரத்னாவளி - ஸூதிகாரோகசிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த லிங்கம் – ஷோதித ஹிங்குள    10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக       10           “

இவற்றைத் தனித்தனியே நன்கு பொடித்துப் பின்னர் சேர்த்தரைத்து அத்துடன்

3.            கடுகரோஹிணீ – கடுகீ                10 கிராம்  
4.            அதிவிடயம் – அதிவிஷா               10           “
5.            திப்பிலி – பிப்பலீ                      10           “
6.            வெட்பாலை அரிசி – இந்த்ரயவ         10           “

இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம்

7.            இந்துப்பு (பொடித்தது) – ஸைந்தவலவண      10           “
8.            அப்பிரக பற்பம் – அப்ரக பஸ்ம                10           “
9.            வெங்காரம் (பொரித்துப் பொடித்தது)
                                                                                  – டங்கண பஸ்ம 10           “
10.          சுத்தி செய்த நாபி (திரிபலா கஷாயம்
                   சேர்த்தரைத்தது) – ஷோதிதவத்ஸநாபி  10           “

இவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் கல்வத்திலிட்டு

1.            திரிபலைக் கியாழம் – திரிபலா கஷாயம்
2.            நேர்வாள வேர்க்கியாழம் – தந்தீமூல கஷாயம்

இவற்றைக் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் அரைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகள் ஆக்கவும்.

அளவும் அனுபானமும்:    

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 2 முதல் 3 வேளைகள் இளநீர் வெற்றிலைச்சாறுதேன் அல்லது இஞ்சிச்சாறுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

பொதுவாக பிரஸவத்திற்கு பின்னேற்படும் நோய்கள் (சூதிகாரோக)காய்ச்சல் (ஜ்வர)பேதி (அதிஸார)பெருங்கழிச்சல் (க்ரஹணீ)செரிமானக் கோளாறுகள் (ஜீர்ண தோஷ)வாத நோய்கள் (வாத ரோக).
                குழந்தையீன்ற பின்னேற்படும் நோய்களுக்கு இது மிளகுசீரகக் கியாழத்துடன் தரப்படுகிறது. இருமல் மற்றும் மூச்சுக் கோளாறுகளில் இது மிளகுசித்தரத்தை கஷாயத்துடன் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை .
குழந்தை ஈன்ற தாய்க்கு வரும் சன்னி போன்ற பெரிய நோய் முதல் ,காய்ச்சல் போன்ற நோய்கள் வரையும் சர்வ நோய்க்கும் இந்த மருந்தை பயமின்றி தரலாம் ..
பொதுவாக ஜீர்காத்யாரிஷ்டம் ,தஷமூலாரிஷ்டம் ,தான்வன்தரம் குளிகை ,சௌபாக்ய சுண்டி போன்ற மருந்துகளை குழந்தை ஈன்ற தாய்க்கு தருவது வழக்கம் ..இந்த மருந்தோடு தேவை ஏற்படின் இந்த மாத்திரையை தரலாம் ..
குழந்தை ஈன்ற தாய்க்கு ஏற்படும் அதிக உதிரபோக்கை -இந்த மருந்தை ஆடாதோடை ஸ்வரசத்துடன்  தர நல்ல பலன் தரும் ..
உயிரை காப்பாற்றும் அற்புத மருந்தாக அந்த காலத்தில் ( இந்த காலத்திலும் ) பிரசவத்தினால் வரும்  காம்ப்ளிகேஷன் என்னும் சிக்கல்களை தீர்க்க உதவும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை ..


Post Comment

நடக்க இயலாத குழந்தைகளையும் நடக்க ஆற்றல் தரும் -குமார கலயாணக இரசம் -Kumara Kalyanaka Ras


குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்டிடும் -குமார கல்யாண ரஸ -KUMARA KALYANA RAS

 (ref-பைஷஜ்யரத்னாவளி - பாலரோகாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.      இரசச் செந்தூரம் ரஸ ஸிந்தூரம்     50 கிராம்
2.      முத்து பற்பம் மௌக்திக பஸ்ம       50           “
3.       தங்க பற்பம் ஸ்வர்ண பஸ்ம         50           “
4.      அப்பிகர பற்பம் அப்ரக பஸ்ம          50           “
5.      அய பற்பம் லோஹ பஸ்ம           50           “
6.        பொன்னிமிளை பற்பம் ஸ்வர்ண 
                           மாக்ஷிக பஸ்ம  50           “


இவைகளைக் கல்வத்திலிட்டுக் கற்றாழைச் சாறு (குமாரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 100 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாகச் செய்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் இரு வேளைகளுக்கு தேன் அல்லது பாலுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

குழந்தைகளின் நோய்கள் (பால ரோக), பேதி (அதிஸார), காமாலை (காமால), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), பக்கரோக, வாந்தி (சர்தி), ஜீரணக் கோளாறுகள், இளைப்பு.

                இது முக்கியமாக குழந்தைகளுக்கேற்படும் மேற் கூறிய நிலைகளில் சிறப்பான பலனளிக்க வல்லது.  

தெரிந்து  கொள்ள வேண்டியவை ..

எப்போது பார்த்தாலும் உடம்பு சுகம் இல்லை என்று குழந்தையை காட்டும் பெற்றோருக்கு இந்த மருந்து ஒரு நல்ல தீர்வு 

ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படி -இந்த மருந்தை -ரஜன்யாதி சூர்ணம் ,அரவிந்தாசவம்  போன்ற மருந்துடன் தர நல்ல பலன் கிடைக்கும் 

தங்கம் சேர்ந்திருப்பதால் சற்று விலை அதிகம் ..

பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது ..

ஒரு வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு தருவது நல்லது ..

கோழி கறி ,சாக்கலேட்டுகள் தவிர்த்தல் வேணும் ..

ஒரு வயது ஆகியும் நடக்காத குழந்தைக்கு (இந்த நோயை ஆயுர்வேதம் பக்க ரோகம் என்கிறது ) இந்த மருந்தை பிரம்மி கிருதம் போன்ற மருந்தோடு தர வேண்டும் ..

கால் வலு இல்லாத குழந்தை ,எலும்பில் தெம்பு இல்லாத குழந்தை ,ஆட்டிசம் போன்ற நோய் உள்ள குழந்தைக்கும் தரலாம் ..


Post Comment