சனி, மே 12, 2012

அகில உலக மருத்துவ வர்மாலாஜி என்னும் வர்ம கருத்தரங்கம்




வர்மத்தில் அகில உலக இரண்டாவது  கருத்தரங்கு

இன்று கோவையில் வேத சத்தி என்னும் அகில உலக வர்ம கான்பெரன்ஸ் இன்றும் நாளையும் நடைபெறுகிறது ..


 எனக்கு வர்மத்தை கற்றுத்தந்த ஆசான் சண்முகம் அவர்கள் நடத்துகிற இந்த International varmalogy conference 2012...என்ற பெரிய ஆராய்ச்சிகள் அடங்கிய இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவர்களும் ,ஆயுர்வேத மருத்துவர்களும் ,ஹோமியோ மருத்துவர்களும் ,ஆங்கில பல துறை மருத்துவர்களும் ,பேராசிரியர்களும் கலந்து கொள்கிறார்கள் ..

  • இது எனது வாழ்க்கையில் ஒன்றரை வருடங்களாக காத்திருந்த நிகழ்ச்சி இது ...
  • ஆசான் சண்முகம் அவர்களின் மாணவன் என்று கூறுவதில் நான் எப்போதும் பெரு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன் ..

  • ஆசான் சண்முகம் அவர்கள் இந்த மருத்துவ வர்மாலாஜி கான்பெரன்சிலும் என்னையும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை சமர்பிக்க சொன்னார்கள் 

  • ஆசான் சண்முகம்அவர்கள் வழி நடத்த கடந்த ஒன்றரை வருடங்களாக முக்குற்றங்களும் வர்மமும் ஆயுர்வேத சித்தாந்தகளும் என்கிற தலைப்பில் எனக்கு வாய்ப்பு அளிக்கபட்டிருந்தது...

  • எல்லா வேலைகளும் முடிவுற்று ,இன்று அதனை ஆசான் முன்னிலையிலும் ,பல மருத்துவர்கள் முன்னிலையிலும் வெளிவிட்டிருக்க வேண்டிய இந்த வேளையில் ....

 மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க செல்ல இயலாத காரணங்கள்

  1. எனது பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ளமையால் ,டெங்கு காய்ச்சலால் சிலர் மரணித்த சம்பவங்களும் ,இரத்த தட்டுக்கள் குறையும் அணுக்கள் குறைகிற காய்ச்சல் அதிகம் உள்ளமையால் ..மக்களுக்கு சேவை பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் (கொள்ளை நோய்கள் பரவினால் ..அதை தடுக்க இந்த டெங்கு காய்ச்சலுக்கு நாங்கள் நில வேம்பு குடிநீர் ,ஆடாதோடை குடிநீர் ,விஷ ஜவர குடிநீர் போன்றவற்றையும் ,சீந்தில் அடங்கிய மாத்திரைகளையும் இலவசமாக கொடுத்து கொண்டிருக்கிறோம் )உள்ளேன் ..கருத்தரங்கிற்கு செல்ல வேண்டிய வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன ...
  2. எனது விடுப்புக்கு செல்லும் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்ட நிலையில் என்னால் ஒன்றுமே செய்ய இயலாத நிலை ..மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆய்வு கட்டுரையை சமர்பிக்க இயலாத நிலை ..பல நாள் தவம் இருந்தவன் ..வரம் கிடைக்கும் சற்று முன் ஏமாந்தது போல் ஆகி விட்டது ...
  3. வெளிப்படையாக சில விஷயங்களை என்னால் ஏன் மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கிற்கு செல்ல இயலவில்லை என்று சொல்ல இயலாத நிலை ...
  4. மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் கலந்து கொள்ளாதது ...இரண்டு கைகளும் வெட்டப்பட்டது போல் ,கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல் உணர்கிறேன் ..
  5. எனது ஆராய்ச்சி கட்டுரைக்காக நான் கோவைக்கும் எனது ஊருக்கும் சென்று வந்த பல பயணங்கள் ,நான் உடலால் பட்ட கஷ்டங்களும் ,மனதால் பட்ட கஷ்டங்களும் வீணாகி போனதே என்று நினைக்க எனது நெடு நாள் கனவு வீணாகிபோனது ..
  6. மனதிற்குள் தாங்க இயலாத துக்கம் ..ஆற்ற முடியாத வருத்தம் ...
  7. மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க பட இயலவில்லையே என்று ஏங்கி தவிக்கிறேன் ... 
ஒன்றரை வருட கனவு இன்று கலந்து கொள்ள இயலாததால் கனவாகிபோனதே ...



