ஞாயிறு, நவம்பர் 13, 2011

உடலை குளிர்ச்சியாக்கும் -சந்தனாதி தைலம்


உடலை குளிர்ச்சியாக்கும் -சந்தனாதி தைலம்
  (ref-பைஷஜ்யரத்னாவளி - வாஜீகரணாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல        3.200 லிட்டர்
2.            நல்லெண்ணெய் திலதைல 800 கிராம்      இவைகளில்
1.            வெள்ளைச்சந்தனம் சந்தன                 3.125 கிராம்
2.            செஞ்சந்தனம் ரக்த சந்தன                  3.125      
3.            மஞ்சள் சந்தனம் (மரமஞ்சள்) தாரு ஹரீத்ரா      3.125      
4.            காலீயகம் பட்டாங்க                       3.125      
5.            அகில்கட்டை அகரு                       3.125      
6.            காரகில் கட்டை க்ருஷ்ண அகரு            3.125      
7.            தேவதாரு தேவதாரு                      3.125      
8.            ஸரளதேவதாரு ஸரள                     3.125      
9.            பதிமுகம் பத்மகம்                         3.125      
10.          தூணிகம் -                                 3.125      
11.          பச்சைக்கற்பூரம் கற்பூர                    3.125      
12.          கஸ்தூரி கஸ்தூரி                         3.125      
13.          கஸ்தூரி வெண்டைக்காய் விதை             3.125      
14.          ஸிஹ்லகமரத்தின் பிசின் – (Liquid Storax)                      3.125      
15.          குங்குமப்பூ குங்குமகேஸர                 3.125      
16.          ஜாதிக்காய் ஜாதிபல                       3.125      
17.          ஜாதிபத்திரி ஜாதீபத்ர                 3.125      
18.          இலவங்கம் லவங்க                       3.125      
19.          சிற்றேலம் ஏலா                           3.125      
20.          பேரேலம் ப்ருஹத் ஏலா                   3.125      
21.          தக்கோலம் தக்கோல                 3.125      
22.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்             3.125      
23.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி              3.125      
24.          சிறுநாகப்பூ நாககேஸர                     3.125      
25.          குருவேர் ஹ்ரிவேர                        3.125      
26.          விளாமிச்சவேர் உசீர                 3.125      
27.          ஜாதிமல்லி ஜாதீ                          3.125      
28.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்             3.125      
29.          சடாமஞ்சில் ஜடாமாம்ஸீ                  3.125      
30.          பச்சைக்கற்பூரம் கற்பூர                     3.125      
31.          உஷ்ணா (கல்பாசி) ஸைலேய              3.125      
32.          கோரைக்கிழங்கு முஸ்தா                  3.125      
33.          அரேணுகம் ஹரேணுக                     3.125      
34.          ஞாழல்பூ ப்ரியாங்கு                       3.125      
35.          கந்தபெரோஜா சரளநிர்யாஸ                3.125      
36.          சுத்தி செய்த குக்குலு குக்குலு (சுத்தி)       3.125      
37.          கொம்பரக்கு லாக்ஷா                 3.125      
38.          நகம் நக                            3.125      
39.          வெள்ளைக் குங்கிலியம் ஸர்ஜரச           3.125      
40.          காட்டாத்திப்பூ தாதகீ                 3.125      
41.          கஸ்தூரி மஞ்சள் வன ஹரீத்ரா            3.125      
42.          மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                3.125      
43.          கிரந்திதகரம் தகர                          3.125      
44.          தேன்மெழுகு மதூச்சிஷ்ட                  3.125      

இவைகளைப் பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ நீங்கலாகக் கல்கமாக அறைக்க வேண்டியவைகளை அரைத்தும், கரைக்க வேண்டியவைகளைக் கரைத்தும் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும். ஆறிய பின்னர் கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ இவைகளைக் கல்வத்திலிட்டரைத்துச் சேர்க்கவும்

குறிப்பு: 
    
இதை மிகுந்த வாசனை உள்ளதாகச் செய்ய வேறு ஓர் முறை கையாளப்படுகின்றது.

               
சரக்குகளைப் போதுமான அளவு தண்ணீரில் ஒன்று இரண்டாகப் பொடித்துப் போட்டு எண்ணெய்யையும் ஊற்றிக் கலந்து கலத்தின் வாயைப் பொருத்தமான மூடியால் மூடிச் சீலை மண் பூசி அடுப்பிலேற்றி தினமும் ஆவிவரும் அளவு சூடுசெய்து எரிப்பை நிறுத்தவும். இவ்விதம் 15 முதல் 20 நாட்கள் சூடுசெய்து பின்னர் எண்ணெய்யைக் கலங்காது மேலாக எடுத்து ஜாடியிலிட்டுச் சில நாட்கள் வெய்யிலில் வைத்துப் பத்திரப்படுத்தவும்.

              
  நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் சேர்த்தும் தயார் செய்யலாம்.
.
பயன்படுத்தும் முறை: 
       
வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  

ஆண்மைக்குறைவு, நபும்ஸகத் தன்மை, மலட்டுத்தன்மை, அரிப்பு, துர்நாற்றம், க்ஷயம், அதிகமாக வியர்த்தல்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இந்த தைலம் உடல் சூட்டை முற்றிலுமாக சரிசெய்யும்
  2. ஆண்மை வளர்க்கும்
  3. தாதுக்களுக்கு புஷ்டி தரும்
  4. வியர்வை நாற்றம் அழிக்கும்
  5. தினமும் தேய்க்கலாம்

Post Comment

2 comments:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நன்றி.

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,
அருமை தொடருங்கள் என்னால் தான் உங்களை தொடர்ந்து பின்னோட்டம் தற்காலிகமாக இடமுடியவில்லை. .இந்த தைலம் எண்ணை குளியல் போல் பயன் படுத்தலாமா?
நட்புடன் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக