வெள்ளி, ஏப்ரல் 17, 2015

சொல்ல முடியாத வேதனை -நண்பர்களே உதவுங்கள் ..

வலை தள நண்பர்களே ..
மக்களுக்கு ஆயுர்வேத சித்த மருத்துவத்தை கொண்டு சென்று உலகறிய செய்யவேண்டும் என்ற நல்ல நோக்கத்திலே இந்த ஆயுர்வேத மருத்துவம் என்ற பிளாக் ஸ்பாட் தளம் உருவாக்கப்பட்டது  என்பது நீங்கள் அறிந்ததே ..

எனது தளம் பல போலி மருத்துவர்களை உண்டாக்குகிறது என்ற பெரிய குற்றசாட்டை எனது சக மருத்துவர்கள் வைத்த காரணத்திற்க்காக என்னால் பல மாதங்களாக என்னால் தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .

நான் யார் ,எந்த ஊர் என்ற விவரங்கள் இல்லாமலே தான் சில வருடங்களாக இந்த தளத்தில் மக்களுக்கு ஆயுர்வேத சித்த மருத்துவத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று நடத்தி வந்தேன் ..


தற்செயலாக ஒரு சர்ச் எஞ்சினில் தேடி கொண்டிருக்கும் போது இன்று தான் இந்த தளம் அதாவது எனது மொத்த www.ayurvedamaruthuvam.blogspot.com தளத்தையே ஒரு அச்சு அசல் மாறாமல் இந்த தளத்தில் பதிவு ஏற்றப்பட்டுள்ளது என்று தெரிந்து மிகவும் நொந்து போய் விட்டேன் ..மிகவும் சொல்ல முடியாத துயருக்கு -வேதனைக்கு ஆளாக்கபடுகிறேன் ..இந்த தளத்தின் முகவரி www.tamilnaturalmedicine.blogspot.in என்ற இந்த தளம் ..
இந்த தளத்தின் ஸ்க்ரீன் ஷாட் இதோ






கிட்டத்தட்ட எனது எல்லா பதிவுகளையும் காப்பி செய்யப்பட்டுள்ளது இந்த தளத்தில் ..சுமார் ஆயிரம் பதிவுகள் எனது தளத்தில் இருந்து அச்சு அசல் மாறாமல் காப்பி அடிக்கப்பட்டுள்ளது ..

தாங்க முடியாத வேதனை அடைகிறேன் ..
இந்த தளத்தின் பின்னூட்டத்தில் ..இவ்வாறு எழுதுள்ளேன் ..
எனது பிளாக்கை அப்படியே காப்பி அடித்ததற்கு நீங்கள் ஏன் என்னிடம் அனுமதி வாங்க வில்லை .,நீங்கள் செய்கிற இந்த காரியம் என்னை போன்றவர்களை மிகவும் கஷ்டப்டுத்துவதாக உள்ளது ..ஒருவர் பொருளை திருடுவது மட்டுமல்ல அவரது கருத்துகளை திருடுவதும் மிக பெரிய திருட்டு ..நண்பா ..ஏன் இப்படி செய்தாய் ?.என்னை போன்றவர்களை தொடர்ந்து எழுதாது இருக்க உங்களை போன்றவர்களே மிக முக்கிய காரணம் ...நீங்கள் உடனடியாக எனது தளத்தில் இருந்து காப்பி அடித்ததை எல்லா கட்டுரைகளும் நீக்க வேண்டும் ..அன்பாக கூறுகிறேன் ..மிக விரைவில் /குறிப்பிட்ட கால தில் /ஒரு வார காலத்திற்குள் எனது www.ayurvedamaruthuvam.blogspot.com என்ற தளத்தில் இருந்து காப்பி அடித்தை நீக்கா விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும் ..எனது email முகவரி curesure4u@gmail.com

இந்த காப்பி அடித்தமைக்கு என்னை போன்ற தன்னலம் கருதாது உழைக்கும் மனிதனை செருப்பால் அடித்திருக்கலாம் ..உங்களது செயல் அருவருக்கத்தக்கது ..கண்டிக்கத்தக்கது



நான் என்ன செய்ய வேண்டும் நண்பர்களே -உதவுங்கள் ..
சைபர் க்ரைம் -பதிவு காப்பி அடிக்ககூடாது என்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திருடனை எப்படி கண்டு பிடிப்பது


எனக்கு உங்களது உதவி தேவை
1.www.tamilnaturalmedicine.blogspot.in -என்ற இந்த திருட்டு தளத்தின் கயவன் -திருடன் யார் ?
2. எப்படி கண்டுபிடிப்பது ?
3.எப்படி action -எடுப்பது ?
4. எப்படி சட்டப்படி -பதிவு காப்புரிமை படி அவரை  அணுகுவது

என்று எனக்கு உதவி செய்தால் பெரிய உதவியாக இருக்கும் .



அல்லது நான் என்ன செய்யட்டும் ..ஓரிரு கட்டுரைகள் திருடப்பட்டாலே வேதனை தருவது ..மொத்த எனது தளத்தையுமே  திருடிய இந்த நபரை என்ன செய்வது ..

Post Comment

1 comments:

puduvaisiva சொன்னது…

மிக வருத்தமாக உள்ளது <<<>>>கீழ் உள்ள தளங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்
(1)http://edu.tamilclone.com/?p=4400
(2)http://www.labnol.org/internet/filing-dmca-complaint-to-google/8185/ (3) http://labnol.blogspot.in/2006/07/dealing-with-website-plagiarism-when.html (4) https://blog.kissmetrics.com/find-remove-stolen-content/ (5) https://support.google.com/webmasters/answer/66359?hl=en (6) https://productforums.google.com/forum/#!topic/blogger/_8L5F5jvhA4 (7) https://www.blogger.com/content.g?hl=ta உலகின் மாபெரும் திருட்டு
பதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-1)
http://vijayandurai.blogspot.com/2012/03/blog-post.html & (பாகம்-2) (பாகம்-3) (பாகம்-4)

கருத்துரையிடுக