எனது எண்ணங்கள் எல்லாம் கருத்தரங்கிலே தான் உள்ளது ..
நான் கலந்து கொள்ள வில்லை என்றாலும் கூட ..எனது பெரு மதிப்பிற்குரிய ஆசான் சண்முகம் அவர்கள் நடத்தும் இந்த கருத்தரங்கை மிக மிக வெற்றிகரமாக  நடந்து வர்மம் உலங்கெங்கும் பரவிட ஆசான் சண்முகம் அவர்களின் மாணவன் என்ற முறையிலும் ..ஆசான் சண்முகம் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தியவனாக ...

வர்மம் இந்தியனுக்கு உரியது ...
வர்மம் தமிழனுக்கு உரியது ...
வர்மம் சித்த மருத்துவத்தின் கூறு ...
வர்மம் நோய் அழிக்கும் 

,வர்மத்துடன் இணைந்த ஆயுர்வேதமும் ,சித்த மருத்துவமும் சீக்கிரம் நோய் அகற்றும் என்று எனது கருத்தை கூறியனாக...மருத்தவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை ...பல ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு நடுவே புத்தகமாக பிரசுரம் ஆனது என்ற மகிழ்ச்சியுடன் ...

ஆசான் சண்முகம் அவர்களுடன் எனது உறவு மென் மேலும் வளர பிரார்த்தியுங்கள் என்றவனாக ...

ஆசான் சண்முகம் அவர்களது சேவை பற்றி அறிய ..மேலும் விவரங்களுக்கு ..
  www.varmam.org





 

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"உங்களின் நட்பு சிறக்க வாழ்த்துக்கள் ! பல தகவலுக்கு நன்றி !"

puduvaisiva சொன்னது…

நீங்கள் வர்ம நிகழ்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை வருத்தமாக உள்ளது ஆனால் உங்கள் 'டெங்கு காய்ச்சல்' மருத்துவ சேவை உங்களை பெருமை கொள்ள செய்கிறது.

உங்கள் வர்ம ஆராய்ச்சி கட்டுரையை எங்களுக்காக இந்த வலைபூவில் வெளியிடவும்.

நன்றி

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,

கோவையில் நடந்த வேத சத்தி எனும் அகில உலக வர்ம கருத்தரங்கம் வெற்றி நடை போட்டு மிக சிறப்பாக நடந்துள்ளதற்கு வாழ்த்துக்கள் .

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆசான் சண்முகம் ஐயா பல்லாண்டு வாழ்க ! அவர்களுக்கு பக்க துணையாக இருந்து வேத சத்தி வெற்றிபெற செய்த இரவு பகல் பாராமல் ஓடி உழைத்த ஒவ்வொரு மருத்துவர்கள் ,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ,என் உடன் பிறவா சகோதர நண்பர் மருத்துவர் சலீம் சார் அவர்களுக்கும் ,என் சார்பாகவும் ,பதிவுலகம் சார்பாகவும் , வாழ்த்துக்கள் .

எனது பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ளமையால் ,டெங்கு காய்ச்சலால் சிலர் மரணித்த சம்பவங்களும் ,இரத்த தட்டுக்கள் குறையும் அணுக்கள் குறைகிற காய்ச்சல் அதிகம் உள்ளமையால் ..மக்களுக்கு சேவை பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் (கொள்ளை நோய்கள் பரவினால் ..அதை தடுக்க இந்த டெங்கு காய்ச்சலுக்கு நாங்கள் நில வேம்பு குடிநீர் ,ஆடாதோடை குடிநீர் ,விஷ ஜவர குடிநீர் போன்றவற்றையும் ,சீந்தில் அடங்கிய மாத்திரைகளையும் இலவசமாக கொடுத்து கொண்டிருக்கிறோம் )உள்ளேன்

வாழ்க உங்கள் மருத்துவ சேவை .வளர்க உங்கள் பணி ! இறைவன் உங்களையும், உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஆசிர்வதிப்பார்.டெங்கு காய்ச்சலுக்கு என்ன தடுப்பு மருந்துகள் உபயோகிக்க வேண்டும் என்று ஒரு சிறப்பு பதிவு எழுதினால் எல்லோரும் பயனடைவார்கள் .

