வெள்ளி, ஜனவரி 06, 2012

பெரு வயிறில் பெரும்பங்கு வகிக்கும் -பனை விரலாதி க்ஷாரம் Panavirladhi Ksharam


பெரு வயிறில் பெரும்பங்கு வகிக்கும் -பனை விரலாதி க்ஷாரம் Panavirladhi Ksharam
 (ref-ஸஹஸ்ரயோகம்)

தேவையான மருந்துகள்:

1.            பனம்பூச்சாம்பல் தாளபுஷ்ப க்ஷார           1 கிலோ கிராம்
2.            நாயுருவிச்சாம்பல் அபமார்க க்ஷார          1              “
3.            நீர் முள்ளிச்சாம்பல் கோகிலாக்ஷ க்ஷார     1              “
4.            வாழைக்கிழங்குச் சாம்பல் ரம்பா க்ஷார      1              “

செய்முறை:     

 இவற்றை நான்கு பங்கு தண்ணீரில் கரைத்துத் தெளியவைக்கவும். பின்னர் கலங்காது தெளிவை இறுத்துக் கொதிக்க வைத்துத் தண்ணீர் வற்றியபின் தங்கிய க்ஷாரத்தை ஆறியபின்னர் பொடித்துச் சலித்துக் காற்று புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:      

அரை முதல் ஒரு கிராம் வரை நெய்யுடன் இரு வேளைகள். குழந்தைகளுக்கு பாதியளவு கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  

பெருவயிறு (மஹோதரம்), வீக்கம் (ஸோப), சிறுநீர் தடைபடல் (மூத்ராசங்க), வியர்வையின்மை, நாளங்கள் தடைபடுதல், செரிமானக் கோளாறுகள் (அஜீர்ண).

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. வாசா குலூச்யாதி கஷாயம் ,திராக்ஷாதி கஷாயத்துடன் -இந்த மருந்தை தேவை கருதி -சரியாக உபயோகிக்க அசிட்டீஸ் என்னும் பெரு வயிறுக்கு நல்ல மருந்தாக அமையும் ..
  2. பசியை தூண்டும்
  3. மூத்திரத்தை பெருக்கும்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக