திங்கள், செப்டம்பர் 24, 2012

அல்சர் நோயாளிக்கு உதவும் இரும்பு சத்து மருந்து -தாத்ரீலோஹம் Dhathree loham


அல்சர் நோயாளிக்கு உதவும் இரும்பு சத்து மருந்து -தாத்ரீலோஹம் Dhathree loham
  (ref-பைஷஜ்யரத்னாவளி - சூலாதிகார)

தேவையான மருந்துகள்:

1.            நெல்லிக்காய்ச் சூரணம் ஆமலகீ (தாத்ரீ சூர்ண)    8 பங்கு
2.            அதிமதுரச் சூரணம் யஷ்டீ மதுரச் சூர்ண          2   
3.            அயபற்பம் லோஹபஸ்ம                         4   


செய்முறை:     

 இவைகளைப் போதுமான அளவு சீந்தில்கொடி கஷாயம் (குடூசிகஷாய) கொண்டு ஏழு நாட்கள் ஏழு முறை பாவனை செய்து ரவியில் (சூரிய ஒளியில்) வைத்து உலர்த்திப் பொடித்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது நெய்யுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  



சூலைநோய் (சூலரோக), பரிணாம சூலை எனப்படும் குடற்புண்கள், இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்த), பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), மார்பு எரிச்சல் (ஹ்ருத்தாஹ), மலச்சிக்கல் (மலபந்த).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. வயிறு புண் ,வயிற்று வலி  நோயாளிக்கு பொதுவாக எந்த இரும்பு சத்து  மாத்திரையும் கொடுக்க இயலாது ...அனால் இந்த மருந்தை வயிறு புண் ஆறவும் இரத்த சோகை தீரவும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ?
  2. பொதுவாக இரத்த சோகைக்கு பயன்படும் மருந்து இரத்த சோகை உண்டாக்கும் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று ...ஆனால் ஆயுர்வேத மருந்துகளில் அப்படி இல்லை என்பதற்கு இந்த மருந்தை உதாரணம் தரலாம் ..இரத்த சோகை நீக்கும் மருந்து மலமிளக்கியாகவும் பயன்படும் ..


Post Comment

0 comments:

கருத்துரையிடுக