புதன், ஏப்ரல் 14, 2010

செம்பருத்தி -ஜபா


  • ஆயுர்வேதத்தில் -இதனை ஜபா,ஜபா புஸ்பா .ருத்ர புஷ்ப ,ரக்த கார்பாச என்று அழைக்கபடுகிறது 
  • பாவ பிரகாஷ நிகண்டுவில் (காது நோய்கள் ,உதடு நோய்கள் ),ராஜ நிகண்டுவில் ,சக்ர தத்த (யோனி ரோகத்தில்),ஹரித சம்ஹிதையில் இந்த செம்பருத்தி பற்றி குறிப்புகள் காண படுகிறது 
  • கப பித்த நோய்களில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் 
  • அதிகமான பெண்களின் மாத விலக்கை-சரி செய்ய -ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவின் பத்து பூக்களை அரிசி கழனி தண்ணீரில் கலந்து -அரைத்து-சர்பத் போலவோ -இம்பூரல் செடியின் சாறோடோ சேர்த்து சாப்பிட குணமாகும் 
  • அடிக்கடி சிறுநீர் கழிப்பதை சரிசெய்ய -செம்பருத்தி பட்டையின் சாறை-தண்ணீருடன் கலந்து சாப்பிட ஓரிரு நாளில் குணமாகும் 
  • திடீரென்று ஏற்பட்ட பேதியை நிறுத்த -பூவின் இதழ்களை -கழனி தண்ணீரில் அரைத்து சாப்பிட உடன் நிற்கும் 
  • புழுவெட்டை சரிசெய்ய -செம்பருத்தி பூவின் இதழோடு -வரிக்கமட்டி காயையும் அரைத்து பூச சரியாகும் 

  • கலப்பின அல்லது ஒட்டு வகை செம்பருத்தி -பல அடுக்கு செம்பருத்தி களையும் பயன் படுத்துவதில்லை -
  • செம்பருத்தியை வைத்து பொதுவாக பல கதை போன்ற கட்டுக்கதை மருத்துவ குறிப்புகளை பலர் அவிழ்த்து விட்டுள்ளார்கள் -அவைகளில் பல ஆதாரமற்றவைகள் .யாராவது செய்து பலன் கண்டவர்கள் சொன்னால் மட்டும் செய்து பாருங்கள் -இல்லை செய்து முழிக்காதீர்கள் .
சித்த மருத்துவத்தில் -

செம்பரத்தை மேகவெட்டை தீராப் பிரமியொடு

வம்பிரத்த வெள்ளை வழுவழுப்பும்-வெம்பும்

பெரும்பாடு ரத்தபித்த பேதம் அகற்றும்

கரும்பா மொழிமயிலே காண்

- அகத்தியர் குணபாடம்

  • வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க-தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
  • பெண்களுக்கு-மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.வெள்ளைப் படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • இருதய நோயாளிகள்-செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
  • தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளர-செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். 






























குணமாகும் நோய்கள் -மூச்சுத்திணறல், தோல் நோய்கள் போக்கும், தலைமுடிக்கு நல்லது

Post Comment

1 comments:

ம.தி.சுதா சொன்னது…

மிகவும் பிரயோசனமான ஒன்று

கருத்துரையிடுக