சனி, மார்ச் 03, 2012

எல்லா வகையான மூலத்திற்கும்-காங்காயன வடி-Kabkayana Vati


எல்லா வகையான மூலத்திற்கும்-காங்காயன வடி-Kabkayana Vati
 (ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகள்:

1.            ஓமம் (குராஸானி) பார்சீகயவனி            40 கிராம்
2.            சீரகம் ஜீரக                               40          
3.            கொத்தமல்லி விதை தான்யக              40          
4.            மிளகு மரீச்ச                             40          
5.            விஷ்ணுக் கரந்தை (உலர்ந்தது) விஷ்ணுக்ரந்தி     40          
6.            ஓமம் அஜமோதா                         40          
7.            கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக                 40          
8.            பெருங்காயம் (பொரித்தது) ஹிங்கு               60          
9.            ஸர்ஜக்ஷாரம் ஸர்ஜக்ஷார                  80          
10.          யவக்ஷாரம் யவக்ஷார                     80          
11.          இந்துப்பு ஸைந்தவலவண                  80          
12.          கல்லுப்பு ஸ்வர்ச்சலவண                  80          
13.          கரியுப்பு பிடாலவண                  80          
14.          சோற்றுப்பு ஸமுத்ரலவண                 80          
15.          வளையலுப்பு காச்சலவண                 80          
16.          கருஞ்சிவதை த்ரிவ்ருத்                    80          
17.          நாகதந்திவேர் (நேர்வாளவேர்) தந்தீமூல           160        
18.          கிச்சிலிக் கிழங்கு ஸட்டீ                   160        
19.          புஷ்கரமூலம் கோஷ்ட                     160        
20.          வாயுவிடங்கம் விடங்க                    160        
21.          மாதுளை ஓடு தாடிமத்வக்                 160        
22.          கொடிவேலி வேர் சித்ரக                   160        
23.          சீமைக் கொடுக்காய்ப் புளி அம்லவேதஸம்        160        
24.          சுக்கு சுந்தீ                                160        
25.          கடுக்காய்த் தோல் ஹரீதகீ பலத்வக்             160        

செய்முறை:      

இவற்றை முறைப்படி நன்கு பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு போதுமான அளவு துருஞ்சிச்சாறு கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாகச் செய்து பத்திரப்படுத்தவும்.

அளவு:           

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை நெய், பால், நீர் (அ) மோர் (மத்யம்) ஆகியவற்றுடன்.



தீரும் நோய்கள்:  

மூலம் (அர்ஷ), குன்மம் (குல்ம), இதய நோய் (ஹ்ருத் ரோக), பெருங்கழிச்சல் (கிரஹணீ), வயிற்றுப்பூச்சிகள் (க்ருமி), சூலை (சூல), இரத்த பித்தம் (ரக்த பித்த), குடற்புண்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆசன வாய் வெடிப்பிற்கு -சிர வில்வாதி கஷாயம் + திரிபலா குக்குலு + இந்த காங்கயன வடி = நூற்றுக்கு நூறு நல்ல பலன் தெரியும்
  2. உள் மூலம் - சிர வில்வாதி கஷாயம் அல்லது துராலபாதி கஷாயம் + அர்ஷகன வடி + பஹுசால குட லேஹியம் அல்லது சூரனாதி லேஹ்யியம் + இந்த மருந்து நல்ல பலன் தரும்
  3. இரத்த மூலம்  இந்த மாத்திரை சேராங்கொட்டை சேர்ந்த மருந்துகளுடன் முன்னர் சொன்ன மருந்துகள் நல்ல பலன் தெரியும்
  4. பவுந்திரத்திர்க்கு இந்த மருந்து குப்பை மேனி உப்பு + இந்த மாத்திரை நல்ல பலன் தெரியும்

Post Comment

2 comments:

sakthi சொன்னது…

அன்புள்ள நண்பரே வணக்கம் ,
மூலத்திற்கு பயன்படும் அருமையான மருந்து கொடுத்து உள்ளீர் .

ஆசன வாய் வெடிப்பிற்கு ,உள் மூலம்,இரத்த மூலம்,,பவுந்திரத்திர்க்கு தனி தனியாக கொடுத்துள்ளது நல்ல விளக்கம்

நன்றி
நட்புடன்,
கோவை சக்தி

maheswarlal சொன்னது…

Nice Articles..Keep it up..Please start question - Answer Section apart from this..

- Mahesh

கருத்துரையிடுக