வியாழன், ஜூலை 26, 2012

அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodhaya Rasa


அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodahya Rasa
 (ref -பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக        30          


இவைகளை நன்கு அரைத்துக் கறுத்த கஜ்ஜளி செய்து அத்துடன்,
1.            தாமிரபற்பம் தாம்பர பஸ்ம      20 கிராம்
2.            அயபற்பம் லோஹ பஸ்ம       20          
3.            அப்பிரக பற்பம் அப்ரக பஸ்ம    50          

இவைகளைச் சேர்த்தரைத்துப் பின்னர்,


1.            பொடித்துச் சலித்த மிளகு மரீச்ச                  165 கிராம்
2.            பொரித்துப் பொடித்த பெருங்காயம் ஹிங்கு        5             
3.            எலுமிச்சம் பழச்சாறு விட்டரைத்து விழுதாக்கிய
       நாபி ஷோதித வத்ஸநாபி                      30          

                                இவைகளைச் சேர்த்து எலுமிச்சம்பழச்சாறு, அத்திப்பட்டைக் கஷாயம் (உதும்பரத்வக் கஷாய), லவங்க கஷாயம் (லவங்க கஷாய) இவைகளை விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.


அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  



காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாக சுரத்தல் (அம்லபித்தம்), ரத்த சோகை (பாண்டு), காமாலை (காமில), கல்லீரல், மண்ணீரல் பெருத்தல் (யக்ருத் ப்லீஹ வ்ருத்தி), ரத்தப் போக்கு (அஸ்ரஸ்ருதி), சூதக சூலை (ஆர்த்தவசூல), பெரும்பாடு (அஸ்ரிக்தர), கருப்பை நோய் (யோனி ரோக)

  •  காய்ச்சலில் சுக்கு, கொத்தமல்லி, மிளகுக்கஷாயத்துடன்  இது வழங்கப்படுகிறது. 

  • பாண்டு, காமாலை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் போன்றவற்றில் திரிகடுகுச் சூர்ணம், அன்னபேதிச் செந்தூரம், கரிசலாங்கண்ணித்தழை ஆகியவர்றுடன் தரப்படுகிறது. 

  • அமுக்கராச் சூரணத்துடன் கலந்து இதனை ரத்தப்போக்கு, சூதக சூலை, பெரும்பாடு, கருப்பைக் கோளாறு போன்றவற்றுக்கு தருவது வழக்கம்.
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ரக்த வஹ  ஸ்ரோதஸ் சார்ந்த நோய்களை குணபடுத்தும் ..\
  2. பெண்களின் அதிக உதிரப்போக்கினால் வரும் அனீமியாவை சரிசெய்யும் ..கருப்பையையும் வலுபடுத்தும் ..
 

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

நல்ல பதிவு ,
நன்றி சார்

கருத்துரையிடுக