''எனது விடுப்புக்கு செல்லும் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்ட நிலையில் என்னால் ஒன்றுமே செய்ய இயலாத நிலை ..மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆய்வு கட்டுரையை சமர்பிக்க இயலாத நிலை ..பல நாள் தவம் இருந்தவன் ..வரம் கிடைக்கும் சற்று முன் ஏமாந்தது போல் ஆகி விட்டது ...''

கனவை விட, தவத்தை விட, கடமையே பெரிது என நடந்துகொண்ட உங்களின் அர்ப்பணம் பாராட்ட வார்த்தைகள் இல்லை .

''பல நாள் தவம் இருந்தவன் ..வரம் கிடைக்கும் சற்று முன் ஏமாந்தது போல் ஆகி விட்டது ...''

தங்கள் எழுத்துக்களின் ஆழத்தில் தங்களது உணர்வை உணர்ந்துகொண்டேன் .நிச்சயமாக இறைவனிடமிருந்து தங்களுக்கு வரம் கிடைத்துவிட்டது .அது மக்கள் பணி செய்வதே .மக்களுக்கு ஆபத்தில் உதவுபவன் இறைவனுக்கு
நேரடியாக சேவை செய்ததற்கு சமம் .
"தெய்வம் மனுஷ ரூபேண " என்று சமஸ்கிரதத்தில் ஒரு சொல் உண்டு .அதாவது தெய்வம் நேரடியாக உதவ வரமாட்டான் .நல்மனிதர்கள் மூலம் உதவுவான் .அது உங்களுக்கு பொருந்தும் .

மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் கலந்து கொள்ளாதது ...இரண்டு கைகளும் வெட்டப்பட்டது போல் ,கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல் உணர்கிறேன் ..
எனது ஆராய்ச்சி கட்டுரைக்காக நான் கோவைக்கும் எனது ஊருக்கும் சென்று வந்த பல பயணங்கள் ,நான் உடலால் பட்ட கஷ்டங்களும் ,மனதால் பட்ட கஷ்டங்களும் வீணாகி போனதே என்று நினைக்க எனது நெடு நாள் கனவு வீணாகிபோனது ..
மனதிற்குள் தாங்க இயலாத துக்கம் ..ஆற்ற முடியாத வருத்தம் ...
ஒன்றரை வருட கனவு இன்று கலந்து கொள்ள இயலாததால் கனவாகிபோனதே ...


மிகவும் நெகிழ்ச்சியான வார்த்தைகள்.என் மனம் உங்கள் வார்த்தைகளால் கனத்து விட்டது .கவலை வேண்டாம் .அடுத்த கருத்தரங்கில் நிச்சயம் சிறப்பாக பங்குபெறலாம் .


வர்மம் இந்தியனுக்கு உரியது ...
வர்மம் தமிழனுக்கு உரியது ...
வர்மம் சித்த மருத்துவத்தின் கூறு ...
வர்மம் நோய் அழிக்கும்
,வர்மத்துடன் இணைந்த ஆயுர்வேதமும் ,சித்த மருத்துவமும் சீக்கிரம் நோய் அகற்றும் என்று எனது கருத்தை கூறியனாக...


வாழ்க வர்மம் ! வளர்க புகழ் !
தமிழன் கலை ,மக்களுக்கு பயன் பெரும் மருத்துவ கலை உலகெங்கும் பரவிக்கொண்டுள்ளது என்பது வெளிநாட்டினர் அநேகம் பேர் நமது பாரம்பரிய மருத்துவத்தை தேடி ,இந்தியாவை நாடி வருவது ஒன்றே சான்றாகும் .

guru சொன்னது…

don't worry.happen happened everything good for good person

கருத்துரையிடுக