ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

சிறந்த தனி மூலிகையின் பயன்பாடுகள் ..சிறந்தவை -பாகம் -3

சிறந்தில் சிறந்து என்று -பெஸ்ட் ஆப் பெஸ்ட் எனப்படும் தனி மூலிகையின் தனி பண்புகள் தனி பயன்கள் ..இவை ஆச்சார்யர் சரகர் தனது மருத்துவ அறிவில் சொன்னது ...

41. சிரோவிரேசனத்தில் (நஸ்யவிதி) - நாயுருவி விதை

42. கிருமிகளை அழிப்பதில் - வாயுவிடங்கம்

43. நஞ்சுகளை நீக்குவதில் - வாகை விதை

44. குஷ்ட(தோல் ) நோய்களை நீக்குவதில் - கருங்காலி

45. வாதங்களை நீக்குவதில்  - சிற்றரத்தை

46. ஆயுளை நீடிப்பதில் - நெல்லிக்காய்

47. பலவகையாக உடலுக்கு 
நன்மையளிப்பதில் - கடுக்காய்

48. ஆண்மையையும், வாதத்தையும் 
நீக்குவதில் - ஆமணக்கு வேர் 

49. சடராக்னியைத் தூண்டுவதில் - கண்டந்திப்பிலி

50. செரிப்பிக்கும் ஆற்றல் வாய்ந்த பொருட்களில் - கண்டந்திப்பிலி


51. வயிற்றுப்புச நோய்களை நீக்குவதில் - கண்டந்திப்பிலி

52. ஆஸநவாய் வீக்கம் மூலம் வலி நீக்குவதில் - கொடி வேலி

53. விக்கல், மூச்சுத் திணறல், பக்க சூலை
நீக்குவதில் - கொடி வேலி

54.  மலக்கட்டு, செரிப்பித்தல் உண்டு  - கோரைக்கிழங்கு
பண்ணுதலில்

55. செரிமானம் உண்டு பண்ணுதல்,
வாந்தியை நிறுத்தல் பேதியை நிறுத்தல் - விளாமிச்ச வேர் 
இவைகளுக்கு

56. மலக்கட்டு, உந்தித்தீதூண்டல்,
செரிமானம் இவைகளுக்கு - வெட்டி வேர் 

57. மலக்கட்டு, இரத்தபித்த நோய் நீங்க - நன்னாரி 

58. மலக்கட்டு, வாதநீக்கம், உந்தித் 
தீதூண்டல் கபநீக்கம் இரத்த  - சீந்தில் கொடி
அடுத்த நீங்க

59. மலக்கட்டு, உந்தித்தீதூண்டல்,
வாத கபம் தணித்தல் இவற்றில் - வில்வம்

60. உந்தித்தீ தூண்டல், செரிமானம்
மலம் கட்டுதல் எல்லா 
தோஷங்களையும் நீக்குவதில் - அதிவிடயம்

தொடரும் ..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக