ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

படை ,ஸ்கேபிஸ்,கரப்பான் -தோல் நோய்களுக்கு சிறந்த களிம்பு-ரஸோத்தமாதி லேபம்- Rasotthamadhi lepam


படை ,ஸ்கேபிஸ்,கரப்பான்  -தோல் நோய்களுக்கு சிறந்த களிம்பு-ரஸோத்தமாதி லேபம்- Rasotthamadhi lepam
 (ref-யோகரத்னாகரம் - பாமா சிகித்ஸா)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:
I.             

 1.பாதரஸம் ரஸ                      50 கிராம்
2.     கந்தகம்  - கந்தக                 50           “
கந்தகத்தைக் கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் ரஸத்தைச் சேர்த்து அறைத்து நன்கு கறுத்த கஜ்ஜளி ஆக்கவும்.

II.             

மனோசிலை (மனசில) 50 கிராம் எடுத்துத் தனியே கல்வத்திலிட்டுப் பொடிக்கவும்.


III.         

  1.            சீரகம் ஜீரக                     50 கிராம்
2.            கருஞ்சீரகம் க்ருஷ்ணஜீரக       50           “
3.            மிளகு மரீச்ச                   50           “
4.            மஞ்சள் ஹரித்ரா               50           “
5.            மரமஞ்சள் தாருஹரித்ரா        50           “

இவைகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். பின்னர்

1.            ரஸகந்தக கஜ்ஜளி                         100 கிராம்
2.            பொடித்த மனோசிலை                    50           “
3.            பொடித்துச் சலித்த சரக்குகளின் சூரணம் 250         “
4.            வங்கச்சிந்தூரம்                          50           “
இவைகளை ஒன்று சேர்த்துக் கல்வத்திலிட்டு அக்கலவை நன்கு கருத்துவரும் வரை அரைத்து பத்திரப்படுத்தவும்.

இம்மருந்து வெளி உபயோகத்திற்கானதால் ரஸம், கந்தகம், மனோசிலை இவைகளைச் சுத்தி செய்ய வேண்டியதில்லை.

இம்மருந்தைத் தேங்காய் எண்ணெய், நெய், எலுமிச்சம் பழச்சாறு, இவற்றுடன் கலந்தும் பூசலாம்.

                 
மேற்கூறிய மருந்தைக் களிம்பாகச் செய்து பயன்படுத்த வேண்டுமானால் அதற்காக உபயோகிக்க வேண்டிய சரக்குகளின் விகிதம் பின் வருமாறு அமையும்:
1.            ரஸோத்தமாதிலேப சூர்ணம் 10 கிராம்
2.            தேங்காய் எண்ணெய்        300         “
3.            தேன் மெழுகு              75           “
இவைகளை முறைப்படி சேர்த்துக் களிம்பாக்கவும்.

தீரும் நோய்கள்: 



 சொரி (அ) நமைச்சல் (அ) அரிப்பு (கண்டு), சிரங்கு (பாமா), படை (விஸர்ச்சிகா) முதலிய நோய்கள் (சரும ரோகங்கள்).


 பயன்படுத்தும் முறை:           

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். லேப சூர்ணமாக இருக்கும் சமயங்களில் தேங்காய் எண்ணெய், நெய் அல்லது எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து மேலே பூசலாம். களிம்பாக இருக்கும் சமயங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் அப்படியே பூசலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கரப்பானுக்கு -இந்த லேபதை -கரப்பான் தைலத்துடன் கலந்து பூச -நன்கு பலன் தரும்
  2. தோல் நோய்களில் -எவ்விதமாக இருந்தாலும் -நல்ல பலன் தரும்
  3. இந்த லேபம் -களிம்பாக இல்லாமல் -சூரணமாக கிடைக்கிறது

Post Comment

0 comments:

கருத்துரையிடுக