ஞாயிறு, மார்ச் 29, 2020

வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும் மருந்து-பாரங்யாதி கஷாயம்

வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும் மருந்து-பாரங்யாதி கஷாயம்

எந்த வித காய்ச்சலையும் சரி செய்யும் பீரங்கி இந்த பாரங்கயாதி கஷாயம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)



கப சுர குடிநீர்க்கு சமமான ஓர் ஆயுர்வேத மருந்தை நாம் தயாரித்து தர வேண்டும் என்றால் அது இந்த பாரங்கயாதி கஷாயம் ஒன்று ஆகும். சித்த மருந்துகள் பல்வேறு பலனை தந்தாலும் ஆயுர்வேத மருந்துகளும் நல்ல பலனை தர வல்லது .


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கண்டுபாரங்கி – பார்ங்கீ                   - 10 கிராம்
2.            கோரைக்கிழங்கு – முஸ்தா              - 10       “
3.            பர்பாடகம் – பர்பாடக                      - 10       “
4.            கொத்தமல்லிவிதை – தான்யக       - 10       “
5.            சிறுகாஞ்சூரி – துராலபா                   - 10       “
6.            சுக்கு – சுந்தீ                                           - 10       “
7.            நிலவேம்பு – பூநிம்ப                         - 10       “
8.            கோஷ்டம் – கோஷ்ட                       - 10       “
9.            திப்பலி – பிப்பலீ                               - 10       “
10.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ            - 10       “
11.          சீந்தில்கொடி – குடூசீ                        - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாக இடித்து காற்றுப்புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கப சுர குடிநீரில் உள்ள  கண்டு பாரங்கி என்னும் சிறு தேக்கு , கோரைக்கிழங்கு , சிறுகாஞ்சூரி, கோஷ்டம், சீந்தில்கொடி, நிலவேம்பு, முள்ளுக்கத்திரி, சுக்கு இந்த பாரங்கயாதி கஷாயத்தில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு .








கஷாயம் தயாரிக்கும் முறை:
                கஷாயப் பொடி  - 60 கிராம்
                தண்ணீர்        - 960 மில்லி லிட்டர், இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறிய பின் வடிக்கட்டவும்.
  
அளவு:          

 30 – 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.



  தீரும் நோய்கள்:  
வாதகப சுரம் எனும் வளிஐயக்காய்ச்சல் (வாதகபஜ்வர)குளிர்சுரம் (விஷமஜ்வர)முறைக்காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர) போன்ற பல விதமான காய்ச்சல்கள்இருமல் (காஸ)ஜலதோஷம் முதலியன. வயிற்றிலுள்ள உருண்டைதட்டை மற்றும் கொக்கிப் புழுக்களை (க்ருமி கோஷ்ட) வெளியேற்றவும்மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் பயனாகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை -

1.       மர்ம காய்ச்சல் ,வைரஸ் காய்ச்சல் ,நாள்பட்ட காய்ச்சல் ,விட்டு வரும் காய்ச்சல் அனைத்திற்கும் இந்த மருந்து நல்ல மருந்து -இதனுடன் வெட்டுமாரன் குளிகா அல்லது அம்ருதாரிஷ்டம் அல்லது நிலவேம்பு சார்ந்த மருந்துகளான மகா சுதர்சன மாத்திரையுடன் தந்தால் காய்ச்சல் ஓடியே போகும் என்று பந்தயம் கட்டலாம் ..

2.       காய்ச்சல் வந்த உடன் -கஷாயம் தருவது நல்லது இல்லை ,முதலில் வயிற்றுக்கு பட்டினி தான் நல்லது ,பசியின் தன்மை அறிந்துதான் கஷாயம் தருவது நல்லது 


3.       பாரங்கி +பவள மல்லி இலை கசாயம் கூட காய்ச்சலை குறைக்கும் 

4.       வெள்ளை அணுக்கள் குறைந்து போகிறது ,இரத்த தட்டுக்கள் குறைந்து போகும் பேர் தெரியா காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது 


5.       வைரஸ் காய்ச்சல் –அணுக்கள் குரைக்கிற காய்ச்சல் மற்றும் சளி சேர்ந்த கப காய்ச்சல் –இருமல் சார்ந்த காய்ச்சல் –வைரஸ் காய்ச்சல் எல்லா பெயர் தெரியாத காய்ச்சலுக்கும் இந்த மருந்தை பயமின்றி தரலாம் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர –உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகி –எல்லா விதமான வைரஸ் காய்ச்சலில் இருந்தும் தடுத்து கொள்ளலாம்.

உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க –இயற்கையாக நோய்களில் இருந்து சீக்கிரம் விடுதலை பெற –ஆயுர்வேத ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
தேனி                   9047277577
சென்னை 90 4333 600

Post Comment

2 comments:

Yarlpavanan சொன்னது…

அருமையான விளக்கம்

curesure Mohamad சொன்னது…

@Yarlpavananநன்றி

கருத்துரையிடுக