ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

பெருங் கழிச்சலை நிறுத்தும் - அஹிபேனாசவம்-Ahiphenaasavam

பெருங் கழிச்சலை நிறுத்தும் - அஹிபேனாசவம்-Ahiphenaasavam

(சஹஸ்ர  யோகம் -ஆஸவ அதிகாரம் )


  1. இலுப்பை பூ                              - 100பலம் (ஐந்து கிலோ )
  2. அபின்                                          -4பலம்  (200கிராம் )
  3. கோரை கிழங்கு                     -1 பலம் (50 கிராம் )
  4. ஜாதிக்காய்                               -1 பலம் (50 கிராம் )
  5. வெட்பாலை அரிசி               -1 பலம் (50 கிராம் )
  6. ஏலம் -பலம்                             -1 பலம் (50 கிராம் )
சேர்த்து ஆசவ தயாரிப்பு முறையில் ஒரு மாதம் கழித்து முறைப்படி -முறையாக மருத்துவ ஆயுர்வேத படிப்பு படித்த மருத்துவரின் மேற்பார்வையில் சாப்பிடவும்

உபயோகபடுத்தும் அளவு

ஐந்து முதல் பத்து மிலி வரை தேவை கருதி -மருத்துவரின் ஆலோசனை படி

குணமாகும்  நோய்கள் -

கடுமையான அதிசாரம் (பேதி ),விசூசிகா (வாந்தி +பேதி ) சரியாகும் -
அந்த காலத்தில் நாம் இப்போது காலரா எனப்படும் நோய்க்கு இந்த மருந்தை கொண்டு தான் சரி செய்திருக்கிறார்கள் ..

குளிகை சேர்த்து கொடுக்கும் முறையில் -அச்டக்ஷீறி அல்லது வில்வாதி குளிகை உடன் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்

குறிப்பு

-எல்லா மருத்துவராலும் ,மருந்து கம்பெனியாலும் இதை தயாரிக்க முடியாது ..
அபினை வாங்குவதில் பல சட்ட சிக்கல்களும் ,கொடுக்கும் போது கவனமும் தேவை படுவதால் -இந்த மருந்து செய்வது ,கொடுப்பது ,கிடைப்பது அரிது -எனவே குடஜா அரிஷ்டம் ,மதூகாசவம் போன்ற இதே போல் குணமுள்ள மருந்துகளை தேர்ந்தெடுப்பது நல்லது -எளிது

Post Comment

1 comments:

மச்சவல்லவன் சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றிகள்சார்.

கருத்துரையிடுக