திங்கள், மே 17, 2010

மருதாணி -மதயந்திகம்


  • சமக்ருததில் மருதான்றியை  மதயந்திக என்று சொல்வோம் ..
  • செய்கையில் -கப பித்தத்தை குறைக்கும் ,அரிப்பை நிறுத்தும் .
  • சுஸ்ருதர் -இதனை மோதயந்தி என்று தனது சம்ஹிதையில் -சிகிட்சா ஸ்தானத்தில் இருபத்தைந்தாவது அத்தியாயத்தில் கூறுகிறார்.
  • தீர்க்கும் நோய்களில் -மஞ்சள் காமாலை ,மூத்திர க்ருச்ரம் என்னும் நீர் கடுப்பு ,அபஸ்மாரம் என்னும் வலிப்பு ,கண்டு என்னும் அரிப்பு நோய்,ரக்த அதிசாரம் போன்ற நோய்களை சரி செய்யும் ..

சித்த மருத்துவத்தில் -
  • செய்கை -துவர்ப்பி,விரண சுத்தி ,நாற்றமக்ற்றி .
  • பண்பு -கீல் வாயு ,குடைச்சல் ,தலை நோய்,கை கால் வலி,எரிச்சலில் -வெளிபூச்சு பூச சரியாகும் 
  • நகப்புண்,சுளுக்கு,புண் இவைகளுக்கு இலையை வைத்து கட்டி குணமாக்கலாம்.
  • இலையை தண்ணீரில் ஊறவைத்து தொடர்ந்து குடிக்க -மேக சொறி புண் படைகள் நீங்கும் 
  • இலை சாறை பாலுடன் சாப்பிட கை கால் வலி நீங்கும் 
  • இலை சாறை பால் -சர்க்கரையுடன் கொடுக்க விந்து பெருகும் 

  • பூ -இந்த பூவை தலையனையாக்கி படுக்க நல்ல நித்திரை வரும் ,உடல் வெப்பம் மாறும் 
  • விதை-நாற்றமகற்றும் .
  • வித்து சாற்றை தாளகதுடன் இழைத்து பூச வெண்குட்டம் -நிறம் மாறும் .
  • வேர்பட்டையின் செய்கை -துவர்ப்பி ,தாது வெப்பகற்றி,உடலை தேற்றும் ..

சோணித தொட்டே மெலாஞ் சொல்லாம லேகிவிடும் 
பேணுவர்க்கி ரக்தமோடு பித்தம்போம் -காணா
ஒருதோன்ற லென்னுமத னோதுமெ ழின் மாதே 
மருதோன்றி வெறால் மறைந்து .(அகத்தியர் குண பாடம் )

மருதோன்றி -முடியை கறுப்பாக்கும் .





























குணமாகும் நோய்கள் -தலை நோய்க்கு நல்லது ,முடிக்கும் நல்லது 

Post Comment

1 comments:

Zakir Hussain சொன்னது…

why we have to say in Sanskrit..the language is almost vanished...and if at all used it is only very few.

கருத்துரையிடுக