செவ்வாய், மே 10, 2011

வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்



டெங்கு காய்ச்சல் –பன்றி காய்ச்சல் இரண்டையும் குணப்படுத்தும் –வராமல் தடுக்கும் மருந்து –பாரங்யாதி கஷாயம் 


வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:



1.            கண்டுபாரங்கி பார்ங்கீ      - 10 கிராம்
2.            கோரைக்கிழங்கு முஸ்தா        - 10       “
3.            பர்பாடகம் பர்பாடக             - 10       “
4.            கொத்தமல்லிவிதை தான்யக    - 10       “
5.            சிறுகாஞ்சூரி துராலபா           - 10       “
6.            சுக்கு சுந்தீ                     - 10       “
7.            நிலவேம்பு பூநிம்ப              - 10       “
8.            கோஷ்டம் கோஷ்ட             - 10       “
9.            திப்பலி பிப்பலீ            - 10       “
10.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ       - 10       “
11.          சீந்தில்கொடி குடூசீ              - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாக இடித்து காற்றுப்புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.
கஷாயம் தயாரிக்கும் முறை:
                கஷாயப் பொடி  - 60 கிராம்
                தண்ணீர்        - 960 மில்லி லிட்டர்
                                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறிய பின் வடிக்கட்டவும்.
  
அளவு:          

 30 – 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.
  தீரும் நோய்கள்:  

வாதகப சுரம் எனும் வளிஐயக்காய்ச்சல் (வாதகபஜ்வர), குளிர்சுரம் (விஷமஜ்வர), முறைக்காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர) போன்ற பல விதமான காய்ச்சல்கள், இருமல் (காஸ), ஜலதோஷம் முதலியன. வயிற்றிலுள்ள உருண்டை, தட்டை மற்றும் கொக்கிப் புழுக்களை (க்ருமி கோஷ்ட) வெளியேற்றவும், மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் பயனாகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை -

  1. மர்ம காய்ச்சல் ,வைரஸ் காய்ச்சல் ,நாள்பட்ட காய்ச்சல் ,விட்டு வரும் காய்ச்சல் அனைத்திற்கும் இந்த மருந்து நல்ல மருந்து -இதனுடன் வெட்டுமாரன் குளிகா அல்லது அம்ருதாரிஷ்டம் அல்லது நிலவேம்பு சார்ந்த மருந்துகளான மகா சுதர்சன மாத்திரையுடன் தந்தால் காய்ச்சல் ஓடியே போகும் என்று பந்தயம் கட்டலாம் ..
  2. காய்ச்சல் வந்த உடன் -கஷாயம் தருவது நல்லது இல்லை ,முதலில் வயிற்றுக்கு பட்டினி தான் நல்லது ,பசியின் தன்மை அறிந்துதான் கஷாயம் தருவது நல்லது
  3. பாரங்கி +பவள மல்லி இலை கசாயம் கூட காய்ச்சலை குறைக்கும்
  4. வெள்ளை அணுக்கள் குறைந்து போகிறது ,இரத்த தட்டுக்கள் குறைந்து போகும் பேர் தெரியா காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது
  5. டெங்கு காய்ச்சல் –அணுக்கள் குரைக்கிற காய்ச்சல் மற்றும் சளி சேர்ந்த கப காய்ச்சல் –இருமல் சார்ந்த காய்ச்சல் –வைரஸ் காய்ச்சல் எல்லா பெயர் தெரியாத காய்ச்சலுக்கும் இந்த மருந்தை பயமின்றி தரலாம் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர –உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகி –எல்லா விதமான வைரஸ் காய்ச்சலில் இருந்தும் தடுத்து கொள்ளலாம்.
    உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க –இயற்கையாக நோய்களில் இருந்து சீக்கிரம் விடுதலை பெற –ஆயுர்வேத ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி
    அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
    கடையநல்லூர் 90 4222 5333
    திருநெல்வேலி 90 4222 5999
    ராஜபாளையம் 90 4333 6888
    சென்னை 90 4333 6000


Post Comment

3 comments:

Chitra சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க.

வானவன் யோகி சொன்னது…

தங்களைப் போல் ஒரிருவரே மருத்துவம் செய்வதுடன் பழஞ்சுவடிகளை ஆராய்ந்து கொண்டே,இன்னும் அறிதல் அவசியம் என்று அறிந்துள்ளனர்......

தாங்கள் கண்ட உண்மைகளை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி இப்பாரம்பரியக் கலையை வளர்ப்பதுடன்,......

மற்றொரு கட்டத்திற்கு தாங்கள் கொண்டு செல்வதிலுள்ள நாட்டம் எம்மைப் போன்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.......

உண்மையின் ஜோதியை ஏந்திப் பிடித்திருக்கும் தங்களின் உயரத்தை எவராலும் அளவிட முடியாது என்பதே உண்மை.......

வளர்க.....உயர்க.......மென்மேலும்...>>>>>>>>>

Anand Kumar சொன்னது…

அருமையான பதிவு. உங்களை நான் கடந்த செப்டம்பர் 2013 ல் சந்தித்து இருந்தால் என் தந்தை இன்று உயிருடன் இருந்து இருப்பார். என் தந்தை பித்த பை கல் வீக்கம் நோயால் காய்ச்சல் வந்து வெள்ளை அணுக்கள் 23,000 அளவு சென்றதால் sepsis என்ற நிலையை மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக அடைந்து இறந்து விட்டார்.அவரை இழந்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். உங்கள் அலை பேசி எண்ணை குறிபிடவும்.எனது என் 9841097231. thuraiyur.

கருத்துரையிடுக