வியாழன், பிப்ரவரி 03, 2011

பித்தம் குறைய ,இரத்த பித்தம்,சூடு மாறிட -உசீராஸவம்-Usheeraasavam


பித்தம் குறைய ,இரத்த பித்தம்,சூடு மாறிட -உசீராஸவம்-Usheeraasavam
 (refபைஷஜ்ய ரத்னாவளி - ரக்தபித்தாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணிர் ஜல - 25.600 லிட்டர்
2.            சர்க்கரை ஸர்க்கர                    - 5.000 கிலோகிராம்
3.            தேன் மது                            - 2.500                 “


இவைகளை நன்றாகக் கலந்து திராக்ஷை (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து 


1.            விளாமிச்சவேர் உசீர               - 50 கிராம்
2.            குருவேர் ஹ்ரிவேர                   - 50       “
3.            செந்தாமரைக் கிழங்கு பத்மமூல      - 50       “
4.            குமிழ்வேர் காஷ்மரீ                  - 50       “
5.            நீல ஆம்பல்கிழங்கு நீலோத்பல கந்த  - 50       “
6.            ஞாழல் பூ ப்ரியாங்கு                 - 50       “
7.            பதிமுகம் பத்மக                     - 50       “
8.            பாச்சோத்திப்பட்டை லோத்ரா          - 50       “
9.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                - 50       “
10.          சிறுகாஞ்சூரிவேர் துராலபா            - 50       “
11.          பாடக்கிழங்கு பாத்தா                - 50       “
12.          நிலவேம்பு பூநிம்ப                    - 50       “
13.          ஆலம்பட்டை நியக்ரோத              - 50       “
14.          அத்திப்பட்டை உதும்பரத்வக்          - 50       “
15.          கிச்சிலிக் கிழங்கு ஸ்ட்டீ              - 50       “
16.          பர்பாடகம் பர்பாடக                   - 50       “
17.          வெள்ளைத்தாமரைக் கிழங்கு ஸ்வேதகமல  - 50       “
18.          பேய்ப்புடல் பட்டோல                - 50       “
19.          மந்தாரைப்பட்டை காஞ்சனாரத்வக்          - 50       “
20.          நாவல்பட்டை ஜம்புத்வக்              - 50       “
21.          இலவம்பிசின் சால்மலீநிர்யாஸ       - 50       “


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.


 அளவும் அனுபானமும்:    

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்


 பித்த எரிச்சல் (பித்த தாஹ), ரத்தமும் பித்தமும் சீர்கேடடைந்து அதனாலேற்படும் மூச்சு மண்டலம், உணவுப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவித ரத்தப் போக்குகள் (ரத்தபித்த), நீர்க்கோவை (ஸோத), ரத்த மூலத்தில் (ரக்தார்ஷ) ரத்தப் போக்கைத் தடுத்து நிறுத்தத் தரப்படுகிறது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக