செவ்வாய், அக்டோபர் 02, 2012

சர்வ ரோக நிவாரணி -தான்வந்தரம் குடிகா-Dhanwantaram Gutika


வாயுக்களை ஒழுங்கு செய்யும் சர்வ ரோக நிவாரணி -தான்வந்தரம் குடிகா-
தான்வந்த்ர குடிகா-Dhanwantaram Gutika
(ref-ஸர்வரோக சிகித்ஸாரத்னம் சுவாஸ, ஹித்மாப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:



1.            ஏலக்காய் (தோல் நீக்கிய அரிசி) ஏல               10 கிராம்
2.            சுக்கு சுந்தீ                                         10          
3.            கடுக்காய் (தோல் நீக்கியது) ஹரீதகீ பலத்வக்      10          
4.            ஜாதிக்காய் ஜாதீபல                               10          
5.            முள்ளுக்கத்திரி வேர் ப்ருஹத்தீ                    10          
6.            ஆசாளி விதை அதஸீபீஜ                         10          
7.            சீரகம் ஜீரக                                      10          
8.            வால் மிளகு கங்கோல                           10          
9.            நிலவேம்பு பூநிம்ப                               10          
10.          ருத்ராக்ஷம் ருத்ராக்ஷ                           10          
11.          தேவதாரு தேவதாரு                            10          

இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம்

12.          கண்டி வெண்ணெய் (பொடித்த்து) கண்டிவெண்ண
இவற்றைக் கல்வத்திலிட்டு ஜீரகக் கஷாயம் விட்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில்

13.          பொடித்துச் சலித்த பச்சைக் கற்பூரம் –     கற்பூர       10 கிராம்
14.          இளஞ்சூட்டில் உருக்கி வடிக்கட்டிய  
புனுகு கந்தமார்ஜர வீர்ய                                  10          


                இவற்றையும் சேர்த்து நன்கு கலக்கி அரைத்து 50 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர வைத்துப் பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    

 கண்டி வெண்ணெய்யைப்பற்றி பலவிதமான அபிப்பிராய பேதங்கள் நிலவுவதால் ருமிமஸ்தகி என்ற பூனைக்கண் குங்கிலியம் சேர்ப்பது சம்பிரதாயம்
                 
அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது ஜீரக கஷாயத்துடன் இரண்டு முதல் நான்கு வேளைகள். சிலர் பலாச பத்ரம், பூநிம்பம், ஜீரக கஷாயத்துடன் தருவர்.

தீரும் நோய்கள்:  




இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), விக்கல் (ஹிக்க), வாந்தி (சர்தி), மார்வலி (ஹ்ருச் சூல), காய்ச்சல் (ஜ்வர), இருதய பலவீனம் (ஹ்ருத்தௌர்பல்ய), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக) வாயு உபத்திரவங்கள், இதயத்திற்கு வலுவூட்டக் கூடியது
.
                குழந்தைகளுக்கு உண்டாகும், மேற்கூறிய வியாதிகளில் இது விசேஷமாக உபயோகிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வர பிரஸவம் எளிதாகும்.


தெரிந்து கொள்ள வேண்டியது ..
  1. எனது கிளினிக்கில் அதிகம் நான் உபயோகிக்கும் மருந்துகளில் மிக மிக முக்கியமானது இந்த மருந்து என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் ..
  2. ஆயுர்வேதத்தில் பொதுவாக தான்வந்தரம் என்று தன்வந்தரியின் பெயர் தாங்கும் அனைத்து மருந்துகளும் மிக மிக முக்கியமானவை ..
  3. உடம்பில் உள்ள தச வாயுக்களில் (ஆயுர்வேத சாஸ்திரங்கள் பஞ்ச வாயுக்கள் என்று சொல்கின்றன ) எந்த தடையை நீக்க வேண்டுமானாலும் ,ஒழுங்கு படுத்த வேண்டுமானாலும் இந்த மருந்தை மிக மிக நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் ..
  4. இந்த மருந்து ஒரு அற்புத மருந்து ...
  5. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மருந்து ...
  6. ஹார்ட் அட்டாக்கின் போது பயன்படுத்தப்படும் ஆங்கில மருத்துவத்தில் நாக்குக்கு அடியில் வைக்கப்படும் சார்பிட்ரெட் ,நைட்ரோ கிளிசரின் -போன்ற மருந்துக்கு இணையாக இதயத்தில் ஏற்படும் வலியை நீக்கும் ..இதயத்தை வலுவாக்கும் ..இதயத்திற்குள் இருக்கும் வாயுவை ஒழுங்கு செய்யும் (இதய அடைப்பை நீக்க துணை மருந்தாக வேலை செய்யும் )
  7. சாதாரண வயிறு உப்புசம் ,செரியாமை ..வயிறு ஏற்றம் முதல் அனைத்து ஜீரண மண்டல நோயை நீக்கும் ..குணப்படுத்தும்.
  8. புனுகு சேர்க்க வில்லை என்றால் இந்த மருந்து வேலை செய்யவே செய்யாது ...பல கம்பெனிகள் புனுகு என்ற மருந்தை சேர்ப்பதில்லை ...புனுகில் போலியானதை சேர்த்தாலும் இந்த மருந்து வேலை செய்யாது ...
  9. சுவாசம் -இளைப்பு ..மூச்சு வாங்குதல் ..நடந்தால் மூச்சு வாங்குதல் போன்றவற்றில் நல்ல பலன் அளிக்கும் ..
  10. எழு மாதத்திற்கு பின் தொடந்து சாப்பிட சுக பிரசவம் ஆகும் ..
  11. இரண்டு மாத்திரைகளை -காலை மாலை ஆகாரத்திற்கு முன் வெந்நீரில் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் ..
  12. தினமும் எல்லோரும் பயன்படுத்தலாம் ..

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

மிக பயனுள்ள மருந்து நண்பரே மிக்க நன்றி !

"எழு மாதத்திற்கு பின் தொடந்து சாப்பிட சுக பிரசவம் ஆகும் .."

கர்ப்பிணி பெண்கள் அவசியம் பயன்படுத்திக்கொள்ளவும் .

கருத்துரையிடுக