வியாழன், பிப்ரவரி 10, 2011

சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்-Karjura arishtam

சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.-Karjura arishtam
(சஹஸ்ர யோகம் )

சேரும் பொருட்கள் ..

  1. பேரிச்சம் பழம்
  2. கோரை  கிழங்கு
  3. நெல்லிக்காய்
  4. கொன்றை பட்டை
  5. உலர்ந்த திராக்ஷை
  6. கடுக்காய் தோல்
  7. கொட்டப்பாக்கு
  8. பாட கிழங்கு
  9. கண்டு பாரங்கி
  10. பூலான் கிழங்கு
  11. கொட்டம்
  12. இருவேலி
  13. ஓமம்
  14. காட்டுதிப்பிலி வேர்
  15. நெருஞ்சில்
  16. சாரணை வேர்
  17. காய பலம்
  18. ஞாழல் பூ
  19. மஞ்சள்
  20. கருஞ்சீரகம்
  21. ஆசாளி விதை
  22. கொட்டக்கரந்தை
  23. சிவதை
  24. கீழா நெல்லி
  25. தொட்டால் சுருங்கி
  26. செம்மரபட்டை
  27. புங்கை வேர் -                        இவைகள் யாவும் நான்கு பலம் (200 கிராம்  வீதம் )
  28. சடாமஞ்சில்
  29. ஏலம்
  30. இலவங்கம்
  31. பச்சிலை
  32. சிறுநாகப்பூ
  33. திப்பிலி
  34. கிராம்பு 
  35. ஜாதிக்காய் 
  36. சந்தனம்
  37. அய பஸ்மம் (சுத்தம் செய்தது )     - இவைகள் யாவும் இரண்டு பலம் ( 100  கிராம் வீதம் )
  38. காட்டத்திபூ    -  ஏழு பலம் (350  கிராம் )
  39. வெல்லம்  - 21  பலம் (1 .050 கிராம் )
மேற்கூறிய அனைத்தும் பொடித்து 108  பிரஸ்தம் (86  லிட்டர் ) தண்ணீர் சேர்த்து மண்பானைக்குள் ஐந்து நாட்கள் வைக்கவும் .அதன் பின் பூமியிலிருந்து எடுத்து 300  பேராமுட்டி இலையும் ,200  தாமரைப்பூவும் சேர்த்து பாத்திரத்தின் வாயை மூடி அர்க்க விதிப்படி அர்க்கமாக தயாரிக்கவும்


அளவு -15 மிலி முதல் 20  மிலி வரை -சம அளவு தண்ணீர் சேர்த்து

தீரும் நோய்கள் -


விசூசிகா(வாந்தி பேதி ) ,ராஜயக்ஷ்மா (உடல் இளைக்கும் நோய் ),இருதய நோய் ,இருமல் ,விஷம ஜ்வரம்(நாள் பட்ட காய்ச்சல் ).சிரோரோகங்கள் (தலை நோய்கள் ),பலஹீனம் ,பாண்டு (இரத்த சோகை ),வீக்கம் ,ருசியின்மை  போன்றவை தீரும் .அக்னி பலம் (பசி தீ ),சுக்ல விருத்தி (விந்து பெருகும் )

குறிப்பு -இந்த மருந்து அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை ..
இந்த மருந்து சில சமயங்களில் போதை தர வாய்ப்புள்ளது ..எனவே இந்த மருந்தை நான் எந்த நோயாளிக்கும் தந்ததில்லை ..

Post Comment

1 comments:

மச்சவல்லவன் சொன்னது…

தொடர்ந்து நல்ல பதிவை எழுதும் உங்கள் சேவை தொடற வாழ்த்துக்கள்சார்.

கருத்துரையிடுக