சனி, ஜனவரி 12, 2013

சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை போக்கும் -கோக்ஷுராதி குக்குலு (GOKSHURADHI GUGGULU )


சிறு நீர் கழிப்பதில் சிரமத்தை போக்கும் -கோக்ஷுராதி குக்குலு  (GOKSHURADHI GUGGULU )                                                                          
(ref-ஸாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            நெருஞ்சில் கஷாயம்
 – கோக்ஷுர கஷாய    4.200 கிலோவில் (4.2 கிலோ நெருஞ்சில் + 8.4 லிட்டர் தண்ணீர் 4.2 லிட்டர் கஷாயம் விட்டுக் கொதிக்கவைத்து எடுக்கவும்)
2.            சுத்தி செய்த குக்குலு
ஷோதித குக்குலு 350 கிராமைக் கரைத்துக் கொதிக்க வைத்துப் பதத்தில்
3.            திரிகடு சூர்ணம் த்ரிகடுசூர்ண    150 கிராம்
4.            திரிபலா சூர்ணம் த்ரிபலா சூர்ணம்     150         “
5.            கோரைக்கிழங்கு சூர்ணம் முஸ்தா     50           “

இவைகளைக் கலந்து திரிபலா கஷாயத்தால் நன்கு அரைத்து உலர்த்தி ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவு:          

ஒன்று முதல் நான்கு மாத்திரைகள் வரை கோரைக்கிழங்குச் சூரணம், சிறுபீளை (பாஷாணபேத) சூரணம் அல்லது வெட்டிவேர்ச் சூரணத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



பிரமேகம் (ப்ரமேஹ), நீர்ச்சுருக்கு (மூத்திரக்ரிச்சர), மூத்திரம் தடைபடுதல் (மூத்ராகாத), கல்லடைப்பு (அஸ்மரீ), வெள்ளை (ப்ரதர), குதிகால் வாதம் (வாத ரக்த), சுக்கிலம் சீர்கேடடைந்த நிலை (சுக்ரதோஷ).

தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. நீர் கடுப்பு ,நீர் தாரை எரிச்சல் ,உஷ்ண  கடுப்பு போன்ற பிரச்சனைக்கு -கோக்ஷுராதி கஷாயம் என்னும் நெருஞ்சில் கஷாயத்தில் சாப்பிட அதிசய குணம் தரும் 
  2. நீர் பிரிவதில் சிரமத்தால் உண்டாகும் கால் வீக்கத்திற்கு சந்திர பிரபா வடி போன்ற மருந்துகளுடன் சாபிடலாம் 
  3. கல் அடைப்பிற்கு -சிறுகண் பீளை கஷாயத்தில் (வீர தராதி கசாயத்தில் கூட ) கொடுக்க நல்ல பலன் தெரியும் ..
  4. விந்து வந்த பின் வரகிற எரிச்சலுக்கு தக்க துணை மருந்துடன் தர  நல்ல பலன் தரும் 

Post Comment

2 comments:

sakthi சொன்னது…

சிறுநீர் உபாதைகளுக்கு சிறந்த மருத்துகளை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சார் .

peace4u சொன்னது…

கிட்னி செயல் இழப்பை இது சரி செய்யுமா?

கருத்துரையிடுக