திங்கள், பிப்ரவரி 28, 2011

நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் -சிறந்த மருந்து - அஸ்வகந்தா சூர்ணம்-Aswagandha choornam


நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் -சிறந்த மருந்து - அஸ்வகந்தா சூர்ணம்-Aswagandha choornam
  (ref-பாவப்ரகாச நிகண்டு)

தேவையான மருந்துகள்:

சீமை அமுக்கிராக் கிழங்கு அஸ்வகந்தா (போதிய அளவு)


செய்முறை:   

நன்கு தேறிய சீமை அமுக்கிராக் கிழங்கை கல், மண் நீக்கி சுத்தம் செய்து நுண்ணிய தூளாக்கவும். பின்னர் அதைச் சலித்து பத்திரப்படுத்தவும்.


அளவு:   

 2 முதல் 4 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் உணவுக்கு முன்.


அனுமானம்:   

  பால், தண்ணீர், சர்க்கரை


தீரும் நோய்கள்: 



பலவீனம் (தௌர்பல்ய (அ) அசக்த), நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய), தூக்கமின்மை (அநித்ர), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக),   சிறுநீருடன் விந்து வெளிப்படல், தானே விந்து நழுவுதல் (சுக்ரமேஹ), வாத நோய்கள் (வாதவிகார). 

க்ஷயரோகத்தில் இது 600 மி.கி. திரிகடுகுச் சூரணம், 600 மி.கி. சீந்தில் சர்க்கரை (குடூசி சத்வ), 1500 மி.கி. கற்கண்டுடன் தரப்படுகிறது.

 க்ஷீணரோகங்களிலும் (வலுவிழக்கச் செய்யும் நோய்கள்), உடல்பலமிழந்த நிலைகளிலும் இது 200 மி.கி. மூங்கிலுப்பு (வம்ஸலோசன), 200 மி.கி. சீந்தில் சர்க்கரை (குடூச்சி சத்வ), 125 மி.கி. திப்பிலி (பிப்பலீ), 200 மி.கி. லவங்கம் மற்றும் 30 -60 மி.கி. மகரத்வஜத்துடன் கலந்து தரப்படுகிறது. 

தூக்கமின்மை மற்றும் எலும்பு முறிவு (அஸ்திபங்க) நிலைகளில் இது சூடான பாலுடன் தரப்படுகிறது.


  பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயங்களில் இது 125 மி.கி. தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடி (ஸதாவரீ சூர்ண), 125 மி.கி. பால் முதுக்கன் கிழங்கு, 125 மி.கி. அதிமதுரப் பொடி (யஷ்டீமது) சேர்த்து கற்கண்டு கலந்த சூடான ஆட்டுப்பாலுடன் தரப்படுகிறது.


மேலும் அஸ்வகந்தா என்ற மூலிகை பற்றி தெரிந்து கொள்ள -இந்த லிங்கை பயன் படுத்துங்கள் http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/part-7.html

Post Comment

6 comments:

RAVINDRAN சொன்னது…

Thank u

வானவன் யோகி சொன்னது…

சமஸ்கிருத மொழியில் அஸ்வகந்தா என்பது குதிரையின் நாற்றம் என பொருள்படும் என தொடுப்பில் தாங்களே கூறியுள்ளீர்கள்.

ஏடுகளில் எழுதப்பட்ட சில மருந்துகளின் குணங்களை அனுபவத்தர்கள் கண்டு உபயோகம் செய்ததில் அதன் கெட்ட குணங்களை கண்டு அதை சில காலங்களில் பயன்படுத்துவதில்லை.

அதே போல் இம்மருந்தும் வெயில் காலங்களில் கொடுப்பதில்லை.

காரணம் வியர்வையின் வழியாக குதிரையின் மூத்திரத்தின் நாற்றம் வந்துவிடும்.

பேருந்து மற்றும் அலுவுலகம் போன்ற இடங்களில் நம் உடம்பிலிருந்து வரும் குதிரை நாற்றத்தால் மற்றோரின் முகச்சுழிப்பிற்கும் வீட்டில் மனைவியின் வெறுப்புக்கும் ஆளாகலாம்.

பொதுவாக ஏட்டின் கல்வியினால் இது போன்ற விடயங்கள் தெரியாமல் இம்மருந்தைப் பரிந்துரைக்கும் பலரைத் தெரியும் என்றாலும்

தங்களைப் போன்றோர் இதுபோல் பரிந்துரைக்க நாங்கள் விடமாட்டோம்.

எதற்கும் அனுபவத்தர்களை கேட்டுக் கொண்டு நான் சொன்னது சரியெனின் நடைமுறைக்குக் கொண்டுவருக.

அதற்கு மாற்றாக எதை உபயோகிக்கலாம் என்பதையும் பரிந்துரைக்க....!!!!!

மென்மேலும் மிளிர நல்வாழ்த்துக்கள்.

நிலவு சொன்னது…

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html

பட்டது போதுமா ! பழ நெடுமாறா !

curesure Mohamad சொன்னது…

@வானவன் யோகிநண்பரே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ..மறுப்பதற்கில்லை ..
ஆண்மை பெருக நான் அதிகம் உபயோக்கிக்கும் மருந்தில் அஸ்வகந்தா இந்த மூலிகை வரிசை பத்திற்கும் அப்பால் தான் ..
என்னுடைய முதல் விருப்ப மருந்து ஓரிதழ் தாமரையும் ,நிலப்பனங் கிழங்கும் என்பது தான் உண்மை ..

ஆமாம் ..எட்டில் படித்தவர்களின் முதல் விருப்ப மருந்து இதுதான் ..ஆனால் என்னக்கும் உங்களுக்கும் இல்லை ..
நீர்முள்ளி விதையை கூட காமத்தை வளர்க்க பயன் படுத்திய விஷயங்கள் பல உண்டு ..

அஸ்வகந்தா பற்றி எழுத் வேண்டிய விஷயம் ஒன்று தான் ..அது டென்சனை குறைக்கிறது ..

நன்றி ..உங்கள் கருத்து ..மக்களுக்கு நல்ல தகவல்கள்

பெயரில்லா சொன்னது…

@RAVINDRAN

பெயரில்லா சொன்னது…

enaku pengalai parkum pothu suthara unarchi ilai.enendral naen palamurai kaipalakam seiyhu vitaen.athu matum ilamal night leak out ayidum.sida doctorai parthaen anal palan ilai avarum pala marunthu kuduthar palan ilai.apothum enaku thokathil vinthu veliyeri konda irukirathu.nanum 9 month varai avaridam treat ment poonaen anal palanilai cost than viraiyamanathu.ena seiya enaku payamaka irukirathu.english doctorai parthal paravala ithu proplem ilai soluranga unga manasu than apdi nu naen solluvathai porutpodutha matranga.plese help me.

கருத்துரையிடுக